வகை  |  odb

தேவனை விட்டு ஓடுதல்

ஜூலியும் லிஸும் கலிபோர்னியா கடற்கரையில் சிறிய படகில், கூம்பு திமிங்கிலங்களைத் தேடிச் சென்றனர். இவை மேற்பரப்புக்கு அருகில் சுறுசுறுப்பாகச் செயல்படுவதாக அறியப்படுகின்றன, எனவே அவற்றை அங்கே காண்பது எளிது. அந்த இரண்டு பெண்களின் படகுக்கு அடியிலே நேரடியாக ஒன்று தென்பட்டபோது, அது அவர்கள் வாழ்வில் மறக்கமுடியா ஆச்சரியமாக இருந்து. ஒரு பார்வையாளர் அவர்கள் எதிர்கொண்ட  அந்த காட்சிகளைப் படம்பிடித்தார். அது, திமிங்கிலத்தின் பெரிய வாய் முன்பு, பெண்களையும் அவர்களின் சிறு படகுகளையும் சித்திரக் குள்ளர்களைப் போலத் தோன்றச் செய்ததைக் காட்டுகிறது. சிறிது நேரம் நீருக்கடியில் சென்ற பிறகு, பெண்கள் காயமின்றி தப்பினர்.

தீர்க்கதரிசி யோனாவை "பெரிய மீன்" (யோனா 1:17) விழுங்கியது குறித்த வேதாகம சம்பவம் பற்றிய கண்ணோட்டத்தை அவர்களின் அனுபவம் வழங்குகிறது. நினிவே மக்களுக்குப் பிரசங்கிக்கும்படி தேவன் அவருக்கு கட்டளையிட்டாா், ஆனால் அவர்கள் தேவனை நிராகரித்ததால், அவர்கள் அவருடைய மன்னிப்புக்குத் தகுதியற்றவர்கள் என்று யோனாவுக்கு தோன்றியது. கீழ்ப்படிவதற்குப் பதிலாக, அவர் ஓடிப்போய் வேறுஒரு கப்பலில் ஏறினார். தேவன் ஒரு ஆபத்தான புயலை அனுப்பினார், அதனால் அவர் கடலில் தூக்கி எறியப்பட்டார்.

யோனாவை கொந்தளிக்கும் கடலில் தவிர்க்கமுடியா மரணத்திலிருந்து காப்பாற்றத் தேவன் ஒரு வழியை உண்டாக்கினார், அவருடைய செயல்களின் மிக மோசமான விளைவுகளிலிருந்து அவரைக் காத்தார். யோனா கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்,  மற்றும் தேவன் உத்தரவு அருளினார் (2:2). யோனா தனது தவற்றை ஒப்புக்கொண்டு, தேவனின் நற்குணத்தைப் புகழ்ந்து அங்கீகரித்த பிறகு, தேவனுடைய கட்டளையின்படி, மீனிலிருந்து "கரையிலே" கக்கப்பட்டார் (வ. 10).

தேவனின் கிருபையால், நம்முடைய தவறுகளை ஒப்புக்கொண்டு, இயேசுவின் மரணத்தில் நம் விசுவாசத்தை வைக்கும்போது, ​​நாம் சந்திக்கவேண்டிய ஆவிக்குரிய மரணத்திலிருந்து விடுபட்டு, அவர் மூலம் புதிய வாழ்க்கையை அனுபவிக்கிறோம்.

பசித்தோருக்கு உணவு

பல ஆண்டுகளாக, 'ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்கா' என்ற பகுதி கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வறட்சி பயிர்களை நாசமாக்கியது, கால்நடைகளைக் கொன்றது மற்றும் அது இலட்சக் கணக்கானவர்களைப் பாதிக்கிறது. கென்யாவின் கஹுமா அகதிகள் முகாமில் உள்ள ஜனங்கள் போர்கள் மற்றும் அடக்குமுறைகளிலிருந்து தப்பியவர்களைக் காட்டிலும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள். ஒரு இளம் தாய் தன் குழந்தையை முகாம் அதிகாரிகளிடம் கொண்டு வந்ததை சமீபத்திய அறிக்கை விவரித்தது. குழந்தை கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்பட்டு, “அவளுடைய முடி மற்றும் சருமம், உலர்ந்தும் உடைந்துமிருந்தது", அவள் சிரிக்க மாட்டாள், சாப்பிட மாட்டாள். அவளது சின்னஞ்சிறு உடல் செத்துக்கொண்டிருந்தது. நிபுணர்கள் உடனடியாக செயல்பட்டனர். தேவைகள் இன்னும் பல இருந்தாலும்; அதிர்ஷ்டவசமாக, உடனடி பிறப்பு மற்றும் இறப்பு தேவைகளைச் சந்திக்க ஒரு உள்கட்டமைப்பு கட்டப்பட்டது.

