எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜெய்மி பெர்னாண்டஸ் காரிடோகட்டுரைகள்

காலத்திற்கு அப்பாற்பட்டு

ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். யோவான் 6:68-69

2016 ஆண்டு, வில்லியம் ஷேக்ஸ்பியருடைய (William Shakespeare) நானூறாவது நினைவு ஆண்டினை கூறும் வண்ணம் பிரிட்டனிலும் (Britain) மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடகக் கம்பெனிகள் பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தின. காலத்தால் அழிக்க முடியாத நாடகத் தொகுப்புகளை இயற்றிய அதிசிறந்த ஆங்கில நாடக ஆசிரியராக அவரைக் கருதிய மக்கள் அனைவரும் கச்சேரிகள், விரிவுரைகள் மற்றும் கொண்டாட்டங்களில்…

மாற்றத்திற்கு தயாரா?

நாம் தேர்ச்சிபெற நினைக்கும் காரியங்களில், அநேகமாக இச்சையடக்கமே கடினமான ஒன்றாக இருக்கக்கூடும். எத்தனை முறைகள் ஒரு மோசமான பழக்கவழக்கத்தினால் அல்லது மட்டமான மனப்பான்மையினால் இல்லையெனில் தவறான மனப்போக்கினால் நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். நாம் மனந்திரும்பும்படி உறுதிமொழி எடுக்கிறோம். யாரையாவது நமக்கு பொறுப்பாளியாக நாம் கணக்கொப்புவிக்கும்படியாக இருக்கக் கேட்கிறோம். ஆனால் நாம் மனம் மாற தேவையான பெலனோ, திறனோ நமக்கு இல்லை என்பது நமது உள்ளத்தின் ஆழத்திலே நமக்குத் தெரியும். நாம் அதைக்குறித்து பேசலாம், திட்டமிடலாம், சுய உதவி புத்தகங்கள் வாசிக்கலாம். ஆனால், நமக்குள் இருக்கும் வேண்டாத…

ஒருபொழுதும் முயற்சியை விட்டு விடாதே

ஜூப் சோயிடிமெக், நெதர்லேண்டில் தலைசிறந்த சைக்கிள் ஓட்டுபவராக அறியப்பட்டிருந்தார். அவ்வாறு அவர் தலைசிறந்து விளங்கக் காரணம், அவரது முயற்சியை ஒருபொழுதும் இடையிலே கைவிடாதே, அவர் டூர் டி பிரான்ஸ் என்று நடைபெற்ற உலக புகழ் பெற்ற சைக்கிள் பந்தயத்தில் 16 முறை பங்கெடுத்தார். 5 முறை இரண்டாவது இடத்திலேயே வந்தும், அவர் விடாமுயற்சியோடு தொடர்ந்து பங்கெடுத்து 1980ல் முதல் இடத்தைப் பெற்றார். இதுதான் விடாமுயற்சி.

வெற்றி பெற்றவர்களில் அநேகர், “ஒருபொழுதும் முயற்சியை கைவிடாதே” என்ற சிறப்பான ஏணியின் மூலமாகத்தான் வெற்றியை அடைந்துள்ளார்கள். ஆயினும் அநேகர்…

நமது முக்கிய கரிசனை

சிநேகிதர்களால் வரும் மனஅழுத்தம், அன்றாட வாழ்வில் ஒரு பகுதி சில சமயங்களில் ஒரு தீர்மானம் எடுக்குமுன் நமது சொந்த கருத்திற்கோ அல்லது அது தேவனுக்கு பிரியமாக இருக்குமோ, இருக்காதோ என்று எண்ணுவதை விட, மற்றவர்கள் என்ன எண்ணுவார்கள் அல்லது என்ன சொல்லுவார்கள் என்பதை வைத்தே நாம் நமது தீர்மானங்களை எடுக்கிறோம். இவன் இப்படிப்பட்டவன் என்று பிறர் நம்மை தீர்மானித்து விடுவார்கள் என்றோ அல்லது பிறரால் ஏளனம் செய்யப்பட்டுவிடுவோமோ என்பதைக் குறித்து நாம் கவலைப்படுகிறோம்.

