எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எலிசா மோர்கன்கட்டுரைகள்

நன்றாக ஓய்வெடுங்கள்

கடிகாரம் அதிகாலை 1.55 மணிக்கு ஒலித்தது. பின்னிரவு உரையாடலின் சுமையினால் எனக்குத் தூக்கம் வரவில்லை. சிக்கலாயிருந்த என்னுடைய படுக்கை விரிப்பை பிரித்துக்கொண்டு அமைதியாக படுத்துக்கொண்டேன். தூங்குவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கூகிளில் தேடினேன். ஆனால் மாறாக சிறுதூக்கம் தூங்காதீர்கள், காப்பி குடிக்க வேண்டாம், பகல் வேளைகளில் நாள் தாமதமாக வேலை செய்ய வேண்டாம் என்று என்ன செய்யக் கூடாது என்பதையே பார்த்தேன். இன்னும் வாசிக்கும்போது, என்னுடைய டேப்லட் கணிணியில் படிக்க தாமதமாக திரை நேரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்ற ஆலோசனை சொல்லப்பட்டிருந்தது. அச்சச்சோ! உரை அனுப்புவது ஒரு நல்ல யோசனையாக இருக்கவில்லை. நன்றாக ஓய்வெடுக்க வேண்டுமானால், செய்யக்கூடாதவைகளின் பட்டியல்களே இருக்கின்றன. 

பழைய ஏற்பாட்டில், ஓய்வைத் தழுவிக்கொள்ள, ஓய்வுநாளில் என்னென்ன செய்யக்கூடாது என்ற கட்டளைகளை தேவன் கொடுத்திருந்தார். ஆனால் இயேசு ஒரு புதிய வழியைக் காண்பித்தார். விதிமுறைகளை வலியுறுத்துவதற்கு பதிலாக, சீஷர்களை உறவுக்குள்ளாக அழைத்தார். “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” மத்தேயு 11:28. இதற்கு முந்தைய வசனத்தில், நமக்கு அவர் வெளிப்படுத்தின, தேவனோடு, அவர் வைத்திருந்த உறவை சுட்டிக்காட்டினார். பிதாவிடமிருந்து இயேசு அனுபவித்த உதவிகளை நம்மாலும் அனுபவிக்க முடியும்.

நம்முடைய தூக்கத்துக்கு இடையூறு உண்டாக்கும் சில பொழுதுபோக்குகளை நாம் தவிர்ப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்போது, கிறிஸ்துவுக்குள் ஓய்வெடுப்பது கட்டளையை விட அதிகமாக உறவோடு தொடர்புடையது. நான் வாசிப்பதை நிறுத்திவிட்டு என்னுடைய கனத்த இருதயத்தை, இயேசுவின் அழைப்பிதழான “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே…” என்ற தலையணையின் மேல் வைத்துவிட்டேன்.

நமக்குத் தேவையான ஞானம்

மேகா தன் சிநேகிதியிடமிருந்து வந்த கொரியரைப் பிரித்துப் பார்த்தாள். சில நாட்களுக்கு முன்பாக அந்த சிநேகிதியுடன் உறவு ரீதியாக பிரச்சனை அவளுக்கு ஏற்படடிருந்தது. மிகுந்த ஆவலுடன் அந்த பரிசை திறந்துப் பார்த்தாள். அதில் பலவர்ண மணிகள் கோர்க்கப்பட்ட அழகான கழுத்து அணிகலன் இருந்தது. அத்துடன், “தேவனுடைய வழியை நாடு”  என்ற வாசகம் எழுதப்பட்ட துண்டு காகிதமும் அதில் இருந்தது. மகிழ்ச்சியோடு மேகா அந்த சரப்பணியை தன் கழுத்தில் அணிந்துகொண்டாள். 

நீதிமொழிகள் புத்தகம் ஞானிகளின் வார்த்தைகளினால் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் தன் காலத்தில் ஞானியாய் வாழ்ந்த சாலமோனின் கைகளால் எழுதப்பட்டவைகள் அதிகம் (1 இராஜ. 10:23). நீதிமொழிகள் 1:7இல் “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்ற அஸ்திபார வாக்கியத்தில் துவங்கும் நீதிமொழிகளின் 31 அதிகாரங்களும், மதியீனத்தைத் தவிர்த்து ஞானத்தைத் தேடும்படிக்கு அழைப்புக் கொடுக்கிறது. எப்போது எதைச் செய்யவேண்டும் என்னும் ஞானமானது, கர்த்தருடைய வழியை நாடுவதின் மூலமாகவும், அவரை கனப்படுத்துவதினாலும் நமக்குக் கிடைக்கிறது. அறிமுக வார்த்தைகளில், “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்” (வச. 8-9) என்று வாசிக்கிறோம். 

