தியாகத்தை நினைவுகூருதல்
ஞாயிற்றுக்கிழமை காலை வழிபாட்டைத் தொடர்ந்து, எனது மாஸ்கோ ஹோஸ்ட் என்னை கோட்டைக்கு வெளியே உள்ள ஒரு உணவகத்தில் மதிய உணவுக்கு அழைத்துச் சென்றார். வந்துசேர்ந்தவுடன், திருமண உடையில் புதுமணத் தம்பதிகள் வரிசையாக கிரெம்ளின் சுவருக்கு வெளியே யாரென்று தெரியாத இராணுவ வீரரின் கல்லறையை நெருங்குவதை நாங்கள் கவனித்தோம். அவர்களுடைய அந்த மகிழ்ச்சியான நாளில், அந்த மகிழ்ச்சிக்கு காரணமான இராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும்பொருட்டு அவ்வாறு செய்வது அவர்களின் வழக்கம். அந்த புதுமணத் தம்பதிகள் அங்கே சென்று கல்லறையில் மலர் வளையம் வைத்து, புகைப்படம் எடுத்துக்கொள்வதை பார்க்க ஆச்சரியமாய் இருந்தது.
நம்முடைய வாழ்க்கையில் நிறைவை உண்டாக்கும்பொருட்டு தியாகமாய் தங்களை அர்ப்பணித்தவர்களுக்கு நன்றிசெலுத்துவதற்கு நாமெல்லாரும் கடமைப்பட்டிருக்கிறோம். அந்த தியாகங்கள் அனைத்தும் முக்கியமற்றவைகள் அல்ல, அதேநேரத்தில் அவைகள் மிகவும் முக்கியமானவைகளும் அல்ல. சிலுவையின் அடிவாரத்தில் இயேசு நமக்காக செய்த பெரிய தியாகத்தைப் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கை எந்த அளவிற்கு முழுமையாக இரட்சகருக்குக் கடன்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள துவங்குகிறோம்.
கர்த்தருடைய பந்தியில் இடம்பெற்றிருக்கும் அப்பமும் திராட்சை ரசமும், இயேசுவின் சிலுவை தியாகத்தை நம்மை நினைவுகூரச்செய்கிறது. பவுல், “நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” (1 கொரிந்தியர் 11:26) என்று எழுதுகிறார். கர்த்தருடைய பந்தியை அநுசரிக்கும் அந்த நாள் முழுவதிலும், இயேசு நமக்குள்ளும் நமக்காகவும் செய்த தியாகத்தை நாம் நினைவுகூரப் பிரயாசப்படுவோம்.

அவர் நம்மை புதிதாக்குகிறார்
ஒரு பயண நிர்வாகியாக, ஷான் சீப்லர் என்பவர் ஒரு வித்தியாசமான கேள்வியுடன் போராடினார். ஹோட்டல் அறைகளில் எஞ்சியிருக்கும் சோப்பு கட்டிகளை என்ன செய்வது? என்பதே அந்த கேள்வி. தூக்கியெறியப்படும் சோப்புத் துண்டுகளை மறுசுழச்சி செய்வதின் மூலம் அதற்கு மறுவாழ்வு கொடுக்க முடியும் என்று சீப்லர் நம்பினார். எனவே அவர் “கிளீன் தி வேர்ல்ட்” என்ற மறுசுழற்சி அமைப்பைத் தொடங்கினார். அது எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள் போன்றவற்றில் நிராகரிக்கப்பட்ட மில்லியன் கணக்கான பவுண்டுகள் சோப்புத் துண்டுகளை கிருமி நீக்கம் செய்யப்பட்டு புதிதாக வடிவமைக்கப்பட்ட சோப்புகளாக மாற்ற உதவியது. அந்த சோப்புத் துண்டுகள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தேவையுள்ள மக்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த சோப்புகள் சுகாதாரம் தொடர்பான வியாதிகள் மற்றும் மரணங்களிலிருந்து மக்களை பாதுகாக்கிறது குறிப்பிடத்தக்கது.
சீப்லர் சொல்லும்போது, “இது கேட்பதற்கு விகற்பமாய் தெரியலாம், ஆனால் நீங்கள் தங்கியிருக்கும் அறையில் எஞ்சியிருக்கும் சிறிய சோப்பு துண்டானது ஒருவருக்கு வாழ்க்கைக் கொடுக்கலாம்” என்று சொல்லுகிறார்.
