வகை  |  odb

ஒரே ஒரு தொடுதல்

ஒரு சாதாரண தொடுதல் தான். ஆனால், அது காலினின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது இயேசுவின் விசுவாசிகளுக்கு அதிக எதிர்ப்பைத் தெரிவிக்கும் பகுதிக்குச் சென்று, தொண்டு செய்யும்படி அவனுடைய குழுவினர் ஆயத்தப்படுகையில், அவனுடைய மன அழுத்தம் வெகுவாக அதிகரித்தது. அவன் தன் கவலைகளை, அக்குழுவிலுள்ள ஒருவரோடு பகிர்ந்தான். அந்த நண்பன் நின்று, தன் கையை அவன் தோள் மீது வைத்து, அவனை ஊக்கப்படுத்தும் சில வார்தைகளைப் பகிர்ந்து கொண்டான். காலின் ,அந்த தொடுதலை, தன் வாழ்வின் திருப்பு முனையாக நினைத்துப் பார்க்கின்றான். தேவன் அவனோடு இருக்கிறார் என்ற உண்மை வல்லமையாக அவனுக்குள் கிரியை செய்தது.

இயேசுவுக்கு மிக அன்பான சீடனான யோவான், சுவிசேஷத்தைப் பரப்பியதற்காக நாடு கடத்தப்பட்டு, பத்மு தீவில் தனித்து விடப்பட்டான். அப்பொழுது அவன், “எக்காளசத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக்” கேட்டான் (வெளி. 1:10). அதனைத் தொடர்ந்து தேவனுடைய தரிசனத்தைக் கண்டான். அப்பொழுது யோவான், “செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தான்” பயந்து நடுங்கிய அந்த வேளையில், ஆறுதலையும், தைரியத்தையும் பெற்றுக்கொண்டு, எழுத ஆரம்பிக் கின்றான். “அவர் தம்முடைய வலது கரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;” (வச. 17) என்றெழுதினான்.

தேவன் நம்முடைய வசதியான வாழ்விலிருந்து நம்மை வெளியே எடுத்து, புதிய காரியங்களைக் காண்பிக்கின்றார், நம்மை வளைய வைத்து, வளரச் செய்கின்றார். நமக்கு தைரியத்தையும், ஆறுதலையும் தந்து எல்லா சூழ்நிலைகளின் வழியாகவும் கடந்து செல்லப் பண்ணுகின்றார். நம் சோதனைகளின் மத்தியில், நம்மை அவர் தனியே விடுவதில்லை. எல்லாவற்றையும் அவர் கட்டுப்படுத்துகின்றார், நம்மை அவருடைய கரங்களில் வைத்துள்ளார்.

 

இது நான் தான்

பி.டி.பார்னம் என்பவரின் வாழ்க்கையையும், அவருடைய சர்க்கஸ் அநுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட, பிரசித்திப் பெற்ற “த கிரேடெஸ்ட் ஷோ மன்” என்ற திரைப்படத்தின் முன் இசையாக, அனைவரையும் ஈர்க்கும் “திஸ் இஸ் மீ” என்ற, பாடல் மறக்கமுடியாத வகையில் இசைக்கப்படும். அந்த படத்தில் வரும் நடிகர்களால் இப்பாடல் பாடப்படும், இந்த நடிகர்கள், சமுதாயத்தின் விதிமுறைகளுக்கு இணங்கி செயல்படவில்லையென்பதற்காக, அவர்கள் சந்தித்த இகழ்ச்சிகளையும், கேவலங்களையும் விளக்குவதோடு, கொடிய வார்த்தைகள் மனிதனைக் கொல்லும் துப்பாக்கி குண்டுகளெனவும், நிரந்தர காயத்தை ஏற்படுத்தும் கத்திகள் எனவும் இந்த பாடலின் வரிகள் கூறுகின்றது. 

கடுஞ்சொற்களால் ஏற்பட்ட அகக்காயங்களை எத்தனை மக்கள் தாங்கிக் கொண்டு வாழ்கின்றனர் என்பதை இப்பாடல் தெரிவிக்கின்றது.

