நம் நம்பிக்கையின் நங்கூரம்
ஒரு மங்கலான சந்தில் அட்டைத் துண்டுகளுக்கு அடியில் மக்கள் தூங்கும் காட்சியை நான் படம்பிடித்தேன். “அவர்களுக்கு என்ன தேவை?” என்று என்னும் ஆறாம் வகுப்பு ஞாயிறுபள்ளியில் கேட்டேன். “உணவு” என்று யாரோ சொன்னார்கள். “பணம்” என்றான் இன்னொருவன். “பாதுகாப்பான இடம்,” என்று ஒரு சிறுவன் யோசித்து பதில் சொன்னான். பின்னர் ஒரு சிறுமி, “நம்பிக்கை” என்று பதில் சொன்னாள்.
“நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்பதே நம்பிக்கை” என்று அவள்; விளக்கம்கொடுத்தாள். சவால்கள் காரணமாக, வாழ்க்கையில் நல்லதை எதிர்பார்ப்பது சாத்தியமேயில்லாதபட்சத்தில், அவள் அவ்வாறு பேசியது எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. ஆயினும்கூட, என் மாணவர்களுடன் ஒத்துப்போகும் விதத்தில் வேதாகமம் நம்பிக்கையைக் குறித்து பேசுகிறது. “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதி” (எபிரெயர் 11:1) என்பது நிஜமானால், நல்லதே நடக்கும் என்று நாம் விசுவாசிப்பது சிறந்தது.
எந்த மேன்மையான நன்மையை கிறிஸ்தவர்களாகிய நாம் நம்பிக்கையோடே எதிர்பார்க்கலாம்? “அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பது” (4:1). விசுவாசிகளைப் பொறுத்தவரை, தேவன் கொடுக்கிற இளைப்பாறுதல் என்பது அவரது சமாதானம், இரட்சிப்பின் நம்பிக்கை, அவருடைய வல்லமையின் மீதான நம்பிக்கை மற்றும் எதிர்கால பரலோக வீட்டின் உறுதி ஆகியவற்றை உள்ளடக்கியது. நம்முடைய தேவைகளின் மத்தியில், ஏன் தேவனுடைய உத்திரவாதமும் இயேசுவின் இரட்சிப்பும் நம்முடைய வாழ்க்கையின் நங்கூரமாய் இருக்கிறது என்பதை விவரிக்கிறது (6:18-20). உலகத்திற்கும் நம்பிக்கை தேவை: சரியான மற்றும் மோசமான தருணங்களில் தேவன் நம்மை கைவிடாமல் பாதுகாப்பார் என்பது உறுதி. நாம் அவரை நம்பும்போது, அவர் தம்முடைய காலத்தில் நமக்காக எல்லாவற்றையும் செய்வார் என்பதை நாம் அறிய முற்படுவோம்.

நான் எம்மாத்திரம்?
கிசோம்போ தனது வாழ்க்கையின் பெரிய கேள்விகளைப் பற்றி யோசித்து, எரிகிற நெருப்பு ஜூவாலையின் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார். நான் என்ன சாதித்தேன்? என்று யோசித்தான். “அதிகமில்லை” என்று பதில் விரைவாக வந்தது. அவன் பிறந்த மண்ணுக்குத் திரும்பினான், மழைக்காடுகளில் தனது தந்தை தொடங்கிய பள்ளியில் பணியாற்றினான். இரண்டு உள்நாட்டுப் போர்களில் இருந்து தப்பிய தனது தந்தையின் சக்திவாய்ந்த கதையையும் எழுத முயன்றான். இதையெல்லாம் செய்ய நான் எம்மாத்திரம்? என்று யோசித்தான்.
கிசோம்போவின் தவறான எண்ணம் மோசேயை நமக்கு நினைப்பூட்டுகிறது. தேவன் மோசேக்கு ஒரு வேலையைக் கொடுக்கிறார்: “நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்” (யாத்திராகமம் 3:10). அதற்கு மோசே, “நான் எம்மாத்திரம?;” (வச. 11) என்கிறான்.
அதற்கு பின்பாக மோசேயிடத்திலிருந்த வந்த பெலவீனமான சாக்குபோக்குகளைத் தொடர்ந்து தேவன் அவனிடத்தில், “உன் கையிலிருக்கிறது என்ன என்றார்” அதற்கு அவன் “ஒரு கோல் என்றான்” (வச. 4). தேவனுடைய பெலத்தினால் மோசே பார்வோனை சந்திக்கக்கூடும். அவனுடைய கையில் தேவன் எகிப்தியர்களின் தெய்வமான பாம்பை கொடுத்தனுப்பினார். ஒரே மெய்யான தேவனுக்கு முன்பாக எகிப்திய விக்கிரகங்களுக்கு வல்லமையில்லை.
