உங்கள் அனுக்குரியவர்களை நேசியுங்கள்
ஆமோஸ், கர்வம் உள்ள ஒரு ஊதாரி, டேனி சுயசந்தேகத்தால் உடைக்கப்பட்ட தனிமையானவன். எப்படியோ இந்த விசித்திரமான அறிவாளிகள் நண்பர்களாயினர். சுமார் 10 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக சிரித்து, கற்று மகிழ்ந்தனர். ஒரு நாள் இவர்களின் வேலைக்கு நோபல் பரிசு கிடைத்தது. ஆனால் டேனி, ஆமோஸின் சுயநலமான போக்கை சகிக்க கூடாமல் தாங்கள் இதற்கு மேல் நண்பர்களாய் இருக்க முடியாது என்று கூறினார்.
மூன்று நாட்கள் கழித்து, ஆமோஸ் ஒரு கொடுமையான செய்தியோடு தொலைபேசியில் அழைத்தார்; மருத்துவர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தனர், மேலும் அவர் உயிர்வாழ ஆறு மாதங்கள் அவகாசம் கொடுத்திருந்தனர். டேனியின் உள்ளம் உடைந்தது,”நாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நீங்கள் எண்ணினாலும் சரி, நாங்கள் நண்பர்கள்” என்று கூறினார்.
பவுல் சற்றே கடினமான தொலைநோக்குப் பார்வையாளர், மேலும் பர்னபா மென்மையான இருதயம் கொண்ட ஊக்குவிப்பாளர். ஆவியானவர் இவர்கள் இருவரையும் இணைத்து அருட்பணி பயணத்தில் ஒன்றாக அனுப்பினார் (அப்போஸ்தலர் 13:2-3) அவர்கள் பிரசங்கித்து சபைகளை நிறுவினார்கள். மார்க்குவின் பிரிவினால் உண்டான கருத்து வேறுபாடுமட்டில் ஒன்றாக இருந்தார்கள். பர்னபா, மார்க்குவிற்கு இரண்டாம் வாய்ப்பு அளிக்க மனதாய் இருந்தார். ஆனால் பவுல், அவர் இனி நம்பிக்கைக்குரியவர் அல்ல என்றார். ஆகவே இருவரும் பிரிந்தனர் (அப்போஸ்தலர் 15:36-41).
இறுதியில் பவுல் மார்க்குவை மன்னித்தார். மூன்று நிருபங்களை அவருடைய வாழ்த்துகளோடு ஆரம்பித்தோ அல்லது அவரை பாராட்டி நிறைவோ செய்துள்ளார் (கொலோசெயர் 4:10; 2தீமோத்தேயு 4:11; பிலேமோன் 1:24). ஆனால் பர்னபாவிற்கு என்ன ஆனது என்று நமக்கு தெரியவில்லை. பவுலோடு இந்த வாழ்வில் ஒப்புரவாகும் வரை அவர் வாழ்ந்தாரா? அப்படித்தான் என்று நான் நம்புகிறேன்.
உங்களின் இன்றைய சூழ்நிலை எப்படியோ, யாருடனாகிலும் உங்களுக்கு உறவில் பிரிவு இருந்தால் ஒப்புரவாக முயலுங்கள். அவர்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று சொல்வதற்கும், காண்பிப்பதற்கும் இதுதான் நேரம்.

