எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சோச்சில் டிக்ஸன்கட்டுரைகள்

ஊதா சால்வை

எனது வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் உள்ள ஒரு புற்றுநோய் மையத்தில் எனது அம்மாவின் நேரடி பராமரிப்பாளராக சேவை செய்யும்போது ​எங்களுக்காக ஜெபிக்கும்படி மக்களிடம் கேட்டேன். மாதங்கள் செல்லச் செல்ல தனிமைப்படுத்தல் மற்றும் தனிமை உணர்வு என் வலிமையைக் குறைத்தன. நான் என் உடல், மன மற்றும் உணர்ச்சி சோர்வுக்கு ஆளானால் நான் எப்படி என் அம்மாவை கவனித்துக்கொள்ள முடியும்?

ஒரு நாள் எனது நண்பர் ஒருவர் எதிர்பாராத பராமரிப்புத் தொகுப்பை எனக்கு அனுப்பினார். என் நண்பர் கைப்பின்னலாலான ஒரு ஊதா நிற ஜெப சால்வையை வைத்திருந்தார், தினமும் எங்களுக்காக மக்கள் ஜெபிக்கிறார்கள் என்பதன் அன்பான நினைவூட்டல் அது. அந்த மென்மையான நூலை என் தோள்களில் சுற்றிக்கொண்ட போதெல்லாம் தேவன் தன் ஜனத்தின் ஜெபங்களால் என்னைக் கட்டிப்பிடிப்பதை உணர்ந்தேன். பல வருடங்கள் கழித்தும் அவர் அந்த ஊதா நிற சால்வையை எனக்கு ஆறுதலளிக்கவும், எனது தீர்மானத்தை பலப்படுத்தவும் பயன்படுத்துகிறார்.

மற்றவர்களுக்காக ஜெபிப்பதின் – முக்கியத்துவத்தையும், அதன் ஆவி-புத்துணர்ச்சியூட்டும் வல்லமையையும் அப்போஸ்தலர் பவுல் உறுதிப்படுத்தினார். தனது பிரயாணங்களின்போது ஜெபமுள்ள ஆதரவையும், ஊக்கத்தையும் கோருவதன் மூலம் மற்றவர்களுக்காக ஜெபிப்பவர்கள் எவ்வாறு ஊழியத்தில் பங்காளிகளாக மாறுகிறார்கள் என்பதை பவுல் விளங்கப்பண்ணினார் (ரோமர் 15:30). குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைப்பது என்பது அப்போஸ்தலன் சக விசுவாசிகளின் ஆதரவை சார்ந்த்திருப்பதைக் காட்டியது மட்டுமல்லாமல் தேவன் ஜெபத்திற்கு வல்லமையான முறையில் பதிலளிக்கிறார் என்ற நம்பிக்கையையும் காட்டுகிறது (வச. 31-33).

தனிமையாக உணரும் நாட்களை நாம் அனைவரும் அனுபவிப்போம். ஆனால், நாம் மற்றவர்களுக்காக ஜெபிப்பது போல நமக்காக மற்றவர்களிடம் ஜெபிக்க கேட்பது எப்படி என்பதை பவுல் நமக்குக் காட்டுகிறார். தேவனுடைய ஜனங்களின் பரிந்துபேசும் ஜெபங்களினால் நாம் மூடப்பட்டிருக்கும் போது, ​​வாழ்க்கை நம்மை எங்கு அழைத்துச் சென்றாலும் தேவனுடைய பலத்தையும், ஆறுதலையும் நம்மால் அனுபவிக்க முடியும்.

பாதுகாப்பு மற்றும் அமர்ந்திருப்பது

உற்சாகமிக்க பாலகனான என் மகன் சேவியர், மதிய அமைதி நேரத்தை தவிர்த்தான். அமைதியாக இருப்பது பெரும்பாலும் தேவையற்ற, ஆனால் மிகவும் அத்தியாவசியமான தூக்கத்தில் போய் முடியும். எனவே அவன் இருக்கையில் வேகமாக அசைந்துக்கொண்டே இருப்பான், சாய்விருக்கையில் இருந்து சறுக்கி விளையாடுவான், தரையில் அங்கும் இங்கும் ஓடுவான், அமைதியை குலைக்க அறை முழுவதும் உருளுவான். “அம்மா, பசிக்கிறது… தாகமெடுக்கிறது… நான் குளியலறைக்கு செல்ல வேண்டும்… என்னை கட்டியணைக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டே இருப்பான்.

