எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

வின் கோலியர்கட்டுரைகள்

இறப்பும் தாழ்மையும்

பண்டைய அறிஞர்கள் ஜெரோம் மற்றும் டெர்டுலியன், பண்டைய ரோமாபுரியின் கதைகளை குறித்து இவ்வாறு குறிப்பிடுகின்றனர், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றிக்கு பின்னர் ஜெயம் பெற்ற அந்த தளபதி ஒளிருகின்ற ஒரு ரதத்தின் மேலேறி தலைநகரின் நடைபாதைகளில் விடியற்காலம் தொடங்கி பொழுதுசாயும் வரை உலா வருவாராம். ஜனங்களும் ஆரவாரம் செய்வார்கள். அந்த தளபதி பெருமிதம் பொங்க, தன் வாழ்நாள் சாதனையான இந்த கௌரவதால் மகிழ்ச்சி அடைவார். எனினும், புராணத்தின்படி அந்த தளபதிக்கு பின்னால் ஒரு பணியாள் நாள்முழுதும் நின்றுகொண்டு அவரது காதில், "மெமென்டோ மோரி" (லத்தீனில் "நீ மரிப்பாய் என்பதை நினைவில்கொள்" என்று அர்த்தம்) என்று மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டே இருப்பானாம். அனைத்து பாராட்டுகள் மத்தியில், தளபதிக்கு தான் சாவுக்குரியவன் என்ற நினைப்பு அவன் தாழ்மையாய் இருக்க மிக அவசியப்பட்டது.

யாக்கோபு பெருமை நிறைந்த விருப்பங்களினாலும், தன்னிறைவால் புடைத்துபோன கர்வத்தாலும் பாதிக்கப்பட்ட ஒரு சமுதாயத்திற்கு எழுதினார். அவர்களுடைய ஆணவத்தை எதிர்த்து," தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று" (யாக்கோபு 4:6) என்று உருவகுத்தும் வார்த்தைகளை பேசினார். "கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள்" (வ.10) என்பதே அவர்களுக்கு தேவைப்பட்டது. மேலும் அவர்கள் எவ்வாறு தாழ்மையடைய முடியும்? அந்த ரோம தளபதிகளை போல அவர்களும், தாங்கள் ஒரு நாள் மரிப்பார்கள் என்பதை நினைவுகூர வேண்டும். "நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே." (வ.14) என்று யாக்கோபு வலியுறுத்தினார். அவர்களுடைய பெலவீனங்களை ஒப்புக்கொள்வதே புகையைப்போல காணாமல் போகும் அவர்கள் முயற்சிகளில் வாழ்வதற்கு மாறாக தேவனுடைய சித்தத்தின் கீழ் திடமாக வாழ அவர்களை விடுவித்தது (வ.15)

நம்முடைய நாட்கள் குறுகியது என்பதை நாம் மறக்கும்போது, அது பெருமைக்கு வழிவகுக்கும். ஆனால் நாம் சாவுக்குரியவர்கள் என்பதை புரிந்து தாழ்மைப்படும்போது, நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு மூச்சும் தேவ கிருபையாக பார்ப்போம். மெமென்டோ மோரி ("நீ மரிப்பாய் என்பதை நினைவில்கொள்").

ஒரு மதியீனமான முதலீடு

ஐடா ஸ்கட்டர், தமிழ்நாட்டிலுள்ள வேலூர் கிராமத்தில் மருத்துவ சிகிச்சை கொடுப்பதற்கு ஒரு சிறிய இடத்தை வாங்கினார். அவர்களுடைய இந்த முயற்சி மதியீனமானது என்று பலர் கருதினர். இளமையான, திருமணமாகாத ஐடா ஸ்கட்டர், அமெரிக்காவிலிருந்த தன்னுடைய சொந்த வீட்டின் சுகத்தை விட்டுவிட்டு, தற்போது கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை என்று அறியப்படுகிற நிறுவனத்தை ஸ்தாபிக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் வீணாய் கருதப்பட்ட, அவர்களின் நேரம், மூலதனம், மற்றும் முயற்சிகள், இன்று மருத்துவ சிகிச்சையின் முன்னோடியாகவும், இந்திய சுகாதார அமைப்பிற்கு ஓர் கலங்கரை விளக்காகவும் திகழ்கிறது. 