மேகாவின் சிநேகிதி “தேவனுடைய வழிகளை நாடு” என்று ஞானத்தின் அஸ்திபாரத்திற்கு நேராய் அவளை வழிநடத்தினாள். மேகாவிற்கு தேவையான உதவி எங்கு கிடைக்கும் என்பதை அவளுடைய பரிசு அவளுக்கு காட்டியது. 

தேவனைக் கனப்படுத்தி, அவருடைய வழிகளை நாடும்போது, நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து ஞானத்தையும் நாம் அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும். 

நமது அப்பாவின் அக்கறை

நான்! சத்தம் வந்த திசையில் திரும்பிப்பார்த்தேன். என் வீட்டு ஜன்னல் கண்ணாடியில் ஏதோ மோதி விழுந்த அழுக்குத்தடம் தெரிந்தது. வெளியே எட்டிப்பார்த்தேன். பறவையொன்று கீழேவிழுந்து துடித்துக்கொண்டிருந்தது. என் மனது வலித்தது. சிறகொடிந்த அந்த பறவைக்கு உதவிசெய்ய ஏங்கினேன்.

மத்தேயு 10இல், வரப்போகிற அழிவைக் குறித்து எச்சரிக்கப்பட்ட சீஷர்களை ஆறுதல்படுத்தும் நோக்கத்துடன் இயேசு, அடைக்கலான் குருவி மீதும் அக்கறைக்காட்டும் பிதாவைக் குறித்து தெரிவிக்கிறார். இயேசு, “தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (வச. 1). சீஷர்களுக்கு அருளப்பட்ட இந்த வல்லமை அதிகமாய் தெரிந்தாலும், அதினிமித்தம் அவர்கள் அதிகாரத்திலுள்ள பலரால் பகைக்கப்படுவார்கள், தன் சொந்த குடும்பத்தினரால் வெறுக்கப்படுவார்கள்; தீமையின் விளிம்பில் நிறுத்தப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்படுகின்றனர் (வச. 16-28).

பின்பு 10:29-31இல் இயேசு, எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவர்களை பயப்படவேண்டாம் என்றும் அவர்கள் தேவனுடைய பாதுகாப்பிலிருந்து என்றுமே விலகவில்லை என்றும் அறிவுறுத்துகிறார். “ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா?” என்று கேட்கிறார். “ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது... ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷத்தவர்களாயிருக்கிறீர்கள்” என்று உறுதிகொடுக்கிறார்.

ஜன்னலுக்கு கீழே விழுந்த அந்த பறவையை அடிக்கடி கண்காணித்தேன். அது உயிரோடுதான் இருந்தது. ஆனால் கொஞ்சமும் அசையவில்லை. மாலையில் அது பறந்துபோய்விட்டது. அது உயிர்பிழைக்கவேண்டும் என்று நான் வேண்டிக்கொண்டேன். ஒரு பறவைக்காக நானே இந்த அளவிற்கு அக்கறை எடுத்துக்கொள்வேன் என்றால், தேவன் இதைவிட அதிகமாய் அக்கறை செலுத்துவது அதிக நிச்சயம். அவர் நம்மீது எந்த அளவிற்கு அக்கறைக் காட்டுகிறார் என்பதை சற்று கற்பனை செய்துபாருங்கள்!

அவளால் இயன்றதைச் செய்தாள்

கப் கேக்கின் பிளாஸ்டிக் கன்டைனரை கன்வேயர் பெல்ட்டின் மூலம் காசாளரை நோக்கி அனுப்பினாள். அதைத் தொடர்ந்து, பிறந்த நாள் அட்டை மற்றும் பல்வேறு சிப்ஸ் பாக்கெட்டுகள் வந்தன. அவளது தலைமுடி, குடுமியிலிருந்து சோர்வுற்ற முன்நெற்றியில் முடிசூடியது. அவளது குறுநடை போடும் குழந்தை கவனத்தை ஈர்த்தது. எழுத்தர் மொத்த தொகையை அறிவித்தார், அம்மாவின் முகம் சோர்ந்தது. “ஓ! நான் எதையாவது திருப்பி வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இவை அனைத்தும் அவளுடைய கொண்டாடத்திற்கு தேவை,” என்று தன் குழந்தையைப் பார்த்து வருத்தத்துடன் பெருமூச்சு விட்டாள்.

