எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜூலி ஜ்வாப்கட்டுரைகள்

வேலைஸ்தலத்தில் சாட்சி

“உனக்கு மிகவும் பிடித்த அந்த துறையின் அளவை குறைக்கவேண்டுமென்றதால் இன்னும் வருத்தமா?" எவிலினின் மேனேஜர் அவளிடம் கேட்டார். “இல்லை" என்று வாயை மூடிக்கொண்டாள். அதைப்பற்றி அவர் கேலிசெய்து கொண்டேயிருந்ததால், அவள் வருந்தினாள். அவள் பல திறமையான நபர்களை கம்பெனியில் சேர்த்து, நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு உதவ முயன்றாள். ஆனால் இடப்பற்றாக்குறை அம்முயற்சியை முடமாக்கிவிட்டது. எவிலின் கண்ணீரோடு போராடினாள், ஆனாலும் தன் மேலாளர் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்க தீர்மானித்தாள். அவள் நம்பியிருந்த சில மாற்றங்களை அவளால் கொண்டுவர முடியாமல் போயிருக்கலாம், ஆனால் அவளுடைய வேலையை தன்னால் இயன்றமட்டும் சிறப்பாக அவளால் செய்ய முடிந்தது.

அப்போஸ்தலன் பேதுரு தன் முதல் நிருபத்தில், முதலாம் நூற்றாண்டு விசுவாசிகளுக்கு, “மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர் நிமித்தம் கீழ்ப்படியுங்கள்" (1 பேதுரு 2:13) என்று வலியுறுத்துகிறார். கடினமான பணிச்சூழலில் உத்தமமாயிருப்பது கடினம். ஆனால் நாம் ஏன் தொடர்ந்து நன்மை செய்ய வேண்டுமென்ற காரணத்தை, “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி" (வச. 12) பேதுரு விவரிக்கிறார். கூடுதலாக, நம்மை காணும் மற்ற விசுவாசிகளுக்கு பக்தியான எடுத்துக்காட்டாக நம்மை காட்டிக்கொள்ளலாம்.

நம்முடைய வேலைக்கு துரோகம் இழைக்கும் பணிச்சூழலில் நாமிருந்தால், கூடுமானால் வேலையை விட்டுவிடுவதே சிறந்தது (1 கொரிந்தியர் 7:21). “அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்" (1 பேதுரு 2:20) என்பதை நினைவுகூர்ந்து, ஆவியானவரின் துணையோடு நம் வேலையில் நன்மை செய்வதை தொடருவோமாக. நாம் அதிகாரத்திற்கு கீழ்ப்படிகையில், பிறர் தேவனை பின்பற்றவும், அவரை மகிமைப்படுத்தவும் காரணமாயிருக்க நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

காணப்படுதல்

வழிகாட்டுதலை குறித்த ஒரு கட்டுரையில் ஹன்னா ஸ்செல் என்பவர், வழிகாட்டியானவர் ஆதரிப்பவராக, சவால் மிக்கவராக, ஊக்கமளிப்பவராக இருப்பது அவசியம் ஆனால் "முதலாவதும், மிக முக்கியமானதும் யாதெனில் ஒரு நல்ல வழிகாட்டி உங்களை காண வேண்டும்..... அறியப்படுதல் என்பது விருதுகளினாலும், பிரபலமடைவதினாலும் மட்டும் உண்டாவதில்லை சாதாரணமாக 'காணக்கூடியவராய்' இருப்பதனாலும் தான், அதுவே மனிதனின் அடிப்படை தேவை. மக்கள் அறியப்பட்டவர்களாய், அங்கீகரிக்கப்பட்டவர்களாய், நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்க வேண்டும்.

புதிய ஏற்பாட்டில், பர்னபா என்பவர் (அவருடைய பெயருக்கு "ஆறுதலின் மகன்" என்று அர்த்தம்) தன்னை சுற்றிலுமிருந்த மக்களை சந்திப்பதில் சாமர்த்தியசாலி. அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 இல், மற்ற சீஷர்கள் சவுலை குறித்து பயந்திருந்தபோது, இவரோ அவனுக்கு ஒரு வாய்ப்பளிக்க விரும்பினார்.(வ.26) சவுல் (இவன் பவுல் என்றும் அழைக்கப்பட்டான் 13:9) இயேசுவின் விசுவாசிகளை துன்புறுத்துகிறவனாக இருந்தான்.(8:3), ஆகையால் அவனை உண்மையான சீடனாக மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை (9:26).