தேவன் எரேமியாவிடம் முற்றிலும் மதியீனமான ஒரு முதலீட்டைச் செய்யும்படிக்கு கட்டளையிடுகிறார்: “பென்யமீன் நாட்டு ஆனத்தோத் ஊரில் உள்ள நிலத்தை வாங்கிக்கொள்ளும்” (எரேமியா 32:8). அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனை எருசலேமை முற்றிக்கை போட்டிருந்தது (வச. 2). எரேமியா நிலத்தை வாங்கினாலும் அது கூடிய சீக்கிரத்திலேயே பாபிலோனுக்குச் சொந்தமாகிவிடும். எல்லாம் இழக்கப் போகிற நேரத்தில் எந்த முட்டாளாவது முதலீடு செய்வானா?

தேவனுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கிற ஒரு நபர், எதிர்காலத்தைக் குறித்து எவருக்கும் இல்லாத ஒரு பார்வையோடு இருப்பார். “ஏனெனில் இனி இந்த தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சத்தோட்டங்களும் கொள்ளப்படும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்” (வச. 15). தேவன் அழிவை விட அதிகமான நன்மையைக் காண்கிறார். தேவன் மீட்பு, சுகம் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றை நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவருவதாக வாக்குப் பண்ணுகிறார். தேவனுடைய ஊழியத்திலோ அல்லது தனிப்பட்ட உறவுகளிலோ நாம் செய்யும் மதியீனமான முதலீடுகள் வீணாய் போவதில்லை. மற்றவர்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய நடத்துதலின் பேரில் நாம் செய்யும் மதியீனமான முதலீடுகள் இவ்வுலகத்திலேயே அர்த்தமுள்ளதாய் மாறும்.

மெய்யான நம்பிக்கை

இந்திராகாந்தியின் படுகொலைக்கு பின்பு, அவருடைய மகன் ராஜீவ் காந்தி பெரும்பான்மை ஓட்டு வித்தியாசத்தில் பிரதம மந்திரி ஆனார். இளமையான, படித்த பிரதம மந்திரி மீது மக்கள் நம்பிக்கை வைத்து நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என நம்பினர். ஆனால் இலங்கையில் அமைதி நிலவும் பொருட்டு இந்தியாவின் அமைதியின்மை தொடர்ந்தது. அதின் விளைவாய் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். எல்லாம் இனி சரியாகிவிடும் என்னும் நேர்மறையான பார்வைகொண்ட மக்கள் நம்பிக்கை இழந்தனர். ஒன்றை நேர்மறையாய் பார்க்கும் பார்வை மட்டும் போதுமானது அல்ல, கடைசியில் ஏமாற்றமே மிஞ்சும்.

1967இல் இறையியலாளர் ஜர்கென் மோல்ட்மான் அவர்கள் “நம்பிக்கை இறையியல்” என்னும் நூலில் தெளிவான தரிசனத்தைக் காட்டுகிறார். இந்த பாதை வெறும் நேர்மறையான பாதை மட்டுமில்லை, நம்பிக்கையின் பாதை என்கிறார். இரண்டும் ஒன்றல்ல. நேர்மறையான சிந்தை என்பது சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும், ஆனால் மெய்யான நம்பிக்கை என்பது எல்லா சூழ்நிலைகளிலும் தேவனின் உண்மைத்துவத்தில் வேரூன்றியுள்ளது என்கிறார்.

இந்த மெய்யான நம்பிக்கையின் ஆதாரம் எது? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே... ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார் (1 பேதுரு 1:3-4). நம் தேவன் தம் குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாய் மரணத்தை ஜெயித்தார். இந்த பெரிய வெற்றி, நேர்மறையான சிந்தையையும் கடந்து உறுதியான நம்பிக்கையை எல்லா சூழ்நிலைகளிலும் ஏற்படுத்துகிறது.

