வகை  |  odb

நம்பிக்கையை பகிர்தல்

தேவனுடைய பிரியமான பிள்ளையாய், அவளுடைய அங்கீகாரத்தை சாந்தி பெற்றுக்கொள்வதற்கு தேவன் அவளுக்கு எப்படி உதவிசெய்தார் என்று விளக்குவதற்கு, உரையாடலில் வேதவாக்கியத்தை மேற்கோள் காண்பித்தாள். தன்னுடைய வார்த்தைகளை நிறுத்தி, தேவனுடைய வார்த்தைகளை மேற்கோள் காண்பித்த இந்த பள்ளி மாணவி பயன்படுத்திய வசனங்கள் எனக்கே தடுமாற்றமாயிருந்தது. அவளை நடமாடும் வேதாகமம் என்று நான் பாராட்டியபோது அவளின் புருவம் உயர்ந்தது. அவள் யோசித்து, மனப்பாடம் செய்து ஒப்பிக்கவில்லை. அன்றாடம் வேதம் வாசிப்பதினால் அவளுடைய பேச்சில் வேத வாக்கியங்கள் இரண்டற கலந்துவிட்டது. தேவனுடைய நிலையான பிரசன்னத்தில் மகிழ்ந்த அவள், கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் சத்தியத்தை பிரகடனப்படுத்த பயன்படுத்திக்கொண்டாள். வேதத்தை ஜெபத்தோடு வாசிக்கவும், நினைவில் வைத்துக்கொள்ளவும், வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தவும் தேவன் பயன்படுத்திய வாலிப பிள்ளைகளில் சாந்தி முதலாவது நபர் இல்லை.     

தீமோத்தேயுவை உற்சாகப்படுத்தி தலைமைத்துவத்தில் அடியெடுத்து வைக்கத் தூண்டிய பவுல் அவர் மீதான நம்பிக்கையைப் பிரதிபலித்தார் (1 தீமோத்தேயு 4:11-16). தீமோத்தேயு சிறுபிராயத்திலிருந்தே வேதத்தில் உறுதியான அஸ்திபாரத்தை ஸ்தாபித்திருந்தார் என்று பவுல் பதிவுசெய்கிறார் (2 தீமோ. 3:15). பவுலைப் போலவே தீமோத்தேயுவும் சந்தேகத்தினால் சோதிக்கப்பட்டார். ஆனாலும் “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” என்று இருவரும் நம்பினர். “அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” என்று அவர்கள் உணர்ந்தனர் (2 தீமோ. 3:16-17). 

தேவனுடைய ஞானத்தை நம்முடைய இருதயத்தில் புதைத்து வைத்தால், நம்முடைய இயல்பான பேச்சில் அவருடைய சத்தியமும் அன்பும் வெளிப்படும். அப்போதே, தேவனுடைய நித்திய நம்பிக்கையை செல்லுமிடமெல்லாம் பறைசாற்றும் நடமாடும் வேதாகமமாய் நாம் இருக்கமுடியும்.

மெய்யான ஆராதனை வீரர்கள்

அவளுக்கு திருச்சபைக்கு போவதற்கு கடைசியாய் வாய்ப்பு கிடைத்தது. சபையின் அடித்தளத்தில், ஒரு சிறு குகையை அவள் அடைந்தாள். மெழுகுவர்த்திகள் நிறைந்த அந்த குறுகிய இடத்தில், தொங்கிக்கொண்டிருந்த விளக்குகள், தரையின் ஒரு மூலையைக் காட்டுகிறது. மார்பிள் தரையில் பதினான்கு புள்ளிகள் உள்ள ஒரு வெள்ளி நட்சத்திரம் இருந்தது. பெத்லெகேமில் இயேசு பிறந்தார் என்று பாரம்பரியமாய் நம்பப்படுகிற ஆலயத்தில் அவள் இருந்தாள். ஆனாலும் அந்த இடத்தை விட தேவன் மிகவும் பெரியவர் என்று நம்பினதினால், எழுத்தாளர் ஆனி டில்லார்ட் அந்த இடத்தினால் அப்படியொன்றும் பெரிதாய் ஈர்க்கப்படவில்லை. 