கிசோம்போவும் மோசேயைப் போல் யோசித்து, கர்த்தருடைய வார்த்தையை உணர்ந்தான்: நீ என்னையும் என்னுடைய வார்த்தையையும் உடையவனாயிருக்கிறாய்.” அவனுடைய தகப்பனாருடைய வாழ்க்கைக் கதையைக் குறித்து அவன் எழுதினால் தேவனுடைய வல்லமையைக் குறித்து அநேகர் அறிந்துகொள்ளக்கூடும் என்று அவனுடைய நண்பர்களும் அவனை உற்சாகப்படுத்தினர். அவன் தனிமையாய் இல்லை.
நம்முடைய சொந்த முயற்சிகள் போதுமானதல்ல. ஆனால் “நான் உன்னோடே இருப்பேன்” (3:12) என்று நாம் ஆராதிக்கிற தேவன் சொல்லுகிறார்.

தேவனுடைய எதிர்பாராத வழிகள்
போதகர் தன்னுடைய பிரசங்க காகிதத்தை தன் கண்களுக்கு அருகாமையில் கொண்டுவந்து அதைப் பார்த்து படித்தார். அவர் கிட்டப்பார்வை கொண்டவர் என்பதினால், அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் அவர் கவனமாய் படிக்கும்பொருட்டு அவ்வாறு செய்தார். ஆகிலும் ஜோனத்தன் எட்வர்ட்ஸின் பிரசங்கங்கள், எழுப்புதல் தீயை பரவச்செய்து, ஆயிரக்கணக்கானோரை விசுவாசத்திற்குள் கொண்டுவந்தது.
தேவன் அடிக்கடி எதிர்பாராத காரியங்களைக் கொண்டு அவருடைய நேர்த்தியான சித்தத்தை நிறைவேற்றுகிறார். மக்களை தேவனுடைய சிலுவை அன்பிற்கு நேராய் ஈர்க்கும் முயற்சியில் எழுத்துப்பணியை ஏறெடுத்த பவுல் அப்போஸ்தலர், “ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்” (1 கொரிந்தியர் 1:27) என்று எழுதுகிறார். தெய்வீக ஞானமானது தவிர்க்கமுடியாத சக்தியுடன் வரும் என்று உலகம் எதிர்பார்த்தது. மாறாக, நம்முடைய பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்ற இயேசு சாதாரணமாகவும் தாழ்மையின் ரூபத்திலும் வந்தார். அதனால் “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (வச. 30).
நித்தியமான, அனைத்து ஞானமுமுள்ள தேவன் ஒரு மனிதக் குழந்தையாக இவ்வுலகத்தில் அவதரித்தார். அவருடைய வீட்டிற்கு செல்லும் வழியைக் நமக்குக் காண்பிப்பதற்காக, அவர் வளர்ந்து, துன்பப்பட்டு, மரித்து, உயிரோடு எழுத்தளுளினார். நம்முடைய சொந்த பலத்தில் நம்மால் ஒருபோதும் சாதிக்க முடியாத பெரிய காரியங்களைச் செய்வதற்கு அவர் தாழ்மையான வழிகளையும் மக்களையும் பயன்படுத்த விரும்புகிறார். நாம் சித்தமாயிருந்தால், அவர் நம்மையும் பயன்படுத்தக்கூடும்.

சாத்தியமில்லாத பரிசு
என் மாமியாரின் பிறந்தநாளுக்கு சரியான பரிசைக் கண்டுபிடித்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன்: கை வளையலில் அவளுக்கு பிடித்தமான கல் பதிக்கப்பட்டிருந்தது! ஒருவருக்கு சரியான பரிசைக் கண்டுபிடிப்பது எப்போதுமே ஒரு முழுமையான மகிழ்ச்சி. ஆனால் ஒரு மனிதனுக்குத் தேவையான பரிசு நம் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் என்ன செய்வது? நம்மில் பலர் ஒருவருக்கு மன அமைதி, ஓய்வு அல்லது பொறுமையைக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவற்றை விலை கொடுத்து வாங்கி பரிசுக்காகிதத்தில் சுற்றிக்கொடுப்பது சாத்தியமா?
