வகை  |  odb

மிகவும் பாதுகாப்பான இடம்

வடக்கு கரோலினாவில் வில்மிங்க்டன் என்ற இடத்தை பிளாரன்ஸ் என்ற புயல், பேரழிவை ஏற்படுத்தும் வலிமையோடு தாக்கிய போது, என்னுடைய மகள் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேற ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். புயலின் வலிமை தணிந்து விடும் என்று எண்ணி, கடைசி நேரம் வரை, அவள் தாமதித்துக் கொண்டேயிருந்தாள். இப்பொழுது வேக வேகமாய் சில முக்கிய பொருட்களை எடுக்க எண்ணி, எடுக்கலாம் எனத் திணறிக் கொண்டு, “வீட்டை விட்டு வெளியேறுவது இத்தனை கடினமானது என்று நான் நினைக்கவில்லை, நான் மீண்டும் இங்கு வரும் போது ஏதாகிலும் மீதி இருக்குமா என்றும் தெரியவில்லை” என்றாள்.

நம் வாழ்விலும் அநேக வழிகளில் புயல் நம்மைத் தாக்குகின்றது சூறாவளி, சுழல் காற்று, நிலநடுக்கம், வெள்ளம் என எதிர் பாராத பிரச்சனைகள் நம்முடைய திருமண வாழ்வை, குழந்தைகளை, உடல் நலத்தை, அல்லது பொருளாதாரத்தைத் தாக்கலாம். நாம் மிக விலையேறப் பெற்றதாகக் கருதுபவை, ஒரு நொடிப் பொழுதில் மறைந்து போகலாம்.

இத்தனை புயலின் மத்தியிலும், வேதாகமம் நமக்கொரு பாதுகாப்பான இடத்தைக் காட்டுகின்றது.”தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துனையுமானவர். ஆகையால் பூமி நிலை மாறினாலும், மலைகள் நடுச் சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும்,… நாம் பயப்படோம்” (சங். 46:1-3).

இந்த சங்கீதத்தை எழுதியவரின் முன்னோர்கள், ஆரம்பத்தில் தேவனுக்கு உண்மையாய் பணிசெய்தனர், பின்னர், கர்த்தருக்கு விரோதமாகப் போராட்டம் பண்ணினதால் பூமி அதிர்ச்சியில் அழிந்து போயினர் (எண். 26:9-11). இதன் விளைவாக, அவர்கள் தாழ்மையையும், தேவனுடைய மகத்துவத்தையும், அவருடைய இரக்கத்தையும், நம்மை மீட்கும் அவருடைய அன்பையும் பற்றி புரிந்து கொண்டனர்.

துன்பங்கள் வரும், ஆனால் நம் தேவன் அவை எல்லாவற்றையும் விட நீடித்திருப்பவர். அவரிடம் ஓடி, அடைக்கலம் புகுவோர் அவரை யாராலும் அசைக்க முடியாது என்பதைக் கண்டு கொள்வர். என்றும் நிலைத்திருக்கும் அவருடைய அன்பின் கரத்தினுள்ளே சமாதானமாக தங்கும் இடத்தை நாம் கண்டு கொள்வோம்.

ஒப்புரவாகுதலின் கதவு

அயர்லாந்து தேசத்தில், டப்ளின் என்ற இடத்திலுள்ள தூய பேட்ரிக் பேராலயத்தில் ஒரு கதவு உள்ளது. ஐந்தாம் நூற்றாண்டில் நடைபெற்ற ஒரு கதையை, அது நமக்கு தெரிவிக்கின்றது. 1492ஆம் ஆண்டு, பட்லர் மற்றும் பிட்ஸ்ஜெரால்ட் ஆகிய இரு குடும்பத்தினரும், அவ்விடத்திலுள்ள ஓர் உயர் பதவிக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அச்சண்டையின் உச்சக்கட்டத்தில், பட்லர் குடும்பத்தினர் பேராலயத்தினுள் அடைக்கலம் புகுந்தனர். சண்டையை விட்டு விட்டு, சமாதானமாகிவிடும் படி கேட்டு, பிட்ஸ்ஜெரால்ட் குடும்பத்தினர் அங்கு வந்தனர். ஆனால் பட்லர்கள் கதவைத் திறக்க அஞ்சினர். பிட்ஸ்ஜெரால்டினர், கதவில் ஒரு துளையிட்டு, அதன் வழியே தம் கரத்தை உள்ளே நீட்டி, சமாதானத்தைக் கேட்டார். எனவே இரு குடும்பத்தினரும் ஒப்புரவாகினர், எதிரிகள் இருவரும் நண்பர்களானார்கள்.