வரிசையில் அவள் பின்னால் நின்று, மற்றொரு வாடிக்கையாளர் இந்த தாயின் வலியை உணர்ந்தார். பெத்தானியா மரியாளுக்கு இயேசு சொன்ன வார்த்தைகளில் இந்த காட்சி நன்கு தெரியும்: “இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்” (மாற்கு 14:8). அவரது இறப்பு மற்றும் அடக்கத்திற்கு முன்பாக விலையுயர்ந்த தைலத்தால் அவரை அபிஷேகம் செய்த பிறகு, மரியாள் சீஷர்களால் கேலி செய்யப்பட்டார். அவள் செய்ததை பாராட்டியதின் மூலம் இயேசு தமது சீஷர்களைத் திருத்தினார். அவர் “அவளால் முடிந்த அனைத்தையும் செய்தாள்” என்று கூறவில்லை மாறாக, “அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்” என்று கூறினார். வாசனை திரவியத்தின் பகட்டான செலவு அவருடைய நோக்கம் அல்ல; மரியாளின் அன்பை செயலில் முதலீடு செய்ததே முக்கியமானது. இயேசுவுடனான உறவு அதற்கான அர்த்தத்தை அளிக்கிறது.

அந்தத் தருணத்தில், அந்த தாய் மறுப்பு தெரிவிப்பதற்கு முன்பு, இரண்டாவது வாடிக்கையாளர் முன்னோக்கி சாய்ந்து தனது கிரெடிட் கார்டின் மூலம் பொருட்களை வாங்குவதற்கான அனைத்து பணத்தையும் செலுத்தினார். இது ஒரு பெரிய செலவு அல்ல; அந்த மாதத்தில் அவளின் செலவுபோக பணம் மீதமிருந்தது. ஆனால் அந்த தாய்க்கு அதுதான் எல்லாமே. அவளுடைய தேவையின் தருணத்தில் தூய அன்பின் சைகை ஊற்றப்பட்டது.

விசுவாசத்தின் சர்க்கரைப் பூச்சு

கையோடு கைகோர்த்து, என் பேரனும் நானும் பிறந்தநாளுக்காக ஒரு சிறந்த ஆடையை வாங்க வாகன நிறுத்துமிடத்தைத் கடந்து சென்றோம். இப்போதுஒரு பள்ளி பாலனாகிய அவன் எல்லாவற்றையும் குறித்து உற்சாகமாக இருந்தான், அவனுடைய மகிழ்ச்சியை இன்னும் ஆனந்தமாக்க வேண்டுமென்று தீர்மனித்திருந்தேன். ஒரு காபி குவளையின் மீது இப்படியாக அச்சிடப்பட்டிருந்தது, "பாட்டி அதிக சர்க்கரைப்பூச்சு  கொண்ட அம்மாக்கள்." சர்க்க்கரப்பூச்சு என்றால் வேடிக்கை, பளபளப்பு, மகிழ்ச்சிக்கு சமம்! அவனது பாட்டியாக நான் அவனுக்காக செய்யும் பணியின் விளக்கம், சரிதானே? அதுவும் . . . அதற்கு மேலும்.

தனது ஆவிக்குரிய மகன் தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில், பவுல் தனது நேர்மையான விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார், அதனோடு அதன் தீமோத்தேயுவின் பாட்டி லோவிசாள் மற்றும் அவரது தாயார் ஐனிக்கேயாள் (2 தீமோத்தேயு 1: 5) ஆகியர்வர்களைகொண்ட அவரது பரம்பரையை பாராட்டினார். இந்த பெண்கள் விசுவாசத்தில் வாழ்ந்த இவ்வழியில் தீமோத்தேயுவும் இயேசுவை விசுவாசிக்கும்படி வந்தார். நிச்சயமாகவே, லோவிசாளும் ஐனிக்கேயாளும்  தீமோத்தேயுவை அதிகமாக நேசித்தார்கள், அவருடைய தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்தனர். ஆனால் உண்மையாகவே, அவர்கள் இன்னும் அதிகமாக செய்தார்கள். இவர்கள் வாழ்வில் கொண்டிருந்த விசுவாசத்தை பிற்காலத்தில் தீமோத்தேயு தம் வாழ்வில் வாழ்வில் கொண்டிருந்த விசுவாசத்திற்கு ஆதாரமாக பவுல் குறிப்பிடுகிறார்.

