வகை  |  odb

இசைக்குழுவைப் போல

என் மனைவி அதிகமாய் பார்க்க விரும்பும் ஒரு கலைஞனின் இசை நிகழ்ச்சியைக் கேட்க, அதற்குரிய டிக்கெட்டுகளுடன் அவளை ஆச்சரியப்படுத்தினேன். திறமை மிக்க அந்தப் பாடகர் ஒரு இசைக்குழுவுடன் வந்திருந்தார். மேலும் அந்த அமைப்பு கடல் மட்டத்திலிருந்து 6000 அடிகளுக்கு மேல், 300 அடி பாறை அமைப்புகளுக்கிடையே கட்டப்பட்ட ஒரு அரைவட்ட அரங்கமாயிருந்தது. இசைக்குழுவினர், எல்லாராலும் அதிகமாய் நேசிக்கப்பட்ட அநேக இலக்கிய நயம் வாய்ந்த மற்றும் நாட்டுப்புற இசைகளை வாசித்தனர். “அமேஸிங் கிரேஸ்” என்ற உன்னதமான பாடலை அவர்கள் இறுதியாக வாசித்தனர். அந்த அழகான, உகந்ததான ஏற்பாடு எங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. 

நல்லிணக்கத்தைப் பற்றி ஏதோ அழகான - தனித்தனியான கருவிகள் ஒன்றாக சேர்ந்து இசைக்கப்படும்போது பெரிய மற்றும் அடுக்கடுக்கான கவிஞர்களின் இயற்கை நிலக்காட்சி போல படைக்கப்பட்டது. அப்போஸ்தலனாகிய பவுல், பிலிப்பியருக்கு எழுதும்போது, அழகான நல்லிணக்கம் - “ஏக சிந்தையும்” “ஏக அன்பும்”, இசைந்த ஆத்துமாக்களாய்” “ஒன்றையே சிந்தித்து” கொண்டிருப்பது என்று சுட்டிக்காட்டினார் (பிலிப்பியர் 2:2). இயேசுவின் தாழ்மையான மனப்போக்கு மற்றும் அவரையே கொடுக்கும் அன்பைப் போலவே அல்ல. மாறாக, அதையே தழுவிக்கொள்ளவே அவர் நம்மிடம் கூறுகிறார். பவுல் நன்கு அறிந்த மற்றும் கற்றுக்கொடுத்த சுவிசேஷம், நம்முடைய வேறுபாடுகளை அழிக்காது. ஆனால் நம்மிடையே உள்ள பிரிவினைகளை அகற்றிவிடும். பல அறிஞர்கள், இங்குள்ள பவுலின் வார்த்தைகள் (வச. 6-11), ஒரு ஆரம்பக்கால பாடலுக்கு முகவுரையாய் இருக்கும் என்று நம்புவது சுவாரஸ்யமானது. 

நம்முடைய தனித்துவமான வாழ்க்கையிலும், சூழலிலும் நாம் பரிசுத்த ஆவியானவரை கிரியைசெய்ய அனுமதிக்கும்போது, இயேசுவைப் போல நம்மை மாற்றி, நாம் எல்லாரும் சேர்ந்து, கிறிஸ்துவின் தாழ்மையான அன்பை பிரதிபலிக்கும் இசைக்குழுவைப் போலாகிறோம்.

ஹோட்டல் கொரோனா

எருசலேமிலுள்ள டான் ஹோட்டல், 2020ல் ஹோட்டல் கொரோனா என்ற வேறு பெயரில் அறியப்பட்டது. கோவிட்-19 லிருந்து மீண்டுவரும் நோயாளிகளுக்கு இது சமர்ப்பிக்கப்பட்டு, இப்படி ஒரு கடினமான நேரத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொடுக்கக்கூடிய ஒரு அபூர்வ இடமாக இந்த ஹோட்டல் இருந்தது. அங்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே தொற்று இருந்ததால், அவர்கள் எல்லோரும் ஒன்றாக பாடி, நடனமாடி, மகிழ சுதந்திரமாக விடப்பட்டனர். அவர்களும் அதைச் செய்தனர்! வெவ்வேறு அரசியல் மற்றும் ஆன்மீகக் குழுக்களுக்கிடையே பதட்டங்கள் அதிகமாகக் காணப்படும் ஒரு நாட்டில், மக்கள் முதலாவதாக, ஒருவரையொருவர் மனிதனாகப் பார்த்து நண்பர்களாய் பழக கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தளமாக இப்படிப்பட்ட நெருக்கடி உருவாக்கியது. 

