எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மைக் விட்மெர்கட்டுரைகள்

உன் எதிரியை நேசித்தல்

அவன் என்னை பார்ப்பதற்கு முன்னே தலைமறைவாய் என் அறைக்கு சென்றேன். நான் என்னை ஒளித்துக் கொள்வதற்கு வெட்கப்படுகிறேன். ஆனால் அவளோடு அப்போதிலிருந்து எப்போதுமே தொடர்புகொள்ள விரும்பவில்லை. அவளை அந்த இடத்தில் வைக்க விரும்பியதை அவளிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அவளுடைய கடந்த கால நடவடிக்கைகள் என்னை காயப்படுத்தியிருந்தாலும் அவளை அதைவிட அதிகமாய் நான் காயப்படுத்திக் கொண்டிருந்தேன்!

யூதர்களும் சமாரியர்களும் இதேபோன்று ஒருவருக்கொருவர் ஒத்துபோகாத உறவில் இருந்தார்கள். புறஜாதியரோடு கலந்து அவர்களின் தெய்வங்களை வழிபட்ட சமாரியர்கள் யூதர்களின் பார்வையில், அவர்களின் பரிசுத்த வித்தையும் விசுவாசத்தையும் பாதிப்புக்குள்ளாக்கியவர்கள். அவர்கள் போட்டியாக தங்களுக்கென்று கெர்சோம் மலையில் ஆராதனை ஸ்தலத்தை ஏற்படுத்தினர் (யோவான் 4:20). யூதர்களும் சமாரியர்களை தாழ்வாய் கருதியதால் அவர்களின் தேசங்களின் வழியாய் கடந்துபோவதைக் கூட விரும்பாமல் சுற்றிப் போயினர். 

இயேசு அழகான பாதையை காண்பித்திருக்கிறார். அவர் சமாரியர்களுக்கும் சேர்த்து அனைத்து மக்களுக்கும் இரட்சிப்பைக் கொடுத்தார். பாவியான ஸ்திரீக்கும் அவளுடைய மக்களுக்கும் ஜீவ தண்ணீரைத் தருவதாக வாக்குப் பண்ணியதின் நிமித்தம் சமாரியர்களின் இருதயத்திற்குள் நுழைய துணிந்தார் (வச. 4-42). அவருடைய மாதிரியை பின்பற்றும்படிக்கு கூறியதே சீஷர்களுக்கு கொடுக்கப்பட்ட கடைசி ஆலோசனை. எருசலேமிலிருந்து துவங்கி, சமாரியாவுக்கும் “பூமியின் கடைசி பரியந்தம்” வரைக்கும் ஒவ்வொருவருக்கும் நற்செய்தியை கூறும்படிக்கு அவர்களுக்கு கட்டளை கொடுக்கிறார் (அப். 1:8). சமாரியா என்பது தங்களின் பக்கத்து ஊர் என்பதைக் காட்டிலும் பெரிய இலக்கு. ஊழியத்தின் மிகவும் வேதனையான கட்டம். வாழ்க்கை முழுவதும் அவர்களுக்கு இருந்த பாரபட்ச சிந்தையைக் கடந்து அவர்கள் விரும்பாத ஒரு சந்ததியை நேசிக்க வேண்டும்.

நம்முடைய சுயபாரபட்சங்களைவிட இயேசு நமக்கு முக்கியமானவரா? ஆம் என்றால் அதற்கு ஒரே வழிதான் உண்டு. உன் “சமாரியனை” நேசி. 

யாருக்கு உன் ஆதரவு தேவை?

கிளிஃபோர்டு வில்லியம்ஸ்_க்கு தான் செய்யாத ஒரு கொலைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. தனக்கு விரோதமான குற்றத்தை மறுபரிசீலனை செய்யும்படி தொடர்ந்து விண்ணப்பித்துக் கொண்டேயிருந்தார். அவருடைய ஒவ்வொரு மனுவும் தொடர்ந்து 42 ஆண்டுகளாய் நிராகரிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. பின்பு ஒரு நாள், அட்டார்னி ஷெல்லி திபோதியு அவருடைய வழக்கைக் குறித்துக் கேள்விப்பட்டார். வில்லியம்ஸை குற்றவாளி என்று நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பது மட்டுமல்லாது, இன்னொரு மனிதன் அந்த குற்றத்தை ஒப்புக்கொண்டான். தன் 76ஆம் வயதில் வில்லியம்ஸ் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். 