அமர்ந்திருப்பதன் நன்மைகளை புரிந்துகொள்வதால், கட்டியணைக்க அழைப்பதன் மூலம் நான் சேவியருக்கு உதவுவேன். என்னருகில் சாய்ந்து, அவன் தூங்குவான்.

என் ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில், எப்பொழுதும் செயல்பாட்டில் இருக்கும் என் மகனின் விருப்பத்தை நானும்  பிரதிபலித்தேன். ஓய்வில்லாத செயல்பாடுகள் என்னை அங்கீகரிக்கப்பட்டவராகவும், முக்கியமானவராகவும், கட்டுப்பாட்டில் இருப்பவராகவும் உணரவைத்தது. அதன் இரைச்சல்கள் எனது தோல்விகளையும், சோதனைகளையும் பற்றி அதிகமாக கவலைப்படுவதிலிருந்து என்னை திசைதிருப்பியது. ஓய்விற்கு என்னை ஒப்படைப்பது எனது பலவீனமான மனுஷிகத்தை மட்டுமே உறுதிப்படுத்தியது. எனவே நான் அமைந்திருப்பதையும், அமைதலாய் இருப்பதையும் தவிர்த்தேன். தேவன் என் துணை இல்லாமலும் காரியங்களை கையாளுவார் என்பதை சந்தேகித்தேன்.

எத்தனை பிரச்சனைகள் அல்லது நிச்சயமற்றதன்மைகள் நம்மை சூழ்ந்துகொண்டாலும் அவர் நமக்கு அடைக்கலமானவர். எதிரே உள்ள பாதை நீளமாக, பயமுறுத்துவதாக அல்லது மூழ்கடிக்கக்கூடியதாய் தோன்றினாலும் அவருடைய அன்பு நம்மை சூழ்ந்துகொள்கிறது. அவர் நமக்கு செவிக்கொடுகிறார், பதிலளிக்கிறார், நம்மோடு எப்பொழுதும் இருக்கிறார்…. இப்பொழுதும், எப்பொழுதும் நித்தியகாலமாகவும் (சங்கீதம் 91).

நாம் அமைதலாய் இருப்பதை பற்றிக்கொள்ளலாம், தேவனுடைய நிச்சயமான அன்பு மற்றும் மாறாத அவருடைய பிரசன்னத்தின் மீது நாம் சாய்ந்து கொள்ளலாம். நாம் அவரில் அமைதலாயும், இளைப்பாறவும் செய்யலாம், ஏனெனில் நாம் அவருடைய மாறாத உண்மைத்தன்மையின் தங்குமிடத்தின் கீழ் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.

விளக்கினை ஒளிரச் செய்

என் கணவரும் நானும் ஒரு நாட்டை கடக்கும் முயற்சிக்கு தயாரானபோது, ​​எங்கள் வளர்ந்த மகன்களுடன் நாங்கள் தொடர்பில் இருப்பதை உறுதி செய்ய விரும்பினேன். வயர்லெஸ் இணையத்தால் இணைக்கப்பட்ட ஒரு தனித்துவமான பரிசு, நட்பு விளக்குகளை நான் கண்டேன், அதை தொலைவிலிருந்து இயக்கலாம். என் அன்பின் பிரகாசத்தையும், தொடர் ஜெபங்களின் நினைவூட்டும் விதமாக நான் என் விளக்கை தொடும்போது அவர்களின் விளக்குகளும் இயங்கும் என்று கூறினேன். எங்களுக்கிடையில் எவ்வளவு பெரிய தூரம் இருந்தாலும், அவற்றின் விளக்குகளைத் தட்டினால் நம் வீட்டிலும் ஒரு வெளிச்சத்தைத் தூண்டும். எங்கள் தனிப்பட்ட தொடர்புகளை மாற்றுவதற்கு எதனாலும் முடியாது என்று எங்களுக்கு தெரிந்திருந்தாலும், ஒவ்வொரு முறையும் அந்த விளக்குகளை இயக்கும் போது நாங்கள் நேசிக்கப்படுகிறோம், ஜெபிக்கிறோம் என்பதை அறிந்து ஊக்குவிக்கப்படலாம்.