முடியாதென்று ஒருபோதும் சொல்லாதே
ஜென் பிறக்கும் போதே கால்கள் இல்லாமல் பிறந்ததால் மருத்துவமனையிலேயே கைவிடப்பட்டாள். ஆயினும், தான் தத்தெடுக்கப்பட்டது ஒரு ஆசீர்வாதம் என்றும், "எனக்குள் அன்பை பொழிந்த மக்களால் தான் நான் இங்கே இருக்கிறேன்" என்றும் கூறுகிறாள். 'தான் ஒரு காரணத்திற்காகத்தான் இவ்வாறு பிறந்திருக்கிறோம்' என்பதை அவள் புரிந்துகொள்ள அவளை தத்தெடுத்த குடும்பத்தினர் உதவினர். அவர்கள், அவளை 'ஒருபோதும் முடியாது' என்று சொல்லாதவளாகமும் தன்னுடைய விருப்பங்களையும் பின்தொடரவும் அவளை வளர்த்தி, உற்சாகப்படுத்தினர். அவள் அந்தரத்தில் சாகசம் செய்யும் சாதனையாளராகவும், தேர்ச்சி பெற்ற உடற்பயிற்சியாளராகவும் மாறினாள். 'நான் எப்படி இதை சமாளிப்பேன்?' என்கிற மனோபாவத்துடன் தனக்கு முன் இருக்கும் சவால்களை தான் சந்திப்பதாக சொல்லுகிற அவள்; மற்றவர்களும் அதையே பின்பற்ற அவர்களை உற்சாகப்படுத்துகிறாள்.
தங்கள் அழைப்பிற்கு இயலாதவர்காக, பொருந்தாதவர்களாக தங்களை கருதிய அநேகரை தேவன் பயன்படுத்திய சம்பவங்களை வேதம் கூறுகிறது. தேவன் அவர்களை எப்படியாயினும் பயன்படுத்தினார். ஒரு தரமான உதாரணம்தான் மோசே. இஸ்ரவேலர்களை தலைமைதாங்கி எகிப்திலிருந்து வெளியே கொண்டுவர தேவன் அவரை அழைத்தபோது, மோசே தடைசொன்னார் (யாத்திராகமம் 3:11; 4:1) மேலும், "நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்" என்று எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் தேவன், "மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும்...உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன்" என்றார்.(4:10–12). மோசே மேலும் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர் சார்பில் பேசும்படி ஆரோனை அளித்து தாம் இருவருக்கும் உதவுவதாக தேவன் வாக்களித்தார் (வ.13–15).
ஜென்னை போல, மோசேயை போல நாம் அனைவருமே உலகத்தில் ஒரு காரணத்துக்காக பிறந்திருக்கிறோம் மேலும் தேவனும் நமக்கு கிருபையாக அனைத்திலும் உதவுகிறார். அவர் நமக்கு ஏற்ற நபர்களை தருகிறார் மேலும் அவருக்காக நாம் வாழ நமக்கு தேவையான அனைத்தையும் தருகிறார்.

தேவன் பட்சமாய் சாய்தல்
ஹாரியட் டப்மேனால் எழுத, படிக்க முடியாது. ஒரு இளம்பெண்ணாக, தன்னுடைய கொடூரமான எஜமானால் அவள் தலையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் அவளை வாழ்நாள் முழுதும் வலிப்பினாலும், ஞாபக மறதியினாலும் பாதித்தது. ஆனால் அவளுடைய அடிமைத்தனத்திலிருந்து தப்பியவுடனே, தேவன் அவளைக்கொண்டு அவளைப் போன்ற சுமார் முன்னூறு பேரை மீட்டார்.
