வகை  |  odb

அப்பங்களும், மீன்களும்

ஒரு சிறு பையன் ஆலயத்திலிருந்து மிகவும் உற்சாகத்தோடும், ஆரவாரத்தோடும் அன்றைய நாள் முழுதும் பிடித்தப் பாடமான அப்பங்களும் மீன்களும் ஒரு சிறுவனைக் குறித்த மகிழ்ச்சியோடு வீட்டிற்கு வந்து சொன்னான். அவன், அந்தச் சிறுவன் எவ்வாறு தன் அப்பங்களையும், மீன்களையும் இயேசுவிடம் கொடுத்தான் என்பதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தான்.

இயேசுவானவர் அன்று நாள் முழுவதும் மக்கள் கூட்டத்திற்கு போதித்துக் கொண்டிருந்தார். அவருடைய சீஷர்கள், அவர்கள், ஊருக்குள் போய் அப்பங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிட வேண்டும் என்று கூறினார்கள். இயேசு அவர்களுக்கு, 'நீங்களே அவர்களுக்குப் போஜனம் கொடுங்கள்", என்று கூறினார். (மத். 14:16) ஐயாயிரம் பேருக்கும் அதிகமானோர் அங்கு இருந்தபடியால் சீடர்கள் கலக்கமடைந்தார்கள். மீதமுள்ள கதை உங்களுக்குத்தெரியும். அந்தச் சிறுவன் தன்னுடைய மதிய உணவைக் கொடுத்தான் - ஐந்து சிறிய அப்பங்கள் மற்றும் இரண்டு மீன்கள் - இதைக் கொண்டுதான் இயேசுவானவர் மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை போஷித்தார் (வச. 13-21). ஒரு கற்பனை கதை என்னவெனில், இந்த சிறுவனின் தாராள மனப்பான்மையைக் கண்டு, மற்றவர்களும் தங்கள், மதிய உணவைக் கொடுத்தார்கள் என்பதாகும். ஆனால், மத்தேயு தெளிவாக இது ஒரு அற்புதம் என நாம் புரிந்து கொள்வதற்காக விளக்கம் அளிக்கிறார். இந்த சம்பவமானது, நான்கு சுவிசேஷங்களிலும் இடம் பெற்றிருக்கிறது.

நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? குடும்பம், அயலகத்தார், நண்பர்கள், உடன் ஊழியர்கள், மற்றும் பலர் பல்வேறு விதமான தேவைகளோடு நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். நம்மை விட அதிகம் வசதிபடைத்தவர்களிடத்திற்கு நாம் அவர்களை அனுப்பலாமா? உண்மையாகவே சிலருடைய தேவைகள் நம்முடைய சக்திக்கும் மீறினதாகவே இருக்கும். ஆனால் எல்லா நேரத்திலும் அல்ல. உங்களிடத்தில் என்ன உள்ளதோ, ஒரு கட்டிபிடித்தல், ஒரு அன்பான வார்த்தை, கவனிக்கும் காதுகள், ஒரு சுருக்கமான ஜெபம், நீங்கள் பெற்ற ஞானத்தினையும் இயேசுவண்டைக் கொடுத்து அதைக் கொண்டு அவர் என்ன செய்கிறார் எனப் பாருங்கள்.