பயன்படுத்தப்பட்டு தூக்கியெறிப்பட்ட ஒன்றிற்கு வாழ்க்கைக் கொடுத்து புதிதாக்குவது நம்முடைய இரட்சகரான இயேசுவின் முக்கியமான ஒரு செய்கை. ஐந்து அப்பத்தினாலும் இரண்டு சிறிய மீன்களினாலும் ஐயாயிரம்பேரை இயேசு போஷித்த பின்பு, சீஷர்களைப் பார்த்து, “ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள்” (யோவான் 6:12) என்று சொல்லுகிறார்.
நம்முடைய வாழ்க்கையில் நாம் தூக்கியெறிப்படும்போது, இயேசு நம்மை வீணானவர்களாய் பார்க்காமல், நம்முடைய வாழ்க்கையை அற்புதமாய் பார்;க்கிறார். அவருடைய பார்வையில் நாம் எப்போதும் தூக்கியெறிப்படுவதில்லை. அவருடைய இராஜ்யத்திற்கு பயன்படும் திறனை நமக்குள் புகுத்துகிறார். “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின!” (2 கொரிந்தியர் 5:17). எது நம்மை புதிதாக்குகிறது? கிறிஸ்து நமக்குள் வாசம்பண்ணுவதே நம்மை புதியவர்களாய் மாற்றுகிறது.

தேவனுடைய மகத்தான வல்லமை
வட அமெரிக்காவில் உள்ள வலிமைமிக்க மிஸிசிப்பி ஆற்றின் ஓட்டத்தை, சூறாவளிக் காற்று திசைமாற்றியபோது சாத்தியமற்ற ஒன்று நிகழ்ந்தது. ஆகஸ்ட் 2021இல், ஐடா என்ற சூறாவளிக் காற்று, லூசியானா கடற்கரையில் கரையொதுங்கியது. அங்கே ஆச்சரியமான “எதிர்மறையான ஓட்டத்தை” தோற்றுவித்தது. பலமணி நேரங்கள் தண்ணீர் மேல்நோக்கி பாய ஆரம்பித்தது.
ஒரு சூறாவளியானது அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பத்தாயிரம் அணுகுண்டுகளுக்குச் சமமான ஆற்றலைச் செலவழிக்கும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்! ஓடும் நீரின் போக்கை மாற்றும் இத்தகைய நம்பமுடியாத ஆற்றலானது, யாத்திராகமத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவத்தில் இடம்பெற்றுள்ள “எதிர்மறையான ஓட்டத்தை” எனக்கு நினைவூட்டியது.
நூற்றாண்டுகளாய் எகிப்தியரிடம் அடிமைப்பட்டிருந்த இஸ்ரவேலர்கள் அங்கிருந்து புறப்பட்டு செங்கடலின் கரைக்கு வந்து சேர்கின்றனர். அவர்களுக்கு முன்பாக பெரிய சமுத்திரமும், அவர்களைத் துரத்திக்கொண்ட பார்வோனின் சேனைகளும் வந்துகொண்டிருந்தது. அதுபோன்ற சாத்தியமற்ற சூழ்நிலைகளில், “கர்த்தர், இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்... இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்” (யாத்திராகமம் 14:21-22). அந்த ஆச்சரியமான சம்பவத்தை சாட்சியிட்ட பின்பு, “ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்(தனர்)” (வச. 31).
தேவனுடைய வல்லமையை சாட்சியிடும்போது ஆச்சரியத்தில் மூழ்குவது இயல்பானது. ஆனால் அதோடு மக்கள் நின்றுவிடவில்லை, தேவன் மீது “விசுவாசம் வைத்தார்கள்” (வச. 31).
தேவனுடைய படைப்பில் அவருடைய வல்லமையை நாம் சாட்சியிடும்போது, நாமும் அவருடைய மகத்துவத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு அவர் மீது நம்பிக்கை வைக்க முடியும்.

விசுவாசம் கேள்வியினால் வரும்
பாஸ்டர் பாப், அவரது குரலைப் பாதிக்கும் வகையிலான ஒரு பெலவீனத்தால் பாதிக்கப்பட்டபோது, பதினைந்து ஆண்டுகள் அவர் நெருக்கடியிலும் மனச்சோர்விலும் வாழ நேரிட்டது. பேச முடியாத ஒரு போதகரால் என்ன செய்ய முடியும் என்று அவர் சோர்ந்துபோனார். இந்தக் கேள்வியுடன் அவர் போராடினார். தனது ஏக்கத்தையும் குழப்பத்தையும் தேவனிடம் விண்ணப்பித்தார். “கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவது ஒன்று மட்டுமே எனக்கு தெரியும்” என்று அவர் ஜெபித்தார். அவர் வேதத்தைப் படிக்க நேரம் செலவழித்தபோது, தேவன் மீது அவருக்கு இருந்த அன்பு அதிகரித்தது. அவர், “வேதத்தை உள்வாங்குவதற்கும் அதில் மூழ்கியிருப்பதற்கும் என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தேன். ஏனென்றால், விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தைக் கேட்பதினால் வரும்” என்று அறிக்கையிடுகிறார்.
