வகை  |  odb

பயமில்லா அன்பு

நம்முடைய நினைவை விட்டு எப்போதுமே நீங்காத சில பிம்பங்கள் உண்டு. வேல்ஸ் நாட்டின் மறைந்த இளவரசியான டயானாவின் பிரபல புகைப்படத்தை பார்வையிட்டபோது நானும் அப்படியே உணர்ந்தேன். முதல் பார்வையில் அந்த புகைப்படம் பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாய், இயல்பான புன்சிரிப்போடு இளவரசி டயானா, யாரோ ஒருவரின் கைகளை குலுக்கியபடி நின்றிருந்தார். ஆனால் அந்த புகைப்படத்தின் பின் கதை ஆச்சரியமானது. 

ஏப்ரல் 19, 1987 அன்று இளவரசி டயானா லண்டனின் மிடில்செக்ஸ் மருத்துவமனையை பார்வையிட்டார். எயிட்ஸ் வியாதி தீவிரமாய் பரவி இங்கிலாந்தையே அச்சுறுத்திக்கொண்டிருந்த தருணம் அது. அந்த கொடிய நோய் மக்களை கொன்று குவித்துக்கொண்டிருந்தது. எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை தீண்டத்தகாதவர்களாய் கருதினர். 

இந்த தருணத்தில் எந்த கையுறையும் அணியாமல் ஒரு எயிட்ஸ் நோயாளியை புன்சிரிப்புடன் கைகுலுக்கிய இந்த தருணம் ஆச்சரியப்பட வைத்தது. அந்த புகைப்படம், எயிட்ஸ் நோயாளிகளை அதே கனிவுடனும் பரிவுடனும் ஆதரிக்க வேண்டும் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியது. 

நான் அடிக்கடி மறக்கிற ஒன்றை அந்த புகைப்படம் எனக்கு நினைவூட்டியது. இயேசுவின் அன்பை மற்றவர்களுக்கு இலவசமாய் தாராளமாய் கொடுக்கவேண்டும். பயந்துகொண்டே நாம் காட்டுகிற அன்பு, மரணத்தில் வாழ்வதற்கு சமானம் (1 யோவான் 3:14) என்று யோவான் ஆதி கிறிஸ்தவர்களுக்கு நினைப்பூட்டுகிறார். உண்மையான அன்போடு, பயமின்றி, தன்னையே கொடுக்கும் தியாகமான அன்பினால் ஊக்கப்படுத்தப்பட்டவர்களாய் உயிர்த்தெழுந்த ஜீவியத்தை வாழ்வதற்கும் உற்சாகப்படுத்துகிறார் (வச. 14,16). 

நல்ல போராட்டம்

அமெரிக்காவின் அரசியல்வாதி ஜான் லூவிஸ் 2020ஆம் ஆண்டு மரித்தபோது நிறைய அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்தனர். 1965இல், மார்டின் லூத்தர் கிங் ஜூனியரோடு சேர்ந்து கருப்பின மக்களுக்கு ஓட்டுரிமை வழங்கக்கோரி, போராட்டம் நடத்தியுள்ளார். அந்த அணிவகுப்பின்போது லூவிஸின் கபாலத்தில் அடிபட்டு, அந்த தழும்பை அவர் வாழ்நாள் முழுவதும் சுமக்கவேண்டியிருந்தது. “நீ நியாயமில்லாத ஒன்றைப் பார்க்கும்போது, அங்கு நீ பேசுவதற்கு அல்லது ஏதாவது செய்வதற்கான பொறுப்பு உனக்கு உள்ளது” என்று லூவிஸ் கூறுகிறார். “நல்லப்  போராட்டத்திற்கு குரல் கொடுப்பதற்கு என்றுமே பயப்படாதேயுங்கள்” என்றும் கூறுகிறார்.

உண்மையாய் நின்று, சரியென்று தோன்றுகிற “நல்ல போராட்டத்தை” போராடுவதைக் குறித்து லூவிஸ் துவக்கத்திலிருந்தே அறிந்திருக்கிறார். பிரபலமாகாத சில விஷயங்களை அவர் பேசவேண்டியிருந்தது. ஆமோஸ் தீர்க்கதரிசியும் இதை நன்கு அறிந்திருந்தார். இஸ்ரவேலின் பாவத்தையும் அநியாயத்தையும் பார்த்த அவரால் சும்மாயிருக்க முடியவில்லை. ஆமோஸ் இஸ்ரவேலின் ஆளும்வர்க்கம் எவ்வாறு “தரித்திரரை மிதித்து, அவன் கையிலே லஞ்சம் வாங்கி, “பொளிந்த கற்களால் வீடுகளை” கட்டி, “இன்பமான திராட்சைத் தோட்டங்களை” நாட்டினார்கள் என்று அறிவிக்கிறார் (ஆமோஸ் 5:11-12). தன்னுடைய பாதுகாப்பையும் சுகத்தையும் கருதி ஒதுங்கி நிற்காமல், ஆமோஸ் அவர்களின் தீமையை சுட்டிக்காட்டுகிறார். தேவையான ஒரு நல்ல போராட்டத்தை தீர்க்கதரிசி மேற்கொள்ளுகிறார். 

ஆனால் இந்த போராட்டம் எல்லோருக்குமான நீதியை முன்வைத்து செய்யப்படுகிற நல்லப் போராட்டம். “நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது” (வச. 24) என்று ஆமோஸ் சூளுரைக்கிறார். நல்ல போராட்டத்தில் நாம் ஈடுபடும்போது (நீதியுள்ள, முரட்டுத்தனமில்லாத, நீதியை வலியுறுத்தும் போராட்டம்), நன்மையும் சௌக்கியமுமே நம்முடைய இலக்காயிருக்கும். 