தேவனின் எல்லா குழந்தைகளும் பரிசுத்த ஆவியினால் இயக்கப்படும் ஒளி-பங்காளிகளாக இருப்பதற்கான பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். தேவனின் நித்திய நம்பிக்கை மற்றும் நிபந்தனையற்ற அன்பின் கதிரியக்க கலங்கரை விளக்கமாக வாழ நாம் வடிவமைக்கப்பட்டுள்ளோம். நாம் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டு, இயேசுவின் பெயரால் மற்றவர்களுக்கு சேவை செய்யும்போது, ​ அற்புதமான பொதுமக்கள் கவனத்தை கவரக் கூடியவர்களாகவும், வாழ்க்கைச் சான்றுகளாகவும் மாறுகிறோம். ஒவ்வொரு நற்செயலும், கனிவான புன்னகையும், மென்மையான ஊக்கமளிக்கும் வார்த்தையும், இதயப்பூர்வமான ஜெபமும் தேவனின் உண்மையையும் அவருடைய நிபந்தனையற்ற, வாழ்க்கையை மாற்றும் அன்பையும் நினைவூட்டுகிறது (மத். 5:14-16).

தேவன் நம்மை எங்கு வழி நடத்தினாலும், நாம் அவருக்கு எப்படி சேவை செய்தாலும், மற்றவர்களுக்கு உதவவும், அவருடைய ஒளியை அவர்கள் மீது பிரகாசிக்க செய்யவும் நம்மை அவரால் பயன்படுத்த முடியும். தேவன், அவருடைய ஆவியால், உண்மையான வெளிச்சத்தை அளிப்பதால், அவருடைய பிரசன்னத்தின் வெளிச்சத்தையும் அன்பையும் நாம் பிரதிபலிக்க முடியும்.

மிகத் துல்லியமான படம்

ஒரு பயணத்தில், எனது கணவர் சிறுவயதிலிருந்தே அவரது குடும்பத்தை அறிந்த ஒரு பெண்ணை சந்தித்தோம். அவர் எனது கணவர் ஆலனையும் எங்கள் மகன் சேவியரையும் பார்த்தாள். “அவன் தனது அப்பாவின் மிகத் துல்லியமான படம், என்று அவர் கூறினார்.” “அந்த கண்கள். அந்த புன்னகை. ஆம். அவரைப் போலவே தெரிகிறது.” தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான ஒரு வலுவான ஒற்றுமையை ஒப்புக்கொள்வதில் அந்தப் பெண் மகிழ்ச்சியடைந்ததால், அவர்களின் ஆளுமைகளில் ஒற்றுமையைக் கூட அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அவர்கள் பல வழிகளில் ஒரே மாதிரியாக இருந்தாலும், என் மகன் தனது தந்தையை முழுமையாக பிரதிபலிக்கவில்லை.

ஒரே ஒரு மகன் - இயேசு தன் தந்தையை முழுமையாக பிரதிபலிக்கிறார். கிறிஸ்து “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்” (கொலோ. 1:15). அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது (வச. 16). “அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது” (வச. 17).

ஜெபத்திலும் வேதாகமம் படிப்பதிலும் நாம் நேரத்தைச் செலவிடலாம், மாம்சத்தில் இருக்கும் இயேசுவைப் பார்ப்பதன் மூலம் தந்தையின் தன்மையைக் கண்டுபிடிப்போம். நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் வேதாகமத்தில் மற்றவர்களுடனும் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதை ஆராய்வதன் மூலம் அவருடைய அன்பைச் செயலில் காட்ட அவர் நம்மை அழைக்கிறார். நம் வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்து, பரிசுத்த ஆவியின் பரிசைப் பெற்ற பிறகு, நம்முடைய அன்பான பிதாவை அறிந்து நம்புவதில் நாம் வளரலாம். அவருவருக்காக வாழ்ந்து, அவருடைய குணத்தை பிரதிபலிப்பார்களாக அவர் நம்மை மாற்றுவார். 

