எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பாட்ரிசியா ரேபோன்கட்டுரைகள்

ஒரு பெரிய விஷயம்

எங்களுடைய உறவினர் ஒருவருக்கு டிசம்பர் மாத வாடகையைச் செலுத்த உதவி தேவைப்பட்டது. அந்த வருட இறுதியில் அவர்கள் எதிர்பாராத சில செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததால், அவருடைய குடும்பத்தினருக்கு இந்த தேவை ஒரு பெரிய பாரமாக இருந்தது. ஆனால், அவர்கள் தங்களுடைய சேமிப்பு எல்லாவற்றையும் தேடி எடுத்தும், தங்கள் உறவினரின் தாராள உள்ளத்தாலும், அதனை ஈடு செய்தனர். தேவன் தந்தவைகளுக்காக நன்றி செலுத்தினர்.

அவர் நன்றியறியும் வார்த்தைகளால் நிரம்பிய ஒரு நன்றி அட்டையை அவர்களுக்குக் கொடுத்தார். “நன்மையான செயல்களை செய்யும்படி தொடருங்கள், தொடர்ந்து நன்மை செய்வதை ஒரு பெரிய காரியமக நீங்கள் எடுத்துக்கொள்ளவில்லை."

மற்றவர்களுக்கு உதவுவது தேவன் எதிர்பார்ககும் ஒரு பெரிய விஷயம். ஏசாயா தீர்க்கதரிசி இதனை இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தெரியப்படுத்துகின்றார். அந்த ஜனங்கள் உபவாசமிருக்கின்றனர், ஆனாலும் அவர்களுக்குள் வாக்குவாதங்களும், சண்டைகளும் ஏற்படுகின்றன. எனவே ஏசாயா தீர்க்கன் இதற்குப்பதிலாக, “அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்கிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளியாமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்" என்கின்றார் (ஏசா. 58:6-7).

இத்தகைய தியாகம் தான் தேவனுடைய ஒளியை பிறருக்குக் கொடுக்கும். நம்முடைய காயங்களையும் குணப்படுத்தும் (வச. 8) என ஏசாயா சொல்கின்றார். குடும்பங்கள் தங்கள் உறவினருக்கு உதவும் போது, தங்களுடைய சொந்த பொருளாதாரத்தில் ஒரு கஷ்டத்தை உணர்வதால், அந்த வருடம் முழுவதும்  மேலும் சிறந்த முறையில் தங்கள் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தும் வழியைக் கண்டு கொள்வர். இதுவே நீங்கள் தாராள குணமுள்ளவர்களாயிருக்கும்படி தேவன் தரும் வாக்குத்தத்தம். “உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்" (வச. 8) முடிவில், உன் உறவினருக்குக் கொடுப்பதால் மேலும் ஆசீர்வாதத்தைப் பெறுவாய். தேவன் என்ன தருவார்? தேவன் ஏற்கனவே தனக்குள்ளதையெல்லாம் அன்பினால் உனக்குக் கொடுத்துவிட்டார்.

தலைவனைப் பின்பற்றல்

எங்கள் வீட்டிற்கு மேலுள்ள ஆகாயத்தில் மூன்று போர் ஜெட் விமானங்கள் அலறிக்கொண்டு வானத்தில் ஒழுங்காக, மிகக் குறுகிய இடைவெளியில் பறந்தன. அவை பார்ப்பதற்கு ஒன்று போல தெரிந்தது. “வாவ்” என நான் என் கணவன் டானிடம் கூறினேன். “கண்ணைக் கவர்வதாகவுள்ளது” என அவர் ஆமோதித்தார். நாங்கள் ஒரு விமானப்படை தளத்தினருகில் வசிப்பதால் இதுபோன்ற காட்சிகளைக் காண்பது எங்களுக்குப் புதிதல்ல.

