
இழந்ததை மீட்டெடுத்தல்
தொலைபேசி கடையில் இளம் போதகர் மோசமான செய்திக்காக தன்னைத்தானே திடப்படுத்திக் கொண்டார். அவரது திறன்பேசி (smartphone) எங்கள் வேதாகம வகுப்பின் போது தற்செயலாக கை தவறி கீழே விழுந்தது இழப்பு இல்லையா? உண்மையில் அது அப்படி அல்ல. கடை ஊழியர் போதகருடைய வேதாகம காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் உட்பட எல்லா தரவையும் மீட்டெடுத்தார். “நான் அழித்த ஒவ்வொரு புகைப்படத்தையும் கூட அவர் மீட்டெடுத்தார்" என்று அவர் கூறினார். "அந்தக் கடை எனது உடைந்த கைபேசியை ஒரு புதிய கைபேசியுடன் மாற்றியது.” அவர் சொன்னதுபோல "நான் இழந்த அனைத்தையும் மேலும் அதிகமானவற்றையும் மீட்டெடுத்தேன்."
கொடூரமான அமலேக்கியர்களின் தாக்குதலுக்கு பிறகு தாவீது ஒருமுறை தனது சொந்த மீட்பு பணியை வழிநடத்தினார். பெளிஸ்திய ஆட்சியாளர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட தாவீது மற்றும் அவரது ராணுவம், அவர்கள் தங்கள் நகரமான ஜிக்லாக் மீது திடீர் தாக்குதல் நடத்தி எரித்ததை கண்டுபிடித்தனர். “அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறுவர்களையும் பெரியவர்களையும் சிறைப்பிடித்து... தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்து கொண்டு போகப்பட்டார்கள்” (1 சாமு. 30: 2-3). அப்பொழுது தாவீதும் அவரோடு இருந்த ஜனங்களும் அழுவதற்கு தங்களில் பெலன் இல்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள். (வச. 4) வீரர்கள் தங்கள் தலைவர் தாவீதுடன் மிகவும் கசப்பாக இருந்தார்கள். அவர்கள் "அவரைக் கல்லெறிவது" பற்றி பேசினர் (வச. 6).
“தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்கு உள்ளே தன்னை திடப்படுத்திக் கொண்டான்” (வச. 6). கடவுள் வாக்குறுதி அளித்தபடி, தாவீது அமலேக்கியரை பின் தொடர்ந்து "அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.
அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல், எல்லாவற்றையும் தாவீது திருப்பிகொண்டான்" (வச. 18-19). நமது நம்பிக்கையைக் கூட கொள்ளையடிக்கும் ஆவிக்குரிய தாக்குதல்களை நாம் எதிர்கொள்ளும் போது கர்த்தரில் நாம் புதிய பலத்தை காணலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு சவாலிலும் அவர் நம்முடன் இருப்பார்.

உங்கள் நற்கீர்த்தி என்ன?
உள்ளூர் உயர்நிலைப் பள்ளி விளையாட்டு நிகழ்வுகளில், டெட் அரங்கத்தில் மிக அதிகமாக பேசுபவராகவும் ஆதிக்கம் நிறைந்த நபராகவும் இருந்தார். ஒரு சீர்குலைக்க கூடிய நிலை அவருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பு, அவர் 6 அடி 6 அங்குலம் உயரமும் 130 கிலோவுக்கு அதிக எடையும் கொண்டவர். கூட்டத்தை தூண்டும் சேன்ட்சாட் பள்ளி நிகழ்வுகள் பழம் பெருமை வாய்ந்தவை.
ஆனால் டெட் தனது சமூகத்தில் புகழ் பெற்றது விளையாட்டில் உற்சாகம் ஊட்டுபவராக இருந்ததினால் அல்ல. ஒரு இளைஞனாக அனுபவித்த மது அடிமை தனத்தினாலும். கடவுள் மீது மற்றும் குடும்பத்தின் மீது அன்புக்காகவும், அவருடைய தாராள மனப்பான்மைக்காகவும், கருணைக்காகவும் அவர் நினைவு கூரப்படுகிறார். 7 மணி நேரம் நடைபெற்ற அடக்க ஆராதனையில், நற்செய்தி மூலம் கிறிஸ்துவின் வல்லமையாலே இருளில் இருந்து மீட்கப்பட்ட ஒரு மனிதனின் துடிப்பான கிறிஸ்துவைப் போன்ற வழிகள் பற்றி சாட்சியம் அளிக்க ஒருவருக்குப் பின் ஒருவராக முன்வந்தனர்.
எபேசியர் 5:8ல் பவுல் விசுவாசிகளுக்கு இவ்வாறு நினைவுபடுத்துகிறார், “முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாய் இருந்தீர்கள்.” ஆனால் உடனேயே குறிப்பிட்டது என்னவென்றால், "இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்ளுங்கள்." இயேசுவை விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இதுவே அழைப்பு. டெட் போன்ற ஒளியின் பிள்ளைகள் இந்த உலகின் இருளில் மூழ்கி இருப்பவர்களுக்கு நிறைய வழங்க வேண்டும். “கனியற்ற அந்தகார கிரியைகள்” தவிர்க்கப்படவேண்டும். (பார்க்க வச. 3-4, 11) நம்முடைய சமூகங்களிலும் உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு இயேசுவால் பிரகாசிக்கப்பட்டவர்களின் அற்புதமான தனித்துவமான சாட்சி தேவை. (வசனம் 14) என்பது ஒளி இருளில் இருந்து வேறுபட்டது போல எவ்வளவு தனித்துவமானது.