தான் மீட்டவர்களால் "மோசே" என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஹாரியட், வீரமாக பத்தொன்பது முறை உள்நாட்டுப் போருக்கு முன்பாக தெற்கு பக்கம் போய், அங்குள்ள தன்னைப் போன்ற மற்றவர்களை மீட்டார். அவளை உயிருடன் பிடித்தாலோ அல்லது கொன்றாலோ தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டும், அவளுடைய உயிருக்கு எப்பொழுதுமே ஆபத்து இருந்தும், அவள் இதை தொடர்ந்து செய்தாள். இயேசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட விசுவாசியாக இருந்த அவள், எப்பொழுதும் தன்னுடைய பிரயாணங்களில் ஒரு பாட்டு புத்தகத்தையும், வேதாகமத்தையும் எடுத்துக்கொண்டு போய் மற்றவர்கள் அவளுக்கு வசனங்களை படிக்க கேட்பாள். அவைகளை அற்பணத்தோடு மனப்பாடம் செய்து அடிக்கடி மேற்கோள் காட்டுவாள் "நான் எப்பொழுதும் ஜெபம் செய்வேன்; என்னுடைய வேலையை குறித்து, எங்கேயும் நான் எப்பொழுதும் தேவனோடு பேசிக் கொண்டிருப்பேன்" என்று அவள் கூறுகிறாள். மேலும் அவளுடைய சிறிய வெற்றிகளுக்கு கூட தேவனையே காரணராக கூறினாள். ஆதி கிறிஸ்தவர்களுக்கு, அப்போஸ்தலன் பவுலின் அறிவுரைகள் இவளுடைய வாழ்வில் வல்லமையாக வெளிப்பட்டது "எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது." (1 தெசலோனிக்கேயர் 5:16-18).
நாம் எப்போதும் தேவன் பட்சம் சாய்ந்து, ஜெபத்தை நம்பியே வாழ்ந்து, அவரை நம்முடைய கடினமான சூழ்நிலைகளிலும் கூட துதிக்கும் போது, அவர் நம்முடைய மிக சவாலான பணிகளையும் செய்து முடிப்பதற்கு ஏற்ற பெலன் அளிப்பார். நம்முடைய இரட்சகர் நாம் எதிர்கொள்ளும் எதையும் விட மிகவும் பெரியவர், நாம் அவரை நோக்கி பார்க்கும்போது அவர் நம்மை நடத்துவார்.

தேவனை அடையாளம் காணுதல்
கால் பெருவிரலை ஊன்றி சுற்றாட்டம் ஆடும் முறை (பிரு எட்) என்பது கூட்டு நடனக்குழுவில் நடனமாடும் முக்கிய பெண் நடன கலைஞர்களும் அதைப்போல மற்ற நடன கலைஞர்களும் பயன்படுத்தும் ஒரு நடன முறையாகும். சிறுமியாக எனது நவீன நடன வகுப்பில் அவ்வாறு ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். சுழன்று, சுழன்று, மயக்கமுண்டாகி தரையில் விழுமட்டும் அவ்வாறு ஆடுவேன். ஆனால் நான் பெரியவளானபோதோ, என் சமநிலையை, கட்டுப்பாட்டை பேணுவதற்கு நான் ஒரு யுத்தியை கற்றுக்கொண்டேன், அதுதான் " அடையாளம் காணுதல்" ஒரு புள்ளியை அடையாளம் வைத்துக்கொண்டு ஒவ்வொரு சுற்றிலும் என் கண்கள் அதையே பார்க்கும்படி இருக்கையில் நான் முழு சுற்று வட்டமடித்தேன். என் "பிரு எட்" கலையில் கைதேர்ந்தவளாகவும், அதை அற்புதமாக ஆடவும் எனக்கு தேவைப்பட்டதெல்லாம் ஒரே ஒரு மையப்புள்ளி.
நாம் அனைவருமே வாழ்வில் பல திருப்பங்களையும், வளைவுகளையும் சந்திக்கிறோம். நாம் பிரச்சனைகளையே கணித்துக்கொண்டிருந்தால், நாம் எதிர்கொள்ளும் காரியங்கள் கையாள முடியாதவைகளாய் தோன்றும், நம்மை மயக்கமடைய செய்து கிழே விழத்தள்ளும். வேதம் நம்மை நினைவூட்டுகிறது, நாம் நமது மனதை உறுதியாய் வைத்துக்கொண்டால் அதாவது தேவனை கவனிப்போமானால், அவர் நம்மை பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார். (ஏசாயா 26:3). பூரண சமாதானமென்றால் நம் வாழ்வில் எவ்வளவு திருப்பங்கள் வந்தாலும், நாம் அமைதியாக இருக்கலாம், நம்முடைய பிரச்சனைகள், சோதனைகள் அனைத்திலும் தேவன் நம்மோடிருப்பார் என்ற நிச்சயத்தோடு இருக்கலாம். அவரே "நித்திய கன்மலையாயிருக்கிறார்" (வ.4) நம்முடைய கண்கள் பதியவேண்டிய முக்கியபுள்ளி அவரே ஏனெனில் அவருடைய வாக்குத்தத்தங்கள் மாறாதவைகள்.
