நான் மெக்ஸிக்கோவிலுள்ள ஓர் சிறு நகரில் வாழ்ந்து வருகிறேன். அங்கு காலையிலும், மாலையிலும் “ரொட்டி” என்ற கூவும் சத்தத்தை மிகத்தெளிவாக கேட்கலாம். வண்டியில் பெரிய கூடையை வைத்து ஒருவர் பலவிதமான இனிப்பு மற்றும் உப்பு கலந்த ரொட்டியை விற்று வந்தார். நான் ஓர் பெரிய நகரத்தில் வசித்த பொழது, நான் தான் கடைக்குச் சென்று ரொட்டி வாங்குவேன். ஆனால் இப்பொழுது வீட்டிற்கே வரும் புதிய ரொட்டியை மகிழ்ச்சியுடன் வாங்குகிறேன்.

வயிற்றுப் பசியைவிட்டு ஆவிக்குரிய பசியை நாம் எண்ணினால், “நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான் (யோவா. 6:51)” என்ற இயேசுவின் வார்த்தைகள் தான் என் நினைவிற்கு வருகின்றது.

சுவிசேஷம் என்பது ஒரு பிச்சைக்காரன் மற்ற பிச்சைக்காரனிடம் தான் எங்கு ரொட்டி யைப் பெற்றுக் கொண்டான் என்று சொல்வது தான் என்று ஒருவர் கூறியுள்ளார். நம்மில் பலரும் இப்படிக் கூறலாம்; “நான் ஒரு காலத்தில் ஆவிக்குரிய பசியுடன் இருந்தேன், என் பாவங்களினால் என் ஆவி இளைத்து, பசியுடன் தவித்தது. அப்போது தான் நற்செய்தியை கேட்டேன். ஒருவர் என்னிடம் இயேசு என்னும் இந்த ரொட்டியை எங்கு கண்டுபிடிக்கலாம் என்று சொன்னார். என் வாழ்க்கை முற்றிலுமாக மாறியது”.

நாம் இப்பொழுது இந்த ஜீவ அப்பத்தை பிறருக்குக் காண்பிக்கும் பாக்கியத்தையும், கடமையையும் உடையவர்களாய் இருக்கிறோம். நம்முடைய உற்றார், உறவினர், வேலை செய்யுமிடம், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் இயேசுவை நாம் பகிர்ந்து கொள்ளலாம். இயேசுவைப்பற்றி பஸ்சிலோ, ரயிலிலோ, காத்திருக்கும் இடங்களிலோ பிறரிடம் பேசலாம். இந்த அற்புதமான நற்செய்தியை நட்பின்மூலமாக பிறரது வாழ்க்கையில் எடுத்துச் செல்லாம்.

இயேசுவே மெய்யான அப்பம். வாருங்கள், இந்த இனிமையான நற்செய்தியை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வோம்.