எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சோச்சில் டிக்ஸன்கட்டுரைகள்

நித்திய நம்பிக்கை

என் தாயார் இறந்து இரண்டு மாதங்களாகியிருந்தது. கிறிஸ்துமஸூக்கு இன்னும் ஒரு வாரமேயிருந்த நிலையில், வீட்டை அலங்கரிப்பது, கடைக்குச் செல்வது, எனது முன்னுரிமை பட்டியலில் கடைசியாயிருந்தது. எங்கள் குடும்பத்தின் விசுவாசத்தாயின் மரணத்தை இன்றும் நினைத்துக் துக்கத்தில் இருந்தபடியால் என்னை ஆறுதல்படுத்த என் கணவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. நான் ஒதுங்கியே இருந்தேன். என் மகன் சேவியர் சீரியல் பல்புகளை வீட்டினுள் தொங்கவிட்டு பிளக்கை சொருகி எரியச் செய்து விட்டு அவனும், அவன் தந்தையும் வேலைக்குப் போய்விட்டார்கள்

அந்த கலர் பல்புகள் விட்டுவிட்டு எரியும்போது, தேவன் என்னை என் இருளிலிருந்து வெளியே கொண்டுவந்தார். தேவனுடைய வெளிச்சம் எனக்குள் வந்தபோது, எவ்வளவு வேதனையான சூழ்நிலையிலிருந்தாலும், அவருடைய மாறாத சத்தியத்தின் வெளிச்சம் அவருடைய மாறாத தன்மையை அப்பொழுதும் அது வெளிப்படுத்திக் காட்டியது.

இக்கட்டான காலையில் தேவன் எனக்கு நினைப்புட்டினதை, 146ம் சங்கீதம் உறுதிப்படுத்தியது. எனக்கு உதவி செய்பவரும், என் வல்லமையும் இரக்கமுள்ள “தேவன் மேலேயே, என் நம்பிக்கை நித்தியகாலமாய் இருக்கும்” (வச. 5). எல்லாவற்றையும் சிருஷ்டித்த அவரே “என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்” (வச. 6). “அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயம் செய்கிறார்”, நம்மைப் போஷித்துப் பாதுகாக்கிறார் (வச. 7). “மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்” (வச. 8), “கர்த்தர் காப்பாற்றுகிறார்”, “ஆதரிக்கிறார்” “சதா காலங்களிலும் அரசாளுகிறார்; தலைமுறை தலைமுறையாகவும் ராஜரீகம் பண்ணுகிறார் (வச. 9,10).

கிறிஸ்துமஸ் வரும்பொழுது, சிலவேளைகளில், சந்தோஷம் பொங்கி வழியும், சில வேளைகளில் இழப்பைச் சந்திக்கிறோம், வேதனைப்படுகிறோம் அல்லது தனிமை உணர்வினால் வருந்துகிறோம். ஆனால், எல்லா நேரங்களிலும் அவர் நமது இருளில் வெளிச்சமாயிருந்து, தேவையான உதவிகளைச்செய்து நித்திய நம்பிக்கையாயிருப்பேன் என்று வாக்குப் பண்ணியிருக்கிறார்.

எது நடந்தாலும் தேவனை நம்புவேன்

1992ல் ஏற்பட்ட ஒரு காயத்தினால் எனது மேல் முதுகு தோல்பட்டைகள் மற்றும் கழுத்து பகுதிகளில் அதிக வலியினால் அவதியுற்றேன். அத்தகைய வேதனையில் நம்பிக்கையிழந்த வேளைகளில் தேவனை நம்பிக்கையோடு துதித்தல் என்பது எப்பொழுதும் சுலபமானதல்ல. ஆனால், தேவனுடைய மாறாத பிரசன்னம் என்னைத் தேற்றியது. அவர் என்னை பெலப்படுத்தி அவருடைய மாறாத நன்மையினாலும், அளவற்ற வல்லமையினாலும் தாங்கி நடத்தும் கிருபையினாலும் ஆறுதல்படுத்தினார். சிலவேளை நான் கடவுளை சந்தேகிக்கும் போது, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் திட நம்பிக்கையினால் தைரியப்படுத்தப்பட்டேன். அவர்கள் நம்புவதற்கு ஏதுவில்லாத சூழ்நிலையிலும் தேவனைப் பணிந்து கொண்டு தேவன் அவர்களோடிருக்கிறார் என்று நம்பினார்கள்.