நாம் இயேசுவைப் போலவே இருக்கிறோம் என்று மற்றவர்கள் சொல்ல முடிந்தால் எவ்வளவு மகிழ்ச்சி! 

உடைக்க முடியாத விசுவாசம்

தங்களது முதல் பிறந்த மகனை மன இறுக்கம் (ஆட்டிசம்) கொண்டதாக மருத்துவர்கள் கண்டறிந்த பின்னர், மனநலத்தில் ஊனமுற்ற குழந்தையை வாழ்நாள் முழுவதும் பராமரித்து வாழ்க்கையை  எதிர்கொள்ளுவதை எண்ணி ஒரு இளம் தம்பதியினர் துக்கமடைந்தனர். தங்களின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் தங்களின் அன்பிற்கினிய மகனின் எதிர்காலத்திற்காக அனுசரித்துக் கொள்ள எதிர்கொண்ட போராட்டங்களை, உடைக்கப்படாத விசுவாசம் என்ற புத்தகத்தில் அவர் ஒப்புக் கொள்கிறார். எனினும், இந்த வேதனையான செயல்முறையின் மூலம், அவர்களுடைய கோபத்தையும், சந்தேகங்களையும், பயங்களையும் தேவன் கையாள முடியும் என்பதை அவர்கள் கற்றுக் கொண்டார்கள். இப்போது, அவர்களின் மகன் வால வயது அடையும்போது, டயான் தனது அனுபவங்களைப் பயன்படுத்தி சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளின் பெற்றோரை ஊக்குவிக்கிறார். தேவனின் உடைக்க முடியாத வாக்குறுதிகள், வரம்பற்ற வல்லமை மற்றும் அன்பான விசுவாசத்தைப் பற்றி அவள் மற்றவர்களிடம் கூறுகிறார். ஒரு கனவின் மரணம், ஒரு எதிர்பார்ப்பு, வாழ்க்கையின் ஒரு வழி அல்லது  ஒரு பருவத்தை நாம் அனுபவிக்கும் போது அதைக்குறித்து  துக்கப்படுவதற்கு தேவன் நமக்கு அனுமதி அளிக்கிறார் என்று டயான்  மக்களுக்கு ஊக்கமளிக்கிறார்.

ஏசாயா 26-ல், தேவனுடைய மக்கள் அவரை என்றென்றைக்கும் நம்பலாம், “கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்” என்று தீர்க்கதரிசி அறிவிக்கிறார் (வச 4). ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட அமைதியுடன் நம்மைத் நிலைநிறுத்த முடியும் (வச 12). அவரது மாறாத தன்மையை மையமாகக் கொண்டு, சிக்கலான காலங்களில் அவரை நோக்கி கூக்குரலிடுவது நம் நம்பிக்கையை புதுப்பிக்கிறது (வச 15). 

எந்தவொரு இழப்பு, ஏமாற்றம் அல்லது கடினமான சூழ்நிலையை நாம் எதிர்கொள்ளும் போது, அதைப் பற்றி அவரிடம் நாம் உண்மையாக  இருக்க தேவன் நம்மை அழைக்கிறார். நம்முடைய மாறிவரும் உணர்ச்சிகளையும் கேள்விகளையும் அவரால் கையாள முடியும். அவர் நம்முடன் இருந்து நீடித்த நம்பிக்கையுடன் நம் ஆவிகளைப் புதுப்பிக்கிறார். நம் வாழ்க்கை வீழ்ச்சியடைந்து வருவதைப் போல நாம் உணரும்போது கூட, தேவனால் நம் விசுவாசத்தை உடைக்க முடியாததாக மாற்ற முடியும்.

