வகை  |  odb

தேவனின் திசைகாட்டி

இரண்டாம் உலகப்போரின்போது வால்டெமெர் செமெனோவ் ஒரு உதவி பொறியாளராய், எஸ்.எஸ் ஆக்கோவா கைடு என்ற கப்பலில் பணியாற்றினார். வடக்கு கரோலினாவுக்கு ஏறத்தாழ 300 மைல் தூரத்தில் நங்கூரமிட்ட ஜெர்மானியர்களின் நீhமூழ்கிக் கப்பல் ஒன்று இந்த கப்பலை நோக்கி குண்டுகளை வீசின. கப்பல் தாக்கப்பட்டு, தீப்பிடித்து, நீரில் மூழ்க ஆரம்பித்தது. செமெனோவும் அவருடைய குழுவினரும் உயிர்காப்புப் படகின் மூலமாக தப்பித்து, திசைகாட்டியின் உதவியுடன் கப்பல் பாதையை நோக்கிச் சென்றனர். மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர்களை கண்டுபிடித்த கண்காணிப்பு விமானம், ப்ரும் என்ற அமெரிக்க கப்பலின் மூலம் அடுத்த நாளே அவர்களை மீட்டது. அந்த திசைகாட்டிக்காக நன்றி. செமெனோவும், 26பேர் கொண்ட அவருடைய குழுவினரும் உயிர் பிழைத்தனர். 

தேவனுடைய ஜனங்கள் வேதாகமம் என்னும் வாழ்க்கையின் திசைகாட்டியைக் கொண்டு வழிநடத்தப்படுகின்றனர் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். அவர் வேதத்தை “தீபம்” என்று ஒப்பிட்டு (சங். 119:105), தேவனைத் தேடுவோரின் பாதைக்கு வெளிச்சமளிக்கக்கூடியதாய் சித்தரிக்கிறார். வாழ்க்கையின் நடுக்கடலில் சிக்கிக்கொண்ட சங்கீதக்காரன், வேதத்தைக் கொண்டு ஆவிக்குரிய அச்சரேகையையும் தீர்க்கரேகையையும் கொண்ட நமக்கு திசைகாட்டவும் உயிர்பிழைக்கவும் செய்ய தேவனால் கூடும் என்று அறிந்திருந்தார். ஆகையினால், அவர் நடப்பதற்கு தேவையான ஒளியையும், தேவனுடைய பிரசன்னத்தில் கரைசேர்க்கும்படியாகவும் தேவனிடத்தில் விண்ணப்பிக்கிறார் (43:3). 

கிறிஸ்துவின் விசுவாசிகளாய், நம்முடைய பாதைகளை தவறவிடும்போது, பரிசுத்த ஆவியானவரின் துணையோடு வேதாகமத்தில் உள்ள பாதையில் தேவன் நம்மை நடத்தமுடியும். வேதாகமத்தை வாசிக்கும்போதும், கற்றுக்கொள்ளும்போதும், அதின் ஞானத்தை கைக்கொள்ளும்போதும் தேவன் நம் இருதயத்தையும் சிந்தையையும் மறுரூபமாக்குவார். 

பயப்படாதிருங்கள்

மிதுன் தன்னுடைய டெட்டி பொம்மையை எப்போதும் கட்டிப்பிடித்து தூங்கும் ஒரு சிறு பிள்ளை. அவன் போகுமிடமெல்லாம் அதைக் கொண்டு செல்வான். அவனுக்கு அது தேவையான ஆறுதலாயிருந்தது. அவனுடைய சகோதரி மேகாவிற்கு அது பிடிக்கவில்லை. ஆகையால் அவனுடைய அந்த பொம்மையை அவள் அடிக்கடி ஒளித்துவைத்துவிடுவாள். அந்த பொம்மையை சார்ந்து வாழுவது தவறு என்பது மிதுனுக்கு தெரிந்தாலும், அவன் அதை எப்போதும் தன்னோடே வைத்து பழகிவிட்டான். 

“கிறிஸ்மஸ் என்றால் என்ன?” என்ற தலைப்பில் திருச்சபையில் சிறுவர்களுக்கான கிறிஸ்மஸ் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் மிதுன் ஒரு காட்சியில் முன்வந்து, லூக்கா 2:8-14ஐ மனப்பாடமாய் சொல்லவேண்டும். அதிலும் “பயப்படாதிருங்கள்” என்ற வார்த்தையை சொல்லும்போது, அவன் பயப்படும்போதெல்லாம் தன்னோடு வைத்திருந்த அந்த டெட்டி பொம்மையை கீழே வைத்துவிட்டு வந்து சொன்னான். 

நாம் பயப்படத்தேவையில்லை என்பதை கிறிஸ்மஸின் எந்த நிகழ்வு நமக்கு நினைவுபடுத்துகிறது? மேய்ப்பர்களுக்கு தரிசனமான தூதன், “பயப்படாதிருங்கள்... இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக்கா 2:10-11) என்று கூறுகிறார். 

இயேசுவே நம்மோடிருக்கும் தேவன் (மத்தேயு 1:23). மெய்யான தேற்றரவாளனாகிய ஆவியானவர் மூலமாய் அவர் நமக்கு பிரசன்னமாகியிருக்கிறார் (யோவான் 14:16). ஆகையால் நாம் பயப்படத் தேவையில்லை. நம்முடைய பாதுகாப்பு கம்பளங்களை உதறிவிட்டு, அவர் மீது நம்பிக்கையாயிருப்போம். 

