வகை  |  odb

உன்னைக் குறித்த தேவதிட்டம்

ஆறு ஆண்டுகளாய் ஏக்னஸ் தன்னை ஒரு நேர்த்தியான ஊழியரின் மனைவியாய் மாற்றிக்கொள்வதற்கு பிரயாசப்பட்டார். அவருடைய மாமியாரைப்போன்று (அவரும் போதகரின் மனைவி) தன்னை மாற்றிக்கொள்ள முயன்றாள். ஆனால் ஒரு ஊழியரின் மனைவியாய் தன்னுடைய எழுத்து திறமையையும் ஓவியத் திறமையையும் வெளிக்காட்ட முடியாது என்று எண்ணி அதை தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டு, மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டாள். அது அவளை தற்கொலைக்குத் தூண்டியது. ஒரு போதகரின் ஜெபத்தினால் அந்த இருளான சூழ்நிலையிலிருந்து அவள் விடுபட்டாள். அவர் அவளுக்கு ஒவ்வொரு நாள் காலையிலும் 2 மணி நேரம் எழுதக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார். அதினால் அவள் விழிப்படைந்து, தேவன் அவளுக்குக் கொடுத்த அழைப்பை “முத்திரையிடப்பட்ட நியமனம்” என்று அழைக்கிறாள். அவள் இப்படியாக எழுதுகிறாள், “நான் நானாகவே இருப்பது என்பது – தேவன் எனக்குக் கொடுத்த திறமைகளை சரியாய் செயல்படுத்தும் வழியை கண்டறிவதாகும்.” 

அவள் தன்னுடைய அழைப்பை எவ்வாறு தெரிந்துகொண்டாள் என்பதை தாவீதின் பாடல் வரிகள் மூலம் தெரிவிக்கிறாள்: “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங்கீதம் 37:4). அவள் தன் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து, தன்னை தேவன் வழிநடத்துவார் என்று அவர் மீது நம்பிக்கையாயிருந்தாள் (வச. 5). அவளுக்கு எழுதுவதற்கும் ஓவியம் வரைவதற்கும் மாத்திரமல்லாது, மற்றவர்களை தேவனிடத்தில் உறவாடச் செய்வதற்கும் தேவன் வழி செய்தார்.

நாம் அவருடைய பிரியமான பிள்ளைகள் என்பதை மட்டுமல்லாது, நம்முடைய தாலந்துகள் மற்றும் திறமைகள் மூலம் அவருக்கு இன்றும் நேர்த்தியாய் எப்படி ஊழியம் செய்வது என்பதைக் குறித்த “முத்திரையிடப்பட்ட நியமனங்களை” தேவன் வைத்துள்ளார். அவரை நம்பி, அவரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது அவர் நம்மை வழிநடத்துவார். 

துவக்ககால வாழ்க்கைக் கையேடு

என்னுடைய தாயாரின் திடீர் மரணத்திற்கு பின்பு, நான் ஆன்லைனில் கருத்துக்களை பதிவிட விரும்பினேன். எனவே அதை செய்வது எப்படி என்று பழகும் அறிமுகக் கையேட்டை புரட்ட ஆரம்பித்தேன். எதிலிருந்து துவக்குவது, தலைப்பை எப்படி தேர்ந்தெடுப்பது, ஈர்க்கக்கூடிய பதிவுகளை எப்படி பதிவிடுவது என்று கற்று, 2016ஆம் ஆண்டு என் முதல் பதிவை வெளியிட்டேன். 

நித்திய ஜீவனை பெறுவது எப்படி என்னும் ஆரம்பகால கையேட்டை பவுல் எழுதியுள்ளார். ரோமர் 6:16-18ல் நாமெல்லோரும் பாவிகளாய் பிறந்திருக்கிறோம். கிறிஸ்துவே நம்மை பாவத்திலிருந்து விடுதலையாக்க முடியும் (வச.18) என்னும் நிஜத்தைப் பிரதிபலிக்கிறார். அதைத் தொடர்ந்து, பாவத்திற்கு அடிமையாயிருப்பதையும் தேவனுக்கு அடிமையாயிருப்பதையும், அவருடைய ஜீவனுக்கேதுவான வழிகளோடு விவரிக்கிறார் (வச. 19-20). மேலும் “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” (வச.23) என்று கூறுகிறார். மரணம் என்பது தேவனிடத்திலிருந்து நித்தியமாய் பிரிந்திருப்பது. கிறிஸ்துவை மறுதலிப்பதினால் நமக்கு நேரிடக்கூடிய அவலம் இது. ஆனால் தேவன் நமக்கு கிறிஸ்துவில் புதுவாழ்வை வாக்களித்துள்ளார். அது பூமியில் துவங்கி பரலோகத்தில் முடிவில்லாமல் அனுபவிக்கக்கூடிய நித்திய வாழ்வு.

நித்திய ஜீவனைக் குறித்த பவுலின் இந்த ஆரம்பகால கையேடு நமக்கு இரண்டு தேர்வுகளை முன்வைக்கிறது. பாவத்தைத் தேர்ந்தெடுத்தால் மரணம் அல்லது இயேசுவின் பரிசை தேர்ந்தெடுத்தால் நித்திய ஜீவன். நீங்கள் இந்த ஜீவனுக்கேதுவான வரத்தை பெற்றுக்கொள்ள பிரயாசப்படுங்கள். ஒருவேளை நீங்கள் கிறிஸ்துவை ஏற்கனவே ஏற்றுக்கொண்டவர்களாயிருந்தால் இன்று அந்த பரிசை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். 