இதுபோன்ற நம்பிக்கையற்ற பகுதிகள்தான் தேவஜனங்கள் அவருடைய ஒளியையும் அன்பையும் பிரகாசிக்க அழைக்கப்பட்ட இடங்களாகும் (ஏசாயா 58:8). ஜனங்கள் பட்டினியால் வாடும்போது, ​​நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது அச்சுறுத்தலுக்கு ஆளாகும்போது, ​​தேவன் தம் ஜனங்களே முதலாவதாக  உணவு, மருந்து மற்றும் பாதுகாப்பு என்று அனைத்தையும் இயேசுவின் நாமத்தால் வழங்கும்படி அழைக்கிறார். பண்டைய இஸ்ரவேர்கள் உபவாசத்திலும் ஜெபத்திலும் உண்மையாக இருப்பதாக எண்ணிக்கொண்டு, "பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும்" (வ.7) போன்ற இரக்கமுள்ள பணிகளைப் புறக்கணித்ததால் ஏசாயா அவர்களைக் கண்டித்தார்.

பசியுள்ளவர்களுக்குச் சரீர மற்றும் ஆவிக்குரிய ரீதியாக உணவளிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அவர் தேவையைப் பூர்த்தி செய்திட  அவர் நமக்குள்ளும், நம் மூலமாகவும் செயல்படுகிறார்.

பரிசுத்த ஆவியானவர் இருக்கிறாா்

விமானப் பணிப்பெண் ஒருவர் உள்நாட்டு விமானத்திற்கான தனது முன்னோட்டச் சோதனைகளை மேற்கொண்டபோது, ​​ஒரு பயணி ஒருவர், பயணத்தைப் பற்றி கவலையுடனும் பயத்துடனும் இருப்பதைக் கண்டார். அவளுக்கு அருகே அமர்ந்து, அவள் கையைப் பிடித்து, விமானச் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்தையும் விளக்கி, அவள் பத்திரமாக இருக்கிறாள் என்று அவளைச் சமாதானப்படுத்தினார். "நீங்கள் ஒரு விமானத்தில் ஏறினால், அதின் காரியம் எங்களைப் பற்றியது அல்ல, அது உங்களைப் பற்றியது. உங்களுக்குச் சௌகரியமாக இல்லை என்றால்,  'என்னவாயிற்று? என்னால் ஏதாவது செய்ய முடியுமா?’ என்று நான் உதவ விரும்புகிறேன்” என்றார்.  இந்த கரிசனையான அக்கறை, தம்மை விசுவாசிக்கிறவர்களுக்காகப் பரிசுத்த ஆவியானவர் என்ன செய்வார் என்று இயேசு சொன்னதைப் பற்றிய ஒரு சித்திரமாக இருக்கலாம்.

கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் ஆகியவை ஜனங்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்கு அவசியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது, ஆனால் அது சீடர்களின் இதயங்களில் உணர்ச்சி பெருக்கத்தையும் ஆழ்ந்த துக்கத்தையும் உருவாக்கும் (யோவான் 14:1). எனவே உலகில் தனது பணியை நிறைவேற்ற அவர்கள் தனித்து விடப்பட மாட்டார்கள் என்று அவர்களுக்கு உறுதியளித்தார். “என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை” (வ. 16), அவர் அவர்களுடன் இருக்கும்படி பரிசுத்த ஆவியானவரை அனுப்புவார். ஆவியானவர் இயேசுவை குறித்து சாட்சி கொடுத்து, கிறிஸ்து செய்த மற்றும் சொன்ன அனைத்தையும் அவர்களுக்கு நினைவூட்டுவார் (வ. 26). கடினமான காலங்களில் அவர்கள் அவரால் "ஆறுதல்" (அப்போஸ்தலர் 9:31) அடைவர்.

இந்த வாழ்க்கையில் அனைவரும் (கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் உட்பட) கவலை, பயம் மற்றும் துக்கத்தின் கொந்தளிப்பை அனுபவிப்பார்கள். ஆனால் அவர் இல்லாத நிலையில், நமக்கு ஆறுதல் அளிக்கப் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்று அவர் வாக்களித்துள்ளார்.

உள்ளிருந்து மறுருபமகுதல்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இங்கிலாந்தில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில், மேற்கு லண்டனில் உள்ள இருபத்தி நான்கு மாடி கிரென்ஃபெல் டவர் கட்டிடத்தில் தீ பரவி எழுபது பேரின் உயிர்களைப் பலியாக்கியது. கட்டிடத்தின் புதுப்பித்தலின் பகுதியாக, வெளிப்புறத்தை மூட பயன்படுத்தப்பட்ட உறைப்பூச்சுதான் தீப்பிழம்புகள் மிக விரைவாகப் பரவுவதற்கான முதன்மைக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது. இந்த பொருள் வெளியில்தான் அலுமினியம், ஆனால் பற்றக்கூடிய நெகிழி அதின் நடுவில் கொண்டிருந்தது.

