வகை  |  odb

ஒளிரும் பரதேசிகள்

2020ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில், சான் டியாகோ கடற்கரையின் ஒளிரும் அலைகளின் மீது, மிதவைதட்டின் உதவியோடு வீரர்கள் உலா வந்தனர். இந்த ஒளிரும் அலைகள், பைட்டோபிளாங்டன் எனப்படும் நுண்ணிய உயிரிகளால் ஏற்படுத்தப்பட்டவைகள். அதற்கு கிரேக்கத்தில், “பரதேசி” அல்லது “சுற்றித் திரிபவன்” என்று பொருள். இந்த உயிரிகள் பகல் நேரத்தில், சிவப்பு அலைகளை உருவாக்கி அவற்றை இரசாயன ஆற்றலாக மாற்றும் சூரிய ஒளியை உள்வாங்குகிறது. இரவில் அவை நீல நிற மின்சார ஒளியை உருவாக்கும்.

பரலோகவாசிகளாகிய கிறிஸ்தவர்கள், பூமியில் வாழும் நாட்களில் இந்த சிவப்பு அலைகளை உருவாக்கும், பரதேசிகளாகவும் சுற்றித் திரிபவர்களாகவுமே வாழுகிறார்கள். தேவன் நமக்கு வகுத்திருக்கிற திட்டத்தை கடினமான சூழ்நிலைகள் தொந்தரவுசெய்யும்போது, உலகத்தின் ஒளியான இயேசுவைப் போல இருளில்  பிரகாசிக்கும் ஒளியாய் பரிசுத்த ஆவியானவர் நம்மை மாற்றுகிறார். பவுல் அப்போஸ்தலரைப் பொருத்தவரையில், தேவனோடு இருக்கிற உறவு மற்றும் அவர் மூலமாய் நமக்கு உண்டாகும் நீதியைவிட மேன்மையானது வேறு இல்லை (பிலிப்பியர் 3:8-9). இயேசுவை அறிகிற அறிவும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையும், பாடுகளின் மத்தியில் நம்முடைய வாழ்க்கை முறையை பாதிக்கிறது (வச. 10-16).

தேவகுமாரனோடு நாம் அனுதினமும் நேரம் செலவிடும்போது, கிறிஸ்துவின் சுபாவத்தை பிரதிபலிக்கும் வகையில் சவால்களை சந்திக்கும் சத்தியத்தை அறிகிற அறிவிற்கு நேராய் ஆவியானவர் நம்மை வழிநடத்துவார் (வச. 17-21). நாம் பரதீசு சேரும் நாள்வரை, தேவனுடைய அன்பு மற்றும் நம்பிக்கையின் கலங்கரை விளக்காய் நாம் செயல்படமுடியும்.

இரும்பைப் போல் வலிமையான

இரும்பொறை வண்டுகள் என்று அழைக்கப்படும் வண்டுகளின் கடினமான வெளிப்புற அமைப்பு அதை மற்ற உயிரிகளிடமிருந்து பாதுகாக்கின்றன. அதில் ஒரு குறிப்பிட்ட வகை, மிக அதிகமான அழுத்தத்தையும் தாங்கக்கூடியவை. அந்த வண்டுகளின் வெளிப்புற ஓடானது, அதிக அழுத்தத்தின் போது உடைந்து நொறுங்காமல் விரிவடையக்கூடிய தன்மையுடையது. அதனுடைய தட்டையான அடிப்பக்கம், விரிசல் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதனுடைய உடல் எடையைக் காட்டிலும் 40,000 மடங்கு அதிக அழுத்தத்தை அதனால் தாங்க முடியும் என அறிவியல் ஆய்வு கண்டறிந்துள்ளது.  

இந்த பூச்சியினத்தை தேவன் எந்த அளவிற்கு பாதுகாப்பாய் வடிவமைத்தாரோ, அதே அளவிற்கு எரேமியாவையும் பாதுகாப்போடு தேவன் நடத்தினார். இஸ்ரவேலுக்கு பிரியமில்லாத செய்தியை அறிவிக்கப்போகும் இந்த தீர்க்கதரிசி அதிகபட்சமான அழுத்தத்தை சகிக்கவேண்டியுள்ளதால், தேவன் அவரை “இரும்புத்தூணும், வெண்கல அலங்கமும்” (எரேமியா 1:18) ஆக்குவேன் என்று வாக்குப்பண்ணினார்.

தீர்க்கதரிசியை யாரும் வீழ்த்தவோ, செயலிழக்கசெய்யவோ, மேற்கொள்ளவோ முடியாது. தேவனுடைய பிரசன்னத்தினாலும் பாதுகாப்பினாலும் அவருடைய வார்த்தை உறுதியாய் ஸ்தாபிக்கப்படும். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எரேமியா, தவறாய் குற்றஞ்சுமத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, அடிக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, கிணற்றில் தூக்கி எறியப்பட்டு துன்பங்களை அனுபவித்தாலும், அவன் ஜீவித்தான். தன்னுடைய மன ரீதியான அழுத்தத்தையும் மேற்கொண்டு எரேமியா ஜெயமெடுத்தான். சந்தேகமும் துயரமும் அவனை ஆட்கொள்ள நேரிட்டது. தொடர்ந்த நிராகரிப்பும், பாபிலோனிய படையெடுப்பைக் குறித்த பயமும் அவனுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. எரேமியாவின் ஆவியும் சாட்சியும் உடைக்கப்படாவண்ணம் தேவன் எரேமியாவுக்கு தேவன் தொடர்ந்து உதவி செய்தார்.  

