
கண்களை ஏறெடுத்து பாருங்கள்
ஒரு நாள் காலை பொழதில் மலையேறும் போது, அதிக பனியின் நிமித்தம், மேகம் முழுவதும் என்னை சூழந்து கொண்டது. சில மீட்டர்கள் மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு நிமிடமும் ஒரு மனிநேம் போல் நீட்டப்பட்டது. அதினால் எனது மனநிலை மிகவும் தாக்கத்திர்க்குள்ளானது. ஆனால், பின்னர் மதிய வேலையில் சொஞ்சமாக பனி மேகம் கலைந்து என் முன் இருக்கும் கம்பீரமான மலைகள் தெரிந்தது என்னை சுற்றி இருக்கும் சிகரங்களை என்னால் பார்க்க முடிந்தது. இவைகளை கண்டபோது என்னை அறியாமலே என் முகத்தில் சந்தோஷம் மலர்ந்தது. இதைகுறித்து சிந்திக்கும்போது, சில வேலைகளிள் எப்படி வெளிப்படை நிகழ்வுகள் நம் ஆவிக்குரிய பார்வையை பாதிக்கிறது என்று சங்கீதக்காரன் நமக்கு நினைப்புட்டுவது போல் “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்” என்பதை நினைவில் வைக்கவும் சில வேலைகளிள் நம் கண்களை ஏறெடுத்து பார்த்தால் மாத்திரம் போதும்.
தன் உதவி எங்கு இருந்து வருகிறது என்று சங்கீதக்காரன் யோசித்துகொண்டிருந்தான். தன்னை சுற்றி இறுக்கும் மலைகளில் உள்ள பலிபீடத்தில் இருந்தா? அல்லது சங்கீதக்காரன் தன் முன் வீற்றிருக்கும் சீயோன் மலையில் வீற்றிருக்கும் தேவாலயத்தை பார்த்து வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனிடத்தில் இருந்தா என்று? எப்படி பார்தாலும் அவரை தொழுது கொள்ளுட்படி நம் கண்களை ஏறெடுத்து பார்க்க வேண்டும். எப்பேற்ப்பட்ட ச்ந்தர்பங்கள் வழியாக நாம் கடந்து சென்றாலும், நம் பரச்சனைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அவையனைத்திற்கும் மேலாக இருக்கும் நம்மை படைத்த நம் மீட்பதை நோக்கி நம் கண்களை ஏறெடுத்து பார்போம். அவரே நம் பெயர் சொல்லி அழைக்கும் தேவனாக இருக்கிறார். இன்றும் என்றும் அவரே நம் போக்கையும் வரத்தையும் காப்பார்.

காகித கிரீடங்கள்
எனது பிறந்த நாள் விழாவில் எனக்கு தரப்பட்ட பரிசுகளை எனது நண்பர்களுடன் நான் திறந்து பார்க்க தொடங்கினேன். அனேக இனிப்புகளும் சிறிய விளையாட்டு பொருள்களும் அழகான கலை பொருள்களும் இருந்தன. அனைத்திலும் வித்தியாசமான ஒன்றாக காகிதத்தில் செய்யப்பட்ட கிரீடங்கள் இருந்தன. நாங்கள் அனைவரும் உற்சாகத்துடன் அவைகளைப் பெற்றுக் கொண்டோம். சந்தோஷத்துடன் எங்கள் நேரத்தை ராஜாவும் ராணியும் ஆக எங்கள் வீட்டு கழித்தோம் .
இதன் மூலமாக நாம் அதிகம் நினைத்துப் பார்க்காத ஒரு வாக்குத்தத்தம் ஒன்று என் நினைவிற்கு வருகிறது. பவுல் சொல்லுகிறது போல் நம் மறுவாழ்வில் நாம் இயேசுவோடு அரசாலுவோம் 1 கொரிந்தியர் 6ல் ‘உலகம் உங்களால் நியாந்தீர்க்கப்படும்’ என்று பவுல் நமக்கு இருக்கிற தான சலுகையின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறார். அதை விசுவாசிகள் ஆகிய நாம் மனதில் வைத்துக்கொண்டு இப்பூமியில் அனைத்தையும் சமாதானமாய் எடுத்து செல்ல வேண்டுமென்று ஊக்குவிக்கிறார்
பரிசுத்த ஆவிக்கு நாம் இடம் கொடுத்தோம் ஆனால் சமாதானத்தை உண்டு பண்ணுகிற சுயகட்டுப்பாடு பொறுமை நிதானம் ஆகியவற்றை நமக்குள் பிறப்பிக்க பண்ணுவார்.
பரிசுத்த ஆவியின் சித்தத்தை நமக்குள் நிறைவேற்றி இயேசுகிறிஸ்து பூமிக்கு திரும்பின உடன் நான் நமக்கென்று ஒப்புவிக்கப்பட்ட ராஜாக்களும் ஆசாரியர்களும் ஆய் தேவ ராஜ்யத்தில் அரசாலும் ( வெளி 5.10) தங்க கிரீடத்தில் மினுமினுக்கும் வைரலான இந்த சத்திய வசனத்தின் மேல் நம்பிக்கை வைப்போம்.