அத்தகைய ஆபத்தான பொருள் எவ்வாறு விற்கப்பட்டது, நிறுவப்பட்டது? இந்த தயாரிப்பு விற்பனையாளர்கள், இது தீ பாதுகாப்பு சோதனையில் தோல்வியடைந்ததை வெளியிடத் தவறினர். மேலும் வாங்குபவர்கள், பொருளின் மலிவான விலைக் குறியீட்டால், எச்சரிக்கை அறிகுறிகளைக் கவனிக்கத் தவறிவிட்டனர். பளபளப்பான உறை வெளிப்புறத்தில் நன்றாகத் தோற்றமளித்தது.

இயேசுவின் சில கடுமையான வார்த்தைகள் மத போதகர்களை நோக்கியே  வந்தது, அவர்கள் அழகாகத் தோன்றும் வெளிப்புறத்தில் அநீதியை மறைப்பதாகக் குற்றம் சாட்டினார். அவை " வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்", " புறம்பே அலங்காரமாய்" தோன்றும், ஆனால் உள்ளே மரித்தவர்களின் எலும்புகளினால் நிறைந்திருக்கும்  (மத்தேயு 23:27) என்றார். "நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும்" (வ. 23) பின்பற்றுவதற்குப் பதிலாக, அவர்கள் அலங்காரமாய்க் காணப்படுவதற்குக் கவனம் செலுத்தினர். "போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தை" சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தினர், ஆனால் உள்ளேயிருந்த "கொள்ளை, அநீதி" ஆகியவற்றை விட்டுவிட்டனர் (வ. 25).

நம்முடைய பாவத்தையும்,உள்ள முறிவையும் தேவனுக்கு முன்பாக நேர்மையாகக் கொண்டுவருவதை விட "அலங்காரமாய் தோன்றுவதில்” கவனம் செலுத்துவது எளிது. ஆனால் அழகாகத் தோற்றமளிக்கும் வெளிப்புறமானது, அநீதத்தின் இதயம் உண்டாக்கும் ஆபத்தை மாற்றாது. நம் அனைவரையும் உள்ளிருந்து மாற்றும்படி விட்டுக்கொடுக்க, தேவன் நம்மை அழைக்கிறார் (1 யோவான் 1:9).

கிளையாகிய இயேசு

சிவப்பாய் காட்சியளித்த மலைகளுக்கு மத்தியில் உயர்ந்து நிற்கிறது அழகிய ஹோலி கிராஸ் சிற்றாலயம். அதற்குள் நுழைந்தவுடன், சிலுவையில் இயேசுவின் வித்தியாசமான சிற்பம் உடனடியாக ஈர்த்தது. ஒரு பாரம்பரிய சிலுவைக்குப் பதிலாக, இயேசு ஒரு மரத்தின் கிளைகளில் இரண்டு தண்டுகளில் சிலுவையில் அறையப்பட்டதாகக் காட்டப்பட்டிருந்தது. கிடைமட்டமாகத்  துண்டிக்கப்பட்ட, காய்ந்த தண்டு, தேவனை நிராகரித்த பழைய ஏற்பாட்டின் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குறிக்கிறது. மற்ற தண்டு மேல்நோக்கி வளர்ந்து கிளைகள்; யூதாவின் செழிப்பான கோத்திரத்தையும், தாவீது ராஜாவின் குடும்ப வம்சத்தையும் குறிக்கிறது.

குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கலை, இயேசுவைப் பற்றிய பழைய ஏற்பாட்டின் ஒரு முக்கியமான தீர்க்கதரிசனத்தைச் சுட்டிக்காட்டுகிறது. யூதாவின் கோத்திரம் சிறையிருப்பில் வாழ்ந்தாலும், எரேமியா தீர்க்கதரிசி தேவனிடமிருந்து ஒரு நம்பிக்கையூட்டும் செய்தியைக் கொடுத்தார்: "நான்.. சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்" (எரேமியா 33:14) "அவர் பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்” (வ. 15) என்று மீட்பரை குறித்தது. அவரை ஜனங்கள் அடையாளம் காண்பதற்கான ஓர் வழி, "தாவீதுக்கு நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன்" (வ. 15) என்பதே. அதாவது, மீட்பர் தாவீது ராஜாவின் வழித்தோன்றலாக இருப்பார்.

இயேசுவின் வம்சாவளியின் விவரங்களில், தேவன் வாக்களித்த அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு உண்மையுள்ளவராக இருந்தார் என்ற முக்கியமான உண்மையை இச்சிற்பம் திறமையாக வெளிக்காட்டுகிறது. அதிலும், கடந்த காலத்தில் அவருடைய உண்மைத்தன்மையானது  எதிர்காலத்தில் நமக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர் உண்மையுள்ளவராக இருப்பார் என்ற உறுதியளிக்கிறது என்பதற்கான நினைவூட்டல்.