தீர்க்கதரிசிகளான எரேமியாவும் உரியாவும் இக்கட்டான சூழலில் இருந்தார்கள். மனந்திரும்பவில்லை என்றால் தேவன் நியாயந்தீர்க்கப்போவதாக யூதேயர்களுக்கு இவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்தனர் (எரே. 26:12-13, 20). இந்தச் செய்தியைக் கேட்ட யூதேய மக்களும் தலைவர்களும் கோபங்கொண்டு இவர்களை கொலைச் செய்ய துணிந்தனர். எகிப்திற்கு ஓடிப்போன உரியாவைக் கொண்டுவந்து, வெட்டிப்போட்டனர் (வச.23). ஏன் எரேயமியாவைக் கொல்லவில்லை? ஏனென்றால், அகீக்காம் “அவனுக்குச் சகாயமாயிருந்தான்;.” ஆகையால் அவன் கொலை செய்யப்படும்பொருட்டு மக்களிடம் ஒப்படைக்கப்படவில்லை (வச. 24). 

இதுபோன்று மரணத்தைச் சந்திக்கும் நபரை ஒருவேளை நாம் அறியாமலிருக்கலாம். ஆனால் நம் உதவி தேவைப்படும் யாரோ ஒருவரை நமக்குத் தெரியும். யாருடைய உரிமை மிதிக்கப்படுகிறது? யாருடைய திறமை ஒதுக்கப்படுகிறது? யாருடைய சத்தம் கேட்கப்படுவதில்லை? திபோதியு அல்லது அகீக்காம் போன்று துணிச்சலான அடியெடுத்து வைப்பது எளிதல்ல. ஆனால் அதுவே சரியானது. கர்த்தருடைய வழிநடத்துதலோடு யாருடைய சார்பில் நாம் நிற்கவேண்டியுள்ளது? 

நம்மை சீரமைக்கும் இயேசு

காரை வடிவமைக்கும் பிரிவில் வேலை செய்துகொண்டிருந்த அசோக், தவறு ஏதும் செய்யாதபோதிலும் அவனுடைய வேலையை இழக்க நேரிட்டது. மற்ற துறையில் செய்யப்பட்ட தவறினால், இவர்கள் வடிவமைத்த கார்களில் பிரச்சனை ஏற்பட்டது. பல விபத்துகளைச் சந்தித்த அவர்களுடைய வாகனங்களைக் குறித்து வெளியான செய்திகளினால், அவர்களுடைய கார்களை வாங்குவதை மக்கள் தவிர்த்தனர். அதினால், கம்பெனி நிர்வாகம் அசோக்கை வேலையை விட்டு நிறுத்தியது. அது அவனுக்கு ஏற்பட்ட நியாயமில்லாத சேதாரம். அது எப்போதுமே நியாயமற்றது. 

வரலாற்றின் முதல் சேதாரம், முதன்முதலில் மனிதன் பாவம் செய்தவுடனேயே நிகழ்ந்தது. தங்கள் நிர்வாணத்தைக் குறித்து ஆதாமும் ஏவாளும் வெட்கப்பட்டதினால், தேவன் அவர்களுக்கு “தோல் உடைகளை” உண்டாக்கிக் கொடுத்தார் (ஆதியாகமம் 3:21). இதை கற்பனை செய்வது சற்றுக் கடினம். ஆனால் அதற்காக, தோட்டத்தில் சுற்றித்திரிந்த ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட விலங்குகள் அடிக்கப்பட்டு, தோலுரிக்கப்பட்டிருக்க வேண்டும். 