பலத்த சத்துருக்களின் கைக்கு தப்பியது

ஜார்ஜ் உஜ்னோவிச், 2010ல் தன் 94ஆம் வயதில், “இரண்டாம் உலகப்போரின் சிறந்த மீட்புப்பணியாளர்” என்று நியூயார்க் டைம்ஸ் என்னும் பத்திரிக்கையினால் வெண்கல பதக்கத்தைப் பெற்றார். செர்பியாவிலிருந்து ஊடுருவியர்களின் மகனாய் பிறந்த இந்த உஜ்னோவிச் அமெரிக்க இராணுவத்தில் இணைந்தார். அமெரிக்காவின் விமானிகளில் சிலர் யுகோஸ்லோவேகியாவிலுள்ள கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறார்கள் என்ற செய்தியை கேள்விப்பட்டவுடன், இவர் தன்னுடைய சொந்த தேசத்திற்கு திரும்பினார். விமானிகளை கண்டுபிடிப்பதற்காக காட்டில் பாராசூட்டின் மூலம் பயணம் செய்தார். அவர்களைக் கண்டுபிடித்து, அவர்களை சிறுசிறு குழுக்களாய் பிரித்து, செர்பியர்களைப்போலவே உடை உடுத்தவும் உணவு உண்ணவும் அவர்களுக்கு பயிற்சி கொடுத்தார். அதற்கு பின்பு மாதக்கணக்கில், ஒவ்வொரு குழுவினரையும் காடுகளில் மரம் வெட்டும் இடத்தில் வரவழைத்து அங்கிருந்த சி-47 விமானத்தின் மூலம் தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பச்செய்தார். உஜ்னோவிச் 512 மகிழ்ச்சியான மனிதர்களை மீட்டிருக்கிறார். 

தப்பவே முடியாது என்னும் தருணத்தில் தேவன் தன் சத்துருக்களின் கைக்கு தன்னை நீங்கலாக்கி விடுவித்ததைக் குறித்து தாவீது விவரிக்கிறார். தேவன் “உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்” (2 சாமுவேல் 22:17), என்கிறார். சவுல் ராஜா பொறாமையினால் கோபங்கொண்டு தாவீதை கொலைசெய்ய வகைதேடினான். ஆனால் தேவனுடைய திட்டம் வேறு. “என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்” (வச. 18). 

தேவன் தாவீதை சவுலின் கைக்கு தப்புவித்தார். அவர் இஸ்ரவேலை எகிப்தியர்களின் கைக்கு தப்புவித்தார். கிறிஸ்துவில், தேவன் நம் அனைவரையும் தப்புவித்தார். இயேசு நம்மை பாவம், தீமை, மரணம் ஆகியவற்றிலிருந்து தப்புவித்தார். எல்லா பலத்த சத்துருக்களைக் காட்டிலும் தேவன் பெரியவர். 

பெரிய ஒளி

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு சிறுவர்களும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும், 2018ஆம் ஆண்டு, ஒரு மதிய சாகசத்தை விரும்பி, ஒரு குறுகிய குகைக்குள் இறங்கினர். தீடீரென்று உயர்ந்த நீர்மட்டம் அவர்களை இன்னும் குகைக்குள் ஆழ்த்தியது. மீட்புப்பணியாளர்கள், இரண்டரை வாரங்கள் கழித்தே அவர்களை மீட்டனர். மீட்புப்பணியாளர் குழுவினர் தண்ணீருக்குள் மூழ்கி, அவர்களை தேட முயற்சித்தபோது, அவர்கள் அனைவரும் ஒரு பாறையின் மீது அமர்ந்து, ஆறு ஒளிரும் விளக்குகளை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தனர். அவர்கள் மணிக்கணக்காக இருளில் இருந்துகொண்டு, அந்த இருளைக் கிழித்துக்கொண்டு ஒரு ஒளி வரும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். 

ஏசாயா தீர்க்கதரிசி, இருளும் அந்தகாரமும் சூழ்ந்த உலகத்தை விவரிக்கிறார். அதில் ஒன்று வன்முறையிலும் பேராசையிலும் முறியடிக்கப்பட, மற்றொன்று கிளர்ச்சியினாலும் வேதனையினாலும் சிதைந்தது (ஏசாயா 8:22). அழிவைத் தவிர வேறொன்றுமில்லை. நம்பிக்கையின் விளக்கு முழுவதுமாய் அணைவதற்கு முன் மங்கி ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் அந்த மங்கிய மனச்சோர்வு முடிவல்ல என்று ஏசாயா வலியுறுத்துகிறார். தேவனுடைய இரக்கத்தினால், “முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை” (9:1). தேவன் தன்னுடைய ஜனத்தை இருளில் அழிவதற்கு அனுமதிப்பதில்லை. தீர்க்கதரிசி ஜனங்களுக்கு நம்பிக்கையை அறிவிக்கிறார். பின்பு, பாவம் தோற்றுவித்த இருளின் ஆதிக்கத்தை முழுவதுமாய் விரட்டுவதற்கு, இயேசுவின் வருகையை முன்னறிவிக்கிறார். 