பல நாட்கள் கழித்து, பவுலும், பர்னபாவும் அவர்கள் "கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று" (15:36) போய்ப்பார்க்க தங்களோடு மாற்குவை கூட்டிக்கொண்டு போவதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அவர்களோடு மாற்கு வருவது பவுலுக்கு ஏற்றதாய் தோன்றவில்லை காரணம் அவர், அவர்களை இதற்கு முன்னரே தனியேவிட்டு பிரிந்து போயிருந்தார். சுவாரசியமாக, பவுல் பின்னர் மாற்குவின் உதவியை கோருகிறார் "மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்." (2 தீமோத்தேயு 4:11).

பவுல், மாற்கு என இருவரையும் சந்திக்க பர்னபா நேரம் ஒதுக்கினார். ஒருவேளை நாம் பர்னபாவை போல மற்றொருவரிடம் உள்ள ஆற்றலை உணருபவராக இருக்கலாம் அல்லது ஒரு ஆவிக்குரிய வழிகாட்டி தேவைப்படும் நபராக நாம் இருக்கலாம். நாம் ஊக்குவிக்க கூடிய நபர்களுக்கு நேராக நம்மை நடத்தவும், நம்மை ஊக்குவிக்க கூடியவர்களை நமக்கு நேராக கொண்டு வரவும் தேவனை நாம் கேட்போம்.

தேவையில் உள்ளவர்களை சந்தித்தல்

ஒவ்வொரு நாளும் என்னுடைய சிநேகிதனுடைய வீட்டின் கதவைத் தட்டி, வெறுமையான பிளாஸ்டிக் பாட்டில்கள் இருக்குமா என்று கேட்கும் ஒரு பலவீனமான பெண்ணை அவர் பார்த்தார். அந்த பாட்டில்களை விற்று அதில் வரும் வருமானமே அவளுடைய வாழ்வாதாரம். என்னுடைய சிநேகிதனுக்கு ஒரு எண்ணம் உதித்தது. “நீங்கள் எங்கு தங்கியிருக்கிறீர்கள் என்று சொல்லமுடியுமா?” என்று அவளிடம் கேட்டார். அந்த பெண் அவரை ஒரு குறுகிய பாதையின் வழியாய் குப்பையான இடத்திற்கு அழைத்துச்சென்றாள். அவள் தங்குமிடத்தைக் கண்டு இரக்கப்பட்ட அவர், அவள் உறங்குவதற்கு ஏதுவான ஒரு சிறிய கூடாரத்தை அமைத்துக்கொடுத்தார். அப்போது தான் அவருக்கு இன்னொரு எண்ணம் உதித்தது. அவர் ஆன்லைனில் பிரச்சாரம் செய்து, ஸ்தல திருச்சபைகளோடு இணைந்து, ஆதரவற்றவர்களுக்கு வீடு கட்டுவதற்கான இடத்தை ஒழுங்குசெய்தார். 

ஆதரவற்றவர்களுக்கு உதவும்படி வேதாகமம் முழுமையும் தேவ ஜனத்திற்கு நினைவுபடுத்துகிறது. இஸ்ரவேலர்களை கானான் தேசத்திற்கு போவதற்கு ஆயத்தம்பண்ணும்படிக்கு தேவன் மோசேயிடம் பேசும்போது, “அவனுக்கு (ஏழைக்கு) உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக” என்று உற்சாகப்படுத்துகிறார் (உபாகமம் 15:8). “தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை” (வச. 11) என்றும் அவ்வேதப்பகுதி அறிவிக்கிறது. இது உண்மை என்பதை அறிவதற்கு வெகுதூரம் போகவேண்டியதில்லை. “உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும்” என்று தேவன் இஸ்ரவேலுக்கு அழைக்கிறார் என்றால் நாமும் தேவையிலுள்ளவர்களுக்கு உதவவேண்டும். 