அப்போஸ்தலனாகிய பவுலும், அவனைச் சுற்றியிருந்த மக்களால் இந்த அழுத்தத்திற்கு உட்பட்டார்.…

என் கைகளை அவர் பழக்குவிக்கிறார்.

டேவிட் உட் என்ற NBAயின் முன்னாள் விளையாட்டு வீரர், டாக்ரஸ் டி பாஸ்கோனியா சார்பில் விளையாடிய பொழுது ஸ்பானியா நாட்டு கூடைப்பந்து விளையாட்டில் இறுதிக் கோப்பைக்கான போட்டியில் அவரோடு கூட நான் இருந்தேன். ஒரு போட்டிக்கு முன் அவர் “என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று சங்கீதம் 144:1 ஐ வாசித்தார். பின்பு என்னிடம் திரும்பி “பார் தேவன் இந்த வசனத்தை எனக்காகவே எழுதியுள்ளார். துள்ளி வரும் பந்துகளைப் பிடிக்கவும் பந்தை சரியான முறைகளில்…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பாரபட்சமும் தேவசிநேகமும்

“நான் எதிர்பார்த்தது நீ இல்லை. நான் உன்னை வெறுக்கிறேன் என்று நினைத்தேன், ஆனால் அப்படியில்லை.” அந்த இளைஞனின் வார்த்தைகள் கடுமையாகத் தெரிந்தது. ஆனால் அவை உண்மையில் கருணை காட்டுவதற்கான முயற்சியாக இருந்தது. நான் அவர் வசிக்கும் நாட்டில் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய அந்த தேசம் பல தசாப்தங்களுக்கு முன்னர் என்னுடைய தேசத்தோடு யுத்தம் செய்தது. நாங்கள் ஒன்றாக வகுப்பில் ஒரு குழு விவாதத்தில் கலந்துகொண்டோம். அவர் தொலைவில் இருப்பதை நான் கவனித்தேன். நான் அவரை ஏதாகிலும் புண்படுத்திவிட்டேனா என்று நான் கேட்டபோது, அவர், “இல்லை . . . . அதுதான் விஷயம். என் தாத்தா அந்தப் போரில் கொல்லப்பட்டார், அதற்காக நான் உங்கள் மக்களையும் உங்கள் நாட்டையும் வெறுத்தேன். ஆனால் இப்போது நமக்குள் எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நாம் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது!” என்று பதிலளித்தார். 
பாரபட்சம் என்னும் உணர்வு மனித இனத்தைப் போலவே மிகவும் பழமையானது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு, இயேசு நாசரேத்தில் வாழ்ந்ததைப் பற்றி நாத்தான்வேல் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, அவனுடைய பாரபட்சம் தெளிவாகத் தெரிந்தது: “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” (யோவான் 1:46) என்று சொல்கிறார். நாத்தான்வேல் இயேசுவைப் போலவே கலிலேயா பகுதியில் வாழ்ந்தவர். தேவனுடைய மேசியா வேறொரு இடத்திலிருந்து வருவார் என்று அவர் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும். மற்ற கலிலேயர்களும் நாசரேத்தை இழிவாகப் பார்த்தனர். ஏனென்றால் அது ஒரு சிறிய அடையாளமில்லாத ஊராக இருந்தது.  
இது மிகவும் தெளிவாக உள்ளது. நாத்தான்வேலின் பதில், இயேசு அவனை நேசிப்பதற்கு தடையாக இருக்கவில்லை. மேலும் அவன் மறுரூபமாக்கப்பட்டு இயேசுவின் சீஷனாக மாறுகிறான். நாத்தான்வேல் பின்பாக, “நீர் தேவனுடைய குமாரன்” (வச. 49) என்று இயேசுவின் மகத்துவத்தை சாட்சியிடுகிறான். தேவனுடைய மறுரூபமாக்கும் அன்பிற்கு எதிராக நிற்கக்கூடிய எந்த பாரபட்சமும் இல்லை. 

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.