
ஒரு பாட்டியின் விசுவாசம்
நாங்கள் இரவு உணவு அருந்துகையில், என் ஒன்பது வயது பேரன் புன்னகையுடன், "நான் பாட்டியைப் போலவே இருக்கிறேன். நான் படிக்க விரும்புகிறேன்!” என்றான். அவன் வார்த்தைகள் என் மனதை மகிழ்வித்தது. அவன் உடல்நலம் குன்றி, பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்த முந்தைய வருடத்தை நான் மீண்டும் நினைத்தேன். அவன் நன்றாகத் தூங்கிய பிறகு, நாங்கள் அருகருகே அமர்ந்து ஒன்றாகப் படித்தோம். புத்தகங்களை நேசிக்கும்படி என் அம்மாவிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மரபை நான் அவனுக்குக் கடத்துவதில் மகிழ்ச்சியடைந்தேன்.
ஆனால் என் பேரக்குழந்தைகளுக்கு நான் கடத்த விரும்பும் மிக முக்கியமான மரபு அதுவல்ல. என் பெற்றோரிடமிருந்து நான் பெற்ற விசுவாசத்தின் மரபையே மற்றும் என் பிள்ளைகளுக்குக் கடத்த முயல்கிறேன், அது என் பேரக்குழந்தைகளுக்கும் அவர்களின் விசுவாசத்தை நோக்கிய பயணத்தில் உதவும் என்று நான் ஜெபிக்கிறேன்.
தீமோத்தேயு ஒரு ஆவிக்குரிய தாய் மற்றும் பாட்டியின் மரபைக் கொண்டிருந்தார். மேலும் ஒரு ஆவிக்குரிய வழிகாட்டியான அப்போஸ்தலன் பவுலும் இருந்தார். அப்போஸ்தலன், "அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்" (2 தீமோத்தேயு 1:5) என்றெழுதினார்.
நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்க போதுமானதாக இல்லை என்று நாம் நினைக்கலாம். ஒருவேளை நமக்குக் கடத்தப்பட்ட மரபு தீமையானதாக இருக்கலாம். ஆனால் நம் குழந்தைகள், பேரக்குழந்தைகள் அல்லது எந்தவொரு குழந்தையின் வாழ்க்கையிலும் விசுவாசத்தின் மரபை உருவாக்கக் காலம் கடந்து போகவில்லை. தேவனின் உதவியால், நாம் விசுவாச விதைகளை விதைக்கிறோம். விசுவாசத்தை வளரச் செய்பவர் அவரே (1 கொரிந்தியர் 3:6-9).

அன்பு மரணத்தைப் போல வலியது
நெதர்லாந்தின் ரோர்மாண்டில் உள்ள புராட்டஸ்டன்ட் மற்றும் கத்தோலிக்க கல்லறைகளுக்கு இடையில் நீண்டு கிடக்கும் பழைய செங்கல் சுவரை சுற்றி நீங்கள் உலாவினால், ஒரு வினோதமான காட்சியைக் காண்பீர்கள். ஒவ்வொரு பக்கத்திலும், சுவருக்கு எதிராக ஒரே மாதிரியான இரண்டு உயரமான கல்லறை தலைக்கற்கள் நிற்கின்றன, ஒன்று புராட்டஸ்டன்ட் கணவருக்கும் மற்றொன்று அவரது கத்தோலிக்க மனைவிக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கலாச்சார விதிகளின்படி அவர்கள் தனித்தனி கல்லறைகளில் புதைக்கப்பட வேண்டும். இருப்பினும், அவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்டவிதியை ஏற்கவில்லைபோல; அவர்களின் வழக்கத்திற்கு மாறான தலைக்கற்கள் வேலியிடப்பட்ட தடைக்கு மேலே செல்லும் அளவுக்கு உயரமாக இருப்பதால், மேலே ஒரு அல்லது இரண்டு அடி காற்று இடைவெளி மட்டுமே அவர்களைப் பிரிக்கும். ஒவ்வொன்றின் மேலுள்ள ஒரு கை சிற்பம் மற்றொன்றைத் தொடும், ஒருவருக்கொருவர் கரம் பிடித்துக் கொள்கின்றன. மரணத்திலும் தம்பதிகள் பிரிந்து வாழ மறுத்தனர்.
உன்னதப்பாட்டு அன்பின் வலிமையை விளக்குகிறது. "நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது" (8:6) என்று சாலொமோன் கூறுகிறார். மெய்யான அன்பு ஆற்றல் வாய்ந்தது, மூர்க்கமானது. "அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது" (வ.6). மெய்யான அன்பு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, ஊமையாக்கப்படாது, அழிக்கப்படவும் முடியாது. சாலொமோன் எழுதுகிறார்: “திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது" (வ.7).
"தேவன் அன்பாகவே இருக்கிறார்" (1 யோவான் 4:16). நமது வலிமையான அன்பு, அவர் நம்மீது கொண்ட கொடிதான அன்பின் உடைந்த பிம்பம் மட்டுமே. உண்மையான எந்த அன்பிற்கும், பற்றிப்பிடிக்கும் எந்த அன்பிற்கும் அவர்தான் மெய்யான ஆதாரம்.

