எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லிசா எம். சாம்ராகட்டுரைகள்

ஓரத்தில் காணப்பட்ட போது

ஒரு மோட்டார் வாகன செயல்முறை விளக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள், பிரமிக்கச் செய்யும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில் இருந்த நான், ஓடுவதற்கு தயாராக இருந்த நிலையில் பார்த்துக் கொண்டிருந்தேன். சுற்றிலும் பார்த்த நான், 3 குழந்தைகள், அருகில் இருந்த மரத்தில் ஏறியிருந்தவாறு பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். அவர்களால் இக்கூட்டத்தினரின் முன்பாக நின்று கொண்டு, இந்த செயலைப் பார்க்க முடியவில்லை.

உயரமான இடத்திலிருந்து இதனை பார்த்துக் கொண்டிருந்த   அக்குழந்தைகளை கவனித்த எனக்கு, லூக்கா கண்டுபிடித்த    செல்வந்தனான ஆயக்காரன் சகேயு (லூக்.19:2) நினைவுக்கு வந்தான். இந்த வரி வசூலிப்பவர்களை, இஸ்ரவேலர், ரோம அரசுக்காக வேலை செய்பவர்களாகவும், தங்களுடைய சொந்த          ஜனங்களிடமிருந்தே அதிக வரியை வசூலித்து, தங்களின் வருமானத்தையும் பெருக்கிக் கொள்பவர்களாகவும் பார்க்கின்றார்கள். எனவே, சகேயு தன்னுடைய சொந்த சமுதாயத்தினராலே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தான்.

இயேசு எரிகோவிற்குச் சென்ற போது, சகேயு அவரைப் பார்க்க ஆவலாயிருந்தான். ஆனால் ஜனக் கூட்டத்தினிடையே அவரைப் பார்க்க கூடாதவனாக இருந்தான். ஒரு வேளை விரக்தியையும் தனிமையையும் உணர்ந்த அவன் ஒரு காட்டத்தி மரத்தில் ஏறி, இயேசுவை எப்படியாகிலும் பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டான் (வ.3-4). அங்கே, அந்த கூட்டத்தினருக்கு வெளியே, இயேசு அவனைத் தேடி, அவனுடைய விருந்தினராக, அவனுடைய வீட்டிற்கு தான் வர விரும்புவதைத் தெரிவிக்கின்றார் (வ.5).

 இவ்வுலகத்தில், “இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் (வ.9-10) என்பதை சகேயுவின் கதை நமக்கு வெளிப்படுத்துகின்றது, இயேசு அவனுக்கு தன்னுடைய நட்பையும், இலவச ஈவாகிய இரட்சிப்பையும் கொடுத்தார். நம்முடைய சமுதாயத்தின் ஓரத்தில் இருப்பதாக நாம்    உணர்ந்தாலும், “கூட்டத்தின் கடைசிக்குத்” தள்ளப்பட்டாலும், தேவன் அங்கேயும் நம்மைக் காண்கின்றார்  என்ற உறுதியோடு இருப்போம்.

கிரகணம்

கண்களைப் பாதுகாக்கும் உபகரணத்தோடும், வீட்டில் செய்த சில தின்பண்டங்களோடும் அந்தக் காட்சியைப் பார்க்கக் கூடிய இடத்திற்குச் சென்றேன். பல மில்லியன் மக்களோடு நானும் என்னுடைய குடும்பத்தினரும் மிக அரிதாக நடைபெறக் கூடிய முழு சூரிய கிரகணத்தைப் பார்த்தோம், சூரியனின் முழுபகுதியையும் நிலவு மறைத்தது.

கோடை காலத்தின், ஒரு பிரகாசமான மதிய வேளையில், இந்த கிரகணத்தின் காரணமாக இருள் சூழ்ந்தது. நமக்கு இந்த கிரகணம் ஒரு வேடிக்கை நிகழ்ச்சியாகவும் படைப்புகளின் மீது தேவன் கொண்டுள்ள வல்லமையை வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றது (சங். 135:6-7). ஆனால் சரித்திரம் முழுமையையும் பார்ப்போமாகில், பகல் வேளையில் இருள் சூழ்வதை பயத்தோடு, ஒரு விசித்திரமான நிகழ்வாகக் கருதுகின்றனர் (யாத். 10:21; மத். 27:45), இதனை, கெட்ட காரியங்கள் நடைபெறுவதற்கு ஓர் அடையாளமாகக் கருதுகின்றனர்.

இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிந்த போது, ஆமோஸ் தீர்க்கதரிசியும் இருளை குறித்து இவ்வாறு தான் எண்ணியிருப்பார். தேவனை அவர்கள் மறந்தால் அழிவு அவர்கள் மேல் வரும் என வடதேசத்தைக் குறித்து ஆமோஸ் தீர்க்கதரிசி எச்சரித்தார், தேவன் இதற்கு அடையாளமாக, “அந்நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை அஸ்தமிக்கப்பண்ணி, பட்டப் பகலிலே தேசத்தை அந்தகாரப் படுத்துவேன்” (ஆமோ. 8:9) என்றார்.

ஆனால் தேவனுடைய மேலான நோக்கமும், விருப்பமும் என்னவெனில், எல்லாவற்றையும் சரிப்படுத்துவதே, ஜனங்கள் அடிமைகளாக இரு ந்தாலும், ஒரு நாள், தேவன் அவர்களை மீட்டு, எருசலேமுக்குக் கொண்டு வருவார், “ அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப் போனதைச் சீர்படுத்துவேன்” (9:12) என்கின்றார்.

இஸ்ரவேலரைப் போன்று, நம்முடைய வாழ்வு, மிகஇருண்ட வேளையில் இருந்தாலும், எல்லா ஜனத்திற்கும் வெளிச்சத்தையும், நம்பிக்கையையும் கொண்டு வரும் படி தேவன் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது நமக்கு ஆறுதளிப்பதாக உள்ளது (அப். 15:14-18).

திரையிட்டு மறைக்கப்பட்டது

என்னுடைய ஆகாய விமானம் நிற்பதற்கு சற்று முன்பு, விமானப் பணியாளர் முதல் வகுப்பைப் பிரிக்கும் திரையை நீக்கினார், நான் விமானங்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே இருந்த மிகப் பெரிய வேறுபாட்டை ஆச்சரியத்துடன் பார்த்தேன். முதல் வகுப்பில் பிரயாணம் செய்யும் பிரயாணிகள், அதிக காப்பீட்டுத் தொகையோடு கூடிய வசதியான இருக்கைகளையும், சற்று அகலமான கால்களை வைத்துக் கொள்ளும் இடைவெளியையும், தனிப்பட்ட சேவை வசதியையும் அநுபவிக்கின்றனர். அந்த அதிகப்படியான வசதிகளிலிருந்து நான் பிரிக்கப் பட்டிருக்கின்றேன் என்பதை அந்த திரை காண்பித்தது. வெவ்வேறு கூட்ட மக்களிடையே பிரத்தியேக பாகுபாடு காண்பித்தலை சரித்திரத்தில் அநேக இடங்களில் காண்கின்றோம். எருசலேமின் தேவாலயத்திலும் அத்தகைய ஒரு பாகுபாட்டைக் காணமுடிகின்றது, அது ஒருவரின் கொடுக்கும் திறனைச் சார்ந்ததல்ல. யூதர்கள் அல்லாத ஜனங்கள், ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் தான் ஆராதிக்க அனுமதிக்கப் படுகின்றனர். இதற்கு அடுத்து வருவது பெண்களுக்கான பிரகாரம், அதில் மிக அருகில் இருப்பது ஆண்களுக்கான பகுதி. கடைசியாக மகா பரிசுத்த ஸ்தலம் என்றழைக்கப்படும் இடம், தேவன் தம்மை எப்பொழுதாகிலும் வெளிப்படுத்தும் இப்பகுதி ஒரு திரையினால் மறைக்கப்பட்டிருக்கும், இப்பகுதியினுள் அபிஷேகிக்கப் பட்ட ஆசாரியர்கள் மட்டும் ஆண்டிற்கு ஒரு முறை செல்வர் (எபி. 9:1-10).