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச் சூளையின் நடுவில் போடப்படுவீர்கள் என எச்சரித்திருந்தும் அவர்கள் உண்மை தேவனைவிட்டு விட்டு பொற்சிலையை வணங்கவில்லை (தானி. 3:13-15). இந்த மூன்று மனிதரும் தைரியத்தையும் திட நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்கள் (வச. 17). அந்த ஆபத்தான வேளையிலும் தேவன் தங்களை விடுவியாமல் போனாலும்; அவர் ஆராதிக்க உகந்தவரல்ல என்று ஒருபோதும் சந்தேகப்படவில்லை (வச. 18). திட நம்பிக்கையிலிருந்த அவர்களின் தேவையின் போது, தேவன் அவர்களை தனியே விடவில்லை. தேவன் அக்கினிச்சூளையின் நடுவே அவர்களோடிருந்து அவர்களைப் பாதுகாத்தார் (வச. 24-25).

தேவன் நம்மையும் தனியே விடுவதில்லை. நேபுகாத்நேச்சாரின் அக்கினிச்சூளைபோன்ற சோதனைகளின் மத்தியிலும் நம்மோடிருக்கிறார். நித்தியத்தின் மறுபக்கத்தில் (இவ்வுலகில்) ஒரு வேளை நம் வேதனைகள் முடிவில்லாதவைகளாயிருப்பினும், வல்லவரும், நம்பிக்கைக்குரியவரும், நல்லவருமாக தேவன் இருக்கிறார். நாம் அவரின் மாறாத அன்பின் பிரசன்னத்தைச் சார்ந்து கொள்ளுவோமாக.

அற்புத படைப்புகளைப் பார்த்தல்

வில் வித்தைகாரர்கள் தங்கள் அம்புகளை எடுத்துச் செல்வதற்கான அம்பாரத்துனிகளை (அம்புகளை வைக்கும் தோல்பை) என் தந்தை வடிவமைப்பார்கள். சிறந்த தோல் துண்டுகளில் வனவிலங்குகளின் விரிவான வாழ்க்கைச் சித்திரங்களை நேர்த்தியாகச் செதுக்கி, அவற்றை ஒன்றாக இணைத்துத் தைப்பார்கள். ஒருமுறை நான் அங்கு சென்றபோது அவர் கலைப்படைப்பொன்றை செதுக்குவதைப் பார்த்தேன். தன் கைகளினால், கவனமாக கூர்மையான கத்தியைக்கொண்டு, மென்மையான அந்தத்தோலிலே, தேவையான அழுத்தம் கொடுத்து வெவ்வேறு தன்மையில் அழகிய டிசைன்கள் செதுக்குவதைப் பார்த்தேன். அதன்பின் ஒரு துண்டுத் துணியை, சிவப்பு நிறத் சாயமோன்றில் முக்கி எடுத்து அந்தத் தோலின் மேல் பல தடவைகள் ஒரே சீராகப் பூசினார். அது அவருடைய படைப்பின் அழகிற்கு மேலும் அழகு சேர்த்தது.

நான் என் தகப்பனின் திறமைமிக்க கலைநயத்தை வியந்துகொண்டிருக்கையில், என்னிடத்திலும் மற்றவர்களிடத்திலும், என் பரம தகப்பனின் வியத்தகு படைப்பின் கலைத்திறனை இதுவரை பாராட்டாமல் இருந்ததை உணர்ந்தேன். “தேவரீர் என் உள்ளந்திரியங்களையும் உருவாக்குகிறீர். நான் பிரமிக்கத் தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்” என்று தாவீது தேவனின் மகத்துவமான சிருஷ்டிப்பின் கைவண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தேன் (சங். 139:13,14).