ஒருவருடைய வார்த்தைகள் ஏற்படுத்தும் காயத்தின் வன்மையையும், அது, நீண்ட காலம் நிலைத்திருக்கும் கொடுமையையும் யாக்கோபு அறிந்திருந்தார். எனவே நாவைக் குறித்து அது அடங்காத பொல்லாங்குள்ளதும், சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது (யாக். 3:8). என்கின்றார். இந்த வலிமையான ஒப்பிடுதலின் மூலம், விசுவாசிகள் தங்கள் வார்த்தைகளின் மிகுந்த வல்லமையை உணர்ந்துகொள்ள வேண்டுமென யாக்கோபு வலியுறுத்துகின்றார். இதற்கும் மேலாக, ஒரே வாயினாலே தேவனைத் துதித்துக் கொண்டும், தேவனுடைய சாயலாக படைக்கப்பட்ட மனிதனை தூஷிக்கவும் முற்படுகிறோம் என்கின்றார் (வச. 9-10).

“திஸ் இஸ் மீ” என்ற பாடல் வார்த்தைகளினால் காயப்படுத்துதலை விளக்குகிறது. நாம் மகிமைக்குரியவர்களென்பதாக வேதாகமம் உறுதியளிக்கின்றது. இந்த உண்மை ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு தனி அழகையும், கெளரவத்தையும் கொடுக்கின்றது. அது நம்முடைய வெளித் தோற்றத்தினாலோ அல்லது நாம் எதையொ செய்துவிட்டதாலோ அல்ல. நாம் அவருடைய கரத்தினால் அழகாக உருவாக்கப்பட்டோம். நாம் அவருடைய கரத்தின் படைப்புகள் (சங். 139:14) எனவே நாம் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளும் வார்த்தைகளும், ஒருவரைப்பற்றி கூறும் வார்த்தைகளும் அவர்களில் உண்மையாகும் வல்லமை பெற்றவை.

 

பாதங்களுக்கு, ஒரு நல்ல செய்தி

“சரித்திரத்தில் இதுவரை காணாத சுகத்தை தரும் காலுறைகள்,” என்ற விளம்பரத்தைப் பார்த்தபோது என் முகத்தில் சிரிப்பு வந்தது. அதைத் தொடர்ந்து, பாதங்களுக்கு ஒரு நல்ல செய்தி, வீடற்றவர்களின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான தேவை காலுறைகள். எனவே ஒவ்வொரு ஜோடி காலுறை வாங்கும் போதும், மற்றொரு ஜோடி தேவையுள்ள ஒருவருக்கு இலவசமாகக் கொடுக்கப்படும் எனவும் அந்த விளம்பரதாரர் தெரிவித்தார்.

முப்பத்தெட்டு வருடமாய் நடக்க முடியாமலிருந்த ஒரு மனிதனை இயேசு குணமாக்கிய போது அவன் எவ்வாறு சிரித்திருப்பான் என்று நினைத்துப் பார் (யோவா. 5:2-8). அதே வேளையில் தேவாலயத்தின் அதிகாரிகளின் முகத்தில் தோன்றிய பார்வையை எண்ணிப் பார்த்தால், அவர்கள் யாருமே, நீண்ட நாட்களாக உதவியற்றிருந்த ஒரு மனிதனின் கால்களையும், இருதயத்தையும் குறித்து இயேசு கரிசனை கொண்டதைக் குறித்து நல்லெண்ணம் கொண்டதாகத் தெரியவில்லை. ஓய்வுநாளில் எந்தவொரு வேலையும் செய்யக்கூடாது என்ற அவர்களுடைய சட்டத்தை மீறியவர்களாக இயேசுவையும், அந்த மனிதனையும் குறித்து குற்றம் சாட்டினர் (வச. 9-10, 16-17). இயேசு, இரக்கத்தின் தேவையை உணர்ந்த இடத்தில், அவர்கள் சட்டத்தைப் பார்த்தனர். 

