
அன்பான கடிந்துகொள்ளுதல்
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக என் அப்பா தனது படதொகுப்பில் சிறந்து விளங்க முயன்றார். அவரது ஆர்வம் தவறுகளைத் தேடுவது மட்டுமல்ல, தெளிவு, தர்க்கம், நிலையான ஓட்டம் மற்றும் இலக்கணம் ஆகியவற்றின் அடிப்படையில் நகலை சிறந்ததாக்குவதாகும். அப்பா தனது திருத்தங்களை குறிப்பிட சிவப்பு நிற எழுதுகோலை விட ஒரு பச்சை எழுதுகோலையே பயன்படுத்தினார். பச்சை எழுதுகோலை “நட்பாக” அவர் உணர்ந்தார். அதே நேரத்தில் சிவப்பு நிற அடிக்கோடுகள் ஒரு புதிய அல்லது நம்பிக்கையற்ற எழுத்தாளரைக் பதற்றமளிக்கும் என்றெண்ணினார். ஒரு சிறந்த வழியை மென்மையாகச் சுட்டிக்காட்டுவதே அவரது நோக்கம்.
இயேசு மக்களை கடிந்துக்கொண்டபோது, அன்பில் அவர் அவ்வாறு செய்தார். சில சூழ்நிலைகளில்-பரிசேயர்களின் மாய்மாலத்தை அவர் எதிர்கொண்டது போன்றவற்றில் (மத்தேயு 23) - அவர் அவர்களைக் கடுமையாகக் கண்டித்தார், ஆனாலும் அவர்களுடைய நலனுக்காகதான். ஆனால் அவரது தோழியான மார்த்தாளின் விஷயத்தில் ஒரு மென்மையான கடிந்துக்கொள்ளுதல் மட்டுமே தேவைப்பட்டது (லூக்கா 10: 38–42). அவருடைய கண்டிப்புக்கு பரிசேயர்கள் மோசமாக பதிலளித்தாலும் மார்த்தாள் அவருடைய அன்பான சிநேகிதர்களில் ஒருவராக இருந்தார். (யோவான் 15:31-32).
திருத்தம் சங்கடமாக இருக்கக்கூடும், நம்மில் சிலர் இதை விரும்புகிறோம். சில நேரங்களில், நமது பெருமை காரணமாக, அதை சந்தோஷமாகப் பெறுவது கடினம். நீதிமொழிகள் புத்தகம் ஞானத்தைப் பற்றி அதிகம் பேசுகிறது, மேலும் “கடிந்து கொள்ளுதலைக் கேட்பது” ஞானத்திற்கும் புரிதலுக்கும் ஒரு அடையாளம் என்றும் குறிக்கிறது. (15: 31-32).
தேவனுடைய அன்பான கடிந்துக்கொள்ளுதல் நம் திசையை சரிசெய்யவும், அவரை மிகவும் நெருக்கமாக பின்பற்றவும் உதவுகிறது. அதை மறுப்பவர்கள் கடுமையாக எச்சரிக்கப்படுகிறார்கள் (வச. 10), ஆனால் பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் அதற்கு பதிலளிப்பவர்கள் ஞானத்தையும் புத்தியையும் பெறுவார்கள் (வச. 31-32).

ஊதா சால்வை
எனது வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் உள்ள ஒரு புற்றுநோய் மையத்தில் எனது அம்மாவின் நேரடி பராமரிப்பாளராக சேவை செய்யும்போது எங்களுக்காக ஜெபிக்கும்படி மக்களிடம் கேட்டேன். மாதங்கள் செல்லச் செல்ல தனிமைப்படுத்தல் மற்றும் தனிமை உணர்வு என் வலிமையைக் குறைத்தன. நான் என் உடல், மன மற்றும் உணர்ச்சி சோர்வுக்கு ஆளானால் நான் எப்படி என் அம்மாவை கவனித்துக்கொள்ள முடியும்?
ஒரு நாள் எனது நண்பர் ஒருவர் எதிர்பாராத பராமரிப்புத் தொகுப்பை எனக்கு அனுப்பினார். என் நண்பர் கைப்பின்னலாலான ஒரு ஊதா நிற ஜெப சால்வையை வைத்திருந்தார், தினமும் எங்களுக்காக மக்கள் ஜெபிக்கிறார்கள் என்பதன் அன்பான நினைவூட்டல் அது. அந்த மென்மையான நூலை என் தோள்களில் சுற்றிக்கொண்ட போதெல்லாம் தேவன் தன் ஜனத்தின் ஜெபங்களால் என்னைக் கட்டிப்பிடிப்பதை உணர்ந்தேன். பல வருடங்கள் கழித்தும் அவர் அந்த ஊதா நிற சால்வையை எனக்கு ஆறுதலளிக்கவும், எனது தீர்மானத்தை பலப்படுத்தவும் பயன்படுத்துகிறார்.