நிலைத்திருங்கள்
ஹாரியட் டப்மேன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த அமெரிக்க போராட்ட வீரர்களில் ஒருவர். குறிப்பிடத்தக்க தைரியத்தை காட்டி, அமெரிக்காவின் வடக்கில் விடுதலையான நிலப்பரப்புக்குள் கடந்து வந்து அடிமைத்தனத்தில் இருந்து தப்பித்த பின், 300க்கும் மேற்பட்ட அடிமைகளின் விடுதலைக்கு வழிநடத்தினார். தனது சொந்த சுதந்திரத்தை வெறுமனே அனுபவிப்பதில் திருப்தியாக இருந்துவிடவில்லை. நண்பர்கள் குடும்பத்தினர் மற்றும் அந்நியர்களை சுதந்திரத்திற்கு இட்டுச் செல்ல 19 முறை அடிமை மாநிலங்களுக்குள் நுழைந்தார். சிலசமயங்களில் கனடாவுக்கு நடந்து செல்லும் பாதையில் மக்களை வழிநடத்தினார்.
இத்தகைய துணிச்சலான நடவடிக்கைக்கு டப்மேனைத் தூண்டியது எது? ஆழ்ந்த விசுவாசம் உள்ள அந்த பெண்மணி ஒரு காலத்தில் இதைச் சொன்னார். நான் எப்போதும் தேவனிடம் சொல்வேன், நான் உம்மில் நிலைநிற்க போகிறேன். நீர்தான் என்னை பார்க்க வேண்டும். மக்களை அடிமைத்தனத்திலிருந்து வெளியேற்றும் போது தேவனின் வழிகாட்டுதலை அவள் சார்ந்து இருப்பது அவளுடைய வெற்றியின் ஒரு தனிச்சிறப்பாகும்.
தேவனிடம் "நிலை நிற்பது" என்றால் என்ன? ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில் ஒரு வசனம் உண்மையில் அவருடைய கையை நாம் பற்றிக் கொள்ளும் போது நம்மை பிடிப்பவர் அவர் என்பதை காண நமக்கு உதவக்கூடும். “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலது கையை பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்" (41:13). ஏசாயா இப்படியாக சொன்ன ஒரு கடவுளை மேற்கோள் காட்டுகிறார்.
ஹாரியட் தேவனை இறுக்கமாக பற்றிக் கொண்டார். தேவன் அவளைப் பார்த்துக்கொண்டார். நீங்கள் என்ன சவால்களை எதிர் கொள்கிறீர்கள்? உங்கள் கையையும் உங்கள் வாழ்க்கையையும் அவர் “பிடித்துக் கொள்வதால்" கடவுளிடம் உறுதியாக இருங்கள். “பயப்படாதிருங்கள்" அவர் உங்களுக்கு உதவுவார்.

விசுவாச முதலீடுகள்
தனது பன்னிரண்டாவது கிறிஸ்மஸ் தினத்தன்று, அந்தச் சிறுவன் மரத்தினடியில் பரிசுகளை திறக்க ஆவலுடன் காத்திருந்தான். அவன் ஒரு புதிய பைக்கிற்காக எதிர்நோக்கி கொண்டிருந்தான். ஆனால், அவனது நம்பிக்கை பொய்த்துப் போனது. கடைசியாக அவன் பெற்றது ஒரு அகராதி. முதல் பக்கத்தில் எழுதியிருந்ததை அவன் படித்தான். “அம்மா மற்றும் அப்பாவிடமிருந்து சார்லஸ்க்கு, 1958. அன்புடனும் பள்ளியில் உனது சிறந்த பணிக்கான மிக அதிக நம்பிக்கையுடனும்."
அடுத்த 10 ஆண்டுகளில் இந்த சிறுவன் பள்ளியில் சிறப்பாக செயலாற்றினார். கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் விமான பயிற்சி பெற்றார். அவர் வெளிநாட்டில் பணிபுரியும் ஒரு விமானி ஆனார். தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்கும், இயேசுவை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் தனது வேட்கையை நிறைவேற்றினார். இப்போது இந்தப் பரிசைப் பெற்று சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தான் நன்கு உபயோகித்திருந்த அகராதியை தனது பேரக் குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டார். இது அவரது எதிர்காலத்தில் பெற்றோரின் அன்பான முதலீட்டின் அடையாளமாக மாறியது. அவர் அதை இன்னும் பொக்கிஷமாகக் கருதுகிறார். அனால் கடவுள், வேதாகம வசனங்களை பற்றி தினம்தோறும் அவருக்கு கற்பிப்பதன் மூலம் தனது நம்பிக்கையை வளர்ப்பதில் தன் பெற்றோர் செய்த அன்றாட முதலீட்டிற்கு அவர் இன்னும் அதிகமான நன்றியுள்ளவராக இருக்கின்றார்.
உபாகமம் 11 வேதாகமத்தின் வார்த்தைகளை குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது."அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அதுகுறித்து பேசுவீர்களாக" (வச. 20).
இந்தச் சிறுவனைப் பொறுத்தவரை, அவர் சிறுவனாக இருந்தபோது நடப்பட்ட நித்திய மதிப்புகள் வாழ்நாள் முழுவதும் அவரது இரட்சகருக்கான சேவையில் மலர்ந்தன. கடவுளின் செயல்பாட்டின் மூலம், ஒருவரின் ஆத்தும வளர்ச்சியில் நமது முதலீடு எவ்வளவு பலனளிக்கும் என்பதை யார் அறிவார்.