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர்களுக்கு எழுதிய நிருபத்தில் “விசுவாசம் கேள்வியினாலே வரும்” என்று குறிப்பிடுவதை நாம் பார்க்கமுடிகிறது. பவுல், யூதர்கள் அனைவரும் இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படவேண்டும் என்று விரும்பினார் (ரோமர் 10:9). அவர்கள் எப்படி நம்புவார்கள்? தேவனுடைய வார்த்தையை கேட்பதினால் ஏற்படும் விசுவாசத்தினாலும், கிறிஸ்துவைக் குறித்த வார்த்தையினாலுமே அது சாத்தியமாகும் (வச. 17).
பாஸ்டர் பாப், வேதத்தை வாசிக்கும்வேளையில் கிறிஸ்துவின் செய்தியை பெற்றுக்கொள்ளவும் விசுவாசிக்கவும் முயற்சிக்கிறார். அவரால் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே பேசக்கூடும். அவ்வாறு பேசும்போதும் அதிக வேதனையை அவர் உணருவார். ஆனால் அவர் வேதத்தில் மூழ்கியிருப்பதின் மூலம் தேவனிடமிருந்து சமாதானத்தையும் திருப்தியையும் தொடர்ந்து காண்கிறார். ஆகவே, நம்முடைய போராட்டங்களில் இயேசு தம்மை நமக்கு வெளிப்படுத்துவார் என்று நாம் நம்பலாம். நாம் எதிர்கொள்ளும் சவால்கள் எதுவாக இருந்தாலும், அவருடைய செய்தியைக் கேட்கும்போது அவர் நம்முடைய விசுவாசத்தை அதிகரிக்கச் செய்வார்.

படிப்படியாக
தோளோடு தோள் சேர்த்து நின்று, மூன்று பேர் கொண்ட ஒரு டஜன் அணியினர் நான்கு-கால் பந்தயத்திற்குத் தயாராயினர். இருபுறத்திலும் இருந்த இரண்டு நபர்களும் நடுவில் இருந்த நபரின் காலோடு, ஒரு வண்ணமயமான கயிற்றினால் பிணைக்கப்பட்டனர். அவர்களின் கண்கள் மறைக்கப்பட்டது. விசில் அடித்ததும் ஒவ்வொரு அணிகளும் இலக்கை நோக்கி முன்னேறின. அவர்களில் பெரும்பாலானோர் கீழே விழுந்து மீண்டும் எழும்பி நிற்க போராடினர். ஒரு சில குழுக்கள் நடந்துசெல்வதற்கு பதிலாக குதித்து செல்ல முயற்சித்தனர். சிலர் ஆட்டத்தை இடையிலேயே நிறுத்திக்கொண்டனர். ஆனால் அதில் ஒரு குழு மட்டும் தங்கள் ஓட்டத்தை துவக்கமாமல் தாமதம் செய்தது. ஒரு திட்டத்தை தீட்டியது. போகும் வழியில் ஒருவரோடு ஒருவர் தெளிவாய் தொடர்புகொண்டனர். அவர்களும் அவ்வப்போது இடற நேரிட்டது, ஆனாலும் மீண்டெழுந்து ஒவ்வொரு அணியையும் முந்தினர். அவர்கள் ஒருவரோடொருவர் ஒத்துழைக்க எடுத்த தீர்மானம், வெற்றி இலக்கை அடைய அவர்களுக்கு உதவியது.
கிறிஸ்தவர்களாகிய நாமும் இந்த சமுதாயத்தில் வாழும் வாழ்க்கையில் இந்த நான்கு-கால் பந்தயத்தைப் போலவே சலிப்படைய நேரிடுகிறது. நம்மிலிருந்து முரண்படும் கருத்துக்களை உடையவர்களோடு ஓடும்போது அடிக்கடி தடுமாறுகிறோம்.
பேதுரு, ஜெபம், விருந்தோம்பல், மற்றும் நமக்கு முன்பாக இருக்கும் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்வதைக் குறித்து பேசுகிறார். அவர், “நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல,” (வச. 10) “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” (1 பேதுரு 4:8) என்று வலியுறுத்துகிறார். நாம் தேவனிடத்தில் தொடர்புகொள்வதற்கும் ஒத்துழைப்பதற்குமான உதவி கேட்கும்போது, வேற்றுமையிலும் ஒற்றுமையை கொண்டாடக்கூடிய ஓட்டத்தை நாம் நேர்த்தியாய் ஓட முடியும்.