நம்மைப் போலவே அனுபவமும் மதிப்பும் உள்ள மக்களிடம் நாம் ஈர்க்கப்படுவது இயற்கையானது, இயல்பானதும் கூட. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் அடிக்கடி வலியுறுத்தியது போல, மனிதர்களுக்கிடையே ஏற்படும், நாம் இயல்பானது என்று பார்க்கும், ஏதாவது தடுப்புச்சுவர்களிடையே, சுவிசேஷம், ஒரு சவாலானது. 2 கொரிந்தியர் 5:15. சுவிசேஷம் என்னும் கண்ணாடி மூலம், நம்முடைய வேறுபாடுகளை விட, பகிர்ந்துக் கொள்ளப்பட்ட முறிவு மற்றும் ஏக்கம், குணமடைவதற்கு தேவனுடைய அன்பு தேவை என்ற பெரிய விஷயங்களைப் பார்க்கிறோம். 

“எல்லாருக்காகவும் ஒருவரே மரித்தார்” என்று நாம் விசுவாசித்தால், மற்றவர்களைப் பற்றிய மேலோட்டமான அனுமானங்களைக் குறித்து நாம் மனநிறைவடையவும் முடியாது. மாறாக, அவருடைய அன்பையும், அவர் மேற்கொண்ட பணியையும், நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு, தேவன் நேசிப்பவர்களுடன், (நாம் அனைவரையும்), பகிரவும், “கிறிஸ்துவின் அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறது” (வச. 14).

என்னை அனுப்பும்

1890ன் பின்பகுதியில் ஸ்வீடிஷ் மிஷனரி எரிக் லண்ட், ஊழியத்திற்காக ஸ்பெயின் நாட்டிற்குச் செல்ல தேவனால் அழைக்கப்பட்டதை உணர்ந்தபோது, உடனடியாகக் கீழ்படிந்தார். அங்கே அவர் குறைந்த அளவிலே வெற்றி கண்ட போதும், தேவனுடைய அழைப்பில் திடநம்பிக்கையோடு தன்னுடைய மிஷினரி வேலையைத் தொடர்ந்தார். ஒரு நாள் அவர் பிரௌலியோ மணிக்கன் என்ற பிலிப்பைன் நாட்டு மனிதனைக் கண்டு அவரோடு சுவிசேஷத்தைப் பகிர்ந்துக்கொண்டார்.

லண்ட் மற்றும் மனிக்கன், இருவரும் சேர்ந்து உள்ளுர் பிலிப்பைன்ஸ் மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்த்து, பிறகு முதல் பாப்திஸ்து மிஷன் தளத்தைப் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆரம்பித்தனர். தீர்க்கதரிசியான ஏசாயாவைப் போல, லண்டும் தேவனுடைய அழைப்பிற்கு உடனடியாகக் கீழ்படிந்ததினால், அநேகர் இயேசுவிடம் திரும்பினர். 

ஏசாயா 6:8ல், நிகழ்காலத்திற்குரிய நியாயத்தீர்ப்பையும், வருங்காலத்திற்குரிய நம்பிக்கையையும் இஸ்ரவேலருக்கு அறிவிக்க விருப்பமுள்ள ஒருவரை தேவன் கேட்டபொழுது, “இதோ அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று ஏசாயா தைரியமாக முன்வந்தார். அவர், தான் “அசுத்த உதடுகளுள்ள மனிதன்”(வச. 5) என்று அவர் முன்னதாக ஒப்புக்கொண்டதால், அவர் தன்னைத் தகுதியுள்ளவராக நினைக்கவில்லை. ஆனால் அவர் தேவனுடைய பரிசுத்தத்தைக் கண்டு, தன்னுடைய சொந்தப் பாவத்தை உணர்ந்து, தேவனுடைய சுத்திகரிப்பைப் பெற்றுக்கொண்டதாலும் (வச. 1-7), அவர் தேவனுடைய அழைப்பிற்கு மனதாரக் கீழ்படிந்தார். 