வேரோடு பிடுங்கு
ரெபேக்கா தனது சகோதரனின் குடும்பத்தை குறித்து மிகவும் கவலை கொண்டு இருந்தால் . கணவன் மனைவி இடையிலான பிரச்சனை முடிவடைய வேண்டும் என்று தேவனிடம் உருக்கமாய் ஜெபித்து வந்தால். ஆனால் சில நாட்களில் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள் அவரது மனைவி குழந்தைகளை வேறொரு ஊருக்கு அழைத்துச் சென்று விட்டார்கள் .
ரெபேக்கா மிகவும் அன்போடு நேசித்த அந்த குழந்தைகளை மறுபடி பார்க்க முடியவில்லை. சில வருடங்கள் பிறகு அவர்கள் கூறியது என்னவென்றால் இந்த கவலையை எனக்குள்ளாக அதிக நேரம் வைத்ததினால் எனக்குள்ள ஒரு கசப்பான வேறொன்று வளர்ந்து என்னை சுற்றி இருக்கும் நண்பர்களையும் குடும்பத்தார்களின் பாதித்தது அனைவருக்கும் பரவ ஆரம்பித்தது
இதேபோல் வேதாகமத்தில் ரூத் என்னும் புத்தகத்தில் நகோமி என்னும் பெண்ணின் இருதயமும் துக்கத்தினால் பரவக்கூடிய கசப்பாக மாறியது என்று பார்க்கிறோம். தூர தேசத்தில் தன் கணவனை இழந்து 10 வருடம் பிறகு தன் இரு மகன்களையும் இழந்தவளாக தன் இரு மருமகளாகிய ரூத் மற்றும் ஓர்பாள்ளுடன் ஆதரவற்றவளாய் கைவிடப்பட்டால் (1 :3-5). நகோமி தன் மருமகளுடன் தனது தேசத்திற்கு திரும்ப செல்லும் போது தன் தேச மக்கள் அனைவரும் மிகவும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் அவளோ அவர்கள் அனைவரிடம் “நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல் மாராள் என்று சொல்லுங்கள்;
சர்வ வல்லவர் எனக்கு மிகுந்த கசப்பை கட்டளையிட்டார்” (20) என்று துக்கத்தோடு சொன்னாள் .
உலகத்தில் அனைவருக்கும் துக்கங்களும் ஏமாற்றங்களும் உண்டு. அது நிமித்தம் நாம் கசப்புள்ளவர்களாய் மாறும்படி தூண்டப்படுகிறோம் சில வேளைகளில் நம் இருதயம் புண்படும்படி யாரேனும் ஏதாவது பேசினால் கூட அப்படி ஆகலாம் அல்லது நம் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படாமல் போனால் அது ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நம் இருதயத்தின் கசப்பான வேர்களை பிடுங்கிப் போடும் நம் தேவனிடம் நாம் இவைகளை ஒப்புக் கொள்ளும் போது அவர் அதை ஆனந்த இருதயமுள்ள ஆவியாக மாற்றிவிடுவார்.

காணப்படாதவைகளின் தேவன்
“சில நேரங்களில் நான் யாருக்கும் காணப்படாதவனாயும், அறியப்படாதவனைப் போலவும் உணருகிறேன் .ஆனால் தேவன் என்னை உபயோகிக்க வேண்டும் என்று வாஞ்சிக்கிறேன்.
நான் சென்றிருந்த உணவகத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்த அண்ணனிடம் பேசின போது தான் தெரிந்தது ஆச்சரியப்படும் விதமான சாட்சி அவர்களிடம் இருந்து .அவர்கள் சொன்னது என்னவென்றால் போதை பழகத்திற்கும் விபச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தேன் வீடு இல்லாமல் வீதிகளில் வாழ்ந்து வந்தேன் ஆனால் இவைகளை விட்டு தேவனை பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று அறிந்து சில வருடத்திற்கு முன்பு ஒருநாள் முழங்கால்படியிட்டு அவர் பாதத்தில் விழுந்தேன் அவரோ என்னை எல்லா கட்டுக்களிலிருந்து விடுவித்தார் .
தேவன் அவர்கள் வாழ்வில் செய்த அற்புதத்தை சாட்சியாக என்னிடம் பகிர்ந்ததினால் அவர்களுக்கு நன்றி செலுத்தினேன். அந்த சாட்சியின் மூலம் நம் தேவன் ஒருவரின் வாழ்வை எவ்வளவு தூரம் மாற்ற முடியும் என்பதையும் அது எனக்கு செய்த கிரியையினால் தேவன் அவர்களை உபயோகப்படுத்தினார் என்று அவர்களிடம் கூறினேன்.
மற்றவர்கள் தவறாக எண்ணக் கூடிய நபர்களை கொண்டும் தேவன் தம் சித்தத்தை நிறைவேற்றுகிறார் அப்போஸ்தலர்களில் அந்திரேயாவை விட அனைவருக்கும் தன் சகோதரரான பேதுருவை தான் அதிகம் தெரியும் ஆனால் யோவான் புஸ்தகத்தில் நாம் வாசிப்பது என்னவென்றால் பேதுருவை மேசியாவிடம் அழைத்து வந்தது அந்திரேயா தான் (யோவா. 1:41-42).
அந்திரேயா மூலமாகத்தான் பேதுரு இயேசுவை சந்தித்தான். யோவானுடைய சீஷனாக இருந்த அந்திரேயா இயேசுவைப் பற்றி அறிந்தவுடன் உடனடியாக அவரை விசுவாசித்து பின் தொடர்ந்து தன் சகோதரனுக்கும் அறிமுகப்படுத்தினான் அந்திரேயாவின் தாழ்மையான விசுவாசமானது உலகை உலுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது .
தேவன் உண்மையுள்ள ஊழியத்தை காணப்படுகிறார் நாம் எங்கு இருந்தாலும் யாரும் பார்க்கவில்லை என்றாலும் அவர் நம்மை உபயோகப்படுத்த முடியும் .