ஆராதிக்கிற வாழ்க்கைமுறை

ஒருமுறை ஒரு கிறிஸ்துவ மாநாட்டிற்கு சென்றிருந்தபோது ஒரு பெண் என்னிடம் வந்து “நான் உங்களை எங்கேயோ பார்த்து இருக்கிறேன்” என்று கூறினாள். ஆனால் எங்கே என்று தெரியவில்லை. அந்த பெண்ணை இதற்கு முன்பு பார்த்ததாக எனக்கும்  ஞாபகமில்லை.

சிறிது நேரத்துக்கு பிறகு என்னிடம் வந்து “ நீ வெள்ளை நிற கார் வைத்திருக்கிறீர்களா?”  என்று அந்த அந்த பெண் என்னை கேட்டார். “ஆம் சில வருடங்களுக்கு முன்பு வைத்திருந்தேன்”  வைத்து இருந்தேன் என்று கூறினேன்.

 அந்தப் பெண் சிரித்துக்கொண்டே” நான் பள்ளிக்கு செல்லும் வழியில் தினமும் அங்கு இருந்த போக்குவரத்து விளக்கண்டையில்  (traffic light)   உங்களை பார்ப்பேன். நீங்கள் எப்பொழுதும் சந்தோஷத்துடன் கைகளை உயர்த்தி பாடிக் கொண்டு இருப்பீர்கள். நீங்கள் தேவனை துதித்து பாடுகிறீர்கள் என்று எண்ணிக் கொள்வேன். சில கஷ்டமான நாட்களில் அது  என்னை உற்சாகப்படுத்தியது”  என்று கூறினார்.

 நாங்கள் இருவரும் தேவனுக்கு நன்றி செலுத்தி சந்தோஷத்துடன் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

யாரும் நம்மை பார்க்கவில்லை என்று நாம் நினைத்துக் கொண்டாலும் மற்றவர்கள் இயேசுவை பின்பற்றுகிறவர்களை  கவனிக்கிறார்கள் என்பதை என்னுடைய புதிய நண்பர் எனக்கு ஊர்ஜிதப் படுத்தினார். முழு மனதுடன் ஆராதிக்கிற வாழ்க்கை முறையை நாம் பின்பற்றும் போது நம் சிருஷ்டிகர் முன் நாம் எங்கேயும் எப்பொழுதும் வரலாம். அவருடைய மாறாத அன்பையும் விசுவாசத்தையும் நினைவுகூர்ந்து அவருடன் ஐக்கியத்தையும் அவருடைய பராமரிப்புக்காகவும்  நாம் நன்றி செலுத்தலாம். நம் வாகனங்களில் செல்லும்போது துதிகளை செலுத்தி பொது இடங்களில் ஜெபித்தும் சிறிய அன்பின்  காரியங்களால் தேவனுடைய அன்பை பரப்பி மற்றவர்களை தேவனுடைய நாமத்தை துதிக்க உற்சாகப்படுத்தலாம் (வச 4).  ஞாயிறு காலை மட்டும் நடக்கும் ஒரு நிகழ்வு அல்ல.

பகட்டு இல்லை, மகிமை மட்டும்

கைகயால் செய்யப்பட்டு என் மகன் சேவியரால் பல ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் ஆபரணங்களையும் பாட்டி அனுப்பிய வருடாந்தர, பொருந்தாத கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்களைப் பார்க்கும்போது எனக்கு ஏன் இந்த அலங்காரம் திருப்தியாயிருக்க

வில்லை என்று அறிய முடியவில்லை. ஒவ்வொரு ஆபரணத்தின் படைப்பாற்றலையும் அதன் நினைவுகளையும் நான் எப்போதும் மிகவும் மதித்தேன். ஆகவே சில்லரை விற்பனை கடைகளின் காட்சிகளான சரியாக பொருந்திய பல்புகள், பளபளக்கும் உருண்டைகள் மற்றும் சாடின் ரிப்பன்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு மரத்தை வாங்குவதற்கு ஏன் என்னைத் தூண்டின?