நாம் நமது சிருஷ்டிகரை மனஉறுதியுடன் துதிக்கலாம், ஏனென்றால் “அவருடைய கிரியைகள் அதிசயமானவைகள்” நாம் நம்மையும் மற்றவர்களையும் மேன்மையாகக் கருதலாம்; ஏனென்றால் சர்வலோக சிருஷ்டிகர், நம்மை உள்ளும் புறமும் அறிந்திருப்பதோடு நாம் உருவாகும் முன்னரே நமது வாழ்நாளைத் திட்டம்பண்ணி உள்ளார் (வச. 15-16).

என் தகப்பனாரின் திறமைமிக்க காலங்களில் உருவான தனித்தன்மை வாய்ந்த தோல்களைப் போலவே நாமும் விலையுயர்ந்த அழகான படைப்புகள். ஏனென்றால் நம்மைப்போல் இன்னொருவன் கிடையாது! நாம் தேவனின் அற்புதப் படைப்புகளாயிருக்கும்படி, நம் ஒவ்வொருவரையும் தனித்தன்மை உடையவர்களாக உருவாக்கப்பட்டுள்ளோம். இது தேவனுடைய மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

மொத்தத்திற்கும் நம்புங்கள்

நானும் என் கணவனும், எங்களது வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கு முன்பு, விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால், தேவனுடைய அன்பிற்கு எங்களை ஒப்புக் கொடுத்து அவருக்கு கீழ்ப்படிந்த பின்பு, நாங்கள் மறுபடியும் ஒருவருக்கொருவர் எங்களை ஒப்புக் கொடுத்தோம். நாங்கள் சிறந்த ஆலோசர்களிடம் ஆலோசனை கேட்டதோடு, பரிசுத்த ஆவியானவர், எங்களைத் தனித்தனியாகவும், கணவன், மனைவியாகவும் சந்தித்து எங்களை மாற்றியமைக்க ஜெபித்தோம். எங்களது பரமபிதா தொடர்ந்து ஒருவரை ஒருவர் சிறந்த முறையில் தொடர்புகொள்ள உதவி செய்கிறார். தேவாதிதேவனை எப்படி நேசிப்பது எப்படி நம்புவது என்று கற்றுத்தருவதோடு என்ன நேரிட்டாலும் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் கற்றுத் தருகிறார்.

ஆயினும், நாங்கள் எங்களது 25வது வருட திருமண நாளைக் கொண்டாட இருக்கும் வேளையில், எங்களது சோதனைகளில், தேவன் செய்த அனைத்துக் காரியங்களையும். அவ்வப்பொழுது மறந்து விடுகிறேன். சில சமயங்களில் என் உள்ளத்தில் ஆழத்தில் உள்ள நான் அறியாத ஏதோ ஒரு பயம் என்னை ஆட்கொள்கிறது. அதனால், தேவனால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வழிகளை சார்ந்திருக்காமல், தேவையற்ற கவலைகளை அடைகிறேன்.

உபாகமம் 1ம் அதிகாரத்தில், தேவனை எக்காலத்திலும் உறுதிபட நம்பலாம் என்று மோசே உறுதியாகக் கூறியுள்ளார். இஸ்ரவேல் மக்கள் அவர்களது சுதந்திரமான தேசத்தை பெற்று மகிழ்ச்சியடைய முன்னேறிச் செல்லும்படி மோசே அவர்களை ஊக்கப்படுத்தினான் (வச. 21) ஆனால், தேவனுடைய ஜனங்கள் அவர்களது எதிர்காலத்தை அவரிடம் ஒப்புக் கொடுக்கும் முன்பு, அவர்கள் எதைப் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பதைப் அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள் (வச. 22-33).

கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்கு பயமும், கவலையும் அடைவதிலிருந்து விதிவிலக்குக் கிடையாது. நாம் சந்திக்க இருக்கும் அல்லது சந்திக்காத கஷ்டங்களைக் குறித்து கவலைப்படுவது, நம்மை விசுவாசத்தை சார்ந்திருப்பதிலிருந்து நம்மை விலக்கி, நமக்கும் தேவனுக்கும், பிறருக்கும் உள்ள உறவை பாதிக்கும். ஆனால், தேவன் கடந்த காலத்தில் நம்முடைய வாழ்க்கையில் உண்மையுள்ளவராக இருந்த உறுதிப்பாட்டை நம்புவதற்கு பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவிசெய்வார். நேற்றும், இன்றும் நாளையும் தேவனுடைய உண்மையான தன்மையின் மேல் நாம் தைரியத்துடனும்  நம்பிக்கையுடனும் சார்ந்திருக்க ஆவியானவர் நமக்கு உதவி செய்வார்.