அத்துடன் அது நிற்கவில்லை. தேவன் இஸ்ரவேலைப் பார்த்து, “தினந்தோறும் ஒரு வயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைக் கர்த்தருக்குத் தகனபலியாகப் படைக்கக்கடவாய்; காலைதோறும் அதைப் படைக்கவேண்டும்” (எசேக்கியேல் 46:13) என்று கட்டளையிட்டார். “தினந்தோறும்” அதை செய்யவேண்டுமாம். மனுஷர்களுடைய பாவங்களினால் எத்தனை ஆயிரம் விலங்குகள் இதுவரை பலியிடப்பட்டுள்ளது? 

தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசுகிறிஸ்து வந்து அதை மாற்றும்வரை நம்முடைய பாவங்களை கழுவுவதற்கு விலங்குகள் பலியிடப்படவேண்டியிருந்தது (யோவான் 1:29). இதனை “சீரமைக்கப்பட்ட சேதாரம்” எனலாம். ஆதாமின் பாவம் நம்மை கொன்றதுபோல, கடைசி ஆதாமாகிய இயேசுவின் கீழ்ப்படிதல் அவரை விசுவாசிப்பவர்களின் வாழ்க்கையை சீரமைக்கிறது (ரோமர் 5:17-19). “சீரமைக்கும் சேதாரமும்” நியாயமானது அல்ல – அது இயேசுவின் ஜீவனை இழக்கச்செய்தது –ஆனால் அது இலவசமானது. இயேசுவை விசுவாசித்து, அவர் கொடுக்கும் இரட்சிப்பை பெற்றுக்கொண்டால், அவருடைய நீதி நம் வாழக்கையில் செயல்படும். 

நீ யார்?

எங்கள் காணொலிக் காட்சியின் தலைவர், “காலை வணக்கம்!” சொன்னார். நானும் பதிலுக்கு “ஹலோ” சொன்னேன். ஆனால் நான் அவரைப் பார்க்கவில்லை. காணொலியில் என்னுடைய தோற்றம் எனக்கு இடைஞ்சலாய் இருந்தது. நான் இப்படியா இருக்கிறேன்? அந்த காணொலி கூடுகையில் எங்களோடு இணைந்த மற்றவர்களின் சிரித்த முகங்களையும் பார்த்தேன். அது அவரவரின் தோற்றத்தை சரியாய் காண்பித்தது. ஆக, இது நானாகத்தான் இருக்கமுடியும். நான் சற்று எடையைக் குறைக்கவேண்டும்; முடிவெட்ட வேண்டும்.

பார்வோனுடைய எண்ணத்தில் அவன் மேன்மையானவனாய் தெரிந்தான். அவன் “ஜாதிகளுக்குள்ளே.. பாலசிங்கத்துக்கு ஒப்பானவன்.. பெருந்தண்ணீர்களில் முதலையை” போன்று இருந்தவன் (எசே. 32:2). ஆனால் தேவனுடைய பார்வையில் அவன் யார் என்பது அறிவிக்கப்படுகிறது. அவனுடைய சரீரத்தை மிருகஜீவன்களுக்கு இரையாக்குவான் என்றும், “அநேகம் ஜனங்களை உன்னிமித்தம் திகைக்கப்பண்ணுவேன் ; அவர்களின் ராஜாக்கள்…மிகவும் திடுக்கிடுவார்கள்” (வச. 10) என்றும் உரைக்கிறார். தன்னைக் குறித்து மேன்மையான எண்ணத்திற்கு பார்வோன் தகுதியுள்ளவன் இல்லை.

தேவன் நம்முடைய பாவத்தை பார்க்கும்பார்வையில் நாம் நம்மை பார்க்காத வரையில், நம்முடைய ஆவிக்குரிய தோற்றம் நமக்கு அழகாய் தெரியலாம். தேவனுடைய பரிசுத்த வரையறைக்கு ஒப்பிடும்போது, நம்முடைய “நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது” (ஏசா. 64:6). ஆனால் தேவன் நிஜமான வேறொன்றை நம்மில் பார்க்கிறார்: அவர் இயேசுவைப் பார்க்கிறார், இயேசுவில் நம்மைப் பார்க்கிறார்.