இயேசு வந்தார். நாம் இப்போது ஏசாயாவின் வார்த்தைகளை புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் வாசிக்கிறோம்: “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (வச. 2) என்று ஏசாயா சொல்லுகிறார். 

இருள் எந்த அளவிற்கு அந்தகாரமாயிருக்கிறது என்பது முக்கியமில்லை; நம்முடைய சூழ்நிலை எவ்வளவு சோர்வை ஏற்படுத்துகிறது என்பதும் முக்கியமில்லை; நாம் இருளில் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை. இங்கு இயேசு இருக்கிறார். ஒரு பெரிய ஒளி நம்மை நோக்கி பிரகாசிக்கிறது.

வல்லமையுள்ளதும் நேசிக்கக்கூடியதும்

ஈக்வேடார் எரிமலை 2020ஆம் ஆண்டில் வெடித்து சிதறியது. அதிலிருந்து வெளிவந்த கருமையான தீப்பிளம்புகள் 12,000 மீட்டர் உயரத்திற்கு எழும்பிற்று என்று செய்தி ஊடகங்கள் அறிவிக்கிறது. அந்த பிளம்பு நான்கு மாகாணங்களில் (ஏறத்தாழ 198,000 ஏக்கர்) பாய்ந்து சாம்பல் நிறத்தில் காணப்பட்டது. வானம் மங்கலாகவும், இருள் சூழ்ந்தும் காணப்பட்டது. காற்று சற்று தடிமனாய் வீசியதால் சுவாசிக்க கடினமாய் தோன்றியது. பெலிசியானோ இங்கா என்ற விவசாயி, “எல் கமர்சியோ” என்ற பத்திரிக்கையில் அளித்த பேட்டியொன்றில், “இந்த தூசுகளெல்லாம் எங்கிருந்து வந்தன என்று எங்களுக்குத் தெரியாது... ஆனால் வானம் இருட்டுவதை கண்டு நாங்கள் அஞ்சினோம்” என்று கூறியுள்ளார். 

இஸ்ரவேலர்கள், “சேர்ந்துவந்து, (சீனாய்) மலையின் அடிவாரத்தில்” நின்று, “அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும்” சூழ்ந்ததைக் கண்டு அஞ்சினர் (உபாகமம் 4:11). அதிரக்கூடிய தேவனுடைய சத்தத்தைக் கேட்டு மக்கள் அஞ்சினர். அது பயமுறுத்தக்கூடியதாயிருந்தது. ஜீவனுள்ள தேவனை சாட்சியிடும் ஆச்சரியமான ஒரு அனுபவமாய் அது இருந்தது.

பின்பு “கர்த்தர்… பேசினார்,” அவர்கள், “வார்த்தைகளின் சத்தத்தை” கேட்டார்கள், ஆனால் “ஒரு ரூபத்தையும் காணவில்லை” (வச. 12). அவர்களின் எலும்புகளை அதிரப்பண்ணிய வார்த்தை அவர்களுக்கு ஜீவனையும் நம்பிக்கையையும் கொடுத்தது. தேவன் இஸ்ரவேலர்களுக்கு பத்துக் கற்பனைகளைக் கொடுத்து, அவர்களோடு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டார். கருமேகத்திலிருந்து ஒலித்த அந்த சத்தம் அவர்களை அதிரப்பண்ணியது. ஆனால் அவர்களை கவர்ந்திழுத்து நேசித்தது (யாத்திரரகமம் 34:6-7). தேவன் வல்லமையுள்ளவர், உலகத்திற்கு அப்பாற்பட்டவர், அதிரக்கூடியவர். ஆனாலும் அவர் நம்மை அன்போடு நெருங்குகிறார். வல்லமையுள்ள அன்பான தேவனே நம்முடைய அத்தியாவசிய தேவை. 

சோதித்தல்

முதன்முறையாக என்னுடைய மகன்களை 14,000 அடி உயரமுள்ள மலையேற்றத்திற்கு கூட்டிச்செல்லும்போது அவர்கள் சற்று பதட்டமாய் காணப்பட்டனர். அவர்களால் அதைச் செய்ய முடியுமா? அவர்கள் அந்த சவாலுக்கு ஒத்துக்கொண்டார்களா? என்னுடைய இளைய மகன், வழியில் நின்று அதிக நேரம் ஓய்வெடுத்தான். “அப்பா, இனி மேல் என்னால் போகமுடியாது” என்று திரும்ப திரும்பச் சொன்னான். ஆனால் இந்த பயணம் அவர்களுக்கு நன்மையானது என்று நம்பினேன், அவர்கள் என்னை நம்பவேண்டும் என்றும் விரும்பினேன். தன்னால் இனி போகவே முடியாது என்று கூறிய என்னுடைய மகன், சிகரத்தின் உச்சிக்கு ஒரு மைல் தொலைவில் எங்களை முந்திக்கொண்டு ஆர்வமாய் ஓடினான். அவனுடைய பயத்தின் மத்தியிலும் அவன் என்னை நம்பினதைக் குறித்து அவன் சந்தோஷப்பட்டான்.