அவருக்காக ஏதாவது செய்ய தேவன் உங்களை அழைக்கிறாரா? நீங்கள் பின்வாங்கிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியிருந்தால் இயேசுவின் மரணம் மற்றும் உயிர்தெழுதல் மூலமாக தேவன் உங்களுக்குச் செய்த எல்லாவற்றையும் நினைவுக் கூறுங்கள். நமக்கு உதவி செய்யவும், நம்மை வழிநடத்தவும் தேவன் நமக்கு பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்திருக்கிறார் (யோவான் 14:26; 15:26-27). பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய அழைப்பிற்கு கீழ்படிய நம்மை ஆயத்தப்படுத்துவார். ஏசாயாவைப் போல நாமும் “என்னை அனுப்பும்” என்று கூறுவோம்.

கிறிஸ்துவில் பரிபூரணம்

பிரபலமான ஒரு திரைப்படத்தில், தன்னுடைய திருமண வாழ்க்கை சிதைந்துகொண்டிருக்கும் வேளையில், ஒரு நடிகர், தான் ஒரு வெற்றிகரமான விளையாட்டு முகவராக நடிக்கிறார். தன்னுடைய மனைவியைத் திரும்பப் பெறும் முயற்சியில் அவளுடைய கண்களைப் பார்த்து “நீ என்னைப் பூரணப்படுத்துகிறாய்” என்று கூறுகிறார். இது இதயத்தை நெகிழவைக்கும் நாட்டுப்புறக் கதையைப் பிரதிபலிக்கும் ஒரு செய்தி. நாம் ஒவ்வொருவரும் ஒரு “பாதி”, நாம் முழுமையடைய “மற்றொரு பாதியை” கண்டுபிடிக்க வேண்டும். 

நாம் காதலிக்கும் துணை நம்மை “முழுமை”யடையச் செய்கிறார் என்ற நம்பிக்கை பிரபலமான கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும், ஆனால் இது உண்மையா? தங்களுக்கு பிள்ளைகளில்லாததினால் அவர்கள் இன்னும் முழுமையடையவில்லை என்று கருதும் அநேக தம்பதிகளிடம் நான் பேசி இருக்கிறேன். தங்களுக்கு பிள்ளைகளிருந்தாலும் வேறே எதையோ தொலைத்து விட்டதாகக் கருதுகின்றனர். இறுதியாக எந்த மனிதனும் நம்மை முழுமையாக பூரணமாக்க முடியாது.

அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு இன்னொரு தீர்வைக் கொடுக்கிறார். “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்” (கொலோ. 2:9-10). தேவன் நம்மை மன்னித்து, விடுவிப்பது மட்டுமல்லாமல், அவருடைய ஜீவனை நம்முடைய ஜீவனில் கொடுத்து நம்மை பரிபூரணப்படுத்துகிறார் (வச. 13-15).

திருமணம் நல்லது. ஆனால் அது நம்மை பரிபூரணமாக்காது. இயேசு ஒருவர் மட்டுமே அதைச் செய்யமுடியும். ஒரு நபரோ, தொழிலோ அல்லது மற்ற ஏதாவதோ நம்மை பரிபூரணமடையச்செய்யும் என்று நாம் எதிர்பார்க்காமல், தேவன், அவருடைய பரிபூரணத்தை நம்முடைய வாழ்க்கையில் அதிகமதிகமாக நிரப்ப நமக்குக் கொடுக்கும் அழைப்பை ஏற்றுக்கொள்ளுவோம்.