உன்னுடைய தோற்றத்தைக் குறித்து சோர்ந்துபோயிருக்கிறாயா? உன்னுடைய தோற்றம் உண்மையில் நீங்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசுவை நம்பினால், அவரில் நிலைத்து, அவருடைய பரிசுத்தம் உன்னை மூடும்படி செய்யலாம். அப்போது, நீ கற்பனை செய்ததைக் காட்டிலும் அழகாய் தெரிவாய்.

மரண மண்டலம்

2019 ஆம் ஆண்டில், ஒரு மலை ஏறுபவர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சத்திலிருந்து தனது கடைசி சூரிய உதயத்தைக் கண்டார். அவர் ஆபத்தான ஏறுதலில் இருந்து தப்பினார். ஆனால் உயரமான இடம் அவரது இதயத்தை கசக்கியது. மேலும் அவர் மலையேற்றத்தில் இறந்தார். ஒரு மருத்துவ நிபுணர், மலை ஏறுபவர்கள் சிகரத்தின் உச்சத்தை தங்களுடைய பயணத்தின் முடிவாக எண்ணவேண்டாம் என எச்சரிக்கிறார். “அவர்கள் மரண மண்டலத்தில் இருக்கிறார்கள்” என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, அவர்கள் விரைவாக புற்பபட்டு கீழே வர வேண்டும்.

தாவீது தனது ஆபத்தான ஏறுதலில் இருந்து தப்பினார். அவர் சிங்கங்களையும் கரடிகளையும் கொன்றார். கோலியாத்தை கொன்றார். சவுலின் ஈட்டியைத் எடுத்து இராணுவத்தைத் தொடர்ந்தார். பெலிஸ்தர்களையும் அம்மோனியர்களையும் வென்று மலையின் உச்சத்தை அடைந்தார்.

ஆனால் தாவீது, தான் மரண மண்டலத்தில் இருப்பதை மறந்துவிட்டார். அவரது வெற்றியின் உச்சத்தில், “தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்” (2 சாமுவேல் 8: 6). அவர் விபச்சாரம் மற்றும் கொலை போன்ற செய்கைகளிலும் ஈடுபட்டார். அது அவரது ஆரம்ப தவறு? அவர் மலை உச்சியில் நீடித்தார். அவருடைய இராணுவம் புதிய சவால்களுக்கு புறப்பட்டபோது, அவர் “எருசலேமில் இருந்துவிட்டான்” (11:1). தாவீது ஒருமுறை கோலியாத்தை எதிர்த்துப் போராட முன்வந்தார்; இப்போது அவர் தனது வெற்றிகளின் பாராட்டுகளில் நிதானமாக இருந்தார்.

தேவன் உட்பட எல்லோரும் நீங்கள் சிறப்புடையவர் என்று கூறும்போது நிதானமாக தலைக்கணம் இல்லாமல் இருப்பது கடினம் (7:11-16). ஆனால் நாம் அப்படி தான் இருக்க வேண்டும். நாம் சில வெற்றிகளைப் பெறும்போது, நமது சாதனையை சரியான முறையில் கொண்டாடலாம், வாழ்த்துக்களை ஏற்கலாம். ஆனால் நாம் தொடர்ந்து பயணம் செய்யவேண்டும். நாம் மரண மண்டலத்தில் இருக்கிறோம். மலையிலிருந்து கீழே இறங்கவேண்டும். உங்கள் இருதயத்தையும் உங்கள் நடைகளையும் பாதுகாக்கும்படி தேவனிடம் கேட்டு, பள்ளத்தாக்கில் உள்ள மற்றவர்களுக்கு பணிவுடன் சேவை செய்யுங்கள்.