நாம் வல்லமையைப் பெற்றுள்ளோம்

ஏதோ ஒரு பொருள் நொருங்குகிற பலமான சத்தத்தைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அந்த சத்தம் எதிலிருந்து வருகிறது என்று அறிந்து வேகமாக சமையலறைக்கு ஓடினேன். காலியாக இருந்த காப்பி போடும் கருவியின் சுவிட்ச்சை தெரியாமல் போட்டு வந்திருக்கிறேன். வேகமாக ஓடிப்போய் அக்கருவியை மின் இணைப்பிலிருந்து நீக்கிவிட்டு அதன் கைப்பிடியை பிடித்து துக்கினேன். அப்பாத்திரத்தை கீழேயுள்ள டைல் கற்களின் மீது வைக்க இயலுமா என்று பார்க்க அதின் அடிப்பாகத்தை என் விரல் நுனியினால் தொட்டேன் அதன் சூடான அடிப் பக்கம் என் விரல்களின் நுனியை சுட்டு எனது மெல்லிய தோலில் கொப்பளங்கள் ஏற்பட்டது.

எனது கணவர் எனது காயங்களுக்கு மருந்து போட்ட பொழுது என் தலையை அசைத்தேன். “அந்தப் பாத்திரத்தின் அடிப்பக்கம் சூடாக இருக்கும் என்பதை அறிந்திருந்தேன். ஆனால், ஏன் அதைத் தொட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறினேன்.

அந்த தவற்றை நான் செய்ததின் விளைவைவிட அதிகமான பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பாவத்தைக் குறித்து நமது எதிர்வினை என்ன என்பது பற்றி, பவுல் வேதாகமத்தில் தெளிவாகக் குறிப்பிட்டது எனக்கு ஞாபகம் வந்தது.

“நான் செய்கிறது எனக்கே சம்மதி இல்லை. நான் விரும்புகிறதைச் செய்யாமல் நான் வெறுப்பதையே செய்கிறேன்” (ரோம. 7:15) என்று பவுல் தனது அவல நிலையை ஒப்புக் கொள்ளுகிறார். வேத வசனங்கள் எது சரி, எது தவறு என்று தெளிவாக தீர்மானிக்கிறது என்றும் (வச. 7) பாவத்திற்கு எதிராக மாம்சத்திற்கும், ஆவிக்கும் இடையே இடைவிடாத போராட்டம் தொடர்ந்து நடக்கிறதென்றும், பவுல் திட்டமாக கூறுகிறார் (வச. 15-23) அவர் அவருடைய பெலவீனத்தை அறிக்கை இட்டு தேவனுடைய உதவியினால், இப்பொழுதும், எப்பொழுதும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறார் (வச. 24-25).

நாம் நமது வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கும் பொழுது, அவர் அவருடைய பரிசுத்தாவியை நமக்கு அருளி, நன்மையான காரியங்களை தேர்ந்தெடுக்கக்கூடிய வல்லமையை நமக்குத் தருகிறார் (8:8-10). தேவனுடைய வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படியத்தக்கதாக நம்மை பெலப்படுத்தி அவர் வழி நடத்துகிறார். இதனால் தேவனை நேசிப்பவர்களுக்கு அவர் அருளும் பரிபூரண வாழ்க்கையை பெற்றுக்கொள்ள தடையாக உள்ள நமது பாவங்களிலிருந்து, அவர் நம்மை மீட்டுவிடுகிறார்.

இனிப்பும், புளிப்பும்

என் சிறு குழந்தை முதலாவது ஒரு எலுமிச்சைப் பழத்தின் துண்டினை கடிக்கும் போது அவன் மூக்கைக் சுழித்துக் கொண்டு நாக்கை nவிளே தள்ளி, கண்களை இறுக மூடிக் கொண்டு புளிக்குது என்றான்.

