அதில் கூறியுள்ளபடி செய்
பிரையன், தன்னுடைய சகோதரனின் திருமண நிகழ்ச்சியில் வரவேற்பாளராக நியமிக்கப்பட்டான். அவன் அதைச் சரியாக செய்யவில்லை. எனவே, அவனுடைய குடும்பத்தினர் யாவரும் அவனைக் குறித்து அதிருப்தியடைந்தனர். அவனுடைய சகோதரி ஜாஸ்மின்னும் கூட. அவள் தான் அன்றைய வைபவத்தில் வேதாகமப் பகுதியை வாசிக்கும் படி நியமிக்கப் பட்டிருந்தாள். அந்த நிகழ்ச்சியில், அவள் 1 கொரிந்தியர் 13 ஆம் அதிகாரத்தை தவறில்லாமல், அழகாக வாசித்தாள். திருமணம் முடிந்த பின்னர், அவளுடைய தந்தை அவளை, அவளுடைய சகோதரனுக்கு ஒரு பிறந்தநாள் பரிசு வழங்குமாறு கூறினார். அவள் தயங்கினாள். அவளால் தான் வாசித்த வேத பகுதியிலுள்ளபடி அன்பு செய்வது கடினமாயிருந்தது. அன்று மாலை முடியுமுன் அவள் தன் மனதை மாற்றிக் கொண்டாள். “நான் அன்பைக் குறித்த வேத வாக்கியங்களை வாசித்து விட்டு, அதன்படி செயல் படாமல் இருக்க முடியாது” என்றாள்.
எப்பொழுதாகிலும் நீ வாசித்த அல்லது கேட்ட வேத வார்த்தையின் படி செயல் படவில்லையே யென்று குத்தப்பட்டதுண்டா? இதில் நீ தனிப்பட்டவனல்ல தேவனுடைய வார்த்தையை கேட்பதும், வாசிப்பதும் எளிது. ஆனால் அதின் படி நடக்க வேண்டுமே! எனவே, தான் யாக்கோபு “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின் படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (யாக். 1:22) எனக் குறிப்பிடுகின்றார். அவர் தரும் கண்ணாடி பிம்பத்தின் எடுத்துக்காட்டு நம்மைச் சிரிக்க செய்கின்றது. அதின் மூலம் நம்மில் காணப்படும் குறைகளை நாம் உணர்ந்து அதில் கவனம் செலுத்தும் படி அவர் சொல்கின்றார். ஆனால், குறைகளை உணர்வது மட்டும் போதும் என்றிருப்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். மேலும் வேத வார்த்தைகளை “உற்றுப்பார்த்து” அதில் “நிலைத்திரு” (வச. 25) என யாக்கோபு நம்மைத் தூண்டுகிறார். ஜாஸ்மின் எதைக் கட்டாயமாகச் செய்யும்படித் தூண்டப்பட்டாளோ அதை நாமும் செய்யும்படி அவர் நம்மை ஊக்கப்படுத்துகின்றார். வேத வார்த்தைகளின் படி வாழ்ந்து காட்டு. இதை விட வேறொன்றையும் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கவில்லை

உன்னுடைய ஆயுதத்தின் மேல் நம்பிக்கையாயிரு
ஓர் இளம் எழுத்தாளரான நான், எழுத்தாளர் மாநாடுகளில் இருக்கும் போது அடிக்கடி என்னுடைய திறமையின் மீது சந்தேகம் கொள்வதுண்டு. நான் அந்த அறையைச் சுற்றிப் பார்க்கும் போது அங்குள்ள மனிதர்கள் யாவரும் ராட்சதர்களைப் போல எனக்குக் காட்சித்தருகின்றனர். எனக்குப் போதிய பயிற்சியும் முன் அநுபவமும் இல்லாததால் இப்படித் தோன்றுகின்றது. எனக்கிருந்ததெல்லாம் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பில் எழுதப்பட்ட வேதாகமத்தின் நடையும், தொனியும், மொழியுமே. அதுவே என் பேச்சும், என் எழுத்தின் நடையாகவும் அமைந்தது. அதுவே என்னுடைய ஆயுதம். அதன் ஓசை எனக்குள் மகிழ்ச்சியைத் தந்தது. அது எல்லாருக்கும் அப்படியேயிருக்குமெனவும் நம்புகின்றேன்.