மற்றவர்களுக்காக ஜெபிப்பதின் – முக்கியத்துவத்தையும், அதன் ஆவி-புத்துணர்ச்சியூட்டும் வல்லமையையும் அப்போஸ்தலர் பவுல் உறுதிப்படுத்தினார். தனது பிரயாணங்களின்போது ஜெபமுள்ள ஆதரவையும், ஊக்கத்தையும் கோருவதன் மூலம் மற்றவர்களுக்காக ஜெபிப்பவர்கள் எவ்வாறு ஊழியத்தில் பங்காளிகளாக மாறுகிறார்கள் என்பதை பவுல் விளங்கப்பண்ணினார் (ரோமர் 15:30). குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைப்பது என்பது அப்போஸ்தலன் சக விசுவாசிகளின் ஆதரவை சார்ந்த்திருப்பதைக் காட்டியது மட்டுமல்லாமல் தேவன் ஜெபத்திற்கு வல்லமையான முறையில் பதிலளிக்கிறார் என்ற நம்பிக்கையையும் காட்டுகிறது (வச. 31-33).
தனிமையாக உணரும் நாட்களை நாம் அனைவரும் அனுபவிப்போம். ஆனால், நாம் மற்றவர்களுக்காக ஜெபிப்பது போல நமக்காக மற்றவர்களிடம் ஜெபிக்க கேட்பது எப்படி என்பதை பவுல் நமக்குக் காட்டுகிறார். தேவனுடைய ஜனங்களின் பரிந்துபேசும் ஜெபங்களினால் நாம் மூடப்பட்டிருக்கும் போது, வாழ்க்கை நம்மை எங்கு அழைத்துச் சென்றாலும் தேவனுடைய பலத்தையும், ஆறுதலையும் நம்மால் அனுபவிக்க முடியும்.

சிறியது ஆனால் வலியது
வட அமெரிக்காவின் கடுமையான சோனோரன் பாலைவனத்தின் நள்ளிரவு நேரங்களில் அங்கு, ஒரு உயர் தொனியில், மங்கலான அலறலை ஒருவரால் கேட்க முடியும். ஆனால் ஒலியின் மூலத்தை நீங்கள் சந்தேகிக்க மாட்டீர்கள். - சிறிய மற்றும் வலிமைமிக்க வெட்டுக்கிளி சுண்டெலி, நிலவொளியில் அதன் எல்லையை வரையறுக்க அலறும்.
இந்த தனித்துவமான கொறித்துண்ணி (“ஓநாய் சுண்டெலி” என அழைக்கப்படுகிறது) மாமிச உண்ணியாகும். சொல்லபோனால், சிலர் மோத பயப்படும் தேள் போன்ற உயிரினங்களை இது வேட்டையாடுகிறது. ஆனால் ஓநாய் சுண்டெலி இந்த குறிப்பிட்ட யுத்தத்திற்கு தனித்துவமாக பழக்குவிக்கப்பட்டுள்ளது. இது தேள் விஷத்திற்கு எதிர்ப்பு தன்மையைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் அந்த விஷத்தை வலி நிவாரணியாக மாற்றவும் முடியும்!
இந்த விழிப்புணர்வுடைய சிறிய சுண்டெலியானது தப்பிப்பிழைப்பதற்கும், அதன் கடுமையான சூழலில் செழித்து வளருவதற்கும் உருவாக்கப்பட்ட அதன் தனித்தன்மைமையில் ஊக்கப்படுத்தும் ஏதோ ஒன்று உள்ளது. பவுல் எபேசியர் 2: 10 ல் விளக்குவது போல, அந்த வகையான அற்புதமான கைவினைத்திறன் தேவனின் ஜனங்களுக்கான அவருடைய திட்டத்தின் பண்புகளை விளக்குகிறது. நாம் ஒவ்வொருவரும் இயேசுவில் தேவனுடைய கரத்தின் கிரியைகளாக அவருடைய ராஜ்யத்திற்கு பங்களிக்க தனித்துவமாக பழக்குவிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம். தேவன் உங்களுக்கு எப்படி பரிசளித்திருந்தாலும்சரி, கொடுப்பதற்கு உங்களிடம் அதிகம் உள்ளது. நீங்கள் யாராக இருக்கும்படி தேவன் உங்களை உண்டாக்கினாரோ, அதை நம்பிக்கையுடன் நாம் ஏற்றுக்கொள்ளும்போது, அவரிலுள்ள ஜீவனின் நம்பிக்கை மற்றும் சந்தோஷத்திற்கு உயிருள்ள சாட்சிகளாய் இருப்பீர்கள்.