நான் இந்த பழத்தின் துண்டினைப் மனதிற்குள் சிரித்துக் கொண்டே குப்பையில் எறிந்து விட எண்ணி அதை எடுக்கப் போனேன். “வேண்டாம்” என சேவியர் வேகமாக சமையலறையிலிருந்து என்னை விட்டுச் சென்று வேண்டும் என்று சொல்லி அந்த புளிக்கும் சுவைத்தான். புளிப்பு அவனுக்குப் பிடித்தது. கடைசியில் பழத்தின் தோல் என்னிடம் கொடுத்துவிட்டு வெளியே போனான். ஏன் வாழ்வின் இனிமையான நொடிகளில் என் சுவை நரம்புகள் பராபட்சத்துடன் செயல்படுகின்றன. என் வாழ்வில் சுவையற்ற நொடிகளை நான் தவிர்ப்பது, கசப்பான சோதனைகளில் வெறுப்பை பகிர்ந்து கொண்ட யோபுவின் மனைவியை நினைவுபடுத்துகிறது.

யோபு கடினமான சுழல்களிலும் கஷ்டங்களிலும் நிச்சயமாக மகிழ்ந்திருக்கவில்லை. ஆனாலும், இருதயத்தைப் பிழிகின்ற சூழல்களிலும் தேவனை மகிமைப்படுத்த முடிந்தது (யோபு 1:1-22). வேதனை மிகுந்த பருக்களால் வாதிக்கப்பட்டபோது, யோபு அந்த வேதனையைச் சகித்தான் (2:7-8) அவனுடைய மனைவி தேவனை விட்டு விடும்படி சொன்ன போதும் (வச. 9) யோவு துன்பங்களிலும், அவமானங்களிலும் தேவன் மீது நம்பிக்கையாயிருந்தான் (வச. 10).

வாழ்வில் புளிப்பான சந்தர்பங்களைத் தவிர்த்துவிட எண்ணுவது இயல்புதான். நாம் காயப்படும் போது தேவனைக் குற்றப்படுத்த தூண்டப்படுகிறோம். ஆனால், தேவன் நம் சோதனைகளில் மூலம் அவர் பேரில் நம்பிக்கையாயிருக்கவும் அவரைச் சார்ந்து வாழவும் அவரிடம் யாவற்றையும் அர்ப்பணிக்கவும், துன்பங்கள் வழியே பாதுகாக்க வல்லவராயிருக்கிறார் என்பதையும் நமக்குக் கற்றுக் தருகிறார். யோபுவைப் போன்று கசப்பான சோதனை வேலைகளை இனிமையான அனுபவமாக எடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும், தேவன் மீதுள்ள நம்பிக்கையை அவை உறுதிப்படுத்த உதவுகின்றன என எடுத்துக் கொள்வோம்.

நமக்கு ஒரு ராஜா இருக்கிறார்

ஒரு காரியம் எனக்குச் சாதகமாக போகாத போது நான் காயப்படுத்தும் வார்த்தைகளால் என் கணவனைத் தாக்கினேன். வேத வார்த்தைகள் மூலம் என் பாவமான அணுகுமுறையை என் கணவன் சுட்டிக் காட்டிய போது, பரிசுத்த ஆவியானவரின் அதிகாரத்தை நிராகரித்தேன். என்னை ஒட்டிக்கொண்ட இந்த பெருமையை நான் விடமுடியாமல் வைத்திருப்பது, தேவனுக்கு கீழ்படியாமல் இருப்பதற்கும், அல்லது என் திருமணத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதற்கும் உகந்ததா? இல்லவே இல்லை. அனால், நான் தேவனிடமும் என் கணவனிடமும் மன்னிப்பு கேட்பதற்கு முன்பாக நிறைய காயங்களை ஏற்படுத்தி விட்டேன். புத்தியுள்ள அலோசனைகளைத் தள்ளி, என்வாழ்வில், என்னைத் தவிர நான் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என வாழ்ந்ததின் விளைவு இது.