முதலில் மன்னிப்பு

நாங்கள் எங்களை “கிறிஸ்துவில் சகோதரிகள்” என்று சொல்லிக்கொண்டாலும் என்னுடைய வெள்ளை நிற சிநேகிதியும் நானும் எதிரிகளாகவே இருந்தோம். ஒரு காலை சிற்றுண்டியின்போது, எங்கள் நிறவேற்றுமையைக் குறித்து இரக்கமின்றி விவாதித்தோம். அதற்கு பின்பு, இனி ஒருவரையொருவர் சந்திக்கவே மாட்டோம் என்று சொல்லி பிரிந்தோம். ஒரு ஆண்டு கழித்து, ஒரு ஊழியத்தில் ஒரே துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், நாங்கள் சந்திக்காமல் இருக்கமுடியவில்லை. முதலில் எங்கள் சண்டையைக் குறித்து பேசத் துவங்கினோம். பின்பு, நாங்கள் ஒருவரிடம் ஒருவர் மன்னிப்புக்கோரினோம். நாங்கள் இணைந்து ஊழியத்தை நன்றாய் செய்வதற்கு தேவன் உதவினார். 

தேவன் ஏசாவுக்கும் அவனுடைய உடன்பிறந்த சகோதரன் யாக்கோபுக்கும் இடையிலான கசப்பையும் குணமாக்கி, அவர்கள் இருவரின் வாழ்க்கையையும் ஆசீர்வதித்துள்ளார். ஒரு கட்டத்தில், யாக்கோபு ஏசாவை வஞ்சித்து, தகப்பனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான். ஆனால் இருபது ஆண்டுகள் கழித்து, யாக்கோபை தன் சுயதேசம் திரும்பும்படி தேவன் அழைத்தார். ஆகையினால், யாக்கோபு ஏசாவை சமாதானப்படுத்தும் பொருட்டு அநேக வெகுமதிகளை முன்னமே அனுப்புகிறான். ஆனால் ஏசா யாக்கோபிடத்தில் ஓடிவந்து அவனை கட்டித் தழுவுகிறான். “அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான் ; இருவரும் அழுதார்கள்” (ஆதி. 33:4). 

இவர்களின் அந்த ஒப்புரவாகுதல் நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு வெகுமதிகளையும் பொக்கிஷங்களையும் கொடுப்பதைப் பார்க்கிலும், முக்கியமானது என்பதை வலியுறுத்தும் அழகான மாதிரியாய் செயல்படுகிறது (மத். 5:23-24). “முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து” (வச. 24). ஏசாவோடு ஒப்புரவாகியதின் மூலம் யாக்கோபு தேவனுக்கு கீழ்ப்படிந்து, பின்பு அவருக்காக ஒரு பலிபீடத்தை நாட்டினான் (ஆதியாகமம் 33:20). என்ன அழகான ஒரு திட்டம்: முதலில் மன்னிப்பிற்காகவும் ஒப்புரவாக்குதலுக்காகவும் பிரயாசப்படு. பின்பு, அவர் நம்மை அவருடைய பலிபீடத்தில் ஏற்றுக்கொள்ளுகிறார்.  

மீண்டும் எழு

ரயன் ஹால் என்னும் அமெரிக்காவின் ஒலிம்பிக் ஓட்டக்காரர், மாரத்தானின் பாதி ஓட்டத்தில் சாதனை படைத்துள்ளார். 13.1 மைல் தூரத்தை (21 கி.மி.) 59 நிமிடங்கள் 43 விநாடிகளில் கடந்து, அமெரிக்க தடகள வரலாற்றில் ஒரு மணி நேரத்திற்குள் இவ்வளவு தூரத்தைக் கடந்தவர் என்று சாதனைப் படைத்தார். ஆனாலும் அந்த ஓட்டத்தை அவரால் சரியாய் முடிக்கமுடியவில்லை. 

வெற்றியையும் தோல்வியையும் ருசிபார்த்தபோதிலும், அவரைப் பாதுகாத்தது இயேசுவின் மீதான விசுவாசம் என்று சொல்லுகிறார். நீதிமொழிகள் புத்தகத்தில் அவருக்கு பிடித்த வார்த்தை, “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும், திரும்பவும் எழுந்திருப்பான்” (24:16) என்பதே. தேவன் மீது நம்பிக்கை வைத்து, தேவனோடு சரியான உறவில் இருக்கும் நீதிமானுக்கும் பாடுகளும் துன்பங்களும் உண்டு என்பதை இந்த நீதிமொழி வலியுறுத்துகிறது. ஆனாலும் அந்த துன்பத்தின் மத்தியிலும் தொடர்ந்து தேவனை பற்றிக்கொள்ளும்போது மீண்டும் எழுந்து நிற்க தேவன் பெலன் தருவார். 

நீங்கள் சமீபத்தில் பாதிக்கக்கூடிய மனச் சோர்வுக்கும் தோல்விக்கும் ஆளாகி, மீளுவது சாத்தியமேயில்லை என்று எண்ணியதுண்டா? வேதாகமம் நம்முடைய பலத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், தேவன் மீதும் அவர் வாக்குத்தத்தத்தின் மீதும் நம்பிக்கை வைக்க நம்மை உற்சாகப்படுத்துகிறது. அவரை நம்பும்போது வாழ்க்கையில் நேரிடுகிற பிரச்சனையிலிருந்து கடினமான பிரச்சனைகள் வரை அனைத்தையும் மேற்கொள்ள தேவனுடைய ஆவியினாலே நாம் பெலப்படுத்தப்படுகிறோம் (1 கொரி. 12:9).