மலையேற்றத்தின்போது ஈசாக்கு தன் தகப்பன் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் குறித்து நான் வியப்படைவதுண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக தன் மகனின் மீது கத்தியை ஓங்கிய ஆபிரகாம் தன் தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் குறித்து நான் அசந்துவிட்டேன் (ஆதியாகமம் 22:10). அவனுடைய குழப்பமான, பதைபதைக்கும் நிலையிலும் ஆபிரகாம் கீழ்ப்படிந்தான். அதிர்ஷ்டவசமாய் ஒரு தேவ தூதன் அவனைத் தடுத்துவிட்டான். “பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே” (வச.12) என்றும் சொன்னான். ஈசாக்கு மரிப்பது தேவ சித்தமல்ல. 

இந்த சம்பவத்தையும் நம் வாழ்க்கையையும் கவனத்துடன் ஒப்பிடும்போது, துவக்க வரிகளை நினைவுகூருவது அவசியம்: “தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்” (வச. 1). இந்த சோதனையின் மூலம் ஆபிரகாம் எந்த அளவிற்கு தேவனை விசுவாசித்தான் என்பதை அறிந்துகொண்டான். தேவனுடைய அன்பான இருதயத்தையும் அவருடைய தேவையை சந்திக்கும் குணத்தையும் புரிந்துகொண்டான். 

நம்முடைய குழப்பமான, இருளான, சோதிக்கப்படும் தருணங்களில் நம்மைக் குறித்தும் தேவனைக் குறித்தும் நாம் கற்றுக்கொள்ளுகிறோம். மேலும் அந்த சோதனைகளின் மூலம் தேவன் மீது இன்னும் ஆழமான நம்பிக்கை வைக்க முடியும். 

உண்மை, பொய், கண்காணிப்பு

2018 பேஸ்பால் காலத்தில், களத்தில் இல்லாத விளையாட்டு வீரர்கள் இருக்கும் இடத்தில் அமர்ந்திருந்த ஒரு இளைஞனுக்கு, பயிற்சியாளர் ஒரு பந்தைக் கொடுக்க விரும்பினார். ஆனால் பயிற்சியாளர் அந்தப் பந்தை சிறுவனை நோக்கி எறியும்போது வேறொரு நபர் முந்திக்கொண்டு அதை எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வின் காணொளி புகழ்பெற்றதாகி விட்டது. செய்தி ஊடகங்களும், சமூக ஊடகங்களும் அந்த மனிதனின் முரட்டுத்தனத்தை விமர்சித்தது. தவிர, அங்கு இருந்த பார்வையாளர்களுக்கு முழு நிகழ்வும் தெரியாது. இதற்கு முன்பு, ஒரு தவறாய் அடிக்கப்பட்ட பந்தை பிடிப்பதற்கு அந்த மனிதர் இளைஞனுக்கு உதவி செய்திருந்தார் மற்றும் அடுத்தடுத்து அவர்கள் வழியிலே வரும் பந்துகளைப் பகிர்ந்துக்கொண்டு பிடிக்க அவர்கள் ஒப்புக்கொண்டிருந்தனர். துரதிஷ்டவசமாக உண்மையான நிகழ்வு வெளிவர இருபத்து நான்கு மணி நேரம் ஆனது. அதற்குள்ளாக கலவரக் கும்பல் அந்த குற்றமற்ற மனிதரை அடித்து, காயப்படுத்திவிட்டனர்.