ஒரு காலத்தில் இஸ்ரவேலர் எதையும் எதிர்க்கின்ற அணுகுமுறையை கையாண்டனர். மோசே மரித்தபின் யோசுவா இஸ்ரவேலரை வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு வழி நடத்தினான். அவனுடைய தலைமைத்துவத்தில் இஸ்ரவேலர் தேவனைச் சேவித்தார்கள் (நியா. 2:7). ஆனால், யோசுவாவும் அவன் சந்ததியாரும் மரித்தபின், இஸ்ரவேலர் தேவனையும் அவர் அவர்களுக்குச் செய்த யாவற்றையும் மறந்தனர் (வச. 10). அவர்கள் தேவனைச் சார்ந்து நின்ற தலைவர்களைத் தள்ளி, பாவத்தை தழுவிக் கொண்டனர் (வச. 11-15).

பின்னர் தேவன் ராஜாக்களைப் போல செயல்படும் நியாயாதிபதிகளை எழுப்பினார் (வச. 16-18). அப்பொழுது நிலைமை சற்று முன்னேறியது. ஆனால், ஒவ்வொரு நியாயாதிபதியும் மரித்தபோது, இஸ்ரவேலர் அந்நிய தேவர்களைப் பின்பற்றினார்கள். தாங்கள் யாருக்கும் பதில் சொல்ல அவசியமில்hதவர்கள் என வாழ்ந்தபோது அழிவைத் தேடிக் கொண்டார்கள் (வச. 19-22). இப்படிப்பட்ட நிலைமைக்குள் நாம் வரலாகாது, நாம் நம்மை தேவனுடைய ஆளுகைக்கும், அதிகாரத்திற்கும் நித்திய அரசாட்சிக்கும் ஒப்புக் கொடுத்து இயேசுவைப் பின்பற்றி வாழுவோம். ஏனெனில், அவரே எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கிற நியாயதிபதி ராஜாதி ராஜா

விலையேறப் பெற்ற ஆராதனை

எனது உடல் நலக் குறைவினால் நான் நடக்க முடியாமல் தடைபட்டபோது, நான் எனது எழுத்தின் மூலம் தேவனை ஆராதிக்கவும், அவருக்குப் பணிசெய்யவும் முற்பட்டேன். ஆனால், எனக்கு அறிமுகமான ஒருவர் எனது எழுத்துக்களில் ஒரு பலனையும் தான் காணவில்லை என்று கூறியபோது நான் மிகவும் மனச் சோர்வுற்றேன். நான் தேவனுக்குக் கொடுக்கும் ஒரு சிறிய காணிக்கையின் முக்கியத்துவத்தை நான் உணராதிருந்தேன்.

நாம்  தேவனை ஆராதிப்பதின் நோக்கத்தையும் நாம் அவருக்குக் கொடுக்கும் நம் ஊழியத்தின் மதிப்பையும் அவரே நீர்ணயிக்க முடியும் என்பதனை, ஜெபத்தின் மூலமாயும், வேத வார்த்தைகளைக் கற்றுக் கொண்டதன் மூலமாயும் என் கணவன், உறவினர்கள், நண்பர்களின்  ஊக்கத்தாலும், உறுதியாகத் தெரிந்து கொண்டேன். மற்ற மக்களின் கருத்துகள் இதனைத் தீர்மானிக்க முடியாது. எனக்குத் திறமைகளைத் தந்த என் தேவனிடம் தொடர்ந்து என் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவுமாறும், அவர் தருகின்ற வரங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள நல்ல வாய்ப்புகளையும் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டேன்.

இயேசுவுக்குக் கொடுப்பதில் நாம் வைத்துள்ள தரத்திற்கு அவர் முற்றிலும் மாறுபட்டவர் (மாற். 14:41-44). ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியினுள் ஐசுரியவான்கள் அதிகமாகப் போட்டார்கள். ஒரு ஏழை விதவை சில காசுகளைப் போட்டாள். “அதன் மதிப்;பு மிகக்குறைவு” (வச. 42). அவளுடைய பங்களிப்பு சுற்றியிருந்தவர்களுக்கு முக்கியமற்றதாக இருந்த போதும் (வச. 44), காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரையும் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய் போட்டாள் என தேவன் வெளிப்படுத்துகின்றார் (வச. 43).