உங்கள் சொந்த வாழ்க்கையில் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் காரியங்களை நீங்கள் எதிர்கொள்ளும்போது தைரியம் கொள்ளுங்கள். நீங்கள் சிறுமையாக உணரலாம். ஆனால் ஆவியானவரின் பரிசு மற்றும் பெலப்படுத்துதல் மூலம் வல்லமையான காரியங்களைச் செய்ய தேவன் உங்களைப் பயன்படுத்த முடியும்.

இதுதான் இயேசு!
பிரபலமான அமெரிக்க தொலைக்காட்சி திறமைக்கான போட்டியான America’s Got Talent நிகழ்ச்சியின் ஒரு பகுதியில், ஐந்து வயது சிறுமி ஒருவர் மிகவும் உற்சாகத்துடன் பாடினார். நடுவர்களில் ஒருவர் ஒரு 1930 ல் இருந்த பிரபல குழந்தை பாடகர் மற்றும் நடனக் கலைஞருடன் இந்த குழந்தையை ஒப்பிட்டார். ஷெர்லி டெம்பல் உங்களுக்குள் எங்கேயோ வாழ்கிறார் என்று அவர் குறிப்பிட்டார். அதற்கு அவளுடைய எதிர்பாராத பதில்: “ஷெர்லி டெம்பல் அல்ல. இயேசு!”
அந்த சிறுமியின் ஆழ்ந்த புரிதலைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். ஏனெனில், அவளுடைய சந்தோஷம் அவளுக்குள் வாழ்ந்த இயேசுவிடமிருந்து வந்தது. அவரை விசுவாசிக்கிற அனைவருமே தேவனோடு நித்திய ஜீவனுக்கான வாக்குத்தத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் இயேசு தம்முடைய ஆவியினூடாக அவர்களில் வாழ்கிறார் என்பதையும் வேதவசனங்கள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன. எங்கள் இருதயங்கள் இயேசுவின் வாசஸ்தலமாகின்றன (கொலோசெயர் 1:27; எபேசியர் 3:17).
நம்முடைய இருதயங்களிலுள்ள இயேசுவின் பிரசன்னம் நன்றியுணர்வுக்கான எண்ணற்ற காரணங்களால் நம்மை நிரப்புகிறது (கொலோசெயர் 2: 6-7). நோக்கம் மற்றும் ஆற்றலுடன் வாழும் திறனை அவர் கொண்டுவருகிறார் (1:28-29). கொண்டாட்டம் மற்றும் போராட்ட காலங்கள் இரண்டிலும், எல்லா சூழ்நிலைகளின் மத்தியிலும் அவர் நம் இதயங்களில் மகிழ்ச்சியை வளர்க்கிறார் (பிலிப்பியர் 4:12-13). நாம் அனைத்தையும் பார்க்க முடியாவிட்டாலும் கூட தேவன் சகலத்தையும் நன்மைக்கேதுவாக நடப்பிக்கிறார் என்ற நம்பிக்கையை கிறிஸ்துவின் ஆவி நம் இருதயங்களுக்கு அளிக்கிறது (ரோமர் 8:28). நம்மைச் சுற்றியுள்ள குழப்பங்கள் எதுவாக இருந்தாலும் அதன் மத்தியில் ஆவியானவர் சமாதானத்தைத் தருகிறார் (கொலோசெயர் 3:15).
நம்முடைய இருதயங்களில் வாழும் இயேசுவிடமிருந்து வரும் நம்பிக்கையுடன் அவருடைய பிரசன்னத்தை பிரகாசிக்க நம்மால் அனுமதிக்க முடியும் இதனால் மற்றவர்களால் கவனிக்காமல் இருக்க முடியாது.