அவரிடம் ஜெபத்தின் மூலமாக சேர்ந்து அவருடைய வாக்குத்தத்தங்களை வேத வசனங்களில் வாசித்து, நம் கண்களை அவர் மேலேயே பதித்து ஒவ்வொரு நாளையும் கடந்துசெல்வோமாக. வாழ்நாள் முழுதும் நாம் அற்புதமாய் கடந்துச் செல்ல நம் தேவனை, நம் நித்திய கன்மலையை உதவிக்காக சார்ந்துகொள்வோமாக.

எழும்புதல்
ஒரு விமானம் தாங்கி கப்பலை நாங்கள் சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு சிறியரக போர்விமானத்தின் விமானி, இத்தகைய குறுகலான ஓடுபாதையில் விமானங்கள் உயரே எழும்ப மணிக்கு 56 கி.மீ வேகத்தில் காற்றடிக்க வேண்டும் என விளக்கினார். இந்த நிலையான காற்றுக்காக கப்பலின் கேப்டன், கப்பலை காற்றுமுகமாய் திருப்புவார். "விமானத்தின் பின்புறத்திலிருந்து தானே காற்றடிக்க வேண்டும்?" என நான் கேட்டேன். "இல்லை விமானம் காற்றுக்கெதிரே பறக்க வேண்டும், அது உயரே எழும்ப அதுதான் ஒரே வழி" என விமானி பதிலளித்தார்.
வாக்குப்பண்ணப்பட தேசத்திலே தம்முடைய ஜனங்களுக்கு காத்துக்கொண்டிருந்த "காற்றுமுகத்தினூடே" அவர்களை நடத்த யோசுவாவை தேவன் அழைத்தார். யோசுவாவிற்கு இரண்டு காரியங்கள் தேவைப்பட்டது. உட்புறமாக அவர், "மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு."(யோசுவா 1:7) இருக்க வேண்டும் மேலும் வெளிப்புறமாக அவருக்கு சவால்கள் இருக்க வேண்டும். அரனான பட்டணங்களை எதிர்கொள்ளுதல் (6:1–5), மனசோர்வுண்டாக்கும் தோல்விகள் (7:3–5), ஆகானின் திருட்டு (7:16–26), மேலும் தெடர்ச்சியான யுத்தங்கள் (அதிகாரங்கள் 10-11) என இதுபோன்ற அனுதின பணிகளில் ஆயிரக்கணக்கான இஸ்ரவேலர்களை வழிநடத்த வேண்டும்.
தேவனுடைய கற்பனைகளிலிருந்து யோசுவாவிற்கு உந்துதல் உண்டான காலமுழுதும் யோசுவாவின் முகத்திற்கெதிரே வீசிய காற்று அவருடைய வாழ்வையே உயரே எழுப்பியது. அவர் "நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்க..அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிரு(க்க)..இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிரு(க்க)" வேண்டும், "அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய்" (வ.7 -௮) என்று தேவன் கூறினார்.
என்ன நடந்தாலும் தேவனுடைய வழிகளை பின்பற்ற தீர்மானித்துள்ளீர்களா? சவால்களை எதிர்பாருங்கள். தைரியமாக காற்றுமுகத்திற்கெதிரே பறந்துபோங்கள், நீங்கள் உயரே எழும்புவதை காண்பீர்கள்.