ஒவ்வொரு முறையும் இந்த ஜெட் விமானங்கள் எங்களுக்கு மேல் பறக்கும் போது நான் அதே கேள்வியையே கேட்கின்றேன். எப்படி அவைகளால், தங்கள் கட்டுப்பாட்டை இழக்காமல் இத்தனை நெருக்கமாகப் பறக்க முடிகிறது? ஒரு வெளிப்படையான காரணமென்னவெனில் தாழ்மை என தெரிந்து கொண்டேன். வழிநடத்தும் முதல் விமானி தகுந்த, சரியான வேகத்தில், சரியான பாதையில் செல்கின்றார் என்ற நம்பிக்கையோடு, மற்ற இரு விமானிகளும் தாங்கள் செல்லும் திசையைக் குறித்து எந்த தனிப்பட்ட விருப்பத்தையும் மேற்கொள்ளாமலும், தலைவன் செல்லும் பாதையைக் குறித்து எந்தக் கேள்வியையும் கேட்காமலும் பின்பற்றுகின்றனர். ஆனால், அவர்கள் தங்கள் அனிவகுப்பில் நிலைத்திருந்து நெருக்கமாகத் தொடர்கின்றனர். அதன் விளைவு, நான் ஒரு வலிமையான குழு.

இயேசுவைப் பின்பற்றுபவர்களும் இவர்களைப் போன்றெ தான். “ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (லூக். 9:23) என இயேசு சொல்கின்றார்.

தன்னை வெறுத்தலும், பாடுகளும் நிறைந்தது அவருடைய பாதை. அது பின்பற்றக் கடினமானது. ஆனால், அவருடைய உண்மையான சீடனாக இருக்க, நாமும் நம்முடைய தனிப்பட்ட ஆசைகளை தள்ளிவிட்டு, நம்மையே கவனித்துக்கொண்டிருப்பதை விட்டு விட்டு, ஆவியின் பாரத்தைச் சுமந்து கொண்டு அநுதினமும் பிறருக்கு ஊழியம் செய்ய அழைக்கப்படுகின்றோம். அப்படியே நாம் அவரை மிக நெருக்கமாகத் தொடர வேண்டும்.

நம்மையே தாழ்த்தி, அவரோடு நெருங்கி நடப்பது எத்தனை அருமையானக் காட்சி! அவர் நம்மை வழிநடத்த நாம் அவரோடு நெருங்கி, நாமும் அவரும் ஒன்றாயிருப்பது போல நடக்க வேண்டும். அப்படியானால், பிறர் நம்மை காண மாட்டார்கள் ஆனால், கிறிஸ்துவைக் காண்பார்கள். அப்படியிருக்கும் போது பிறர் நம்மைக்காண பார்த்து “வாவ்” என்பர்.

மேசியாவை எதிர்பார்

பழுதாகிவிட்ட எங்களுடைய காரைச் சரிசெய்ய வந்துள்ள மனிதன் பார்ப்பதற்கு இளமையாகவும், எங்கள் பிரச்சனையைச் சரி செய்யத் தகுதியற்றவனுமாக எனக்குத் தோன்றினான். என்னுடைய கணவன் டான். “அவன் ஒரு குழந்தை” என்று என்னுடைய காதில் முணுமுணுத்து, தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தினார். அந்த இளைஞனின் மீதுள்ள நம்பிக்கையின்மை, நாசரேத்தூரிலுள்ள மக்கள் இயேசுவை சந்தேகத்தோடு பார்த்து முணுமுணுத்துக் கொண்டதைப் போலிருந்தது.

இயேசு ஜெப ஆலயங்களில் போதனை செய்த போது “இவன் தச்சனுடைய மகன் அல்லவா?” எனக் கேட்டனர் (மத். 13:55). அவர்கள் ஏளனமாய் பேசிய போதும், அவர்களறிந்த ஒரு நபரால் எப்படி சுகமளிக்கவும், போதகம் செய்யவும் முடிகிறது என ஆச்சரியப்பட்டனர். “இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?” (வச. 54) எனக் கேட்டனர். அவர் செயல்படுத்திய அதிகாரத்தைக் கண்டு, இயேசுவை விசுவாசிப்பதற்குப்பதிலாக இடறலடைந்தனர் (வச. 15,58).

