வகை  |  odb

தேவனின் மன்னிப்பு - நாள் 7

banner image

...இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பு ஆகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
எபேசியர் 1:7

தேவனின் பிதாத்தன்மையின் இனிதான பார்வையை கவனத்துடன் அணுகுங்கள்: தேவன் மிகவும் கருணையும் அன்பும் நிறைந்தவர்.…

ஒப்புரவாக "போ" - நாள் 6

banner image

நீ ...உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டு என்று அங்கே நினைவு கூருவாயாகில்...
மத்தேயு 5:23

இந்த வசனம் சொல்கிறது, "நீ பலிபீடத்தின் இடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த…

மனந்திரும்புதல் - நாள் 5

banner image

தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப் படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கு ஏதுவான மனம் திரும்புதலை உண்டாக்குகிறது.
2 கொரிந்தியர் 7:10

பாவ உறுதி பற்றி சிறப்பாக விளக்கும் வார்த்தைகள் :…

அவர் வந்து - நாள் 4

banner image

அவர் வந்து, பாவத்தைக் குறித்தும்,... உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். யோவான் 16:8

முழுமையான பாவஉணர்வு பற்றி சிலர் மட்டுமே அறிவர். நாம் தவறுகளைச் செய்யும் போது வருந்துகிறோம்.…

பாரபட்சமற்ற தேவ வல்லமை - நாள் 3

banner image

பரிசுத்தமாக்கப் படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தி இருக்கிறார்.
எபிரெயர் 10:14

நாம் பாவத்திற்கு வருத்தப்படுவதால் மன்னிக்கப்பட்டோம் என்று நினைத்தால் , நாம் தேவ குமாரனின் இரத்தத்தை…

நமக்கு பதிலாக - நாள் 2

banner image

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும் படிக்கு,... பாவம் அறியாத அவரை நமக்காக பாவம் ஆக்கினார்...
2 கொரிந்தியர் 5: 21

இயேசு கிறிஸ்துவின் மரணத்தைப் பற்றிய நவீன…

கண்கள் திறக்கப்பட்டன - நாள் 1

banner image

...நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.
அப்போஸ்தலர் 26:17-18

புதிய ஏற்பாட்டில் இந்த வசனங்கள் தான் இயேசு கிறிஸ்துவின் சீடரின் உட்கருத்தை…

தினந்தோறும் சாருதல்

எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். மத்தேயு 6:11

ஒரு காலைப்பொழுதில் எனது குழந்தைகள் காலமே எழுந்து, காலை உணவை தாங்களே சமைப்பதென்று தீர்மானித்தனர். கடுமையான வேலைப்பளு நிறைந்த அந்த வாரத்தின் சோர்வால் நானும் எனது மனைவியும், அந்த சனிக்கிழமையன்று காலை 7:௦௦ மணி மட்டுமாவது தூங்க முயன்றோம். திடீரென நொறுங்கும் சத்தம் பேரோசையோடு என்னை எழுப்ப படுக்கையிலிருந்து பாய்ந்து, கீழ் படிகளில் விரைந்தேன். அங்கே உடைந்த தட்டும், தரையெங்கும் சிந்திய உணவும், அதைப் பெருக்கி சுத்தம்செய்யப் போராடிக்கொண்டிருந்த என் ஐந்து வயது மகன் ரோஷனையும் கண்டேன். என் பிள்ளைகள் பசியோடிருந்தனர், ஆனால் எங்களிடம் உதவி கேட்கவில்லை. எங்களைச் சார்ந்திருப்பதை விடுத்து சுயமாகச் செயல்பட எண்ணினர், அதின் பலனாக உணவு வீணானது. 

மனுஷர் வழக்கத்தில் பிள்ளைகள் நம்மைச் சார்ந்திருப்பதை விடுத்து, தாங்களாக சுயமாய் செயல்படவே எதிர்பார்க்கப்படுகின்றனர். ஆனால் தேவனுடனான உறவிலோ, சுயமாய் செயல்படுவதை விடுத்து அவரை சார்ந்துகொள்வதே வளர்ச்சியாகும். ஜெபத்தில்தான் நாம் அவ்வாறு சார்ந்துகொள்ளப் பழகுகிறோம். "'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்." (மத்தேயு 6:11) என்று ஜெபிக்க இயேசு தமது சீடர்களுக்கும், அவரை விசுவாசிக்கும் நமக்கும் கற்றுக்கொடுக்கையில் சார்ந்துகொள்ளும் ஒரு ஜெபத்தையே கற்றுக்கொடுத்தார். ஆகாரம் என்பது வாழ்வாதாரம், விடுதலை மற்றும் வழிகாட்டுதலுக்கு உருவகமாக உள்ளது (வ.11–13). இவை அனைத்திற்கும் இதைப் பார்க்கிலும் அதிகமானவற்றிற்கும் நாம் தேவனையே சார்ந்துள்ளோம்.

தாமே உருவான இயேசுவின் விசுவாசிகள் என எவருமில்லை, மேலும் நாம் அவருடைய கிருபையை மிஞ்சினவர்களும் இல்லை. நம் வாழ்நாள் முழுவதும், நம் நாளை துவக்குகையில், "பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே" (வ.9) என்று ஜெபித்து நமது சார்புத்தன்மையை வெளிப்படுத்துவோம்.