ஆனால் இதில் ஆச்சரியம் என்னவெனில், இந்த பிரிவினைகள் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. தேவனைச் சேரும்படி தேடுபவர்களுக்கு இடையூறாக இருக்கும் எந்த தடையையும் இயேசு முற்றிலுமாக அகற்றினார் – நம்முடைய பாவங்களையும் நீக்கினார் (10:17). கிறிஸ்து மரித்தபோது தேவாலயத்தின் திரைச் சீலை இரண்டாகக் கிழிந்தது போல (மத். 27:50-51), சிலுவையில் அறையப்பட்ட அவருடைய சரீரத்தின் மூலம், தேவனுக்கும் நமக்கும் இடையேயுள்ள தடையை கிழித்தெரிந்தார். எந்த ஒரு தடையும் உயிரோடிருக்கும் நம்முடைய தேவனின் அன்பையும், மகிமையையும், விசுவாசிகள் அநுபவிக்கக் கூடாதபடிக்கு பிரிக்கவில்லை.

முழுமையாக வெளிப்படுத்தல்

“மேரி பாப்பின்ஸ் ரிட்டர்ன்ஸ்” என்ற திரைப் படத்தில் வரும் பிரசித்தி பெற்ற அமெரிக்க நடிகையான எமிலி பிளன்ட்டினுடைய அழகிய குரலை திரைப் பட ரசிகர்கள் கேட்டிருப்பர். இவளுடைய திருமண வாழ்வின் நான்காவது ஆண்டில், வியத்தகு வகையில் அவளுடைய கணவன் அவளின் குரல் வளத்தைக் கண்டுபிடித்தார். ஒரு நேர்முக பேட்டியின் போது, அவன் தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான், அவன் முதன் முறையாக அவள் பாடுவதைக் கேட்ட போது, “இதனைக் குறித்து எப்பொழுது என்னிடம் சொல்லலாம் என்றிருந்தாய்?” என்று நினைத்ததாகக் கூறினான்.

நம்முடைய உறவுகளிலும், அநேக நேரங்களில் நம்மை வியக்கச் செய்யும், புதியதும், எதிர் பாராததுமான விளக்கங்களைக் கற்றுக் கொள்வோம். மாற்கு சுவிசேஷத்தில், ஆரம்பத்தில் கிறிஸ்துவின் சீஷர்கள் இயேசுவைக் குறித்து ஒரு தெளிவற்ற காட்சியையே கொண்டிருந்தனர், அவர் யார் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள போராடிக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் கலிலேயா கடலில் இயேசுவைச் சந்தித்தபோது, அவர் தன்னை இன்னும் அதிகமாக வெளிப்படுத்தினார், இம்முறை இயற்கையின் சக்திகளுக்கு மேலாக அவருக்கிருந்த வல்லமையைக் காண்பித்தார்.

ஐயாயிரத்திற்கும் மேலான ஜனங்களைப் போஷித்த பின்பு, இயேசு தன் சீஷர்களை கலிலேயா கடலின் வழியாக அனுப்புகின்றார், அங்கு அவர்கள் வலிமையான புயலில் சிக்கிக் கொள்கின்றனர். விடிவதற்கு சற்று முன்பு, தண்ணீரின் மேல் ஒருவர் நடந்து வருவதை சீஷர்கள் கண்டு பயந்தனர். அவர்களுக்குப் பழக்கமான குரலில், கிறிஸ்துவின் ஆறுதலளிக்கும் வார்த்தைகளைக் கேட்டனர், “திடன்கொள்ளுங்கள், நான் தான், பயப்படாதிருங்கள்” (மாற்.6:50) என்ற வார்த்தைகளைக் கேட்டனர். பின்பு அவர் சீற்றத்தோடிருந்த கடலை அமர்த்தினார். இந்த வல்லமையைக் கண்ட சீஷர்கள் “மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்” (6:51), ஆயினும் கிறிஸ்துவின் வல்லமையை முழுமையாக கிரகித்துக் கொள்ள போராடினர்.