கொரிந்து சபையினருக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய கடிதத்தில் ஒப்புரவாகுதலின் கதவைக் குறித்து எழுதுகின்றார். தேவன் தம்முடைய சொந்த முயற்சியினாலும், அளவற்ற அன்பினாலும் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம், பிதாவுக்கும் மனிதனுக்கும் உள்ள உடைந்து போன உறவை, மீண்டும் பெற்றுக்கொள்ளும்படி செய்தார். நாம் தேவனை விட்டு மிகவும் தூரமாய் போய் விட்டோம், ஆனால், அவருடைய இரக்கம் நம்மை அங்கேயே விட்டு விடவில்லை. நாம் மீண்டும் அவரோடு ஒப்புரவாகும்படி செய்தார். “தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல்” (2 கொரி. 5:19) தேவனுடைய நீதியை நிறைவேற்ற “பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார் ” எனவே இயேசுகிறிஸ்துவைக் கொண்டு நம்மை தேவனோடு ஒப்புரவாக்கினார்”
(வச. 18, 21).

ஒருமுறை தேவனுடைய சமாதானத்தைப் பெற்றுக்கொண்ட நாம், இந்தச் செய்தியை மற்றவர்களுக்கும் கொடுக்கவேண்டிய முக்கிய பொறுப்பினை பெற்றுள்ளோம். அவரை விசுவாசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் அன்பின் தேவன் தரும் மன்னிப்பிற்கும், மீட்பிற்கும் நாம் சாட்சிகளாய் இருக்கின்றோம்.

தழும்புகள் கூறும் கதைகள்

என்னுடைய அம்மா வளர்த்து வரும், பாண்டா முகம் கொண்ட பான்சி மலர்களை ஒரு வண்ணத்துப்பூச்சி சுற்றிச் சுற்றி வந்தது. நான் குழந்தை யாயிருந்த போது, அதைப் பிடித்து விட ஆவலாயிருந்தேன். நான், எங்களது பின் பக்க வளாகத்திலிருந்து, வேகமாக சமையலறைக்குள் வந்து, ஒரு கண்ணாடி குவளையை எடுத்துக் கொண்டு திரும்பிய போது, பின்புற சிமென்ட் தளத்தில் வழுக்கி விழுந்தேன். என்னுடைய கரத்திருந்த கண்ணாடி குவளை உடைந்து, என்னுடைய கணுக்கையை வெட்டியது. அவ்விடத்தில் பதினெட்டு தையல்கள் போட வேண்டியதாகி விட்டது. இன்றும், என்னுடைய கணுக்கையில் கம்பளி பூச்சி போன்ற தழும்பு காணப்படுகின்றது. அந்த தழும்பு, இன்றைக்கும் நான் காயப்பட்டதையும், மீண்டும் சுகம் பெற்றதையும் கூறிக் கொண்டிருக்கிறது.