அநேக நேரங்களில், நாம் துணுக்குளை மட்டும் வைத்துக்கொண்டு முழு உண்மைகளும் தெரிந்துவிட்டதாக நினைக்கிறோம். நம்முடைய நவீன அரைகுறை கலாச்சாரத்தில், முழு நிகழ்வுகளையும் அறிந்துகொள்ளாமல், வியத்தகு காணொலிகளையும், கோபமூட்டும் துணுக்குகளையும் வைத்துக்கொண்டு, மக்களைக் கண்டனம் செய்வது எளிது. இருந்தாலும் “அபாண்டமான சொல்லைப் பரப்ப வேண்டாம்” (யாத். 23:1) என்று வேதாகமம் எச்சரிக்கிறது. குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன், உண்மையைத் தெரிந்துக்கொள்ள, முடிந்த அனைத்தையும் நாம் செய்து, பொய்யில் பங்கேற்காமல் இருக்க உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு விழிப்புணர்வு ஆவி மேற்கொள்ளும்போதும், உணர்வுகள் தூண்டப்படும்போதும், தீர்ப்பலைகள் பெருகும்போதும், நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தவறுசெய்யும் கூட்டத்தைப் பின்தொடர்வதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் (வச. 2).

இயேசுவில் விசுவாசிகளாயிருக்கும் நாம், அபாண்டமான சொல்லைப் பரப்பாமலிருக்க தேவன் நமக்கு உதவி செய்வாராக. ஞானத்தை வெளிப்படுத்தவும், நம்முடைய வார்த்தைகள் உண்மை என்பதை உறுதிப்படுத்த அவர் நமக்குத் தேவையானதை கொடுப்பாராக.

நல்ல போராட்டம்

அமெரிக்காவின் அரசியல்வாதி ஜான் லூவிஸ் 2020ஆம் ஆண்டு மரித்தபோது நிறைய அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்தனர். 1965இல், மார்டின் லூத்தர் கிங் ஜூனியரோடு சேர்ந்து கருப்பின மக்களுக்கு ஓட்டுரிமை வழங்கக்கோரி, போராட்டம் நடத்தியுள்ளார். அந்த அணிவகுப்பின்போது லூவிஸின் கபாலத்தில் அடிபட்டு, அந்த தழும்பை அவர் வாழ்நாள் முழுவதும் சுமக்கவேண்டியிருந்தது. “நீ நியாயமில்லாத ஒன்றைப் பார்க்கும்போது, அங்கு நீ பேசுவதற்கு அல்லது ஏதாவது செய்வதற்கான பொறுப்பு உனக்கு உள்ளது” என்று லூவிஸ் கூறுகிறார். “நல்லப்  போராட்டத்திற்கு குரல் கொடுப்பதற்கு என்றுமே பயப்படாதேயுங்கள்” என்றும் கூறுகிறார்.

உண்மையாய் நின்று, சரியென்று தோன்றுகிற “நல்ல போராட்டத்தை” போராடுவதைக் குறித்து லூவிஸ் துவக்கத்திலிருந்தே அறிந்திருக்கிறார். பிரபலமாகாத சில விஷயங்களை அவர் பேசவேண்டியிருந்தது. ஆமோஸ் தீர்க்கதரிசியும் இதை நன்கு அறிந்திருந்தார். இஸ்ரவேலின் பாவத்தையும் அநியாயத்தையும் பார்த்த அவரால் சும்மாயிருக்க முடியவில்லை. ஆமோஸ் இஸ்ரவேலின் ஆளும்வர்க்கம் எவ்வாறு “தரித்திரரை மிதித்து, அவன் கையிலே லஞ்சம் வாங்கி, “பொளிந்த கற்களால் வீடுகளை” கட்டி, “இன்பமான திராட்சைத் தோட்டங்களை” நாட்டினார்கள் என்று அறிவிக்கிறார் (ஆமோஸ் 5:11-12). தன்னுடைய பாதுகாப்பையும் சுகத்தையும் கருதி ஒதுங்கி நிற்காமல், ஆமோஸ் அவர்களின் தீமையை சுட்டிக்காட்டுகிறார். தேவையான ஒரு நல்ல போராட்டத்தை தீர்க்கதரிசி மேற்கொள்ளுகிறார். 

ஆனால் இந்த போராட்டம் எல்லோருக்குமான நீதியை முன்வைத்து செய்யப்படுகிற நல்லப் போராட்டம். “நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது” (வச. 24) என்று ஆமோஸ் சூளுரைக்கிறார். நல்ல போராட்டத்தில் நாம் ஈடுபடும்போது (நீதியுள்ள, முரட்டுத்தனமில்லாத, நீதியை வலியுறுத்தும் போராட்டம்), நன்மையும் சௌக்கியமுமே நம்முடைய இலக்காயிருக்கும்.