வகை  |  odb

எது முக்கியம்?

என் தோழியின் சக விசுவாசியும் உடன் பணியாளருமாகிய ஒருவர் அவளிடம், நீங்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்று குறிப்பாகக் கேட்டதை நினைவுகூர்ந்தார். அவர்களின் சமூகத்தை பிரிக்கும் எவ்வளவு காரியங்களில் இருவரும் ஒத்துப்போகிறார்கள் என்று தெரிந்துகொள்ளவே அவர் அவ்வாறு கேட்டார். அக்கேள்விக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, இருவருக்குள்ளும் இருக்கும் ஒற்றுமையை முக்கியத்துவப்படுத்தும் முயற்சியில் “நாம் இருவருமே விசுவாசிகளாதலால், கிறிஸ்துவுக்குள் இருக்கும் நம் ஒற்றுமையையே நான் அதிக முக்கியத்துவப்படுத்துகிறேன்” என பதிலளித்தாளாம்.

பவுலின் காலத்திலும், ஜனங்கள் பல்வேறு பிரச்சனைகளுக்காய் பிரிந்திருந்தனர். எத்தகைய உணவுகளை சாப்பிடலாம்? எந்த நாட்கள் விசேஷித்தவைகள்? போன்ற காரியங்களில் ரோமாபுரியில் இருந்த கிறிஸ்தவர்களுக்குள் பல கருத்துவேறுபாடுகள் இருந்தன. தங்களுடைய கருத்துக்களில் அவரவர் மனதிலே முழு நிச்சயத்தை உடையவர்களாய் இருந்தாலும், பவுல் அவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றை நினைவூட்டுகிறார். இயேசுவுக்கென வாழ்வதே அந்த தீர்மானம் (ரோமர் 14:5–9). ஒருவரையொருவர் குறை சொல்லுவதை விட்டுவிட்டு, “சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும்” (வச. 19) நாடுமாறு அவர்களை ஊக்குவிக்கிறார்.

சிறிய மற்றும் பெரிய காரியங்களைக் குறித்து தேசங்களும், சபைகளும், சமூகங்களும் பிரிந்துகிடக்கும் இந்த காலகட்டத்தில், நம்மை ஒன்றாக்கும் கிறிஸ்துவின் சிலுவை முயற்சிக்கு நேரே நாம் ஒருவரையொருவர் திருப்பி, அவருடனான நித்திய வாழ்க்கையை பத்திரப்படுத்தலாம். நம்முடைய தனிப்பட்ட கருத்துக்களையே பிடித்துக்கொண்டு, “தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே” (வச. 20) என்று 2௦௦௦ ஆண்டுகளுக்கு முன்னான பவுலின் எச்சரிக்கை, அக்காலத்தை போலவே இக்காலத்திற்கும் பொருந்தும். ஒருவரையொருவர் நியாயந்தீர்ப்பதை விட்டுவிட்டு, அன்பில் அனைத்தையும் செய்து, நம் சகோதர சகோதரிகளை கௌரவிக்கும் வகையில் வாழ்வோம்.

பூமி தினத்தில் நன்றியுணர்வு

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தினத்தன்று “பூமி தினம்” அனுசரிக்கப்படுகிறது. சமீப காலமாய், ஏறத்தாழ இருநூறு நாடுகளில், கோடிக்கணக்கான மக்கள் அன்றைய தினத்தில் பயிற்சி மற்றும் சேவை நிகழ்ச்சிகளில் பங்குபெற்றனர். ஒவ்வொரு வருடமும், பூமி தினம் இத்தகைய வியத்தகு கிரகத்தை பராமரிக்கும் அவசியத்தை நமக்கு நினைப்பூட்டுகிறது. ஆனால் நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியம் இந்த ஆண்டு நிகழ்வை காட்டிலும் மிகப் பழமையானது. அது சிருஷ்டிப்பின் நாட்களுக்கு பின்னோக்கிச் செல்கிறது.