இயேசு, மரித்து, உயிர்தெழுந்து, சீடர்களுக்கு காட்சியளித்த போது, அவர் தன்னுடைய தழும்புகளைக் காண்பித்தார். தோமா, அவருடைய “கைகளில் ஆணிகளால் உண்டான காயத்தைத்’’ தான், காண வேண்டும் என்கின்றார், என யோவான் எழுதுகின்றார். இயேசு தோமாவை நோக்கி, நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு” என்றார் (யோவா. 20:25,27). அவர் உயிர்த்தெழுந்த பின்பு, அவருடைய பாடுகளால் ஏற்பட்ட காயத்தின் தழும்புகளை பார்க்க முடிகிறது, அது, அவர் அதே இயேசு தான் என்பதைக் காட்டுகிறது

இயேசுவின் தழும்புகள் அவர் இரட்சகர் என்பதையும், மீட்பின் கதையையும் நமக்குச் சொல்கின்றது. அவருடைய பாதங்களிலும், கரங்களிலும் ஏற்பட்ட துளைகளும், விலாவில் ஏற்பட்ட குழியும், அவர் நமக்காகப் பட்ட வேதனைகளையும், காயங்களையும், அதன் பின் சுகமடைந்ததையும் சொல்லுகின்றது. நம்மை முற்றிலும் மீட்டுக்கொள்ளவே அவர் இத்தனை பாடுகளையும் ஏற்றுக்கொண்டார்

இயேசுவின் தழும்புகள் கூறும் கதையை நீ எப்பொழுதாகிலும் நினைத்துப் பார்த்ததுண்டா? 

 

இருளில் வந்த ஒளி

“தீஸ் ஆர் த ஜெனரேஷன்ஸ்” என்ற புத்தகத்தில் திரு.பியே என்பவர் தேவனுடைய உண்மையையும், இருளையும் ஊடுருவிச் செல்லும் அவருடைய சுவிசேஷத்தின் வல்லமையையும் பற்றி விளக்குகின்றார். அவருடைய தாத்தாவும், பெற்றோரும், மற்றும் அவருடைய சொந்த குடும்பமும், கிறிஸ்துவின் பேரிலுள்ள விசுவாசத்தை பரப்பியதற்காக பாடுப்பட்டனர். நண்பர் ஒருவருக்கு கிறிஸ்துவைப் பற்றி கூறியதற்காக திரு.பியே சிறையிலடைக்கப் பட்டார். ஆனால், அவருடைய விசுவாசம் வளர்ந்தது. இதே போலவே அவருடைய பெற்றோரும் அடைக்கப்பட்டிருந்த ஒரு கொடுமையான முகாமில் அவர்களும் கிறிஸ்துவின் அன்பைக்குறித்து பகிர்ந்து கொண்டனர். திரு.பியேவின் வாழ்விலும் யோவான் 1:5ல் கூறப்பட்டுள்ள “அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை” என்ற வார்த்தை உண்மையாயிருந்தது.

இயேசுவும் சிறை பிடிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படும் முன்னர், சீடர்களிடம் ,அவர்கள் சந்திக்கவிருக்கின்ற பாடுகளைக் குறித்து எச்சரித்தார். மேலும் அவர்கள் எல்லாராலும் புறக்கணிக்கப்படுவர் எனவும் கூறினார். ‘‘அவர்கள் பிதாவையும், என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்’’ என்றார் (16:3). இயேசு அவர்களுக்கு ஆறுதலின் வார்த்தைகளையும் கொடுத்தார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” என்றார் (வச. 33). 

இயேசுவின் சீடர்களில் அநேகர், திரு.பியே குடும்பத்தினர் அநுபவித்ததைப் போன்று பாடுகளைச் சந்தித்திருக்க மாட்டார்கள். நாமும் பாடுகளைச் சந்திக்க நேரலாம். அதற்காக நாம் தைரியம் இழக்கவோ, ஆத்திரம் அடையவோ வேண்டாம். நமக்கு உதவி செய்வதற்காக பரிசுத்த ஆவியானவரை நமக்கு அனுப்புவதாக வாக்களித்துள்ளார். நாம் வழிநடத்தப் படவும், தேற்றப்படவும், அவரை நோக்கிப் பார்ப்போம் (வச. 7). இருண்ட நேரங்களில், நாம் விழாத படி, தேவனுடைய வல்லமையுள்ள பிரசன்னம் நம்மைத் தாங்கிக் கொள்ளும்.