ஒவ்வொருவருக்கும் உணவு, தங்குமிடம் மற்றும் தண்ணீர் அவசியம். நம்மிடத்தில் அதிகம் இல்லையென்றாலும், மற்றவர்களுக்கு உதவும் வகையில் தேவன் நம்மை பயன்படுத்துவாராக. உணவை பகிர்ந்துகொள்வதாயிருக்கட்டும், அல்லது உடையை கொடுத்து உதவுதாயிருக்கட்டும், நம்மால் முடிந்த சிறிய உதவிகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். 

குழப்பத்தில் சமாதானம்

ஏதோ பட்டாசு வெடித்ததுபோன்ற ஒரு சத்தம் ஜோஹன்னேயை தூக்கத்திலிருந்து எழுப்பியது. கண்ணாடி உடைந்து சிதறியது. தனிமையில் இருந்த அவள் எழுந்து என்ன நடக்கிறது என்று பார்க்க முயன்றாள். இருள் சூழ்ந்த அந்த தெரு வெறுமையாயிருந்தது. வீட்டிற்கு ஒன்றும் நேரிடவில்லை. அதன்பின் உடைந்து நொறுங்கியிருந்த கண்ணாடியைப் பார்த்தாள். 

எரிவாயு குழாயின் அருகாமையில் விசாரணையாளர்கள் ஒரு துப்பாக்கி குண்டை கண்டெடுத்தனர். அது அந்த குழாயில் பட்டிருந்தால் இந்நேரத்திற்கு அவள் உயிரோடிருந்திருக்கமாட்டாள். பின்பாக, அது பக்கத்து கட்டடத்திலிருந்து விழிவிலகி வந்த குண்டு என்று கண்டறிந்தும், ஜோஹன்னே வீட்டில் தனியாக இருக்க பயந்தாள். அவள் சமாதானத்திற்காய் ஜெபித்தாள். உடைந்த அந்த கண்ணாடி சீரமைக்கப்பட்டபின் அவளுடைய இருதயம் ஆறுதலடைந்தது. 

இக்கட்டான சூழ்நிலைகளில் தேவனை நோக்கும்படிக்கு சங்கீதம் 121 அறிவுறுத்துகிறது. “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து” (வச. 2) நமக்கு ஒத்தாசை வருவதால் நாம் சமாதானமும் ஆறுதலும் அடைகிறோம். உலகத்தை உண்டாக்கிய ஆண்டவர் நமக்கு உதவிசெய்து காக்கிறவராயிருக்கிறார் (வச. 3). நாம் தூங்கினாலும் அவர் தூங்குவதில்லை (வச. 4). அவர் இரவும் பகலும் நம்மை பாதுகாக்கிறார் (வச. 6). அவர் என்றைக்கும் நம்மை காக்கிறவர் (வச. 8). 

நாம் எந்த சூழ்நிலையிலிருந்தும் தேவன் நம்மை பார்க்கிறார். அவரிடமாய் நாம் திரும்புவதற்கு அவர் காத்திருக்கிறார். அப்படி செய்தால், நம்முடைய சூழ்நிலைகள் எல்லாம் ஒரேயடியாய் மாறிவிடாது. ஆனால் அவற்றின் மத்தியில் வாக்குப்பண்ணப்பட்ட சமாதானத்தை நாம் அனுபவிக்கமுடியும். 