நம்முடைய வாழ்க்கைப் போராட்டத்திலும், இயேசுவின் வல்லமையை நாம் அநுபவிக்கும் போது தான் அவர் யார் என்பதைப் பற்றிய முழு காட்சியை பெற்றுக் கொள்கின்றோம், அது நம்மை வியக்கச் செய்கின்றது. 

புத்தகத்தில் ஆழ்ந்த இன்பம்

சுன்டொகு (Tsundoku) என்ற ஜப்பானிய வார்த்தை எனக்கு மிகவும் தேவையானது! இது நாம் இன்னமும் வாசிக்காமல், படுக்கைக்கு அருகிலுள்ள மேசையில் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களைக் குறிக்கும். நாம் கற்றுக்கொள்ளத் தேவையானவற்றைப் புத்தகங்கள் கொடுக்கின்றன, அவை, நம்மை வேறொரு காலத்திற்கும் இடத்திற்கும் கொண்டுசெல்பவை. அவை தரும் மகிழ்ச்சியையும் உட்கருத்துகளையும் பெற்றுக் கொள்வதற்கு விரும்புகின்றேன், ஆகவே தான் நான் இவற்றை வைத்துள்ளேன்.

புத்தகங்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு உதவியாகவும் இருக்கின்றன என்ற உண்மை எல்லா புத்தகங்களுக்கும் மேலான புத்தகமான வேதபுத்தகத்திற்கு மிகப் பொருத்தமானது. இஸ்ரவேல் ஜனங்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பைப் பெற்ற புதிய தலைவனான யோசுவாவை தேவன் இந்த நியாயப்பிரமாண புத்தகத்தை ஆழ்ந்து கற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்துவதைப் பார்க்கின்றோம் (யோசு. 1:8).

யோசுவா சந்திக்க இருக்கின்ற கஷ்டங்களை அறிந்த தேவன், அவனிடம், “நான் உன்னோடும் இருப்பேன்” (வச. 5) என்கின்றார். யோசுவா தேவனுடைய நியாயப் பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் போது, அவருடைய உதவி அவனுக்குக் கிடைக்கும். தேவன் அவனிடம், “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின் படியெல்லாம் நீ செய்ய கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக” (வச. 8) என்றார். யோசுவா நியாயப்பிரமாணப் புத்தகத்தை வைத்திருந்த போதிலும், அதன் உட்கருத்தையும், தேவன் யார் என்பதையும், அவர் தன்னுடைய ஜனங்களுக்கு வைத்திருக்கின்ற நோக்கத்தையும் அறிந்துகொள்ளும்படி, அதை உண்மையாய் தேட வேண்டுமென தேவன் விரும்புகின்றார்.

உன் வாழ்நாட்களைக் கடந்து செல்வதற்கு உனக்கு அறிவுரை தேவையா? சத்தியம் அவசியமா? ஊக்கம் வேண்டுமா? வேதபுத்தகத்தை வாசிக்க நேரம் செலவிட்டு, அதற்குக் கீழ்ப்படிவாயானால், வாழ்விற்குத் தேவையான பெலனைக் கொடுக்கும் வாசனை நிரம்பிய வார்த்தைகளை அதன் பக்கங்களில் காண்பாய் (2 தீமோ. 3:16,17).

எப்பொழுதும் நம்மோடிருக்கும் அவருடைய பிரசன்னம்

2018 ஆம் ஆண்டு, உலக கோப்பையின் போது, கொலம்பியாவின் முன்னோடி வீரரான ரடாமேல் ஃபால்கா, எழுபதாவது நிமிடத்தில் போலந்துக்கு எதிராக கோல் அடித்து, வெற்றியைப் பிடித்தார். சர்வ தேச விளையாட்டுப் போட்டிகளில், ஃபால்காவின் கோல், முப்பதாவது கோலாகும். சர்வ தேச  போட்டிகளில் பங்கு பெற்ற கொலம்பியா வீரர்களில், அதிக கோல் போட்டவர் என்ற பெயரையும் வாங்கித்தந்தது.