ஒன்றினை சொந்தமாக்கிக்கொண்ட மனிதனைக் கேளுங்கள்

1900களின் ஆரம்பத்தில் பேக்கார்ட் மோட்டார் கார் கம்பெனி ஒரு வாக்கியத்தை உருவாக்கி, வாங்குபவர்களை ஊக்குவித்தது. அது என்னவெனில், 'ஒன்றினை சொந்தமாகக்கொண்ட மனிதனைக் கேளுங்கள்" என்பதே. இது ஒரு வல்லமையான வாக்கியமாக அந்நாளில் திகழ்ந்தது. அது அந்தக் கார் கம்பெனியின் நன்மதிப்பை அதிகரித்து, அந்தக் காலகட்டத்தில் மிக உயர்ந்த, மற்றும் விலையுயர்ந்த காரினை உருவாக்குகின்ற கம்பெனியாய் உயர்த்தியது. இந்த பேக்கார்ட் கார் கம்பெனியின் எண்ணம் என்னவென்றால், கார் வாங்கின தனிப்பட்ட மனிதனின் சாட்சியானது கேட்பவர்களை உற்சாகமூட்டும் எனவும், தன்னுடைய நண்பன் தான் வாங்கின ஒருபொருளைக் குறித்த திருப்தியானது, ஒரு சக்தி மிகுந்த ஆதரவு என்று நினைத்தது.

தேவனோடு நமக்கு உள்ள நெருக்கமான உறவினை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது என்பது மற்றவர்கள் மீது நல்லதொரு தாக்கத்தை உருவாக்குகிறது. தேவன், நம்முடைய நன்றிகளையும் மகிழ்ச்சியையும் அவரோடு மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமும் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறார். (சங். 66:1) சங்கீதக்காரன், தன் சங்கீதத்தில், தன் பாவத்திலிருந்து முற்றிலுமாக திரும்பினபோது, தேவன் தனக்கு அளித்த மன்னிப்பினைக் குறித்து மிகவும் வாஞ்சையோடு பகிர்ந்து கொள்ளுகிறார் (வச. 18-20).

வரலாற்றிலே தேவன் மகத்துவமான காரியங்களை செய்து கொண்டிருக்கிறார். உதாரணமாக, செங்கடலை இரண்டாகப் பிளந்தது (வச. 6). அவர் நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் மகத்துவமான காரியங்களைச் செய்கிறார். அதன்மூலம் நம் பாடுகளின் மத்தியில் நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவரை நமக்குக் கொடுத்து, அவருடைய வார்த்தையை நாம் புரிந்துகொள்ளச் செய்கிறார். நம்முடைய அன்றாடத் தேவைகளையும் அவர் சந்திக்கிறார். நாம் இப்படிப்பட்ட சொந்த அனுபவங்களில் தேவனுடைய இடைப்படுதலைக் குறித்து, மற்றவர்களிடம் கூறும் பொழுது, நாம் மற்றெல்லா காரியங்களையும் விட விலையுயர்ந்த காரியத்தினை அவர்களுக்கு கொடுக்கிறோம் - நாம் தேவனுடைய நன்மைகளை உணர்ந்தவர்களாய் மற்றவர்களையும் அவர்களுடைய வாழ்விற்கான பயணத்தில் அவர்களை உற்சாகப்படுத்துகிறவர்களாயும் காணப்படுவோம்.

அன்பிற்காகவா அல்லது பணத்திற்காகவா

ஐரிஷ் கவிஞர் ஆஸ்கர் வைல்டு இவ்வாறு கூறுகிறார், 'நான் இளைஞனாக இருந்தபோது பணம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதென்று நினைத்தேன். இப்பொழுதும் நான் வயதான பிறகும் அதையே நினைக்கிறேன்." அவருடைய கூற்றானது நாவிலிருந்து வந்தாலும், அவர் 46ஆம் வயது வரையே வாழ்ந்தார். அதனால் அவர் உண்மையிலேயே வயது சென்று மரிக்கவில்லை. ஆனால் தன் இறுதி நாட்களில் வைல்டு, பணம்தான் வாழ்கைக்கு முக்கியமல்ல என்ற உண்மையைப் புரிந்துகொண்டார். பணம் தற்காலிகமானது, அது வரும் அது போகும். எனவே வாழ்க்கை என்பது பணத்தைவிடவும், அது வாங்கும் பொருட்களைவிடவும் முக்கியமானது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தாம் வாழ்ந்த காலத்தில் உள்ள சந்ததியாரை. பணக்காரன் ஏழை இருவரும் சமம். மறு அளவீட்டிற்கான மதிப்பீட்டுத் திட்டத்தில் உள்ளடக்கியது என்று சவால் விடுத்தார் (லூக். 12:15). '’பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவனல்ல" என ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார். நம்முடைய கலாச்சாரத்தில், அதிகத்தின் மேலும், புதியவற்றின் மேலும், மற்றும் சிறந்தவற்றின் மேலும் நம்முடைய நிரந்தரமான பார்வை படும்பொழுது, பணத்தின் மேலும் ஆஸ்தியின் மேலும் நம்முடைய பார்வையானது, மனத்திருப்தியோடும், உயரிய நோக்கத்தோடும் படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