ஒருவேளை இந்த விதவையின் கதையில் பொருளாதார கொடையைக் குறித்துக் சொல்லியிருந்தாலும் நாம் அவருக்குக் கொடுக்கும் ஒவ்வொரு செயலும் அவரை ஆராதிக்கும் ஒரு வெளிப்பாட்டையும், அன்பின் கீழ்படிதலையும் குறிக்கும். அவர் நமக்கு ஏற்கனவே தந்து விட்டிருக்கிற தாலந்துகளை மனப்பூர்வமாக, தாராளமனதுடன், தியாகத்தோடு அவருக்குக் கொடுப்பதே அந்த விதவையைப் போன்று நாமும் தேவனை கனப்படுத்துவதாகும். நமது சிறந்த நேரத்தை, தாலந்துகளை அல்லது காணிக்கையை இருதயத்தின் அன்பினால் தேவனுக்குக் கொடுக்கும் போது விலையேறப் பெற்ற காணிக்கைகளால் நாம் அவரைப் போற்றுகின்றோம்.

நிரம்பி வழியும் கனி!

இளவேனிற்காலம் மற்றும் கோடையில் எங்களது அண்டைவீட்டுக்காரரின் பின்புறத் தோட்டத்தில் பழங்கள் வளர்வதை நான் ஆர்வத்தோடு பாப்பதுண்டு. அங்கு பயிரிடப்பட்ட திராட்சையின் கொடிகள் எங்களிருவரது வீடுகளுக்கிடையிலான பொது வேலியில் படர்ந்து, திராட்சக்குலைகள் அதில் தொங்கும். நாங்கள் பறிக்கின்ற உயரத்தில், பெரிய செழுமையான பிளம் பழங்களும், ஆரஞ்சுகளும் கிளைகளில் கொத்தாக தொங்கும்.

நாங்கள் நிலத்தைக் கொத்தி, விதைத்து, களை எடுத்து தண்ணீர் பாய்ச்சாவிட்டாலும் எங்களது அண்டை வீட்டுக்காரர் விளைச்சலில் ஒரு பங்கை எங்கலோடு பகிர்ந்து கொள்ளுகின்றார். பயிரை வளர்க்கும் பொறுப்பை அவர்கள் எடுத்துக் கொண்டு அறுவடையில் ஒரு பாகத்தில் நாங்கள் களிக்க எங்களை அனுமதிக்கின்றனர்.

எங்களது வேலிக்கு அந்தப் புறத்திலுள்ள மரங்கள் மற்றும் செடிகளின் விளைச்சலானது, தேவன் என் வாழ்க்கையில் வைக்கும் இன்னொரு அறுவடையை நினைவுபடுத்துகிறது. அது எனக்கும் என் வாழ்க்கையில் தேவன் கொண்டுவரும் மக்களுக்கும் பயனளிக்கிறது. அது ஆவியின் கனி மற்றும் அறுவடை!

பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் வாழ்கின்ற வாழ்வில் பயன்களை சுதந்தரிக்கும்படி கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். நமது இதயங்களில் தேவனுடைய உண்மையின் விதைகள் செழிப்பாக வளருகையில், அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம் இச்சையடக்கம் போன்றவற்றை வெளிப்படுவதில் நமது திராணியைப் பெருக்கும் ஆற்றலை ஆவியானவர் உருவாக்குகிறார் (கலா. 5:22-23).

நமது வாழ்வை இயேசுவானவருக்கு அர்ப்பணிக்கும்போது, இனி ஒருபோதும் நமது சுயம் சார்ந்த மாம்ச இச்சைகளால் நாம் கட்டுப்படுத்தப்படுவதில்லை (வச. 24). காலப்போக்கில் பரிசுத்த ஆவியானவர் நமது சிந்தனையையும், நமது நடவடிக்கைகளையும் நமது செயல்களையும் மாற்றுவார். கிறிஸ்துவில் நாம் வளர்ந்து முதிர்ச்சியடையும்போது, அவரது தாராளமான விளைச்சலின் பலனை நமது அண்டை அயலகத்தாரோடு பகிர்ந்துகொள்ளும் சந்தோஷத்தை நாம் பெற்றுக்கொள்ளுவோம்.