ஆதியாகமத்தில், தேவன் அண்டசராசரத்தையும் சிருஷ்டித்து, மனிதன் வாழ்வதற்கு பூமியை சிருஷ்டித்தார் என்று அறிகிறோம். அவர் மலைச்சிகரங்களையும், பசுமையான சமவெளிகளையும் படைத்ததுமன்றி, தேவன் ஏதேன் தோட்டத்தையும் சிருஷ்டித்தார். அது உணவு, உறைவிடம், மற்றும் மகிழ்ச்சியை அதின் குடிகளுக்குக் கொடுக்கும் அற்புதமான ஒரு இடம் (ஆதியாகமம் 2:8–9).

தன் பிரதான படைப்பான மனிதனுக்கு ஜீவசுவாசத்தை கொடுத்து, தேவன் அவர்களை ஏதேன் தோட்டத்தில் வைத்தார் (வச. 8,22). பின், “அதைப் பண்படுத்தவும் காக்கவும்” (வச. 15) வேண்டுமென்ற பொறுப்பை அவர்களுக்குக் கொடுத்தார். ஆதாமும், ஏவாளும் தோட்டத்திலிருந்து துரத்திவிடப்பட்ட பின்னர், தேவனுடைய சிருஷ்டிப்பைப் பராமரிப்பது இன்னும் கடினமானதாய் மாறியது (3:17–19). ஆனால் இந்நாள்வரைக்கும் தேவனே நம் பூமியையும், அதின் ஜீவராசிகளையும் பராமரிக்கிறார் (சங்கீதம் 65:9–13). நம்மையும் அதையே செய்யுமாறு எதிர்பார்க்கிறார் (நீதிமொழிகள் 12:10).

நாம் நெருக்கடியான நகரத்தில் வசிக்கிறோமோ அல்லது கிராமத்தில் இருக்கிறோமோ, தேவன் நம்மை நம்பிக் கொடுத்த பகுதிகளை பராமரிக்கும் கடமை நமக்குண்டு. தேவன் நமக்குக் கொடுத்த இந்த பூமி பரிசு என்னும் நன்றிக்கடனுக்காக அதை பராமரிக்கும் பொறுப்பை மனப்பூர்வமாய் ஏற்போம்.

மெய்யாகவே ஜீவிக்கிறார்

ஈஸ்டர் ஞாயிறு முடிந்து அடுத்தவாரம் என்பதால், எங்கள் ஐந்து வயது மகன் அநேக உயிர்த்தெழுதல் செய்திகளைக் கேட்டிருந்தான். அவன் பொதுவாக அநேக கேள்விகளைக் கேட்பான். அவற்றுள் பெரும்பாலும் எங்களை திக்குமுக்காடச் செய்யும். நான் வாகனம் ஒட்டிக்கொண்டிருக்க, அவன் பயணியர் இருக்கையில் சீட் பெல்ட் அணிந்து அமர்ந்திருந்தான். வெளியே வேடிக்கை பார்த்தவாறே, ஏதோ ஆழமான சிந்தையிலிருந்தான். “அப்பா” என்றழைத்தவன் சற்று நிறுத்தி, கடினமானதைக் கேட்கும் ஆயத்தத்தோடே, “இயேசு நம்மை மறுபடியும் உயிரோடெழுப்புகையில், நாம் உண்மையாகவே உயிரோடிருப்போமா? அல்லது அது நம்முடைய கற்பனைதானா?” என்று கேட்டான்.