தேவனின் பாதுகாக்கும் பிரசன்னம்
எனது உயர்நிலைப் பள்ளி ஆண்டு புகைப்படங்களைப் பார்த்து, எனது பேரக்குழந்தைகள் பழமையாய் போன சிகை அலங்காரங்கள், ஆடைகள் மற்றும் "பழங்கால" வாகனங்களைக் கண்டு வியந்தனர். நானோ வித்தியாசமான ஒன்றைக் கண்டேன்; முதலாவதாக நீண்டகால நண்பர்களின் புன்னகை, சிலர் இன்னமும் நண்பர்களாக உள்ளோம். இருப்பினும், அதை விட, தேவனின் பாதுகாக்கும் வல்லமையை நான் கண்டேன். அந்த பள்ளியிற்கேற்ப என்னை மாற்றிக்கொள்ள நான் சிரமப்படுகையில், அவரது மென்மையான பிரசன்னம் என்னைச் சூழ்ந்திருந்தது. பாதுகாக்கும் அவருடைய நற்குணம் என்னைப் பேணியது, தம்மைத் தேடும் அனைவருக்கும் அவர் இந்த தயவை அருளுகிறார்.
தேவனின் காக்கும் பிரசன்னத்தை தானியேல் அறிந்திருந்தார். பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டுப் போயிருக்கையில், "தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க," (தானியேல் 6:10) அவர் ஜெபித்தார். அவ்வாறு செய்யக்கூடாது என்ற ராஜாவின் ஆணையைப் பொருட்படுத்தவில்லை (வ. 7-9). நன்மை பயக்கும் அவருடைய ஜெப கண்ணோட்டத்தில், தன்னை தாங்கி, தன் ஜெபங்களை கேட்டு, பதிலளிக்கும் தேவனின் பேணிக்காக்கும் பிரசன்னத்தை தானியேல் நினைவில் கொள்வார். இவ்வாறு, தேவன் அவரைக் கேட்டு, பதில் அளித்து, மீண்டும் அவரைத் தாங்குவார்.
இருப்பினும், புதிய சட்டம் இயற்றப்பட்ட போதிலும், தானியேல் தனக்கு நேரிடப்போவதைப் பொருட்படுத்தாமல் தேவனின் பிரசன்னத்தை இன்னும் நாடினார். மேலும் அவர் முன்பு பலமுறை ஜெபித்தது போலவே ஜெபித்தார் (வ. 10). சிங்கங்களின் குகையிலிருந்தபோது, கர்த்தருடைய தூதன் தானியேலைப் பாதுகாத்தார், அவருடைய மெய்யான தேவன் அவரை மீட்டார் (வ. 22).
தற்கால சோதனைகளின் போது நமது கடந்த காலத்தைப் பார்ப்பது, தேவனின் உண்மைத்தன்மையை நினைவுபடுத்த உதவும். தரியு ராஜா கூட தேவனைப் பற்றிக் கூறியது போல், “அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார்” (வ. 27). தேவன் அப்போது நல்லவராகவே இருந்தார், இப்போதும் நல்லவராகவே இருக்கிறார். அவருடைய பிரசன்னம் உங்களைக் காக்கும்.

இயேசுவுக்கென இடம்
பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு குவார்ட்டரில் எனது வார இறுதியை இராணுவ அணிவகுப்பு, அருங்காட்சியகத்தைப் பார்வையிடல் மற்றும் பொறித்த மீன்களைச் சுவைப்பது என்று செலவிட்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் எனது நண்பரின் அறையில் நான் தூங்கியபோது, என் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக ஏங்கினேன். பிற நகரங்களில் பிரசங்கிப்பதற்கான வாய்ப்புகளை நான் மகிழ்ந்து அனுபவிக்கிறேன், ஆனால் வீட்டில் இருப்பதே எனக்கு மிகவும் பிடிக்கும்.
இயேசுவின் வாழ்க்கையில் ஒரு அம்சம் சில சமயங்களில் கவனிக்கப்படாமல் இருக்கும்; அவருடைய மிக முக்கியமான எத்தனையோ நிகழ்வுகள் சாலையில்தான் நிகழ்ந்தன என்பதே. பெத்லகேமில் தேவனுடைய குமாரன் நம் உலகில் பிறந்தார், அவருடைய பரலோக வீட்டிலிருந்து கணக்கிட முடியாத தூரம் மற்றும் அவரது குடும்பத்தின் சொந்த ஊரான நாசரேத்திலிருந்து வெகு தொலைவில் இது உள்ளது. பெத்லகேம் நகரம் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக நிரம்பி வழிய, விரிவாக்கப்பட்ட இக்குடும்பமும் வருகிறது, எனவே ஒரு உதிரி கெடாலிமா (கிரேக்க வார்த்தை) அல்லது "விருந்தினர் அறை" கூட கிடைக்கவில்லை என்று லூக்கா கூறுகிறார் (லூக்கா 2:7).
இயேசுவின் பிறப்பில் இல்லாத ஒன்று, அவருடைய மரணத்திலிருந்தது. இயேசு தம் சீடர்களை எருசலேமுக்கு அழைத்துச் சென்றபோது, பேதுருவையும் யோவானையும் பஸ்கா விருந்துக்குத் தயார் செய்யும்படி கூறினார். அவர்கள் ஒரு குடத்தை எடுத்துச் செல்லும் மனிதனை அவரது வீட்டிற்குப் பின்தொடர்ந்து, கிறிஸ்துவும் அவருடைய சீடர்களும் இறுதி இராபோஜனத்தை புசிக்கக்கூடிய விருந்தினர் அறையான "கெடாலிமா"வை அதன் உரிமையாளரிடம் கேட்க வேண்டும் (22:10-12). அங்கு, இரவல் வாங்கிய இடத்தில், இயேசு இப்போது ஐக்கிய பந்தி என்று அழைக்கப்படுவதை ஏற்படுத்தினார். அவர் கொடூரமாகச் சிலுவையில் அறையப்படுவதை இது முன்னறிவித்தது (வ.17-20).
நாம் வீட்டை நேசிக்கிறோம், ஆனால் நாம் இயேசுவின் ஆவியானவருடன் பயணித்தால், ஒரு விருந்தினர் அறை கூட அவருடன் ஐக்கியம் கொள்ளும் இடமாக மாறும்.