உறுதியான தேவ அன்பு

அலிசா மென்டோசாவுக்கு 2020இல் அவளுடைய அப்பாவிடமிருந்து ஒரு ஆச்சரியமூட்டும் மின்னஞ்சல் வந்திருந்தது. அவர்களுடைய 25ஆம் திருமண நாளில் அவளுடைய அம்மாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏன் அதைக் கண்டு அவள் ஆச்சரியப்பட்டாள்? ஏனெனில் பத்து மாதங்களுக்கு முன்னரே அவளுடைய அப்பா இறந்துவிட்டார். அவர் வியாதியாயிருக்கும்போதே தன் மரணத்தை முன்கூட்டியே அறிந்து, அந்த மின்னஞ்சலை குறிப்பிட்ட தேதிக்கு போய்சேரும்படி ஏற்பாடு செய்திருந்தார் என்பதை அறிந்துகொண்டாள். அத்துடன், இனி வரப்போகிற தன்னுடைய மனைவியின் பிறந்த நாள், திருமண நாள், காதலர் தினம் ஆகிய அனைத்திற்கும் பூங்கொத்து பரிசளிக்கும்படிக்கும் முன்னமே ஏற்பாடு செய்துவிட்டே இறந்திருக்கிறார். 

இந்த அன்பு, உன்னதப்பாட்டு புத்தகத்தில் பிரதிபலிக்கப்பட்டுள்ள அன்பிற்கு ஒப்பாயிருக்கிறது. “நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது” (உன்னதப்பாட்டு 8:6). மரணத்தையும் பாதாளத்தையும் அன்போடு ஒப்பிடுவது சரியில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் அவைகளில் சிறைப்பட்டவர்கள் மீண்டு வருவதில்லை. அதேபோன்று உண்மையான நேசமும் தான் நேசித்தவர்களை என்றுமே விடுவதில்லை. 6-7 வசனங்களில் புத்தகம் உச்சநிலை அடைந்து, “திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது” என்று திருமண அன்பின் மேன்மையை உருவகப்படுத்துகிறது (வச. 7). 

வேதாகமம் முழுவதிலும் கணவன்-மனைவி அன்பு தெய்வீக அன்பிற்கு ஒப்பிடப்பட்டுள்ளது (ஏசாயா 54:5; எபேசியர் 5:25; வெளி. 21:2). இயேசுவே மணவாளன், சபையானது அவருடைய மணவாட்டி. கிறிஸ்துவை இந்த உலகத்திற்காக மரிக்க ஒப்பக்கொடுத்ததின் மூலமாய் தேவன் தன் அன்பை நமக்கு காண்பித்துள்ளார். அதினால் இனி நாம் மரிக்க தேவையில்லை (யோவான் 3:16). நாம் திருமணமானவரோ அல்லது தனிநபரோ, ஆனால் தேவனுடைய அன்பு நாம் கற்பனை செய்துபார்க்க முடியாத அளவு உறுதியான அன்பு. 

புலம்புவது தவறில்லை

நான் முழங்கால்படியிட்டு கண்ணீர் சிந்தினேன். “தேவனே, ஏன் என்னை நீர் கவனித்துக்கொள்வதில்லை?” என்று அழுதேன். அது கோவிட்-19 தொற்று வெகுவாய் பரவிய 2020ஆம் ஆண்டு. கிட்டத்தட்ட ஒருமாத காலமாய் நான் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தேன். என்னுடைய வேலையில்லா விண்ணப்பத்தில் ஏதோ தவறு ஏற்பட்டது. அமெரிக்க அரசு அறிவித்திருந்த ஊக்கத் தொகையும் வந்து சேர்ந்தபாடில்லை. தேவன் எல்லாவற்றையும் சரிசெய்வார் என்று என் இருதயத்தின் ஆழத்தில் நம்பியிருந்தேன். அவர் என்னை உண்மையாய் நேசிக்கிறார்; என்னை பாதுகாப்பார் என்று நம்பினேன். ஆனாலும் அந்த தருணத்தில் நான் கைவிடப்பட்டதுபோல் உணர்ந்தேன்.

புலம்புவது ஒருவிதத்தில் சரியென்று புலம்பல் புத்தகம் நமக்கு காட்டுகிறது. இப்புத்தகம் கி.மு. 587இல் பாபிலோனியர்கள் எருசலேமை அழிக்கும்போதோ அல்லது அதற்கு பின்னரோ எழுதப்பட்டது. இது மக்கள் சந்தித்த பாடுகள் (3:1,19) அடக்குமுறை (1:18) மற்றும் பட்டினி (2:20; 4:10) போன்றவற்றை விவரிக்கிறது. ஆயினும், புத்தகத்தின் இடையில் நம்பிக்கையை ஏன் இழக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை ஆசிரியர் நினைவுகூறுகிறார்: “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது” (வச. 22-23). இந்த கடினமான பேரழிவின் மத்தியிலும், தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார் என்று ஆசிரியர் நினைவுகூறுகிறார்.

தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிறவர்களுக்கும் கர்த்தர் நல்லவர் (வச. 25) என்பதை நம்புவது சிலநேரங்களில் கடினமாய் தெரிகிறது. குறிப்பாய், நம்முடைய பாடுகளுக்கு முடிவேயில்லை என்று கருதும் நேரங்களில் தேவனை நம்புவது கடினம். அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்னும் நம்பிக்கையுடன் அவரிடத்தில் புலம்பலாம். அவர் நம்மை நிச்சயமாய் கண்ணோக்கிப் பார்ப்பார்.

பயத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்

2020 ஆம் ஆண்டில், கொரோனா வைரஸின் பெரும் பாதிப்பு உலகத்தை அச்சத்தில் விட்டுச் சென்றது. மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர், நாடுகள் முடக்கப்பட்டிருந்தன, விமானங்கள் மற்றும் பெரிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில் வசிப்பவர்களும் தங்களுக்கு வைரஸ் தொற்று வரக்கூடும் என்று அஞ்சினார்கள். பதட்டவியல் நிபுணரான கிரஹாம் டேவி, எதிர்மறையான செய்தி ஒளிபரப்புகள் "உங்களை சோகமாகவும் கவலையுற்றவர்களாகவும் மாற்றக்கூடும்" என்று நம்புகிறார். சமூக ஊடகங்களில் பரவிய ஒரு மீம், தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்க்கும் ஒரு மனிதரைக் காட்டியது, மேலும் கவலைப்படுவதை எவ்வாறு நிறுத்துவது என்று அவர் கேட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, அறையில் இன்னொரு நபர் வந்து டிவியை அணைத்தார், அந்த கேள்விக்கான பதில் கவனத்தை வேறு பக்கம் திருப்புவது தான் என்று பரிந்துரைத்தார்!

லூக்கா 12 கவலைப்படுவதை நிறுத்த உதவும் சில அறிவுரைகளை நமக்கு அளிக்கிறது: “அவருடைய ராஜ்யத்தையே தேடுங்கள்” (வச.. 31). அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு பரலோகத்தில் ஓர் உரிமை இருக்கிறது என்ற வாக்குறுதியில் கவனம் செலுத்தும்போது நாம் தேவனுடைய ராஜ்யத்தை தேடுகிறோம். நாம் சிரமத்தை எதிர்கொள்ளும்போது, ​​நம் கவனத்தை மாற்றி, தேவன் நம்மைப் பார்க்கிறார், நம்முடைய தேவைகளை அறிந்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளலாம் (வச. 24-30).

இயேசு தம்முடைய சீஷர்களை ஊக்குவிக்கிறார்: "பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்." (வச. 32). நம்மை ஆசீர்வதிப்பத்தில் தேவன் மகிழ்கிறார்! ஆகாயத்து பறவைகள் மற்றும் காட்டுப்பூஷ்பங்களை காட்டிலும் அவர் நம்மீது அக்கறை காட்டுகிறார் என்பதை அறிந்து  நாம் அவரை ஆராதிப்போம்(வச.. 22-29). கடினமான காலங்களில் கூட, நாம் வேதவசனங்களைப் படிக்கலாம், தேவனின் சமாதானத்திற்காக ஜெபிக்கலாம், நம்முடைய நல்ல, உண்மையுள்ள தேவன் மீது நம்பிக்கை வைக்கலாம்.