ஃபால்கா, கால் பந்து மைதானத்தில் இருக்கும் போது, தனது ஒவ்வொரு வெற்றியின் போதும் தன்னுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு கோலுக்குப் பின்னரும் தன்னுடைய மேல் சட்டையை உயர்த்திக் காட்டுவார், உள்சட்டையில், “இயேசு உன்னோடு இருக்கும் போது, நீ தனியாயிருப்பதில்லை” என்ற வார்த்தை இருக்கும்.

ஃபால்காவின் வார்த்தைகள் நம்மையும் தேவன் தருகின்ற உறுதியளிக்கும் வாக்குத்தத்தத்திற்கு நேராக வழிநடத்துகிறது. “உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” (மத். 28:20) என்றார். அவர் பரலோகத்திற்குச் செல்வதற்கு முன்பாக, தன்னுடைய சீஷர்களிடம், அவருடைய ஆவியின் மூலமாக, அவருடைய பிரசன்னம் எப்பொழுதும் அவர்களுடனே இருக்கும் என உறுதியளிக்கிறார்  (வ.20, யோவா.14:16-18). கிறிஸ்துவின் ஆவியானவர் அவர்களோடிருந்து, அவர்கள் இயேசு கிறிஸ்துவைக்குறித்த செய்தியை அருகிலும், தூரத்திலும் உள்ள பட்டணங்களுக்கு எடுத்துச் செல்லும் போது, அவர்களை வழிநடத்தி, பாதுகாத்து, பெலப்படுத்தினார். அவர்கள் அறியாத இடங்களுக்குச் செல்லும் போது, அவர்கள் தனிமையை உணர்ந்த போதும், கிறிஸ்துவின் வார்த்தைகள் அவர்களின் செவிகளில் எதிரொலித்தன, தேவன் அவர்களோடு இருக்கிறார் என்பதை நினைவு படுத்தியது.

நாம் எவ்விடத்திற்குச் சென்றாலும் சரி, வீட்டிற்கு அருகிலோ, வெகு தொலைவிற்கோ அல்லது இயேசுவை அறியாதவர்களின் மத்தியில் இருந்தாலும், இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நாம், இந்த வார்த்தையை உறுதியாகப் பற்றிக்கொள்வோம். நாம் தனிமையாயிருப்பது போல உணர்ந்தாலும், நாம் இயேசுவிடம் ஜெபிக்கும் போது, அவர் நம்மோடிருக்கிறார் என்ற ஆறுதலைப் பெற்றுக்கொள்வோம்.

நீ ஒரு போதும் மறக்கப்பட்டுப் போவதில்லை

பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, பியானோவின் அடிப்படை பாடங்களைக் கற்றுக் கொண்டேன் என்பதை என்னுடைய பிள்ளைகளுக்கு நிரூபித்துக்காட்ட, நான் பியானோவை வாசிக்கும்படி அமர்ந்தேன். சி மேஜர் இசையில் ஆரம்பித்தேன். கடந்த  இருபது ஆண்டுகளில் மிகச் சிறிய அளவே வாசித்திருப்பேன். ஆனால் என்ன ஆச்சரியம்!  இசை இன்னமும் என் நினைவிலிருக்கிறது, எனக்கு ஒரு தைரியமும் கிடைத்தது, நான், என் நினைவிலிருந்து, ஏழு வெவ்வேறு ஆதாரச் சுருதிகளையும், ஒவ்வொன்றாகப் போட ஆரம்பித்தேன். நானே  அதிர்ந்து போனேன்! பல ஆண்டுகளின் பயிற்சி, அந்தப் பாடங்களை என்னுடைய மனதில் பதித்து விட்டது, விரல்களுக்குத் தேவையான நுட்பங்களும், என்னுடைய மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அவை உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்துவிட்டன.

