வகை  |  odb

தேவன் எங்கே?

வால்டோ எங்கே?’ (Where’s Waldo?) என்னும் பிரபல சிறுவர் தொடர் புத்தகத்தில், நாம் கண்டுபிடிக்கவேண்டிய கதாபாத்திரம், சிவப்பு மற்றும் வெள்ளை கோடிட்ட சட்டை, தொப்பி, நீலநிற ஜீன்ஸ், பழுப்பு பூட்ஸ் மற்றும் கண்ணாடி அணிந்திருக்கும். அந்த விளையாட்டை வடிவமைத்தவர், உலகின் பல்வேறு இடங்களில், கூட்டநெரிசலாலான மற்ற கதாபாத்திரங்களுக்கு நடுவில் இந்த வால்டோவை திறமையாய் ஒளித்து வைத்திருப்பார். வால்டோவைக் கண்டிபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல; ஆனால் வாசகர்கள் அவரை நிச்சயமாய் கண்டுபிடிக்க முடியும் என்று அதை உருவாக்கியவர் உறுதியளிக்கிறார். தேவனைக் கண்டுபிடிப்பது இந்த புதிர்புத்தகத்தில் வால்டோவைக் கண்டுபிடிப்பது போலில்லை என்றாலும், அவரை நாம் கண்டுபிடிக்க முடியும் என்று நம்முடைய சிருஷ்டிகரும் வாக்களித்துள்ளார். 

சிறையிருப்பில், அந்நியர்களாய் வாழ்வது எப்படி என்பதை எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் தேவன் அறிவுறுத்தினார் (எரேமியா 29:4-9). அவருடைய திட்டத்தின்படி, அவர்களை மீட்கும் காலமட்டும் அவர்களை பாதுகாப்பதாக தேவன் வாக்களித்திருக்கிறார் (வச.10-11). அவருடைய வாக்கை நிறைவேற்றுவதின் மூலம், ஜெபத்தில் இஸ்ரவேலர்களுடைய அர்ப்பணிப்பு ஆழமாகும் என தேவன் உறுதியளிக்கிறார் (வச.12).

கிறிஸ்துவின் ஆவியின் மூலம் இன்று தேவன் தன்னை வெளிப்படுத்தினாலும், உலகத்தின் பரபரப்பான சூழ்நிலையில் நம்முடைய கவனம் எளிதாய் சிதற நேரிடுகிறது. சிலவேளைகளில் தேவன் எங்கே? என்று கூட கேட்க நேரிடுகிறது. ஆனால் சிருஷ்டிகரும், பராமரிக்கிறவுமாகிய தேவனை முழு இருதயத்தோடு தேடுகிறவர்கள் அவரைக் கண்டடைவார்கள் என்று தேவனே அறிவிக்கிறார். 

மற்ற ஏழுபேர்

ஜனவரி 2020இல் லாஸ் ஏஞ்சலஸில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஒன்பது பேர் பலியாயினர். “பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபே பிரயண்ட்டும், அவருடைய மகள் ஜியானாவும் (கிகி) மற்றும் ஏழுபேர் இந்த விபத்தில் பலியாயினர்” என்று அநேக செய்திகள் இவ்வாறே வெளிவந்தன.

பிரபலமான நபர்கள் இதுபோன்ற கொடூரமான சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்கையில், அவர்களுக்கு தனி முக்கியத்துவம் அளிப்பது இயல்பானதும், புரிந்துகொள்ளக்கூடியதும் தான். கோபே மற்றும் அவரின் பதின்பருவ மகள் கிகி ஆகியோரின் மரணம் நம்மை துயரில் ஆழ்த்துகிறது.   அதேநேரத்தில் விபத்தில் மரித்த மற்ற ஏழுபேர்களின் மரணங்கள் (பேடன், சாரா, கிறிஸ்டினா, அலிசா, ஜாண், கெரி மற்றும் ஆரா) எந்த விதத்திலும் தாழ்ந்ததில்லை. 

ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதை நாம் சிலவேளைகளில் உணரவேண்டும். பிரபலமானவர்களுக்கும், பணக்காரர்களுக்கும் சமுதாயம் முக்கியத்துவம்  அளிக்கிறது. ஆனால், உங்கள் அண்டை வீட்டாரை காட்டிலும், வீதிகளில் விளையாடும் பிள்ளைகளைக் காட்டிலும், கடினமான சூழ்நிலையில் உள்ளவர்களை காட்டிலும் அல்லது உங்களைக் காட்டிலும் இந்த புகழும், பிரபலமும் ஒருவரையும் முக்கியமானவர்களாய் மாற்றாது. 

எழையோ பணக்காரனோ (நீதிமொழிகள் 22:2), பூமியிலுள்ள எல்லா மனிதர்களும் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளனர் (ஆதியாகமம் 1:27). யாரும் தேவனுடைய பார்வையில் அதிக மேன்மையானவர்கள் இல்லை (ரோமர் 2:11). அனைவருக்கும் இரட்சகர் அவசியம் (3:23). 

திருச்சபையிலோ (யாக்கோபு 2:1-4) அல்லது சமுதாயத்திலோ, நாமும் பாரபட்சமில்லாமல் செயல்படும்போது நாம் நம்முடைய தேவனை மகிமைப்படுத்துகிறோம்.    