ஆனால் அதுபோன்ற ஸ்தலங்கள் நம்முடைய விசுவாச கதைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவைகளே. இயேசுவுக்கும் ஒரு பெண்ணிற்கும் இடையில் நடைபெற்ற உரையாடலில் இன்னொரு முக்கியமான ஸ்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. “எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்” (யோவான் 4:20) என்று கெர்சோம் மலையைக் குறித்து (உபாகமம் 11:29ஐ காண்க) சமாரிய ஸ்திரீ கூறினாள். எருசலேமை புனிதஸ்தலமாய் கருதி அங்கே ஆராதனை செய்யவேண்டும் என்ற யூத முறைமைக்கு முரண்பாடாய், சமாரியர்கள் கெர்சோம் மலையை புனிதமாய் கருதினர் (வச. 20). ஆனால் ஆராதனை என்பது இடத்தைப் பொருத்தது அல்ல நபர்களைப் பொருத்தது என்று இயேசு அறிவித்தார்: “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும்” (வச. 23). மேசியாவைக் குறித்த தன்னுடைய நம்பிக்கையை அந்த பெண் வெளிப்படுத்தினாள். ஆனால் அவள் மேசியாவிடம் பேசிக்கொண்டிருப்பதை அறியாதிருந்தாள். “அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்” (வச. 26). 

தேவன் எந்த மலைக்கும், பூகோள நிலப்பரப்பிற்கும் உட்பட்டவரல்ல. அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். அவருடைய சிங்கானத்தை தைரியமாய் அண்டி, “எங்கள் பிதாவே” என்று நாம் கூப்பிடும்போது, அவர் அங்கே இருக்கிறார் என்பதே நம்முடைய மெய்யான மேன்மை. 

லாப்ரடார் தேவதை

கேப் டேஷ்வுட்டும், அவருடைய செல்லமான கருப்பு லாப்ரடார் நாயாகிய சேலாவும் 2019ஆம் ஆண்டு ஒரு மறக்கமுடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளனர். வருடத்தில் 365 நாட்களும் பயணித்து மலையுச்சியை அடைந்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். 

அவரிடத்தில் சொல்லுவதற்கு அழகான கதை ஒன்று உண்டு. “தவறான குடும்ப வாழ்க்கை” என்று சொல்லி, தன்னுடைய 16ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். “நீங்கள் எப்போதாவது மக்களால் மனமடிவாக்கப்பட்டீர்கள் என்றால், நீங்கள் அதை மறந்து வேறொன்றில் கவனம் செலுத்துங்கள்” என்று அவர் சொல்லுகிறார். உங்களுக்குத் தெரியுமா? இந்த நபருக்கு மலையேற்றமும், அவருடைய செல்ல நாயான இந்த கருப்பு லாப்ரடாரின் நிபந்தனையற்ற அன்புமே அவருடைய கவனத்தைத் திசைதிருப்ப உதவியது.

என்னைப்போன்று விலங்குகளை அதிகமாய் நேசிப்பவர்கள், அவைகளை நேசிப்பதற்கு காரணம், எங்குமே கிடைக்காத, அவைகள் கொடுக்கும் இனிமையான, நிபந்தனையற்ற அன்பே. மற்றவர்களின் தோல்விகளைக்காட்டிலும் அவர்கள் சிரத்தையின்றி காண்பிக்கும் அன்பு சிறந்தது. தேவனுடைய அசைக்கமுடியாத, எல்லையில்லாத அன்பே உலகத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது. 

சங்கீதம் 143ல், சங்கீதக்காரன் அவருடைய பெரும்பாலான ஜெபங்களில் தேவனுடைய அசையாத நிலையான கிருபையே, அவருடைய தனிமையில் அவருக்கு ஆறுதலாயிருந்துள்ளது என்கிறார் (வச.12). தனது வாழ்க்கை முழுவதும் தேவனோடு நடந்த அனுபவம், “அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும்” என்று நம்புவதற்கு பெலப்படுத்துகிறது (வச. 8).

தேவனை நம்புவதற்கு போதுமான நம்பிக்கையோடு, நமக்கு தெரியாத பாதைகளில் அவருடைய வழிநடத்துதலை சார்ந்துகொள்வோம் (வச. 8). 

அவர் வெறுமையானதை நிரப்புகிறார்

பதினைந்து வயது நிரம்பிய இளம்பெண்ணின் மேலாடையின் கைகளை பாதி இழுத்துவிட்டுக்கொண்டதை, உளவியல் நிபுணர் கவனித்தார். அது பொதுவாக, சுய தீங்கில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தும் நீளமான கையுறைகள் கொண்ட ஆடை. அவள் தன் சட்டையின் கையுறையை மேலே தூக்கி, ஒரு பிளேடைக் கொண்டு தன் முன்னங்கையில் “வெறுமை” என்று கீறிக்கொண்டதைப் பார்த்த லெவின் திடுக்கிட்டார். அவள் சோகமாயிருந்தாள், ஆனால் அவளுக்குத் தேவையான உதவியை பெறுவதற்கு அவள் ஆயத்தமாயிருந்தாள். 