சில காரியங்களை, நாம் மறக்கவே முடியாது. தேவன் தம்முடைய பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பும், நம்முடைய மங்கிப் போகும் நினைவைப் போல் அல்லாமல், அவருடைய மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. உண்மையில் தேவன் ,நம்மை மறப்பவரல்ல. ஆனால், புறதேசத்திற்கு சிறைப்பட்டுப் போன இஸ்ரவேலர்கள், கர்த்தர் நம்மைக் கைவிட்டார், ஆண்டவர் நம்மை மறந்தார் என்று சொல்கின்றார்கள், (ஏசாயா49:14). ஏசாயா தீர்க்கன் மூலமாக தெளிவாக கூறவிரும்புகிறார். “ஸ்திரியானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை” (வ.15) என்று உறுதியாகக் கூறுகின்றார். 

தேவன் தன்னுடைய மாறாத அன்பை, அவர்கள் அறிந்து கொள்ளும்படியும் தன்னுடைய பிள்ளைகளின் மீது அவர் கொண்டுள்ள கரிசனையை, அவர்கள் தெரிந்து கொள்ளும் படியும், “இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்,” (வ.16) என்கின்றார். இது, அவருடைய பிள்ளைகளின் மீது அவர் எத்தனை விழிப்பாயிருக்கின்றார் என்பதைக் காட்டுகிறது. அவர்களுடைய முகங்களும், பெயர்களும் எப்பொழுதும் அவருக்கு முன்பாக நிற்கின்றன.

இன்றும் கூட, நாம் தேவன் நம்மை மறந்து விட்டார், கைவிட்டு விட்டார் என்று எளிதில் கூறிவிடுகின்றோம். ஆனால் நம்மை அவர் உள்ளங்கைகளில் வரைந்து வைத்திருக்கிறார் என்பது எத்தனை ஆறுதலாயிருக்கின்றது. இப்பொழுதும் நம்முடைய தந்தை நம்மை மறக்கவில்லை, நம்மைப் பாதுகாக்கின்றார், நம் மீது அன்பு செலுத்துகின்றார் என்பதை மறவாதே.

தழும்புகள் கூறும் கதைகள்

என்னுடைய அம்மா வளர்த்து வரும், பாண்டா முகம் கொண்ட பான்சி மலர்களை ஒரு வண்ணத்துப்பூச்சி சுற்றிச் சுற்றி வந்தது. நான் குழந்தை யாயிருந்த போது, அதைப் பிடித்து விட ஆவலாயிருந்தேன். நான், எங்களது பின் பக்க வளாகத்திலிருந்து, வேகமாக சமையலறைக்குள் வந்து, ஒரு கண்ணாடி குவளையை எடுத்துக் கொண்டு திரும்பிய போது, பின்புற சிமென்ட் தளத்தில் வழுக்கி விழுந்தேன். என்னுடைய கரத்திருந்த கண்ணாடி குவளை உடைந்து, என்னுடைய கணுக்கையை வெட்டியது. அவ்விடத்தில் பதினெட்டு தையல்கள் போட வேண்டியதாகி விட்டது. இன்றும், என்னுடைய கணுக்கையில் கம்பளி பூச்சி போன்ற தழும்பு காணப்படுகின்றது. அந்த தழும்பு, இன்றைக்கும் நான் காயப்பட்டதையும், மீண்டும் சுகம் பெற்றதையும் கூறிக் கொண்டிருக்கிறது.

இயேசு, மரித்து, உயிர்தெழுந்து, சீடர்களுக்கு காட்சியளித்த போது, அவர் தன்னுடைய தழும்புகளைக் காண்பித்தார். தோமா, அவருடைய “கைகளில் ஆணிகளால் உண்டான காயத்தைத்’’ தான், காண வேண்டும் என்கின்றார், என யோவான் எழுதுகின்றார். இயேசு தோமாவை நோக்கி, நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு” என்றார் (யோவா. 20:25,27). அவர் உயிர்த்தெழுந்த பின்பு, அவருடைய பாடுகளால் ஏற்பட்ட காயத்தின் தழும்புகளை பார்க்க முடிகிறது, அது, அவர் அதே இயேசு தான் என்பதைக் காட்டுகிறது