இயேசுவை சந்தித்த மாத்திரத்தில், ஒரு பணக்கார அதிகாரி, துக்கத்தோடு திரும்பி செல்லுகிறார். ஏனெனில் அவருக்குத் திரளான ஆஸ்திகள் இருந்தது. அதனால் அவைகளை அவரால் விட்டுக்கொடுக்க முடியவில்லை (லூக். 18:18-25). ஆனால் ஆயக்காரனாகிய சகேயு தன் வாழ்க்கையில் முழுவதும் சம்பாதித்தவற்றை விட்டுக்கொடுத்தார் (லூக்.19:8). வித்தியாசம் என்னவெனில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இருதயத்தைத் தழுவுதலாகும். அவருடைய கிருபையின் நிமித்தம், நம்முடைய ஆஸ்திகளின்மேல் ஆரோக்கியமான கண்ணோட்டத்தை உடையவர்களாய் இருக்கலாம். அவ்வாறு இருப்பின், அந்த பொருட்கள் நம்மை மேற்கொண்டதாக இருக்க முடியாது.

பயனற்றவையிலிருந்து பொக்கிஷத்திற்கு

இடத்தில் இருந்தது. அதில் காணப்பட்ட எந்த ஒரு காரியமும் சிறப்பானதாகக் காணப்படவில்லை. ஆனாலும் ஜோஸ் ஆல்பர்ட்டோ கட்டிரஸ் என்பவர் எழைப்பிள்ளைகளுக்குக் கொடுக்கும்படியாக சேகரிக்கப்பட்ட 25,000 புத்தகங்கள், கொலம்பியாவின் தலைநகரிலுள்ள அந்த பழைய புத்தக வியாபாரியின் வீட்டில் இருந்தது.

உள்ளூர் பிள்ளைகள் அங்கிருந்த அந்த நூலகத்திற்கு வார இறுதியில் சென்று வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு அறையாக தேடிச் சென்று, பல புத்தகங்களைக் கட்டி எடுத்துச் செல்வார்கள். பிள்ளைகள் அந்த எளிமையான வீட்டினை, ஜோஸ் என்ற பெரியவர் வீட்டை விட பெரிதாக நினைத்தார்கள்.  அது விலைமதிப்பு மிக்க ஒரு பொக்கிஷம். இது கிறிஸ்துவைப் பின்தொடரும் ஒவ்வொருவருக்கும் பொருத்தமானதாகும். நாம் சாதாரணமாக களிமண்ணினால் உண்டாக்கப்பட்டிருகிறோம்.  பல விதமான விரிசல்களோடு எளிதில் உடைந்துபோகக்கூடிய வகையில் இருக்கிறோம். ஆனால், நாம் உடைந்துபோன உலகத்திற்கு சுவிசேஷத்தைக் கொண்டு செல்ல நமக்கு உதவி செய்யும் பரிசுத்த ஆவியானவரை நம் வாழ்க்கையில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பினை தேவன் நம்மிடம் கொடுத்திருக்கிறார். இது சாதாரண மற்றும் பலனற்ற மக்களுக்கான மிகப் பெரிய வேலையாகும். 'இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களில் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி இந்த பொக்கிஷங்களை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்"
(2 கொரி. 4:7) என்று அப்போஸ்தலனாகிய பவுல் பழைய பட்டணமான கொரிந்துவிலுள்ள தன்னுடைய சபையாருக்கு எழுதுகிறார். அவர்கள் அந்த பிராந்தியத்திலுள்ள பலதரப்பட்ட வர்க்கத்தை சேர்ந்தவர்களானபடியால், பவுல், 'நாங்கள் எங்களையே பிரசங்கியாமல்" (2 கொரி. 4:5) என்று அவர்களுக்கு எழுதுகிறார்.