எங்கள் தாழ்மையான அலங்காரத்திலிருந்து நான் விலகிச் செல்ல தொடங்கியப் போது, ஒரு சிவப்பு இதய வடிவிலான ஆபரணம், அதன் மேல் எளிய சொர்க்களான இயேசு என் இரட்சகர் என்று எழுதியிருப்பதை பார்ர்தேன். என் குடும்பமும் நான் இயேசுவில் வைத்திருக்கும் நம்பிக்கையுமே நான் கிறிஸ்மஸ் கொண்டாட விரும்புவதற்கான காரணங்கள் என்பதை நான் எப்படி மறந்தேன்? எங்கள் எளிய மரம் கடை முனைகளில் வைக்கப்பட்ட மரங்களைப் போல இல்லை, ஆனால் ஒவ்வொரு அலங்காரத்திற்கும் பின்னால் உள்ள அன்பு அதை அழகாக மாற்றியது.

எங்களுடைய அடக்கமான மரத்தைப் போலவே, மேசியாவும் இவ்வுலகத்தின் எந்த எதிர்பார்ப்புகளையும் எந்த விதத்திலும் நிறைவேற்றவில்லை (ஏசா. 53:2). இயேசு அசட்டைப் பண்ணப்பட்டவரும், புறக்கணிக்கப்பட்டவருமாயிருந்தார் (வச. 3). ஆனாலும் அன்பின் அற்புதமான வெளிப்பாட்டாய், அவர் 'நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார்" (வச. 5). நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினையை அவர் ஏற்றுக்கொண்டார் (வச. 5). அதைவிட அழகானது எதுவுமில்லை. புதுப்பிக்கப்பட்ட நன்றியறிதலோடு நம்முடைய குறையுள்ள அலங்காரத்திற்காகவும், நம்முடைய பரிபூரண மீட்பருக்காகவும், நான் பகட்டுக்காக ஏங்குவதை நிறுத்திவிட்டு தேவனுடைய மகிமையான அன்பிற்காக அவரைத் துதித்தேன். பளபளக்கும் அலங்காரங்கள் தேவனுடைய அழகான தியாக பரிசாகிய இயேசுவுக்கு ஒருபோதும் பொருந்தாது.

அதே அணியில்

கடுமையான காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் கால்பந்து மைதானத்திற்கு திரும்பும்போது, அதே நிலையில் விளையாடும் தன் அணியில் இருக்கும் ஒருவர் இன்முகத்துடன் இருக்கைக்குத் திரும்பினார். இந்த கால்பந்து வீரரும் அதே இடத்திற்காக போட்டியிட்டாலும், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க தேர்ந்தெடுத்தனர். ஆனாலும் தங்களுடைய பொறுப்புகளில் நம்பிக்கையாயிருந்தனர். ஒரு நிருபர் அந்த இரு விளையாட்டு வீரர்களும் ‘கிறிஸ்துவில் அவர்களுக்கிருந்த விசுவாசத்தில் வேரூன்றிய தனித்துவம் வாய்ந்த உறவாக” இருப்பதை தாங்கள் ஒருவருக்கொருவர் செய்த ஜெபத்தின் மூலம் கவனித்தார். மற்றவர்கள் கவனித்தப்படி அவர்கள் இருவரும் ஒரே அணியில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல, அவர்கள் இயேசுவை விசுவாசிக்கும் பிரதிநிதிகளாக தேவனை மகிமைப்படுத்தினர்.

இயேசுவின் வருகைக்காக காத்திருக்கும் ‘ஒளியின் பிள்ளைகளாக” வாழ விசுவாசிகளை அப்போஸ்தலனாகிய பவுல் நினைவுபடுத்துகிறார் (1 தெசலோனிக்கேயர் 5:5-6). கிறிஸ்து வழங்கின இரட்சிப்பில் நம்முடைய நம்பிக்கை உறுதியாக இருப்பதால், பொறாமை, பாதுகாப்பின்மை, பயம் அல்லது பகை – இவைகளை செய்யத் தூண்டும் சோதனைகளைத் தவிர்க்கலாம். மாறாக, நாம் ‘ஒருவரையொருவர் ஊக்குவித்து, ஒருவரையொருவர் கட்டி எழுப்ப” முடியும் (வச. 11). மக்களுக்கு சுவிஷேத்தை அறிவிக்கவும், அவர்களை இயேசுவுக்காக வாழ ஊக்குவிப்பதுமான நம்முடைய குறிக்கோளை நாம் பகிர்ந்து செய்யும்போது நாம் தேவனை மகிமைப்படுத்தும் ஆவிக்குரிய தலைவர்களை மதிக்கவும் ‘சமாதமானமாய் வாழவும்” முடியும் (வச. 12-15).

