பி.டி.பார்னம் என்பவரின் வாழ்க்கையையும், அவருடைய சர்க்கஸ் அநுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட, பிரசித்திப் பெற்ற “த கிரேடெஸ்ட் ஷோ மன்” என்ற திரைப்படத்தின் முன் இசையாக, அனைவரையும் ஈர்க்கும் “திஸ் இஸ் மீ” என்ற, பாடல் மறக்கமுடியாத வகையில் இசைக்கப்படும். அந்த படத்தில் வரும் நடிகர்களால் இப்பாடல் பாடப்படும், இந்த நடிகர்கள், சமுதாயத்தின் விதிமுறைகளுக்கு இணங்கி செயல்படவில்லையென்பதற்காக, அவர்கள் சந்தித்த இகழ்ச்சிகளையும், கேவலங்களையும் விளக்குவதோடு, கொடிய வார்த்தைகள் மனிதனைக் கொல்லும் துப்பாக்கி குண்டுகளெனவும், நிரந்தர காயத்தை ஏற்படுத்தும் கத்திகள் எனவும் இந்த பாடலின் வரிகள் கூறுகின்றது. 

கடுஞ்சொற்களால் ஏற்பட்ட அகக்காயங்களை எத்தனை மக்கள் தாங்கிக் கொண்டு வாழ்கின்றனர் என்பதை இப்பாடல் தெரிவிக்கின்றது.

ஒருவருடைய வார்த்தைகள் ஏற்படுத்தும் காயத்தின் வன்மையையும், அது, நீண்ட காலம் நிலைத்திருக்கும் கொடுமையையும் யாக்கோபு அறிந்திருந்தார். எனவே நாவைக் குறித்து அது அடங்காத பொல்லாங்குள்ளதும், சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது (யாக். 3:8). என்கின்றார். இந்த வலிமையான ஒப்பிடுதலின் மூலம், விசுவாசிகள் தங்கள் வார்த்தைகளின் மிகுந்த வல்லமையை உணர்ந்துகொள்ள வேண்டுமென யாக்கோபு வலியுறுத்துகின்றார். இதற்கும் மேலாக, ஒரே வாயினாலே தேவனைத் துதித்துக் கொண்டும், தேவனுடைய சாயலாக படைக்கப்பட்ட மனிதனை தூஷிக்கவும் முற்படுகிறோம் என்கின்றார் (வச. 9-10).

“திஸ் இஸ் மீ” என்ற பாடல் வார்த்தைகளினால் காயப்படுத்துதலை விளக்குகிறது. நாம் மகிமைக்குரியவர்களென்பதாக வேதாகமம் உறுதியளிக்கின்றது. இந்த உண்மை ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு தனி அழகையும், கெளரவத்தையும் கொடுக்கின்றது. அது நம்முடைய வெளித் தோற்றத்தினாலோ அல்லது நாம் எதையொ செய்துவிட்டதாலோ அல்ல. நாம் அவருடைய கரத்தினால் அழகாக உருவாக்கப்பட்டோம். நாம் அவருடைய கரத்தின் படைப்புகள் (சங். 139:14) எனவே நாம் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளும் வார்த்தைகளும், ஒருவரைப்பற்றி கூறும் வார்த்தைகளும் அவர்களில் உண்மையாகும் வல்லமை பெற்றவை.