அதற்கு பதிலாக, நமக்குள்ளாக வசிக்கும் விலைமதிப்பில்லாத ஒருவரை பிரசங்கியுங்கள் எனக் கூறுகிறார். அது அவரும், அவருடைய எல்லா சக்திக்கும் மேலான வல்லமையும் நம்முடைய சாதாரண வாழ்வினை விலைமதிப்பில்லாத பொக்கிஷமாக மாற்றும் என்பதாகும்.

பயனற்றவையிலிருந்து பொக்கிஷத்திற்கு

இடத்தில் இருந்தது. அதில் காணப்பட்ட எந்த ஒரு காரியமும் சிறப்பானதாகக் காணப்படவில்லை. ஆனாலும் ஜோஸ் ஆல்பர்ட்டோ கட்டிரஸ் என்பவர் எழைப்பிள்ளைகளுக்குக் கொடுக்கும்படியாக சேகரிக்கப்பட்ட 25,000 புத்தகங்கள், கொலம்பியாவின் தலைநகரிலுள்ள அந்த பழைய புத்தக வியாபாரியின் வீட்டில் இருந்தது.

உள்ளூர் பிள்ளைகள் அங்கிருந்த அந்த நூலகத்திற்கு வார இறுதியில் சென்று வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு அறையாக தேடிச் சென்று, பல புத்தகங்களைக் கட்டி எடுத்துச் செல்வார்கள். பிள்ளைகள் அந்த எளிமையான வீட்டினை, ஜோஸ் என்ற பெரியவர் வீட்டை விட பெரிதாக நினைத்தார்கள்.  அது விலைமதிப்பு மிக்க ஒரு பொக்கிஷம். இது கிறிஸ்துவைப் பின்தொடரும் ஒவ்வொருவருக்கும் பொருத்தமானதாகும். நாம் சாதாரணமாக களிமண்ணினால் உண்டாக்கப்பட்டிருகிறோம்.  பல விதமான விரிசல்களோடு எளிதில் உடைந்துபோகக்கூடிய வகையில் இருக்கிறோம். ஆனால், நாம் உடைந்துபோன உலகத்திற்கு சுவிசேஷத்தைக் கொண்டு செல்ல நமக்கு உதவி செய்யும் பரிசுத்த ஆவியானவரை நம் வாழ்க்கையில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பினை தேவன் நம்மிடம் கொடுத்திருக்கிறார். இது சாதாரண மற்றும் பலனற்ற மக்களுக்கான மிகப் பெரிய வேலையாகும். 'இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களில் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி இந்த பொக்கிஷங்களை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்"
(2 கொரி. 4:7) என்று அப்போஸ்தலனாகிய பவுல் பழைய பட்டணமான கொரிந்துவிலுள்ள தன்னுடைய சபையாருக்கு எழுதுகிறார். அவர்கள் அந்த பிராந்தியத்திலுள்ள பலதரப்பட்ட வர்க்கத்தை சேர்ந்தவர்களானபடியால், பவுல், 'நாங்கள் எங்களையே பிரசங்கியாமல்" (2 கொரி. 4:5) என்று அவர்களுக்கு எழுதுகிறார்.

அதற்கு பதிலாக, நமக்குள்ளாக வசிக்கும் விலைமதிப்பில்லாத ஒருவரை பிரசங்கியுங்கள் எனக் கூறுகிறார். அது அவரும், அவருடைய எல்லா சக்திக்கும் மேலான வல்லமையும் நம்முடைய சாதாரண வாழ்வினை விலைமதிப்பில்லாத பொக்கிஷமாக மாற்றும் என்பதாகும்.