நிலைநிற்கும் விசுவாசம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தாமஸ் கார்லே தன்னுடைய எழுத்துக்களை சரிபார்க்கும் பொருட்டு அதை தத்துவமேதை ஜான் ஸ்டூவர்ட் மில் என்பவரிடம் ஒப்படைத்தார். தெரிந்தோ தெரியாமலோ அந்த பிரதி நெருப்பில் பொசுங்கியது. அது கார்லைனிடம் இருந்த ஒரே பிரதி. சற்றும் பதறாமல், எரிந்துபோன பகுதிகளை மீண்டும் எழுத ஆரம்பித்தார். அவர் சிந்தையில் பதிந்திருந்த நிகழ்வுகளை தீயின் தழல்களால் எரிக்கமுடியவில்லை. இந்த பெரிய இழப்பின் மத்தியிலும், “பிரெஞ்சு புரட்சி” என்னும் தன்னுடைய பிரம்மாண்டமான படைப்பை கார்லைன் வெளியிட்டார். 

பண்டைய யூதேயா ராஜ்யத்தின் கடைசிநாட்களில், தேவன் எரேமியா தீர்க்கதரிசியைப் பார்த்து, “நீ புத்தகச்சுருளை எடுத்துஉன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் அதிலே எழுது” என்றார் (எரேமியா 36:2). இது தன் ஜனங்களை முழுவதுமாய் அழிக்காமல் அவர்களை மனந்திரும்புதலுக்கு அழைக்கும் தேவனுடைய மென்மையான இருதயத்தைப் பிரதிபலிக்கிறது (வச.3). 

எரேமியாவும் சொன்னபடியே செய்தான். அதைக் கைப்பற்றிய யூதேயாவின் ராஜாவாகிய யோயாக்கீன், அதை துண்டுதுண்டாக்கி, தீயிலிட்டு பொசுக்கினான் (வச.23-25). ராஜாவின் இந்த செய்கை சூழ்நிலையை இன்னும் கடினமாக்கியது. தேவன் அதே செய்தியை மீண்டும் எழுதும்படிக்கு எரேமியாவிடம் சொல்லுகிறார். மேலும் யோயாக்கீனைக் குறித்து, “தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும் இரான்; அவனுடைய பிரேதமோவென்றால், பகலின் உஷ்ணத்துக்கும் இரவின் குளிருக்கும் எறிந்து விடப்பட்டுக்கிடக்கும்” (வச.30) என்றும் சொல்லுகிறார். 

கர்த்தருடைய வார்த்தையைத் தீயிலிட்டு எரிப்பது சாத்தியமே. ஆனால் அது பிரயோஜனமற்ற முயற்சி. வார்த்தைகளுக்கு பின்பாக இருக்கும் வார்த்தையானவர், என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் நித்தியமானவர். 

சிறந்த ஆசிரியர்

“எனக்கு இது விளங்கவில்லை!” என் மகள் பென்சிலை மேஜையின் மீது குத்தினாள். அவள் தன்னுடைய கணக்குப் பாடத்தை செய்துகொண்டிருந்தாள். நான் வீட்டில் அவளுக்கு ஆசிரியையாகவும் தாயாகவும் செயல்பட்டேன். நாங்கள் இருவரும் குழம்பினோம். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக படித்த பின்னங்களின் எண் இலக்கத்தை என்னால் நினைவில் கொள்ள முடியவில்லை. என்னால் அவளுக்கு அதை கற்றுக்கொடுக்க முடியவில்லை. ஆகையால் நாங்கள் இருவரும் அதை விளக்கும் ஆன்லைன் ஆசிரியரின் காணொலியைப் பார்த்தோம். 

மனிதர்களாகிய நாம் சிலவேளைகளில் சிலவற்றை புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவோம். ஆனால் தேவன் அப்படியல்ல அவர் சகலமும் அறிந்தவர். ஏசாயா, “கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்? தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனைபண்ணினார்?” (ஏசாயா 40:13-14) என்று கேட்கிறார். அதற்கு பதில்? யாருமில்லை!

மனிதன் தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டபடியால் மனிதனுக்கு ஞானம் உண்டு. ஆனால் நம்முடைய ஞானம் கொஞ்சமானது; அதற்கு எல்லை உண்டு. ஆனால் தேவன் துவக்கத்திலிருந்து முடிவு வரை அனைத்தையும் அறிந்தவர் (சங்கீதம் 147:5). தொழில்நுட்பத்தின் துணையோடு இன்று நம்முடைய அறிவை வளர்த்துக்கொள்ள முடியும். எனினும், நாம் தவறு செய்யக்கூடும். ஆனால் இயேசு எல்லாவற்றையும் “துரிதமாகஒரே நேரத்தில்முழுமையாய்சரியாய்” அறிந்தவர் என்று ஓர் இறையியல் வல்லுநர் கூறுகிறார். 

எத்தனை மனிதர்கள் ஞானத்தில் சிறந்தவர்களாய் தெரிந்தாலும், கிறிஸ்துவின் எல்லாம் அறிந்த குணாதிசயத்திற்கு ஈடாக முடியாது. அவர் நம்மோடு இருந்து நம்முடைய புரிதலை ஆசீர்வதித்துஎது சரிஎது நல்லது என்று நமக்கு கற்றுத் தருவது அவசியமாயிருக்கிறது.