அவரது குரலை அறிந்து கொள்ளுங்கள்

விடுமுறை வேதாகம பள்ளியில் ஒரு வருடம், ஆதித் - தின் தேவாலயம் வேதாகம கதைகளை விளக்குவதற்கு உயிருள்ள விலங்குகளை கொண்டு வர முடிவு செய்தது. அவன் உதவ வந்தபோது, ​​ஆதித் ஒரு ஆட்டை உள்ளே கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டான். அவன் ஒரு கம்பளி மிருகத்தை உண்மையாகவே ஒரு கயிற்றால் தேவாலய மண்டபத்திற்குள் இழுத்து வர வேண்டியதாயிருந்தது. ஆனால் வாரம் செல்லச் செல்ல, அதற்கு அவனைப் பின்தொடர தயக்கம் குறைந்தது. வார இறுதிக்குள் ஆதித் இனி கயிற்றைப் பிடிக்க வேண்டியதில்லை; அது அவனை நம்பும் என்று அறிந்து அவர் ஆட்டை அழைத்தார் அது அவனை பின்தொடர்ந்தது.

புதிய ஏற்பாட்டில், இயேசு தன்னை ஒரு மேய்ப்பருடன் ஒப்பிடுகிறார், அவருடைய ஜனங்கள், ஆடுகள் அவருடைய குரலை அறிந்திருப்பதால் அவரைப் பின்பற்றுவார்கள் என்று குறிப்பிடுகிறார் (யோவான் 10: 4). ஆனால் அதே ஆடுகள் அந்நியர் அல்லது திருடனிடமிருந்து ஓடும் (வச. 5). ஆடுகளைப் போலவே, நாம் (தேவனுடைய பிள்ளைகள்) நம்முடைய மேய்ப்பரின் குரலை அவருடனான உறவின் மூலம் அறிந்துகொள்கிறோம். அப்படி நாம் செய்யும்போது அவருடைய தன்மையை நாம் காண்போம், அவரை நம்ப கற்றுக்கொள்வோம்.

நாம் தேவனை அறிந்து கொள்வதிலும் அன்புகூர்வதிலும் வளருவது, ​​அவருடைய குரலை நாம் பகுத்தறியவும், “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்” அப்படி வரப்போகும் அந்த திருடனிடமிருந்தும் (வச. 10) - நம்மை ஏமாற்றி அவரிடமிருந்து நம்மைப் பிரிக்க முயற்சிப்பவர்களிடமிருந்தும், திறம்பட தப்பியோடவும் செய்யும் (வச. 5). அந்த கள்ள போதகர்களைப் போலல்லாமல், பாதுகாப்பிற்கு நேராய் நம்மை வழிநடத்த நம் மேய்ப்பரின் குரலை நாம் நம்பலாம்.

ஒருபோதும் அதிக பாவமில்லை

“நான் வேதாகமத்தை தொட்டால், என்னுடைய கரத்தில் அது தீப்பிடித்துக்கொள்ளும்” என்று என்னுடைய கல்லூரி பேராசிரியர் கூறினார். என்னுடைய இதயம் கனத்தது. அந்தக் காலை வேளையில் நாங்கள் படித்த ஒரு நாவலில் வேதத்திலுள்ள ஒரு வசனம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் வாசிக்கும்படியாக நான் என் வேதத்தை எடுத்தப்போது அவர் கவனித்து இப்படியாக கருத்து தெரிவித்தார். என்னுடைய பேராசிரியர் தான் மன்னிக்கப்படுவதற்கு முடியாத ஒரு மகா பெரிய பாவியாயிருப்பதாக உணர்ந்தார். இருந்தாலும் தேவனின் அன்பையும் - நாம் எப்போதும் தேவனின் மன்னிப்பிற்காக அவரை நாடமுடியும் என்று வேதாகமம் கூறுகிறது என்றும் அவரிடம் சொல்வதற்கு எனக்கு தைரியமில்லை.

நெகேமியாவில் மனந்திரும்புதலைப்பற்றியும் மன்னிப்பைப்பற்றியும் உதாரணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரவேலர்கள் அவர்களுடைய பாவங்களினிமித்தம் நாடு கடத்தப்பட்டனர், ஆனால் இப்பொழுது அவர்கள் எருசலேமிற்கு திரும்பி வர அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அங்கு குடியேறியப் போது, வேதப்பாரகனாகிய எஸ்ரா நியாயப்பிரமாணத்தை வாசித்தார். (நெ. 7:73-8:3). அவர்கள் பாவிகளாயிருந்தாலும் தேவன் அவர்களை கைவிடவில்லை என்று நினைவுகூர்ந்து, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டனர் (9:17,19). அவர்கள் கூப்பிட்டப்போது அவர் கேட்டு, அவருடைய மிகுந்த இரக்கத்தின்படி அவர்களோடு பொறுமையாயிருந்தார் (வச. 27-31).