இயேசுவின் தழும்புகள் அவர் இரட்சகர் என்பதையும், மீட்பின் கதையையும் நமக்குச் சொல்கின்றது. அவருடைய பாதங்களிலும், கரங்களிலும் ஏற்பட்ட துளைகளும், விலாவில் ஏற்பட்ட குழியும், அவர் நமக்காகப் பட்ட வேதனைகளையும், காயங்களையும், அதன் பின் சுகமடைந்ததையும் சொல்லுகின்றது. நம்மை முற்றிலும் மீட்டுக்கொள்ளவே அவர் இத்தனை பாடுகளையும் ஏற்றுக்கொண்டார்

இயேசுவின் தழும்புகள் கூறும் கதையை நீ எப்பொழுதாகிலும் நினைத்துப் பார்த்ததுண்டா? 

 

இது நான் தான்

பி.டி.பார்னம் என்பவரின் வாழ்க்கையையும், அவருடைய சர்க்கஸ் அநுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட, பிரசித்திப் பெற்ற “த கிரேடெஸ்ட் ஷோ மன்” என்ற திரைப்படத்தின் முன் இசையாக, அனைவரையும் ஈர்க்கும் “திஸ் இஸ் மீ” என்ற, பாடல் மறக்கமுடியாத வகையில் இசைக்கப்படும். அந்த படத்தில் வரும் நடிகர்களால் இப்பாடல் பாடப்படும், இந்த நடிகர்கள், சமுதாயத்தின் விதிமுறைகளுக்கு இணங்கி செயல்படவில்லையென்பதற்காக, அவர்கள் சந்தித்த இகழ்ச்சிகளையும், கேவலங்களையும் விளக்குவதோடு, கொடிய வார்த்தைகள் மனிதனைக் கொல்லும் துப்பாக்கி குண்டுகளெனவும், நிரந்தர காயத்தை ஏற்படுத்தும் கத்திகள் எனவும் இந்த பாடலின் வரிகள் கூறுகின்றது. 

கடுஞ்சொற்களால் ஏற்பட்ட அகக்காயங்களை எத்தனை மக்கள் தாங்கிக் கொண்டு வாழ்கின்றனர் என்பதை இப்பாடல் தெரிவிக்கின்றது.

ஒருவருடைய வார்த்தைகள் ஏற்படுத்தும் காயத்தின் வன்மையையும், அது, நீண்ட காலம் நிலைத்திருக்கும் கொடுமையையும் யாக்கோபு அறிந்திருந்தார். எனவே நாவைக் குறித்து அது அடங்காத பொல்லாங்குள்ளதும், சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது (யாக். 3:8). என்கின்றார். இந்த வலிமையான ஒப்பிடுதலின் மூலம், விசுவாசிகள் தங்கள் வார்த்தைகளின் மிகுந்த வல்லமையை உணர்ந்துகொள்ள வேண்டுமென யாக்கோபு வலியுறுத்துகின்றார். இதற்கும் மேலாக, ஒரே வாயினாலே தேவனைத் துதித்துக் கொண்டும், தேவனுடைய சாயலாக படைக்கப்பட்ட மனிதனை தூஷிக்கவும் முற்படுகிறோம் என்கின்றார் (வச. 9-10).

“திஸ் இஸ் மீ” என்ற பாடல் வார்த்தைகளினால் காயப்படுத்துதலை விளக்குகிறது. நாம் மகிமைக்குரியவர்களென்பதாக வேதாகமம் உறுதியளிக்கின்றது. இந்த உண்மை ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு தனி அழகையும், கெளரவத்தையும் கொடுக்கின்றது. அது நம்முடைய வெளித் தோற்றத்தினாலோ அல்லது நாம் எதையொ செய்துவிட்டதாலோ அல்ல. நாம் அவருடைய கரத்தினால் அழகாக உருவாக்கப்பட்டோம். நாம் அவருடைய கரத்தின் படைப்புகள் (சங். 139:14) எனவே நாம் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளும் வார்த்தைகளும், ஒருவரைப்பற்றி கூறும் வார்த்தைகளும் அவர்களில் உண்மையாகும் வல்லமை பெற்றவை.