நடுநிலைக்கு மாற்றவும்

காரை கழுவுகிற தானியங்கி எந்திரத்தில் எனக்கு முன்னால் ஒருவர் இருந்தார். அவர் வேண்டுமென்றே தனது இடத்தின் பின்புறத்தில் நுழைந்து, அந்த இடத்தை அகற்றினார், எனவே அது அதிக சக்தி கொண்ட தூசு துடைக்கும் தூரிகைகளைப் பறிக்காது. அவர் உதவியாளருக்கு பணம் கொடுத்தார், பின்னர் தானியங்கி பாதையில் இழுத்துச் சென்றார் - அங்கு அவர் தனது டிரக்கை ஓட்டினார். உதவியாளர் அவரைப் பின்தொடர்ந்து, வாகனம் பின்னாக வருகிறது என்று கூச்சலிட்டு எச்சரித்தார். ஆனால் அந்த டிரக்கின் ஜன்னல்கள் மூடி இருந்தன, அவரால் கேட்க முடியவில்லை. அவர் கார் கழுவும் வழியாக நான்கே வினாடிகளில் கடந்தார். அவரது டிரக் கொஞ்சம் கூட ஈரமாகவில்லை.

எலியாவும் ஒரு பணியில் இருந்தார். அவர் பெரிய வழிகளில் தேவனை சேவிப்பதில் மும்முரமாக இருந்தார். அவர் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் பாகால் தீர்க்கதரிசிகளை தோற்கடித்தார். அது அவரை சோர்வடையச் செய்தது (1 இராஜாக்கள் 18:16-39ஐ காண்க). அவருக்கு நடுநிலையாக நேரம் தேவைப்பட்டது. தேவன் மோசேக்கு ஏற்கனவே வெளிப்பட்ட ஓரேப் கன்மலைக்கு எலியாவைக் கூட்டி வந்தார். மீண்டும் தேவன் மலையை அசையப்பண்ணினார். ஆனால் புயல் காற்று, பூகம்பம், அக்கினி அகிய எதிலும் தேவன் தென்படவில்லை. அதற்கு பின்பாக அமர்ந்த மெல்லிய சத்தத்தில் தேவன் உலியாவிடம் இடைபடுகிறார். அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு தேவனைச் சந்திக்க எலியா வெளியே வந்தார் (1 இராஜாக்கள் 19:13).

நீங்களும் நானும் ஒரு பணியில் இருக்கிறோம். நமது இரட்சகருக்காக பெரிய காரியங்களைச் செய்ய நம் வாழ்க்கையை இயக்குகிறோம். ஆனால் நாம் ஒருபோதும் நடுநிலைக்கு மாறாவிட்டால், நாம் வாழ்க்கையில் அதிவேகமாய் கடந்து அவருடைய ஆவியின் வெளிப்பாட்டை இழக்க நேரிடும். தேவன் மெல்லிய சத்தத்தில் பேசுகிறார், “நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவன் என்று அறிந்துகொள்ளுங்கள்” (சங்கீதம் 46:10). 

சாளரங்கள்

இமயமலையின் அடிவாரத்திற்கு அருகில், ஒரு சுற்றுலா பார்வையாளர் சாளரங்கள் இல்லாத வீடுகளின் வரிசையை கவனித்தார். அவரது வழிகாட்டி, சில கிராமவாசிகள் தூங்கும்போது பேய்கள் தங்கள் வீடுகளுக்குள் புகுந்துவிடக்கூடும் என்று அஞ்சினர், எனவே அவர்கள் எதுவும் ஊடுருவமுடியாத சுவர்களைக் கட்டியுள்ளனர் என்று விவரித்தார்.  அம்மாதிரியான வீட்டின் உரிமையாளர் இயேசுவைப் பின்தொடரத் தொடங்கிவிட்டார் என்றால் நீங்கள் சொல்ல முடியும், ஏனென்றால் அவர் வெளிச்சம் உள்ளே வரும்படியான சாளரத்தை வைத்திருப்பார்.       