இளம் மேய்ப்பனான தாவீதும் கோலியாத்துடன் யுத்தம் செய்யும்படி சவுலின் போராயுதங்களை அணியும் வரை தன்னைப் பற்றி அறிந்து கொள்ளவில்லை (1 சாமு. 17:38-39). அந்த போராயுதங்களை அணிந்து கொண்டு அவனால் நடக்க முடியவில்லை. ஒரு மனிதனுடைய ஆயுதங்கள் மற்றொரு மனிதனுக்குச் சிறை போன்றது என்பதை தாவீது புரிந்திருப்பான். “நான் இவைகளைப்போட்டுக் கொண்டு போகக் கூடாது” (வச. 39) என்றான். அவன் அறிந்திருந்ததை நம்பினான். அந்த நேரத்தில் அவனுக்கு எது தேவையோ அதை தேவன் அவனுக்குள் தயாரித்து வைத்திருந்தார் (வச. 34-35) கவணும், கற்களும் தான் தாவீதுக்கு பழக்கமானவை. அவையே அவனுடைய ஆயுதங்கள். அவற்றை தேவன் பயன்படுத்தி இஸ்ரவேலரின் அதிபதிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார். நீயும் உன்னைக் குறித்து அறியாமல் இருந்த நேரங்களுண்டா? பிறர் பெற்றுள்ள ஏதோவொன்றை நான் பெற்றிருந்தால் என்னுடைய வாழ்க்கையும் வேறு விதமாக அமைந்திருக்குமென நினைக்கின்றாயா?
தேவன் உனக்கென்று தந்துள்ள திறமைகளையும் அனுபவத்தையும் நினைத்துப்பார். அவர் உனக்குத் தந்துள்ள ஆயுதத்தை நம்பு.

அவர் புயலை அமைதிப்படுத்துகிறார
ஜிம் பதட்டத்துடன், தான் வேலை செய்யும் குழுவினரோடு, தான் சந்திக்கும் பிரச்சனைகளான பிரிவினைகள், நியாயப்படுத்தும் குணம் மற்றும் புரிந்துகொள்ளாமை ஆகியவற்றைப் பற்றி பகிர்ந்து கொண்டான். ஒரு மணி நேரம் பொறுமையாக அவனுடைய காரியங்களைக் கேட்ட பின், நான், ‘‘இந்தச் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டுமென இயேசு விரும்புகிறாரெனக் கேட்ப்போம்” என்று ஆலோசனைக் கூறினேன் .நாங்கள் அமைதியாக ஐந்து நிமிடம் அமர்ந்திருந்தோம். அப்பொழுது ஓர் ஆச்சரியமான காரியம் நிகழ்ந்தது. தேவ சமாதானம் எங்களை நிரப்பியதை நாங்கள் இருவரும் உணர்ந்தோம். அவருடைய பிரசன்னத்தையும் வழி நடத்துதலையும் உணர்ந்த போது ,அந்தக் கடினமான சூழலில் முன்னேறிச் செல்ல எங்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைத்தது.
இயேசுவின் சீடனான பேதுருவுக்கும் தேவனுடைய ஆறுதலளிக்கும் பிரசன்னம் தேவைப்பட்டது. ஓர் இரவு அவனும் மற்ற சீடர்களும் கலிலேயா கடலில் பிரயாணம் பண்ணிக் கொண்டிருந்த போது புயல் வீச ஆரம்பித்தது. அப்பொழுது இயேசு கடல் மேல் நடந்து வந்தார். அது சீடர்களை திகைப்படையச் செய்தது .ஆனால், இயேசு அவர்களிடம், ‘‘திடன் கொள்ளுங்கள், நான் தான்,பயப்படாதிருங்கள்” என்றார் (மத். 14:27). உடனே பேதுரு இயேசுவிடம் தானும் அவரோடு நடக்க கட்டளையிடும் என்றான். அவன் படகை விட்டு நீரில் இறங்கி இயேசுவை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஆனால், அவன் தன்னுடைய இலக்கை நோக்குவதை விட்டு விட்டு தான் இருக்கின்ற ஆபத்தையும், மனிதனின் இயலாமையையும் நினைக்க ஆரம்பித்தான், மூழ்கத் தொடங்கினான். ‘‘ஆண்டவரே என்னை ரட்சியும்’’ என்று கூப்பிட்டான். இயேசுவும் அன்போடு அவனைக் காப்பாற்றினார் (வச. 30-31).
பேதுருவைப் போன்று, நம்முடைய வாழ்க்கைப் புயலின் போதும் தேவக் குமாரனாகிய இயேசு நம்முடனேயேயிருக்கிறார் என்பதைக் கற்றுக் கொள்வோம்.