நாம் ஒரே குழுவில் பணியாற்றும்போது, ‘எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள், எல்லவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள், அப்படி செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்த தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (வச. 16-18) என்ற பவுலின் கட்டளைக்கு நாம் எப்போதும் கீழ்படியலாம்.

நீதியான காணிக்கை

வீடற்றவர்களுக்கு உறைவிடம் தந்த ஒரு இல்லத்திற்கு உதவும்படி எங்கள் வாலிப குழுவை ஒரு நாள் அழைத்திருந்தார்கள். அங்கே உள்ளே நுழையும் போது அங்கு குவிக்கப்பட்ட அநேக காலணிகளை கண்டோம். அவை அனைத்தும் நன்கொடையாக வழங்கப்பட்டவைகள். அந்த காலை முழுவதும் எல்லா காலணிகளையும் அதனுடைய மற்றொரு காலனியுடன் சேர்க்கும்படி எங்கள் நேரத்தை செலவழித்தோம். அவையனைத்தையும் கண்டுபிடித்து அதை தரையிலே வரிசைப்படுத்தினோம். இறுதியில் பாதிக்கும் மேற்பட்ட காலணிகளை நிராகரித்தோம். ஏனென்றால் அவைகள் மிகவும் பழையதாகவும், சேதமடைந்தும், உபயோகிக்க முடியாததாய் இருந்தது. அநேக நேரம் இதை போல் உபயோகிக்க முடியாத பொருட்களை நன்கொடையாக பலர் கொடுப்பார்கள். ஆனால்  அவைகளை யாருக்கும் அந்த காப்பகம் விநியோகம் செய்வதில்லை .

இஸ்ரவேலரும் இதைபோல் சேதமான மிருங்கங்களை தேவனுக்கு பலியாக செலுத்தினார்கள். அவர்களிடம் பலமுள்ள நல்ல மிருகங்கள் இருந்தும், குருடும், சப்பாணியும், பாதிக்கப்பட்ட மிருகங்களை பலியாக செலுத்தினார்கள். அதினால் தேவன் மல்கியா தீர்க்கதரிசி மூலம் அவர்களோடு பேசினார். அவர்களின் கனவீனத்தின் காரணமாக அவருடைய அதிருப்தியை அவர்களுக்கு தெரியப்படுத்தினார் (வச. 10). சிறந்தவைகளை அவர்களுக்கென்று வைத்துக் கொண்டு  தேவனுக்கு பாதிக்கப்பட்டதை பலியாக கொடுத்ததினால்  அவர்களை கண்டித்தார் (வ. 14). அதே சமயம் தேவன் அவர்களுக்கென்று வரப்போகும் மேசியாவை குறித்தும்  அறிவித்தார். மேசியாவின் அன்பும் இரக்கமும் அவர்கள் இருதயத்தை மாற்றி நீதியான காணிக்கைகளை கொடுக்கும்படி செய்யும் என்று வாக்குத்தத்தம் உரைத்தார்.

சில வேளைகளில் தேவனுக்கு மீதம் இருப்பதை நாம் காணிக்கையாக கொடுக்கும்படி தூண்டப்படுகிறோம். ஆனால் அவரிடமிருந்து அநேகம் எதிர்பார்த்து அதை பெற்றுக்கொண்டு அவருக்கு நன்றி கூறிக் கொண்டு வருகிறோம். இருப்பினும் அவருக்கு ஒதுக்கப்பட்டவைகளை கொடுக்கிறோம். தேவன் நமக்கு அருளியதை நினைத்து, அவருக்கு நன்றி சொல்லி, அவரை கனப்படுத்தி, நம்மால் முடிந்த மட்டும் சிறந்ததை அவருக்கு கொடுப்போம்.