இதேப்போன்று, தேவன் நம்மிடத்திலும் பொறுமையாயிருக்கிறார். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு அவரிடம் திரும்பினால் அவர் நம்மை கைவிடமாட்டார். என்னுடைய பேராசிரியரிடம் சென்று அவருடைய பழைய வாழ்க்கை எப்படியிருந்தாலும் இயேசு அவரை நேசிக்கிறார் என்றும், அவருடைய குடும்பத்தில் ஒருவராக இருக்க விரும்புகிறார் என்றும் சொல்ல ஆசைப்படுகிறேன். உங்களைக் குறித்தும் என்னைக் குறித்தும் இயேசு அப்படியே கருதுகிறார். நாம் அவரிடம் மன்னிப்பிற்காக நெருங்கினால் அவர் நம்மை மன்னிப்பார்.

இயேசு அவர்களை மன்னிக்க முடியாத பாவியாய் இருக்கிறதாக உணருகிற யாராவது  உங்களுக்குத் தெரியுமா? இயேசு நீதிமான்களுக்காக அல்ல பாவிகளுக்காகவே வந்தார் என்ற சத்தியம் (மாற். 2:17) இப்படிப்பட்ட உணர்வுள்ளவர்களிடம் எப்படிப் பேசுகிறது?

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விசுவாசத்தின் ஜெயம்

நான்கு வயது சிறுவனான கால்வினின் வழக்கமான சரீர ஆரோக்கிய சோதனையில் அவனது உடலில் சில எதிர்பாராத புள்ளிகள் கண்டறியப்பட்டன. அவனுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, ஊசி போடப்பட்டு, அந்த இடத்தை கட்டுகட்டி அனுப்பினர். அந்த கட்டை அகற்றும் நாளில், அவனுடைய தந்தை கட்டை பிரிக்க முயன்றபோது, கால்வின் பயத்துடன் சிணுங்கினான். மகனுக்கு ஆறுதல் கூற முயன்று, அவனது தந்தை, “கால்வின், உன்னைக் காயப்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உனக்குத் தெரியும்!" என்று சொன்னார். கட்டை அகற்றும் பயத்தைவிட, தன் மகன் தன்னை நம்பவேண்டும் என்று அவனது தந்தை விரும்பினார்.

அசௌகரியத்தினால் நான்கு வயது குழந்தைகள் மட்டும் பயம் அடைவதில்லை. அறுவைசிகிச்சைகள், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், மன அல்லது உளவியல் சவால்கள் மற்றும் பலவிதமான பயங்கள், பெருமூச்சுகள், அழுகைகள் மற்றும் கூக்குரல்களை சந்திக்கும் அனைத்து தரப்பினர்களும் பயத்தினால் சூழப்படுகின்றனர். 

தாவீது, தன்மீது பொறாமைகொண்டு தன்னை கொல்ல வகைதேடிய சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்திய தேசத்திற்கு ஓடியபோதிலும், அங்கு அவர் கண்டுபிடிக்கப்பட்ட தருணம், வாழ்க்கையின் பயம் மிகுந்த ஓர் தருணமாயிருந்துள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டபோது, அவருக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டார். (1 சாமுவேல் 21:10-11): “தாவீது... காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டான்.” இந்த சங்கடமான சூழ்நிலையைப் பற்றி யோசித்து, தாவீது “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்” (சங்கீதம் 56:3-4) என்று எழுதுகிறார். 

வாழ்க்கையின் அசௌகரியங்கள் நமக்கு அச்சத்தைத் தூண்டும்போது நாம் என்ன செய்வோம்? நம்முடைய பரலோகத் தகப்பன்மீது நம்பிக்கை வைக்கலாம்.

 

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

 

நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்

மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும். 

ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை.

நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார். 

நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார்.