நாம் அதை அப்படியே நம் வாழ்வில் பார்ப்பதில்லை இருப்பினும் இதேபோன்ற ஒரு சூழ்நிலை நம்மில் நிகழக்கூடும்,. நாம் பயமுறுத்துகிற, இரு முனைக்கும் மத்தியில் உள்ள காலங்களில் வாழ்கிறோம். குடும்பங்களையும் நண்பர்களையும் பிளவுபடுத்தும் கோபத்தை உண்டுபண்ணும் விரிசல்களை சாத்தானும் அவனுடைய பேய்களும் தூண்டுகின்றன. அப்போது நான் அடிக்கடி என் சுவர்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்வது போல் உணர்கிறேன். ஆனால் நான் ஒரு சாளரத்தை வைக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

இஸ்ரேவேலர் உயர்ந்த சுவர்களில் தஞ்சம் புகுந்தனர், ஆனால் தேவனோ அவர்களுடைய பாதுகாப்பு அவரிடத்தில் உள்ளது என்று கூறினார். அவர் வானத்திலிருந்து ஆளுகை செய்கிறார், அவருடைய வார்த்தை அனைத்தையும் ஆளுகிறது (ஏசாயா 55: 10–11). இஸ்ரேவேல் அவரிடத்தில் திரும்பி வந்தால், தேவன் “அவர்கள் மேல் மனதுருகுவார்” (வச.. 7) மற்றும் உலகை ஆசீர்வதிப்பதற்காக அவர்களை தம்முடைய மக்களாக மீட்டெடுப்பார் (ஆதியாகமம் 12: 1–3). அவர் அவர்களை உயர்த்துவார், இறுதியில் அவர்களை வெற்றிகரமான அணிவகுப்பில் வழிநடத்துவார். அவர்களின் கொண்டாட்டம் “அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்” (ஏசாயா 55:13).

சில நேரங்களில் சுவர்கள் அவசியம். சாளரங்கள் கொண்ட சுவர்கள் மிகச் சிறந்தவை. நம் எதிர்காலத்திற்காக நாம் தேவனை நம்புகிறோம் என்பதை அவை உலகுக்குக் காட்டுகின்றன. நம் அச்சங்கள் உண்மையானவை. நம்  தேவன் பெரியவர். சாளரங்கள் நம்மை இயேசுவுக்கு நேராய் - “உலகின் ஒளி”க்கு நேராய் (யோவான் 8:12) - மேலும் அவரின் தேவை உள்ள மற்றவர்களுக்கு நேராய் திறக்கிறது.

உன் மூக்கை பிடுங்கி விட்டேன்

“சிலைகளின் மூக்கு ஏன் உடைக்கப்பட்டிருக்கிறது?” புரூக்ளின் அருங்காட்சியகத்தில் எகிப்திய கலையின் கண்காணிப்பாளரான எட்வர்டை பார்வையாளர்கள் கேட்கும் முதல் கேள்வி இதுதான்.

அன்றாட பயன்பாட்டினால் ஏற்படும் சாதாரண சேதம் என்று அவை சேதம் அடைந்திருப்பதை குறித்து எட்வர்ட் குறை கூற முடியாது. ஏனெனில், சுவரிலுள்ள இருபரிமாண சித்திரங்களிலும் மூக்கு பகுதியை காணவில்லை. அத்தகைய அழிவு வேண்டுமென்றே இருந்திருக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். எதிரிகள் எகிப்தின் தேவர்களைக் கொல்ல வேண்டுமென உத்தேசித்திருந்தனர். இது அவர்களுடன் “உன் மூக்கை பிடுங்கி விட்டேன்” என்ற விளையாட்டை அவர்கள் விளையாடுவது போல் இருக்கிறது. படையெடுத்துவந்த வீரர்கள் அந்த விக்கிரகங்களின் மூக்கை உடைத்தனர் அதனால் அவற்றால் சுவாசிக்க முடியாது என்றெண்ணினர்.

அப்படியா? அவ்வளவுதானா? இது போன்ற தேவர்களை வைத்திருப்பதால் தான் சிக்கலில் இருப்பதை பார்வோன் அறிந்திருக்க வேண்டும். ஆம், அவருக்கு இராணுவமும், முழு தேசத்தின் விசுவாசமும் துணையாக இருந்தது. சோர்வுற்ற அடிமைகளான எபிரேயர்கள் மோசே என்ற பயந்த தப்பியோடியவரின் தலைமையில் இயங்கினர். ஆனால் இஸ்ரயேலுடன் ஜீவனுள்ள தேவன் இருந்தார், பார்வோனின் தெய்வங்கள் பாசாங்கு செய்பவை. பத்து வாதைகளுக்குப் பிறகு, அவர்களின் கற்பனை வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