இன்று அந்தப் பெண்ணைப்போலவே தங்கள் இருதயங்களில் “வெறுமை” என்று கீறிக்கொண்ட அநேகர் உண்டு. இந்த வெறுமைகள் “பரிபூரணப்பட” (யோவான் 10:10) இயேசு வந்திருக்கிறார் என்று யோவான் அறிவிக்கிறார். பரிபூரணப்பட விரும்பும் இருதயத்தை தேவன் ஒவ்வொருவருக்குள்ளும் வைத்து, அவர்கள் தன்னுடைய உறவில் பிரியப்படவேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதே நேரத்தில், ‘திருடன்’ மக்களையும் சூழ்நிலைகளையும் பயன்படுத்தி, அவர்களை கொள்ளையிடுவதற்கே வருவான் என்றும் எச்சரிக்கிறார் (வச. 1,10). இருவரின் கூற்றுக்கள் ஒன்றுக்கொன்று முரணாகவும் சாயலாகவும் இருக்கிறது. ஆனால் இயேசு கொடுக்கும் “நித்திய ஜீவன்” நிஜமானது, “ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை” என்றும் வாக்களிக்கிறார் (வச. 28). 

நம்முடைய இருதயத்தில் இருக்கும் வெறுமையை கிறிஸ்துவாலேயே பரிபூரணமடையச் செய்ய முடியும். நீங்கள் வெறுமையாய் உணர்ந்தால், இன்றே அவரைக் கூப்பிடுங்கள். தொடர்ச்சியாய் துன்பத்தை அனுபவிக்கிறீர்கள் என்றால், தேவனுடைய ஆலோசனைக்கு செவிகொடுங்கள். நிறைவுள்ள பரிபூரணமான வாழ்க்கையை கிறிஸ்துவால் மட்டுமே கொடுக்கமுடியும். வாழ்க்கையின் முழுமையான அர்த்தம் அவரிடத்திலேயே உண்டு. 

தொடர்ந்து போகமுடியாத போது

எனது தந்தைக்கு 2006ஆம் ஆண்டு நரம்பியல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதினால் அவருடைய நினைவுகள், பேச்சு மற்றும் உடல் அசைவுகளின் கட்டுப்பாடு ஆகியவற்றை இழந்தார். 2011ல் அவர் படுத்தபடுக்கையானார். என் தாயார் அவரை வீட்டில் வைத்து பராமரித்துக்கொண்டார்கள். அந்த நோயின் ஆரம்பகட்டம் இருண்டதாயிருந்தது. நான் மிகவும் பயந்தேன். ஒரு நோயாளியை வீட்டில் வைத்துப் பராமரிப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பணத்தேவைக்குறித்தும், எனது தாயாரின் உடல் ஆரோக்கியத்தைக் குறித்தும் நான் கவலைப்பட்டேன். 

ஒவ்வொரு நாள் காலையிலும் நான் எழுந்திருக்கும்போது, என் இருதயத்தைப்போன்றே இருள் சூழ்ந்த அந்த அனுபவத்திலிருந்து வெளிவருவதற்கு புலம்பல் 3:22 எனக்கு உதவியது: “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே.” “நிர்மூலமாதல்” என்ற வார்த்தைக்கான எபிரெய பதம், “முற்றிலும் அழிக்கப்பட்ட” அல்லது “முடிவுக்கு வருதல்” என்று அர்த்தங்கொள்கிறது. 

ஒவ்வொரு நாளையும் நாம் கடந்துசெல்வதற்கு தேவனுடைய கிருபை நம்மை ஊக்குவிக்கிறது. நம்முடைய சோதனைகள் நம்மை மேற்கொள்வதாக தெரியலாம், ஆனால் அது நம்மை சேதப்படுத்தாது, ஏனென்றால் நம்மிடம் இருக்கும் தேவனுடைய கிருபை அதைக்காட்டிலும் மேலானது.

என்னுடைய குடும்பத்திற்கு தேவன் பல விதங்களில் தன்னுடைய உண்மைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார். என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள், மருத்துவர்களின் நல் ஆலோசனைகள், பொருளாதார உதவிகள் ஆகியவற்றின் மூலமாய் தேவனுடைய கிருபையை நான் பார்க்க நேர்ந்தது. இவைகள் அனைத்தும், என் தந்தையை ஒரு நாள் பரலோகத்தில் சந்திப்பேன் என்று எனக்கு நினைவுபடுத்தியது. 

நீங்கள் இருளான பாதையில் பயணிக்கிறவர்கள் என்றால், உங்கள் நம்பிக்கையை இழக்கவேண்டாம். நீங்கள் சந்திக்கிற பிரச்சனைகள் உங்களை ஒருபோதும் மேற்கொள்வதில்லை. தேவனுடைய மெய்யான அன்பிற்காகவும் அவருடைய கிருபைக்காகவும் அவரைத் தொடர்ந்து நம்புவோம்.