இதுபோன்ற பரிசுகளை ஒருவர் மற்றவருக்கு வாங்கிக்கொடுப்பது சாத்தியமில்லை. ஆனால் மாம்ச ரூபத்தில் வந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்படிப்பட்ட சாத்தியமில்லாத ஒரு பரிசைக் கொடுப்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். அதுவே சமாதானம் என்னும் பரிசாகும். இயேசு பரமேறி செல்லுவதற்கு முன்பு, பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை வாக்குப்பண்ணுகிறார்: இவர் “உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” (யோவான் 14:26) என்றும் சொல்லுகிறார். அவர்களுடைய இருதயம் பயப்படாமலும் கலங்காமலும் இருப்பதற்காக, இயேசு அவர்களுக்கு தன்னுடைய சமாதானத்தை விட்டுச் சென்றார். அவரே தேவனோடும், மற்றவர்களோடும், நமக்குள்ளும் கிரியை செய்யும் சமாதானம்.
நாம் விரும்புகிறவர்களுக்கு பொறுமையையோ அல்லது சரீர ஆரோக்கியத்தையோ நாம் பரிசாகக் கொடுக்க முடியாது. வாழ்க்கையின் போராட்டங்களை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு அவசியப்படும் சமாதானத்தையும் அவர்களுக்கு கொடுக்கும் அதிகாரம் நம்மிடத்தில் இல்லை. ஆனால் நிலையான சமாதானத்தை அருளும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைக் குறித்து அவர்களிடத்தில் நாம் பகிர்ந்துகொள்ள முடியும்.

நம்பிக்கைக்கு இணங்குதல்
ஒரு குளிர்காலக் காலையில் கண்மூடித்தனமான காட்சியை நான் எதிர்கொள்ள நேரிட்டது. ஒரு மேகத்தினாலான சுவர். “உறைந்த மேகம்” என்று வானிலை முன்னறிவிப்பாளர் அதை அழைத்தார். எங்கள் இருப்பிடத்திற்கு அரிதாக, இந்த மேகச் சுவர் இன்னும் பெரிய ஆச்சரியத்தை அளித்தது. நீல வானம் மற்றும் சூரிய ஒளியும் இன்னும் ஒருமணி நேரத்திற்குள் வந்துவிடும் என்று வானிலை அறிக்கை வெளியிடப்பட்டது. “இது சாத்தியமேயில்லை” என்று என் கணவரிடம் சொன்னேன். “எங்களால் ஒரு அடி முன்னால் பார்க்க முடியவில்லை.” ஆனால், ஒரு மணி நேரத்திற்குள், அந்த மேச்சுவர் மறைந்தது. வானம் ஒரு சூரிய ஒளியோடு கூடிய ஒரு தெளிவான நீல நிறமாக மாறியது.
ஒரு ஜன்னலில் நின்று, நான் வாழ்க்கையில் இதுபோன்ற மேகச்சுவரை மட்டுமே பார்க்க முடிகிறதே என்று என் நம்பிக்கையின் அளவை யோசித்தேன். “நான் கண்ணால் காண்கின்றவைகளை வைத்தே தேவனை நம்பிகிறேனா?” என்று என் கணவரிடம் கேட்டேன்.
எசேக்கியா ராஜா மரித்த பின்பு, சில கறைபடிந்த ராஜாக்கள் ஆட்சிக்கு வந்தபோது, ஏசாயாவும் இதே கேள்வியையே கேட்கிறார். யாரை நாம் நம்புவது? தேவன் ஏசாயாவுக்கு தரிசனத்தைக் கொடுத்து, எதிர்காலத்தில் நடக்கப்போகிறவைகளுக்காக தற்போது தேவனை நம்பலாம் என்று அவருடைய மனதை தேற்றுகிறார். ஏசாயா தீர்க்கதரிசி, “உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசாயா 26:3) என்று சொல்லுகிறார். அத்துடன் “கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்” (வச. 4) என்றும் வலியுறுத்துகிறார்.
நம்முடைய சிந்தை தேவனை மாத்திரம் நம்பும்போது, வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படும்போது கூட நம்மால் அவரை விசுவாசிக்கக்கூடும். அதை தற்போது நம்மால் தெளிவாய் பார்க்கமுடியாது. ஆனால் அவரை நாம் விசுவாசிக்கும்போது, நமக்கான உதவி நம்மை நோக்கி வருகிறது என்பதை உறுதியாய் விசுவாசிக்கக்கூடும்.