ஒரு மோட்டார் வாகன செயல்முறை விளக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள், பிரமிக்கச் செய்யும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில் இருந்த நான், ஓடுவதற்கு தயாராக இருந்த நிலையில் பார்த்துக் கொண்டிருந்தேன். சுற்றிலும் பார்த்த நான், 3 குழந்தைகள், அருகில் இருந்த மரத்தில் ஏறியிருந்தவாறு பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். அவர்களால் இக்கூட்டத்தினரின் முன்பாக நின்று கொண்டு, இந்த செயலைப் பார்க்க முடியவில்லை.

உயரமான இடத்திலிருந்து இதனை பார்த்துக் கொண்டிருந்த   அக்குழந்தைகளை கவனித்த எனக்கு, லூக்கா கண்டுபிடித்த    செல்வந்தனான ஆயக்காரன் சகேயு (லூக்.19:2) நினைவுக்கு வந்தான். இந்த வரி வசூலிப்பவர்களை, இஸ்ரவேலர், ரோம அரசுக்காக வேலை செய்பவர்களாகவும், தங்களுடைய சொந்த          ஜனங்களிடமிருந்தே அதிக வரியை வசூலித்து, தங்களின் வருமானத்தையும் பெருக்கிக் கொள்பவர்களாகவும் பார்க்கின்றார்கள். எனவே, சகேயு தன்னுடைய சொந்த சமுதாயத்தினராலே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தான்.

இயேசு எரிகோவிற்குச் சென்ற போது, சகேயு அவரைப் பார்க்க ஆவலாயிருந்தான். ஆனால் ஜனக் கூட்டத்தினிடையே அவரைப் பார்க்க கூடாதவனாக இருந்தான். ஒரு வேளை விரக்தியையும் தனிமையையும் உணர்ந்த அவன் ஒரு காட்டத்தி மரத்தில் ஏறி, இயேசுவை எப்படியாகிலும் பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டான் (வ.3-4). அங்கே, அந்த கூட்டத்தினருக்கு வெளியே, இயேசு அவனைத் தேடி, அவனுடைய விருந்தினராக, அவனுடைய வீட்டிற்கு தான் வர விரும்புவதைத் தெரிவிக்கின்றார் (வ.5).

 இவ்வுலகத்தில், “இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் (வ.9-10) என்பதை சகேயுவின் கதை நமக்கு வெளிப்படுத்துகின்றது, இயேசு அவனுக்கு தன்னுடைய நட்பையும், இலவச ஈவாகிய இரட்சிப்பையும் கொடுத்தார். நம்முடைய சமுதாயத்தின் ஓரத்தில் இருப்பதாக நாம்    உணர்ந்தாலும், “கூட்டத்தின் கடைசிக்குத்” தள்ளப்பட்டாலும், தேவன் அங்கேயும் நம்மைக் காண்கின்றார்  என்ற உறுதியோடு இருப்போம்.