இதேப்போல் நாமும் நம்முடைய ரட்சகரின் ஞானத்தையும், வல்லமையையும் நம்புவதற்கு கஷ்டப்படுகின்றோம். சிறப்பாக, நம்முடைய அநுதின வாழ்வில் நன்கு பழகிய சாதாரண காரியங்களில் கூட நம்பிக்கையையிழந்து விடுகிறோம். அவருடைய உதவியை நாடாமல், நம் வாழ்வு மாற்றத்தைத் தரும் அற்புதத்தை நாம் இழந்துவிடுகிறோம் (வச. 58).

டான், தான் எதிர்பார்த்த உதவி சரியாகத் தன்னை அடைந்ததைக் கண்டான் இறுதியாக, என்னுடைய கணவன் அந்த இளைஞனின் உதவியை ஏற்றுக்கொள்ள சம்மதித்து, தன்னடைய பழைய காரின் பாட்டரியையும் பார்க்கும்படி அவனை அனுமதித்தார். ஒரேயொரு இணைப்பை இறுக்கிய அந்த மெக்கானிக், நொடியில் அந்தக் காரை ஒடவிட்டார். அதன் இயந்திரம் உறும, எல்லா விளக்குகளும் எரிய ஆரம்பித்தன. “இது கிறிஸ்மஸ் போல ஜொலிக்கிறது” என்றார் என் கணவன்.

இதேப் போன்று மேசியா நம் வாழ்விலும் புதிய ஒளியையும், ஜீவனையும் தந்து நாம் அவரோடு நம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர உதவுவார் என எதிர்பார்ப்போம்.

நன்றியால் தேவனை கனப்படுத்துதல்

என்னுடைய கணவருக்கு புற்றுநோய் என்று வந்திருந்த மருத்துவ அறிக்கையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாலும், அந்த பெண் மருத்துவரின் முகத்தில் கவலைக்கான அறிகுறி இல்லை. புன்முறுவலோடு அவர் ஒரு யோசனை சொன்னார்: ஒவ்வொரு நாளையும் நன்றி சொல்லியபடி தொடங்குங்கள். “குறைந்தபட்சம் மூன்று விஷயங்களுக்காக,” என்றார். ஸ்தோத்திரம் சொல்வது தேவனின் நற்பண்புகளில் ஊக்கம் கிடைக்க உதவும் என்று தெரிந்ததால் டான் ஒத்துக்கொண்டார். இதனால் டான் ஒவ்வொரு நாளையும் துதிகளோடு தொடங்குகிறார். இரவு நல்ல தூக்கத்தைத் தந்ததற்காக நன்றி ஆண்டவரே. சுத்தமான படுக்கைக்காக. சூரிய வெளிச்சத்திற்காக. காலை உணவிற்காக. என் உதடுகளின் புன்முறுவலுக்காக நன்றி.

ஒவ்வொரு வார்த்தையும் மனப்பூர்வமானது. ஆனால் அது அற்பமாக தோன்றுமா? வாழ்வின் சின்னச் சின்ன விஷயங்களுக்காக நன்றி சொல்வது மகத்துவமான கர்த்தருக்கு முக்கியமா? தாவீதின் முதன்மை சங்கீதக்காரர் ஆசாப் சங்கீதம் 50ல் தெளிவான பதிலைத் தருகிறார். “உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும்” ஆண்டவர் கேட்கவில்லை (வச. 9). முன்பு இஸ்ரவேலரின் ஸ்தோத்திர பலிகளாக இருந்த இவற்றை விரும்பாமல், நம் இருதயத்தையும், நம் வாழ்க்கையையும் நன்றியோடு கொடுக்க விரும்புகிறார் (வச. 14, 23).