தேவனின் நல்ல பசை

சமீபத்தில் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மிகவும் வலிமையான, அதேநேரம் பிரித்தெடுக்கக்கூடிய புதிய வகை பசையை கண்டுபிடித்தனர். வறட்சியான இடங்களில் ஒட்டிக்கொண்டு, ஈரமான இடங்களில் எளிமையாய் விலகிக் கொள்ளும் நத்தையின் திரவமே அவர்கள் வடிவமைப்பிற்கு உந்துதல். நத்தையின் இந்த மாறும் தன்மை ஈரப்பதமான இடங்களிலும் எளிதாக நகரவும், பாதுகாப்பாய் இருக்கவும், நகர்வது ஆபத்தாய் தோன்றும் அபாயமான இடங்களில் உறுதியாய் தன்னை நிறுத்திக் கொள்ளவும் ஏதுவாயிருக்கிறது. 

இயற்கையில் இருக்கும் இந்த ஒட்டும் பசை மாதிரி, விஞ்ஞானி ஜோன்ஸ் கெப்லர் புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடிக்க உறுதுணையாயிருந்தது. அவர் தேவனுடைய சிருஷ்டிப்புகளை நினைவு கூறுவதாகச் சொல்லுகிறார். வேதம், தேவன் வானத்தையும் பூமியையும் அதிலுள்ள யாவையும் சிருஷ்டித்ததாக சொல்லுகிறது: பூமியின் தாவரங்கள் (ஆதியாகமம் 1:12); சமுத்திரத்திலுள்ள நீர்வாழ் ஜந்துக்கள் மற்றும் ஆகாயத்துப் பறவைகள் (வச. 21); பூமியில் ஊரும் பிராணிகள் (வச.25); தேவசாயலில் உண்டாக்கப்பட்ட மனிதன் (வச.27) என்று தேவனுடைய சிருஷ்டிப்பு பட்டியல் நீளுகிறது. ஒரு தாவரத்தை அல்லது உயிரினங்களின் விசேஷமான சுபாவத்தைக் கண்டு நாம் ஆச்சரியப்பட நேர்ந்தால், தேவன் அதை வடிவமைத்த விதத்தைக் கண்டு நாம் தேவனுடைய படைப்பின் அடுச்சுவடுகளை பின்பற்றுகிறோம் என்று அர்த்தம்.

சிருஷ்டிப்பின் ஒவ்வொரு நாளின் இறுதியிலும், தேவன் தன்னுடைய கரத்தின் கிரியையை பரிசீலனை செய்து அதை “நல்லது” என்று காண்கிறார். தேவனுடைய படைப்புகளைக் குறித்து நாம் கற்றுக்கொள்ளும் போதும், கண்டுபிடிக்கும் போதும், அதின் வியக்கத்தக்க சுபாவங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அதை பராமரிக்கவும் அதின் மேன்மையை பறை சாற்றவும் செய்யலாம். 

எளிமையாய் சொல்லுங்கள்

அந்த மின்னஞ்சல் சுருக்கமாயும், அவசரமாயும் இருந்தது. “எனக்கு இரட்சிப்பு வேண்டும். நான் இயேசுவை அறிய விரும்புகிறேன்.” என்ன வியத்தகு வேண்டுகோள்! இயேசுவை ஏற்றுக்கொள்ள தயங்கும் நம் சிநேகிதர்கள் மற்றும் உறவினர்களைப் போன்று இந்த நபரை நாம் மனமாற்றம் செய்வதில் சிரமமில்லை. என்னுடைய அறிவிற்குட்பட்ட சில முக்கியமான காரியங்கள், வேதப்பகுதிகள், நம்பத்தக்க தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டு இந்த மனிதனின் வேண்டுகோளை நிறைவேற்றுவதே என்னுடைய வேலை. அதிலிருந்து, விசுவாசத்தினால் அவனை தேவன் வழி நடத்துவார். 

எத்தியோப்பியாவின் மந்திரி ஊருக்குத் திரும்பும் பாலைவன வழியில், ஏசாயா ஆகமத்தை சத்தமாக வாசித்துக் கொண்டிருக்கையில், அவரைச் சந்தித்த பிலிப்பு அதேபோன்று எளிமையான சுவிசேஷத்தை பகிர்ந்தார். “நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா” (அப்.8:30) என்று பிலிப்பு கேட்க. “ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்” (வச. 31) என்று அவன் பதிலளிக்கிறான். அந்த அழைப்பாக ஏற்ற பிலிப்பு, “இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்” (வச.35).

ஜனங்கள் எதிர்பார்க்கிற இடத்திலிருந்து, எளிமையாக சுவிசேஷத்தை பிலிப்பை போல் பிரசங்கிப்பது, கிறிஸ்துவை பகிர பயனுள்ள முறை. அவர்கள் இருவரும் போன வழியில் தண்ணீரை கண்டு, “இதோ, தண்ணீர் இருக்கிறதே” (வச.36) என்று காண்பித்து தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கேட்க, பிலிப்பு சம்மதித்தான். பின்னர் மந்திரி, “சந்தோஷத்தோடே தன் வழியே போனான்” (வச.39). அந்த மின்னஞ்சலை அனுப்பியவர் பின்பு, தன்னுடைய பாவத்திலிருந்து மனந்திரும்பி, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதாகவும், திருச்சபை ஒன்றில் சேர்ந்ததாகவும், தன்னுடைய மறுபிறப்பை நம்புவதாகவும் எனக்கு மீண்டும் எழுதிய பதிலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். என்ன ஒரு அழகான துவக்கம்! தேவன் அவரை மேன்மேலும் உயர்த்தட்டும்.