
விசுவாசத்தில் வாழுதல்
மோகித் நடக்கும்போது, அவரால் சமநிலையில் சரியாக நடக்க இயலாத காரணத்தால் அவருடைய மருத்துவர் அவருக்கு சில உடற்பயிற்சி சிகிச்சைகளை பரிந்துரைத்தார். ஒருமுறை அவருடைய சிகிச்சையாளர் அவரிடம், "நீங்கள் எதை பார்க்கிறீர்களா அதையே அதிகமாக நம்புகிறீர்கள் அது தவறாக இருந்தாலும் கூட அதைத்தான் நம்புகிறீர்கள் எனேவே நீங்கள் உங்களுடைய உடலின் மற்ற அமைப்புகளை சார்ந்துகொள்வது இல்லை, ஏனெனில் நடக்கும்போது உங்கள் பாதத்தின் கீழ் நீங்கள் என்ன உணர்கிறீர்களோ மேலும் உங்கள் அகச்செவி உண்டாக்கும் உள்ளுனர்வுகளும் கூட நீங்கள் சமநிலையாய் நடப்பதற்கு உதவுகின்றன." என்றார்.
"நீங்கள் எதை பார்க்கிறீர்களோ அதையே அளவுக்கு அதிகமாக நம்புகிறீர்கள்" இது ஒரு இளம் ஆடு மேய்ப்பனாக கோலியாத்தை எதிர்த்த தாவீதின் கதையை எனக்கு நினைவுபடுத்துகிறது. நாற்பது நாட்களாக பெலிஸ்தியரின் மிகச்சிறந்த வீரனான கோலியாத், இஸ்ரவேலின் ராணுவத்திற்கு முன்பாக கொக்கரித்துக் கொண்டு, தன்னோடு சண்டையிடும்படி யாரையாகிலும் அனுப்புமாறு அவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தான் (1சாமுவேல் 17:16). ஆனால் ஜனங்கள் இயல்பாக எதை கவனித்தார்களோ, அதுவே அவர்களுக்கு அச்சத்தை வருவித்தது. அப்பொழுதுதான் இளம் தாவீது அங்கே வருகிறார் ஏனெனில், அவருடைய தந்தை அவர் மூத்த சகோதரர்களுக்கு உணவுகளை வழங்குமாறு அவரை அங்கே அனுப்பியிருந்தார் (வ.18).
இந்த சூழ்நிலையை தாவீது எப்படி பார்த்தார்? அவர் தன்னுடைய பார்வையை கொண்டல்ல, மாறாக தேவன்மேல் கொண்ட நம்பிக்கையில் அதை பார்க்கிறார். அவரும் ஒரு ராட்சதனை பார்த்தார், ஆனால் தேவன் தம்முடைய ஜனங்களை விடுவிப்பார் என்பதை உறுதியாய் நம்பினார். அவர் சிறுவனாய் இருந்த போதிலும் சவுல் ராஜாவிடம், "இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; ... நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் " என்றார் (வ.32). பின்பு கோலியாத்திடம் "யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்" என்றார் (வ.47) அதைத்தான் தேவன் செய்தார்.
தேவனுடைய குணாதிசயத்தையும், வல்லமையையும் நாம் நம்புவது அவரோடு கூட பார்வையில் அல்ல விசுவாசத்தில் நெருங்கி வாழ உதவும்.

பிதாவின் குரல்
என் நண்பனின் அப்பா சமீபத்தில் மரித்துவிட்டார். அவர் வியாதிபட்ட உடனே அவர் நிலைமை வேகமாக சீர்குழைந்தது, பின்னர் சில நாட்களிலேயே அவர் கடந்து போய்விட்டார். என் நண்பனும், அவன் தந்தையும் எப்போதும் நெருங்கிய உறவிலிருந்தார்கள், ஆயினும் கேட்கப்பட வேண்டிய அநேக கேள்விகள் இருந்தன, தேடப்படவேண்டிய பதில்களும், பேசப்பட வேண்டிய உரையாடல்களும் இருந்தன. சொல்லப்படாத அநேக காரியங்கள் இருக்க, இப்போது அவனுடைய தந்தை போய்விட்டார். என் நண்பன் ஒரு தேர்ந்த ஆலோசகர்: அவனுக்கு துயரத்தின் நெளிவுசுளிவுகள் எல்லாம் அத்துப்படி, கடினமான சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு எவ்வாறு உதவ வேண்டுமென்று நன்கு அறிந்திருந்தான். இருந்தபோதிலும் அவன் என்னிடம், "சில நாட்கள் அப்பாவின் குரல் எனக்கு கேட்க வேண்டுமென்று உள்ளது, அது எனக்கான அன்பை உறுதியளித்தது. அதுவே எப்போதும் என்னுடைய உலகமாய் இருந்தது" என்றான்.
இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்தின் ஆரம்பத்திலே யோவானின் கைகளால் ஞானஸ்நானம் பெற்றது மிக முக்கியமான பகுதியாகும். யோவான் அதற்கு தடைசெய்ய முயன்றபோதிலும், அந்த தருணம் தன்னை மனித குலத்தோடு அடையாளபடுத்திகொள்ள அவசியமானது என்று வலியுறுத்தினார். "இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது " (மத்தேயு 3:15) இயேசு சொன்னபடியே யோவான் செய்தான். பின்பு ஏதோவொன்று நடந்தது, அது யோவானுக்கும், சுற்றியிருந்த கூட்டத்திற்கும் இயேசுவின் அடையாளத்தை அறிவித்தது, மேலும் அது இயேசுவின் இதயத்தையும் ஆழமாக தொட்டிருக்க வேண்டும். பிதாவின் சத்தம் குமாரனுக்கு உறுதியளித்தது: "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்" (வ.17)
அதே குரல் விசுவாசிகளாகிய நம்முடைய இதயங்களிலும் நமக்கான அவருடைய பேரன்பை உறுதியளிக்கிறது (1 யோவான் 3:1)

அவருடைய வியத்தகு உதவி
2020ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் கொலராடோ பகுதியின் மலைகளில் கொழுந்துவிட்டெரிந்த கிழக்கு காட்டுத்தீயின் போது, தேவனுடைய உதவிக்காக ஏறெடுக்கப்பட்ட ஜெபங்களை குறித்து அந்த ஊர்த்தலைவர் "லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான ஜெபங்கள் இருந்திருக்கும்" என்று வியப்புடன் மதிப்பீடுகிறார். அதின் பெயருக்கேற்றாற்போல (பிரச்சினைக்குரிய கிழக்கு தீ) பன்னிரண்டு மணிநேரத்தில், நெருப்பு 100,000 ஏக்கர் நிலங்களை சுட்டெரித்தது, காய்ந்த மரங்கள் நிறைந்த காடுகளின் வழியே கட்டுக்கடங்காமல் பாய்ந்து முன்னூறு வீடுகளை தரைமட்டாக சம்பலாக்கி, அதின் பாதையிலே இருந்த நகரங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. அப்பொழுதுதான் ஒரு வானிலை ஆய்வாளர் வர்ணித்ததுபோல "தேவனால் அனுப்பப்பட்ட" மழை அல்ல மாறாக சரியான நேரத்தில் பொழிந்தது பனி. அது நெருப்பு பற்றியெரிந்த பகுதி முழுதும் பெய்தது, அந்த ஆண்டில் வழக்கத்திற்கு முன்பாகவே பெய்ய துவங்கிய பனி ஒரு அடிக்கும், அதற்கும் மேலாகவும் ஈரமான பனியை பொழிந்தது, நெருப்பின் வேகத்தை குறைத்து, சிலஇடங்களில் முற்றிலும் அனைத்தது.
இப்படிப்பட்ட இரக்கம் நிறைந்த உதவி விளக்குவதற்கு மிகவும் வியப்பாக இருந்தது. பனிக்காக, மேலும் மழைக்காகவும் கூட நாம் ஏறெடுக்கும் ஜெபங்களை தேவன் கேட்கிறாரா? வேதாகமம் அவருடைய நிறைய பதில்களை பதிவு செய்துள்ளது, அதிலொன்றுதான் எலியாவின் மழைக்கான நம்பிக்கை (1 இராஜாக்கள் 18:41-46) பெரும் விசுவாசம் கொண்ட ஊழியக்காரனான எலியா, வானிலையையும் சேர்த்து ஆளும் தேவனுடைய சர்வ ஆளுகையை புரிந்துகொண்டார். சங்கீதம் 147இல், தேவனை குறித்து கூறப்படுவது போல "அவர் பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி" (வ.8) "பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; ...அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?" (வ.16-17).