அன்பின் நீண்ட எல்லை
மேரி லீ என்பது 16 அடி நீளமும், 3500 பவுண்டு எடையும் கொண்ட பெரிய வெள்ளை சுறாமீன். கடல் ஆய்வாளர்களால் பரப்பி பொருத்தப்பட்டு 2012ஆம் ஆண்டு அமெரிக்காவின் கிழக்குச் சமுத்திரத்தில் விடப்பட்டது. அதன் மேல்பக்கத் துடுப்புடன் இணைக்கப்பட்ட பரப்பி, செயற்கைகோள் மூலம் கண்காணிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக மேரி லீ மேற்கொண்ட பயணங்கள் ஆராய்ச்சியாளர்களாலும் , கடலில் பயணிப்பவர்களாலும் நேரடியாகப் பார்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 40,000 மைல் தொலைவு வரையும் அதனைப் பின் தொடர்ந்தனர். ஆனால், ஒருநாள் அதனோடிருந்த தொடர்பு நின்று விட்டது. ஒருவேளை, அதன் பரப்பியிலுள்ள பாட்டரி செயலிழந்திருக்கலாம்.
மனித அறிவும் ,தொழில் நுட்பமும் இவ்வளவு தான் செயல்பட முடிந்தது. மேரி லீயைப் பின் தொடர்ந்தவர்களெல்லாரும் அதன் பாதையைக் கண்டுபிடிக்க முடியாமல் விட்டு விட்டனர். ஆனால் நீயும் நானும் நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் தேவனுடைய பார்வையிலிருந்து தவிர்க்க முடியாது. தாவீது, “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்’’ (சங். 139:7-8) என்று ஜெபிக்கிறார். “இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது” என வியந்தார்.
தேவன் நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறார்.ஏனெனில் அவர் நம்மை நேசிக்கின்றார். அவர் நம் வாழ்வை கவனிப்பதோடு மட்டுமல்ல, பாதுகாத்தும் வருகின்றார். நம் வாழ்வினுள் வந்து அதைப் புதிதாக்குகின்றார். இயேசுவின் வாழ்வு, சாவு, உயிர்த்தெழுதலின் மூலம் நம்மை தேவனண்டை இழுத்துக் கொள்கின்றார். நாமும் அவரை அறிந்து கொண்டு, நித்திய காலமாக அவரையே நேசிப்போம். தேவனுடைய அன்பின் எல்லையை விட்டு நம்மால் கடந்து செல்ல முடியாது.

நரிகளைப் பிடித்தல்
முதன்முறையாக எங்கள் வீட்டினுள் நுழை ந்த வெளவாலை எப்படியோ வெளியேற்றி விட்டோம். ஆனால் அது, மீண்டும் இரவு நேரத்தில் வந்த போது, நான் அந்த உயிரினத்தைப் பற்றிய செய்திகளை வாசித்தேன். அவை மனிதர்கள் வாழும் இடத்தினுள் நுழைவதற்கு, ஒரு சிறிய காசு அளவு துளையிருந்தாலும் போதும், அதன் வழியாக நுழைந்து விடும் எனத் தெரிந்து கொண்டேன். எனவே நான், சிறிய துளைகளை அடைக்க உதவும் என்னுடைய காக் வகை துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, வீட்டைச்சுற்றி வந்து, எல்லா சிறிய திறப்புகளையும் அடைத்தேன்.
உன்னதப்பாட்டு 2:15ல், சாலமோன் மற்றுமொரு தொல்லை தரும் உயிரினத்தைப் பற்றி குறிப்பிடுகின்றார். இங்கு, அவர் திராட்சத் தோட்டங்களைக் கெடுக்கும் “சிறு நரிகளை”ப்பற்றி குறிப்பிடுகின்றார். நம் வாழ்க்கையினுள் நுழைந்து, உறவுகளைக் கெடுக்கும் அபாயங்களைக் குறித்து, இதனை அடையாளமாகச் சொல்கின்றார். வெளவால் விரும்பிகளையும், நரி ரசிகர்களையும் புண்படுத்துவதற்காக நான் இதனைச் சொல்லவில்லை. வெளவால்களையும், நரிகளையும் வீட்டைவிட்டு துரத்துவது என்பது, பாவத்தை நம் வாழ்வை விட்டு துரத்துவதற்குச் சமம் என்கின்றார் (எபே. 5:3). தேவனுடைய கிருபையினாலும், பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே கிரியை செய்கிறபடியினாலும் நாம், “மாம்சத்தின் படி நடவாமல் ஆவியின் படி நடக்கிறதற்கு” (ரோம. 8:4) பெலனளிக்கிறார். பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நாம் பாவத்திற்கு எதிர்த்து நிற்க முடியும்.
இப்பொழுது நாம் “கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறோம் வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்வோம்’’ (எபே. 5:8-10) ஆவியானவர் சிறு நரிகளைப் பிடிக்க நமக்கு உதவிசெய்கின்றார்.