இதைப்பற்றி தாராளமாக பேச நமக்கு துணிச்சல் இல்லையென்றாலும், நம்மில் அநேகருக்கு இதே கேள்வியுண்டு. உண்மையாகவே தேவன் நம்மை குணப்படுத்தப் போகிறாரா? உண்மையாகவே அவர் நம்மை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்புவாரா? தம்முடைய வாக்குத்தத்தங்களை உண்மையாகவே நிறைவேற்றுவாரா?
“புதிய வானம், புதிய பூமி” (வெளி 21:1), என்று அப்போஸ்தலர் யோவான் நம் எதிர்காலத்தை வர்ணிக்கிறார். அந்த பரிசுத்த நகரத்தில், “தேவன்தாமே நம்மோடேகூட இருந்து நம்முடைய தேவனாயிருப்பார்” (வச. 3). கிறிஸ்து ஜெயித்ததினால், நமக்கு கண்ணீரற்ற எதிர்காலம் வாக்குப்பண்ணப்பட்டுள்ளது. தேவனுக்கும் அவர் ஜனத்திற்கும் எதிராக எந்த தீமையும் ஆளுகை செய்யப்போவதில்லை. இச்சிறந்த எதிர்காலத்தில்தான், “மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின” (வச. 4) என்று வாக்குப்பண்ணப்பட்டுள்ளது.

அதாவது, தேவன் நமக்கு வாக்குப்பண்ணும் எதிர்காலத்தில், நாம் மெய்யாகவே ஜீவனோடிருப்போம். இப்போது நாம் வாழும் வாழ்வு வெறும் நிழலே என்று சொல்லுமளவிற்கு நாம் மெய்யான வாழ்வை அனுபவிப்போம்.

அன்புசெய்ய துணியலாம்

காரணமேயின்றி என் தோழி எங்கள் பத்தாண்டுகால நட்பை முறித்தபோது, ஜனங்களிடம் நெருங்கிப் பழக தடுமாறும் என் பழைய பழக்கத்திற்கு மீண்டும் திரும்பினேன். என் துயரத்தில் பழகிக் கொண்டிருக்கையில், சி.ஸ்.லூயிஸ் எழுதிய “தி ஃபோர் லவ்ஸ்” (The Four Loves) என்ற புத்தகத்தை சிதைந்த நிலையில் என் அலமாரியிலிருந்து எடுத்தேன். அதில் லூயிஸ், அன்பானது பாதிப்புக்குள்ளாக்கப்பட வேண்டியதே என்ற ஆழமான சிந்தனையைச் சொல்கிறார். ஒருவர் அன்புகாட்ட துணியும்போது அவருக்கென்று “பாதுகாப்பான முதலீடு என்று ஒன்றுமில்லை” என்கிறார். ஒருவர் ஒன்றை நேசிக்கையில், அவர் இருதயம் காயப்படும், உடையும் என்று அவர் குறிப்பிடுகிறார். இதை வாசித்தபின், பேதுரு தன்னை மூன்றுமுறை மறுதலித்த பின்னரும் (யோவான் 18:15-27), இயேசு தம் உயிர்தெழுதலுக்கு பின், மூன்றாம் முறை தம் சீஷருக்கு தரிசனமானதை (யோவான் 21-1-14) வாசிக்கும் என் அணுகுமுறையை முற்றிலும் மாற்றியது. இயேசு, “யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார்” (21:15).

மறுதலிக்கப்பட்ட பின்னரும் இயேசு பேதுருவிடம், துணிவோடு பேசினார்; தயங்கவில்லை. சுயநலமில்லாமல் உறுதியாய் பேசினார். அதில் பெலவீனமோ, விரக்தியோ இல்லை. அன்புகாட்ட தாம் விரும்புவதை உறுதிப்படுத்துவதற்கு, அவர் கருணையை வெளிக்காட்டினாரேயன்றி கோபத்தையல்ல.

“என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு” (வச. 17) என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் பேதுரு தம்மை பின்பற்றுவதின் மூலமும் (வச. 19), மற்றவர்களை நேசிக்கும்படியாய் சொல்லும்போதும் (வச. 15–17), அவர் தம்முடைய சீஷர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி நேசிக்க பொதுவாக அழைப்புக் கொடுக்கிறார். “நீ என்னை நேசிக்கின்றாயா?” என்று இயேசு கேட்கையில், அதற்கு நாம் ஒவ்வொரும் பதிலளிக்க வேண்டும். நம் பதிலே நாம் பிறரை நேசிக்கும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.