மேகங்கள் உருவாகும் முன்னரே, எலியாவால் "பெருமழையின் இரைச்சலை" கேட்க முடிந்தது (1 இராஜாக்கள் 18:41). அவருடைய வல்லமையின்மேல் நாம் கொண்ட விசுவாசம் இவ்வளவு உறுதியானதா? அவர் பதிலளிப்பாரோ, இல்லையோ, தேவன் நமது நம்பிக்கையை எதிர்பார்க்கிறார். அவருடைய வியத்தகு உதவிக்காக நாம் அவரை நோக்கி பார்க்கலாம்.

இறப்பும் தாழ்மையும்
பண்டைய அறிஞர்கள் ஜெரோம் மற்றும் டெர்டுலியன், பண்டைய ரோமாபுரியின் கதைகளை குறித்து இவ்வாறு குறிப்பிடுகின்றனர், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றிக்கு பின்னர் ஜெயம் பெற்ற அந்த தளபதி ஒளிருகின்ற ஒரு ரதத்தின் மேலேறி தலைநகரின் நடைபாதைகளில் விடியற்காலம் தொடங்கி பொழுதுசாயும் வரை உலா வருவாராம். ஜனங்களும் ஆரவாரம் செய்வார்கள். அந்த தளபதி பெருமிதம் பொங்க, தன் வாழ்நாள் சாதனையான இந்த கௌரவதால் மகிழ்ச்சி அடைவார். எனினும், புராணத்தின்படி அந்த தளபதிக்கு பின்னால் ஒரு பணியாள் நாள்முழுதும் நின்றுகொண்டு அவரது காதில், "மெமென்டோ மோரி" (லத்தீனில் "நீ மரிப்பாய் என்பதை நினைவில்கொள்" என்று அர்த்தம்) என்று மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டே இருப்பானாம். அனைத்து பாராட்டுகள் மத்தியில், தளபதிக்கு தான் சாவுக்குரியவன் என்ற நினைப்பு அவன் தாழ்மையாய் இருக்க மிக அவசியப்பட்டது.
யாக்கோபு பெருமை நிறைந்த விருப்பங்களினாலும், தன்னிறைவால் புடைத்துபோன கர்வத்தாலும் பாதிக்கப்பட்ட ஒரு சமுதாயத்திற்கு எழுதினார். அவர்களுடைய ஆணவத்தை எதிர்த்து," தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று" (யாக்கோபு 4:6) என்று உருவகுத்தும் வார்த்தைகளை பேசினார். "கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள்" (வ.10) என்பதே அவர்களுக்கு தேவைப்பட்டது. மேலும் அவர்கள் எவ்வாறு தாழ்மையடைய முடியும்? அந்த ரோம தளபதிகளை போல அவர்களும், தாங்கள் ஒரு நாள் மரிப்பார்கள் என்பதை நினைவுகூர வேண்டும். "நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே." (வ.14) என்று யாக்கோபு வலியுறுத்தினார். அவர்களுடைய பெலவீனங்களை ஒப்புக்கொள்வதே புகையைப்போல காணாமல் போகும் அவர்கள் முயற்சிகளில் வாழ்வதற்கு மாறாக தேவனுடைய சித்தத்தின் கீழ் திடமாக வாழ அவர்களை விடுவித்தது (வ.15)
நம்முடைய நாட்கள் குறுகியது என்பதை நாம் மறக்கும்போது, அது பெருமைக்கு வழிவகுக்கும். ஆனால் நாம் சாவுக்குரியவர்கள் என்பதை புரிந்து தாழ்மைப்படும்போது, நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு மூச்சும் தேவ கிருபையாக பார்ப்போம். மெமென்டோ மோரி ("நீ மரிப்பாய் என்பதை நினைவில்கொள்").