இது வரையில் அம்மனிதனுக்கு தன்னுடைய கால்களை சுகப்படுத்தியவர் யாரென்றே தெரியாது. பின்னர் தான் தன்னை சுகப்படுத்தியவர் இயேசு என்று தெரிந்து கொள்கின்றான் (வச. 13-15) அதே இயேசு தன்னுடைய பாதங்களை மரத்தில் அடிக்கப்பட ஒப்புக்கொடுத்தார். இதன் மூலம் அம்மனிதனுக்கும், நமக்கும், உடைந்த சரீரமும், உள்ளமும், இருதயமும் கொண்டவர்களுக்கும், சரித்திரத்தில் இதுவரை கேட்டிராத நல்ல செய்தியைத் தந்துள்ளார் .

 

அன்பின் விருந்து

“பெபட்டாவின் விருந்து” என்ற டேனிஷ் திரைப் படத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓர் அகதி, ஜெர்மனி தேசத்திலுள்ள ஒரு கடற்கரை கிராமத்திற்கு வருகின்றாள். அங்குள்ள கிறிஸ்தவ சமுதாயத்தினரின் தலைவர்களாகச் செயல்பட்ட இரு வயதான சகோதரிகளிடம் வந்து அடைக்கலம் புகுகின்றாள். பதினான்கு ஆண்டுகள், பெபட்டா அந்தச் சகோதரிகளின் வீட்டு வேலைகளை கவனிக்கின்றாள். இதன் மூலம் அவள் அதிகமான தொகையைச் சேகரித்து வைத்திருந்தாள். அவள், பிரான்ஸ் நாட்டினரின் உயர்தர உணவு விருந்தொன்றை ஆயத்தப்படுத்தி, அங்குள்ள சபை அங்கத்தினர்கள் பன்னிரண்டு பேரையும் அழைத்தாள்.

ஒரு வகை உணவிலிருந்து அடுத்ததிற்குச் செல்லும் இடைவெளியில், சிலர் ஓய்வு எடுத்துக் கொண்டனர், சிலர் மன்னிப்பை பெற்றுக்கொண்டனர், சிலர் தாங்கள் இழந்த அன்பை திரும்ப பெற்றுக்கொண்டனர், சிலர் தாங்கள் பெற்ற அற்புதங்களையும், சிறுவயதில் கற்றுக்கொண்ட உண்மைகளையும் பிறரோடு பகிர்ந்து கொண்டனர். “நாம் கற்றுக்கொண்டவைகளை நினைக்கின்றோமா?” என்று கேட்டுக் கொண்டனர். சிறு குழந்தைகள், ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள் என்று தங்களுக்குச் சொல்லப்பட்டதை நினைவு கூர்ந்தனர். அந்த சாப்பாடு முடிந்த போது, பெபட்டா, அந்த சகோதரிகளிடம், தன்னுடைய சேமிப்பு அனைத்தையும் இந்த உணவிற்கு செலவழித்து விட்டதாகத் தெரிவித்தாள். அவள் எல்லாவற்றையும், மீண்டும், பாரீஸிசின் புகழ் பெற்ற சமையற்காரியாகும் வாய்ப்பையும் விட்டுக் கொடுத்தாள். அவளோடு உணவருந்திய நண்பர்களின் உள்ளத்தைத் திறக்க உதவினாள்.

இயேசு, இவ்வுலகிற்கு அந்நியராகவும், ஊழியம் செய்பவராகவும் வந்தார். நம்முடைய ஆத்தும தாகத்தைத் தீர்க்க, அவர் எல்லாவற்றையும் கொடுத்தார். இயேசு தன்னுடைய உபதேசத்தைக் கேட்பவர்களிடம், உங்கள் முன்னோர்கள் வனாந்திரத்தில் திரிந்த போது, தேவன் அவர்கள் புசிப்பதற்கு காடையையும், மன்னாவையும் புசிக்கக் கொடுத்தார் (யாத். 16). அந்த உணவு அவர்களுக்கு கொஞ்சக் காலம் மட்டுமே திருப்தியைக் கொடுத்தது. இயேசுவை “வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்” என்று ஏற்றுக் கொள்கிறவன் “என்றென்றைக்கும் பிழைப்பான்” (யோவா. 6:51). அவருடைய தியாகம் நம்முடைய ஆத்ம தாகத்தைத் தீர்க்கும்.