தேவன் நமக்கு கொடுத்த பணியில் நாம் சோர்வுற்றாலோ அல்லது பின்வாங்கினாலோ, எரேமியாவின் தேவன் நம் தேவன் என்பதை நினைவில் கொள்வோம். அவர் நம்மை இரும்புத்தூணாய் மாற்றி, நம்முடைய பெலவீனத்தில் அவருடைய பெலனை விளங்கச் செய்வார் (2 கொரிந்தியர் 12:9).

இரக்கமுள்ள தகப்பன்

எட்டு வயது நிரம்பிய கேபிரியலுக்கு மூளையிலிருந்த கட்டி அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. ஆனால் அது அவனுடைய தலையின் ஒரு ஓரத்தில் தழும்பை ஏற்படுத்தியது. அந்த தழும்பிநிமித்தம், நான் ஒரு மிருகத்தைப் போல உணருகிறேன் என்று அவன் சொல்லக் கேட்ட அவனுடைய அப்பா, ஒரு யோசனையை செயல்படுத்தினார். தன்னுடைய மகன் மீதான தன்னுடைய அன்பிற்கு அடையாளமாய், கேபிரியேலுக்கு இருப்பதுபோலவே தன்னுடைய தலையின் ஓரத்திலும் ஒரு வடிவத்தை பச்சைக் குத்திக்கொண்டார்.

தேவன் “தன் பிள்ளைகளுக்கு” இதே போன்ற இரக்கமுள்ள அன்பை வெளிப்படுத்தினார் என்று சங்கீதக்காரன் கூறுகிறார் (சங்கீதம் 103:13). மனித வாழ்க்கையை தெய்வீக அன்போடு உருவகப்படுத்தி தாவீது கூறுகிறார். ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளைக்கு மென்மையாய் இரங்குவதுபோல தேவன் இரங்குகிறார் என்று குறிப்பிடுகிறார் (வச. 17). ஒரு மாம்சீக தகப்பன் தன்னுடைய பிள்ளைக்கு இரங்குவதுபோலவே, பரலோகத்திலிருக்கும் தேவனும் தமக்கு பயந்தவர்களுக்கு இரங்குகிறார். தேவன் தன் ஜனங்கள் மீது மனதுருகும் இரக்கமுள்ள தகப்பன். நாம் நேசிக்கப்படாதவர்களாயும் பெலவீனர்களாயும் உணரும்போது, நம் மீதான பரலோக தகப்பனின் அன்பை விசுவாசத்தால் பெற்றுக்கொள்ளலாம். “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே” (1 யோவான் 3:16)   

நம்முடைய இரட்சிப்பிற்கேதுவான இரக்கத்தை அவர் வெளிப்படுத்தினார். இந்த செய்கையின் மூலம் அவர் நம்மீது வைத்த அன்பை அவருடைய சிலுவையினூடாய் நாம் பார்க்கமுடியும். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியர் நமக்கிருக்கிறார் (எபிரெயர் 4:15) என்பதைக் குறித்து நீங்கள் மகிழ்ச்சியடையவில்லையா? அதை நிரூபிக்க அவரிடத்தில் தழும்புகள் உண்டு.

என் படைப்பு

ஏழு வயது நிரம்பிய தாமஸ் எடிசன் பள்ளியில் சரியாய் படிக்கவில்லை. அவனை “மக்கு” என்று அவனுடைய ஆசிரியர் திட்டியிருக்கிறார். பள்ளி நிர்வாகம் அவனை வீட்டிற்கு அனுப்பியது. அவனுடைய ஆசிரியரிடம் பேசிய அவனுடைய தாயார், அடுத்த நாளிலிருந்து அவனை பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டிலேயே வைத்து பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். தாயாரின் கனிவுள்ள அன்பினாலும், உற்சாகத்தினாலும், பெரிய விஞ்ஞானியாய் அவரால் பிற்காலத்தில் மாற முடிந்தது. அவர் சொல்லும்போது, “என்னை வனைந்தவர் என்னுடைய அம்மா தான். அவர் உண்மையானவர்; நான் அவர்களுக்காக வாழ விரும்புகிறேன்; அவரை ஒருபோதும் காயப்படுத்தவே கூடாது என்று விரும்புகிறேன்” என்று தன்னுடைய தாயைக் குறித்து பெருமிதம்கொள்ளுகிறார்.

அப்போஸ்தலர் 15 இல், தங்களோடு மாற்கு என்னும் யோவானை ஊழியத்திற்கு கூட்டிக்கொண்டு போவதில் கருத்து வேறுபாடு ஏற்படும் வரை பவுலும் பர்னபாவும் இணைந்து ஊழியம் செய்தனர். அவன் பம்பிலியா நாட்டில் ஊழியத்திலிருந்து விட்டு பிரிந்துபோனதினால், பவுல் அவனை சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை (வச. 36-38). அதின் விளைவாய் பவுலும் பர்னபாவும் பிரிய நேரிட்டது. பவுல் சீலாவோடும், பர்னபா யோவானோடும் சேர்ந்து ஊழியம் செய்தனர். மாற்கு எனப்பட்ட யோவான் மிஷனரியாய் செயல்படுவதற்கு, பர்னபா இரண்டாவது வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அவரே பிற்காலத்தில் மாற்கு சுவிசேஷத்தை எழுதினார். சிறைச்சாலையில் பவுலுக்கு ஆதரவாய் இருந்தார் (2 தீமோத்தேயு 4:11).

நம்முடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, நம் வாழ்க்கையில் நம்மை உற்சாகப்படுத்தியவர்களை எண்ணிப்பார்க்கலாம். மற்றவர்களுடைய வாழ்க்கையில் நாமும் அதேபோல செயல்பட தேவன் நம்மை அழைக்கிறார். யாரை நீங்கள் உற்சாகப்படுத்தப்போகிறீர்கள்?