என் கணவர் அனுபவித்ததுபோல, மனப்பூர்வமான நன்றி, நாம் ஆவியில் உற்சாகமாக இருக்க உதவும். அப்போது “ஆபத்துக் காலத்தில்” நாம் கூப்பிடும்போது, அவர் நம்மை “விடுவிப்பார்” (வச. 15). அப்படியென்றால் ஆவியில், சரீரத்தில் டான் இரண்டு வருட சிகிச்சையில் சுகமாகி விடுவார் என்று அர்த்தமா? அல்லது அவர் வாழ்நாள் முழுவதும் சுகம் கிடைக்காதா? நமக்குத் தெரியாது. ஆனால் இப்போதைக்கு, தேவனின் அன்புக்காக, அவர் மீட்பராக, சுகம் அளிப்பவராக, நண்பராக இருப்பதற்காக தேவனுக்கு நன்றி சொல்வதில் டான் சந்தோஷமடைகிறார். “உங்களுக்கு நன்றி” என்ற அழகிய வார்த்தைகளைக் கேட்பதில் நண்பர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

உதவி கேட்பது

அதிக நேரம் வேலை செய்த ஒரு நாளின் முடிவில் அவளது மின்னஞ்சல் வந்தது. உண்மையைச் சொன்னால், நான் அதைப் படிக்கவில்லை. அதிக சுகவீனமாய் இருந்த குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அதை சமாளிக்க உதவும் வகையில் நான் கூடுதல் நேரம் பணிசெய்து கொண்டிருந்தேன். அதனால் கவனத்தைத் திசைதிருப்பும் விஷயங்களுக்கு எனக்கு நேரமில்லை.

அடுத்த நாள் என் தோழியின் மின்னஞ்சலைப் படித்தபோது “உனக்கு என்ன உதவி தேவை?” என்ற கேள்வியைப் பார்த்தேன். என் எண்ணத்தைக் குறித்து வெட்கப்பட்டு, எந்த உதவியும் தேவை இல்லை என்று பதில் அனுப்ப ஆரம்பித்தேன். பின்னர் ஆழ்ந்த மூச்செடுத்து மீண்டும் பார்த்தபோது, அவள் கேள்வி நன்றாகத் தெரிந்ததாக – தெய்வீகத்தன்மை கொண்டதாகத் தோன்றியது.

ஏனென்றால் இயேசு அதே கேள்வியைக் கேட்டார். எரிகோவுக்குப் போகும் வழியில், கண் பார்வையற்ற ஒரு பிச்சைக்காரன் கூப்பிடுவதைக் கேட்ட இயேசு நின்று, பர்திமேயு என்று பெயர்கொண்ட அவனிடம், இதேபோன்ற கேள்வியைக் கேட்டார். என்ன உதவி தேவை? அல்லது இயேசு கேட்டதுபோல் “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்” (மாற்கு 10:51).

இந்தக் கேள்வி திகைப்பூட்டுகிறது. சுகமாக்கும் இயேசு நமக்கு உதவ ஆர்வமாய் இருப்பதை அது காட்டுகிறது. ஆனால் முதலில் தாழ்மையை உணர்த்தும் விதமாக, நமக்கு அவர் உதவி தேவை என்பதை ஏற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறோம். பர்திமேயு என்ற பிச்சைக்காரன் தேவை உள்ளவனாய் இருந்தான் – ஏழ்மையாக, யாருமற்றவனாக, ஒருவேளை பசியுற்றவனாக இருந்தான். ஆனால் ஒரு புதிய வாழ்க்கையை விரும்பியவனாக, தன்னுடைய அடிப்படைத் தேவையைக் கூறினான். அவன் “ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும்” என்றான்.

பார்வையற்ற ஒருவனுக்கு அது ஒரு உண்மையான வேண்டுதல். இயேசு அவனை உடனே சுகப்படுத்தினார். என் தோழி என்னிடம் அதே உண்மையை விரும்பினாள். என் அடிப்படைத் தேவை என்ன என்பதைப் புரிந்து கொள்ள ஜெபிக்கிறேன் என்றும், பின்னர் தாழ்மையுடன் அவளிடம் சொல்வேன் என்றும் அவளிடம் வாக்களித்தேன். இன்று உங்கள் அடிப்படைத் தேவை என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் நண்பர் கேட்கும்போது அதைச் சொல்லுங்கள். அதன்பின் உங்கள் வேண்டுதலை அதற்கும் மேலாக எடுத்துச் செல்லுங்கள். அதை கடவுளிடம் தெரிவியுங்கள்.