இஸ்ரயேலர் புளிப்பற்ற அப்பத்தை ஒரு வாரத்திற்கு சாப்பிட்ட போது, புளிப்பற்ற அப்பத் திருவிழாவுடன் தங்கள் வெற்றியை கொண்டாடினார்கள். (யாத்திராகமம் 12:17; 13: 7-9). புளிப்பு பாவத்தை அடையாளப்படுத்துகிறது. மேலும் தங்களுடைய மீட்கப்பட்ட வாழ்க்கை முற்றிலும் அவருக்கே உரியது என்று அவருடைய மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார்.

நம் பிதா விக்கிரகங்களிடம் , “உங்கள் மூக்கை பிடுங்கி விட்டேன்” என்றும் அவருடைய பிள்ளைகளிடம் “உங்கள் வாழ்வு கிடைத்தது” என்றும் கூறுகிறார். உங்களுக்கு சுவாசத்தை கொடுக்கும் தேவனை சேவியுங்கள், அவருடைய அன்பான கரங்களில் இளைப்பாருங்கள்.

தைரியத்தை உடுத்திக்கொள்

சுவிசேஷம் தடை செய்யப்பட்ட தேசத்தில் ஆண்ட்ரூ வாழ்ந்து வந்தார். உங்கள் விசுவாசத்தை எப்படி ரகசியமாக காத்து வருகிறீர்கள் என்று நான் கேட்டபோது, அவர் அதை ரகசியமாக வைப்பதில்லை என்று கூறினார். அவர் சபையின் முத்திரையை எப்போதும் தனது சட்டையின்மேல் அணிந்து தான் வெளியே செல்லுவார். அவர் கைது செய்யப்படும் நேரங்களில் கூட காவலர்களிடம் “அவர்களுக்கும் இயேசு தேவை” துன்று கூறுவார். அவர் பக்கத்தில் யார் இருக்கிறார் என்று ஆண்ட்ரு அறிந்திருந்ததால் அவர் தைரியமாக இருந்தார்.

தன்னை கைது செய்யும்படி 50 காவலர்களை இஸ்ரவேலின் ராஜா அனுப்பின போதும் எலியா அச்சுறத்தப்படவில்லை (2 இரா 1:9). தேவன் யார் பக்கம் இருக்கிறார் என்று அவர் அறிந்து அந்த 50 காவலாளிகளை பட்சிக்கும்படி வானத்திலிருந்து அக்கினியை வரப்பண்ணினார். ராஜா மறுபடியும் அதிக காவலாளிகளை அனுப்பினான், எலியா மறுபடியும் அதையே செய்தார். மூன்றாவது முறையாக வந்த காவலாளிகள் தலைவன் தங்களை விட்டுவிடும்படி எலியாவை மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டான். எலியா அவர்களை பார்த்து பயந்ததை விட அவர்கள் எலியாவை பார்த்து பயந்தது தான் அதிகம் எனவே தேவதூதன் எலியாவை அவர்களுடன் போவது பாதுகாப்பானது என்று கூறினான். (வச 13-15)

நமது எதிராளிகள் மீது அக்கினியை வரவழைக்க இயேசு விரும்புவதில்லை. அவரது சீஷர்கள் ஒரு சமாரிய கிராமத்தின் மேல் தாங்கள் அக்கினி வரவழைக்கிறோம் என்று கேட்டபோது, இயேசு அவர்களை அதட்டினார் (லூக்கா 9:51-55). நாம் வேறு ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். இருப்பினும் எலியாவை போன்று தைரியம் உள்ளவர்களாய் - எல்லா மக்களுக்காக மரித்த இரட்சகரை பற்றி கூற தயாராக இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். அது ஒரு தனி நபராக நாம் 50 பேருக்கு சமமாக நிற்பது போன்று இருக்கும் ஆனால் உண்மையில் அது ஒருவரான தேவனே நிற்பது. மற்றவர்களிடம் தைரியமாக அன்பு காட்ட இயேசு தருகிறார்.