ஜெபத்தில் நினைவுகூரப்பட்டது

ஆப்பிரிக்காவின் அந்த பெரிய திருச்சபையின் போதகர் முழங்கால் படியிட்டு தேவனிடத்தில் ஜெபித்தார். “எங்களை நினைத்தருளும்” என்று அவர் கதற, “கர்த்தாவே எங்களை நினைத்தருளும்” என்று கூடியிருந்த அனைவரும் கதறினார்கள். அந்த காட்சியை யூடியூபில் பார்த்த நான் ஆச்சரியப்பட்டு கண்ணீர் சிந்தினேன். அந்த ஜெபம் சில மாதங்களுக்கு முன்பாக பதிவுசெய்யப்பட்ட ஒன்று. ஆனாலும் என்னுடைய சிறுவயதில் என்னுடைய போதகர் “கர்த்தாவே எங்களை நினைத்தருளும்” என்று அதே ஜெபத்தை ஏறெடுத்ததை அது எனக்கு நினைவுபடுத்தியது.

ஒரு சிறுபிள்ளையாய் அந்த ஜெபத்தைக் கேட்ட நான், தேவன் சிலவேளைகளில் நம்மை மறந்துவிடுவார் என்று தவறாய் எண்ணிக்கொண்டேன். ஆனால் தேவன் எல்லாம் அறிந்தவர் (சங்கீதம் 147:5; 1 யோவான் 3:20), அவர் எப்போதும் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார் (சங்கீதம் 33:13-15), எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்மை நேசிக்கிறார் (எபேசியர் 3:17-19). 

நினைவுகூருதல் என்பதற்கு பயன்படுத்தப்படும் எபிரெய வார்த்தையான “ஸாகர்” என்ற வார்த்தையானது, தேவன் நம்மை நினைவுகூரும்போது அவர் நமக்காக செயல்படுகிறார் என்று பொருள்படுகிறது. ஒருவரின் சார்பில் நின்று செயல்படுதல் என்றும் அர்த்தம் கொடுக்கிறது. “தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது” (ஆதியாகமம் 8:1). மலடியாயிருந்த ராகேலை தேவன் நினைத்தருளியபோது, “அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார். அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனை” பெற்றாள் (30:22-23).

நம்மை நினைத்தருளும்படிக்கு தேவனிடத்தில் கேட்பது மேன்மையான ஒரு விண்ணப்பம். அவர் எப்படி பதிலளிக்கவேண்டும் என்று அவரே தீர்மானிப்பார். நம்முடைய தாழ்மையான விண்ணப்பம் நிச்சயமாய் தேவனை அசைக்கும் என்று அறிந்து நாம் ஜெபிக்கலாம். 

சிறப்பாய் செய்தாய்!

என்னுடைய நண்பர் விஜயனின் கால்பந்து பயிற்றுவிக்கிற பள்ளி, மாநில போட்டியில் கடும் போராட்டத்திற்கு பின் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. அவர்களின் போட்டி அணியினை கடந்த இரண்டு ஆண்டுகளாய் யாராலும் வெற்றிகொள்ள முடியவில்லை. நான் விஜயனை ஆறுதல்படுத்த ஒரு செய்தியை அனுப்பினேன். பதிலுக்கு அவர் “குழந்தைகள் மிகவும் போராடினார்கள்” என்று அனுப்பினார். 

எந்த பயிற்சியாளரும் போட்டிக்கு பின்பு விளையாட்டு வீரர்களை அவமானப்படுத்துவதில்லை. அவர்களுடைய தவறான தீர்மானத்திற்காகவும், அவர்கள் நழுவவிட்ட வாய்ப்பையும் சொல்லி அவர்களைத் திட்டுவதில்லை. அவர்களின் பலமான செய்கைகளைக் குறித்து அவர்களை பாராட்டவே செய்கின்றனர்.

அதேபோன்று கிறிஸ்துவின் விசுவாசிகள் யாவரும் அவரிடத்திலிருந்து கடினமான வார்த்தைகளை கேட்க விரும்புவதில்லை. கிறிஸ்து வரும் நாளில் நாம் அவருக்கு முன்பாக நிற்போம். அவர் நம்மை கனவீனப்படுத்துவதில்லை. அவரைப் பின்பற்றும்போது நாம் என்ன செய்தோம் என்பதையே அவர் பார்க்கிறார் (2 கொரி. 5:10; எபேசியர் 6:8). “நீ போராடினாய்! சிறப்பாய் செய்தாய்” என்று அவர் நம்மை பாராட்டுவார் என்று நம்புகிறேன். பவுல் அப்போஸ்தலர், “நல்ல போராட்டத்தைப் போராடினேன்” என்று கிறிஸ்துவினால் வரவேற்கப்படுவதற்கு காத்திருந்தார் (2 தீமோ. 4:7-8).

வாழ்க்கை என்பது நம்முடைய அழிவை எதிர்நோக்கும் கடுமையான எதிரியுடனான இடைவிடாத போராட்டம். இயேசுவைப்போல மாறுவதற்கும் மற்றவர்களை நேசிப்பதற்கும் நாம் ஏறெடுக்கும் எல்லா முயற்சியையும் அடைவதற்கு அவன் தடைசெய்வான். சில நல்ல வெற்றிகளையும், பல மனமுறியும் தோல்விகளையும் நாம் சந்திக்க நேரிடலாம். ஆனால் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு நித்திய ஆக்கினைத் தீர்ப்பில்லை (ரோமர் 8:1). தேவனுடைய குமாரனுடைய சார்பில் நாம் நிற்கும்போது, நாம் ஒவ்வொருவரும் தேவனால் புகழப்படுதலை அனுபவிக்கக்கூடும் (1 கொரி. 4:5).