ஒரு பாட்டியாக பிறந்தநாள் ஆடைக்கான எனது பணி இந்த  “சர்க்கரைப்பூச்சு” தருணத்தை உள்ளடக்கியதாகும் . ஆனால் அதற்கும் மேலாக, நான் என் விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது அது இன்னும் சர்க்கரைப்பூச்சு நிலை தருணங்களாக மாறுகிறது: கோழி பிரியாணி-க்கு முன் தலை குனிந்து பிராதிப்பது . வானத்தில் தேவதூதர் போன்ற மேக அமைப்பு தோன்றுவது தேவனின் கலைப் படைப்புகளாகும். தொலைக்காட்சியில் காட்டப்படும் இயேசுவை பற்றிய பாடலை கிண்டல் செய்வது. நம் விசுவாசம் வாழ்க்கையில் சர்க்கரைப்பூச்சாக மாற அம்மாக்கள் மற்றும் யூனிஸ் மற்றும் லோயிஸ் போன்ற பாட்டிகளின் உதாரணத்தால் நாம் கவரப்படுவோமாக, அதனால் நம்மிடம் உள்ளதை மற்றவர்களும் பெற விரும்புவார்கள்.

அக்கறையான கடிதங்கள்

பல தசாப்தங்களுக்கு முன்னர் டாக்டர் ஜெர்ரி மோட்டோ அக்கறையான கடிதங்களின் வல்லமையைக் கண்டறிந்தார். முன்னர் தற்கொலைக்கு முயன்று மீண்ட நோயாளிகளுக்கு அக்கறையை வெளிப்படுத்தும் கடிதத்தை அனுப்புவது மீண்டும் அவர்கள் தற்கொலையில் ஈடுபடும் வீதத்தை பாதியாகக் குறைத்துள்ளது என்று அவரது ஆராய்ச்சி கண்டறிந்தது. சமீபத்தில், கடுமையான மனஅழுத்தத்திற்கு உள்ளானவர்களுக்கு, தொடர் சிகிச்சையாக “அக்கறையுள்ள” உரைகள், அஞ்சல் அட்டைகள் மற்றும் சமூகஊடக மீம்களை, மருத்துவ சேவை அளிப்போர் அனுப்பும்போது, இந்த வல்லமையை மீண்டும் கண்டறிந்தனர்.

வேதத்தில் இருபத்தொரு “புத்தகங்கள்” உண்மையில் கடிதங்கள்-நிருபங்கள்-பல்வேறு காரணங்களால் பாடநுபவித்த முதல் நூற்றாண்டு விசுவாசிகளுக்கு அக்கறையுடன் எழுதப்பட்டவை. பவுல், யாக்கோபு மற்றும் யோவான் விசுவாசம் மற்றும் ஆராதனையின் அடிப்படைகளை விளக்கவும், எவ்வாறு பேதங்களைக் களைவது மற்றும் ஒற்றுமையைக் கட்டமைப்பது என்பதையும் விளக்கவும் கடிதங்களை எழுதினர்.

ஆயினும், அப்போஸ்தலனாகிய பேதுரு இவைகளை குறிப்பாக ரோமானிய பேரரசரான நீரோவால் துன்புறுத்தப்பட்ட விசுவாசிகளுக்கு எழுதினார். தேவன் அவர்கள் மேல்கொண்டிருந்த உள்ளான மதிப்பை அவர்களுக்கு பேதுரு நினைப்பூட்டினார். 1 பேதுரு 2: 9-ல் அவர்களை இவ்விதமாய் விவரிக்கிறார், “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.”

நம்முடைய பெரிய தேவன் தாமே நமக்கு அக்கறையுள்ள கடிதங்கள் நிறைந்த ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் - ஏவப்பட்ட வேதாகமம் - தன்னுடைய சொந்தமாக அவர் நம்மை தெரிந்துகொண்டதை பற்றிய பதிவு நம்மிடம் எப்போதும் இருக்க வேண்டும். அவருடைய கடிதங்களை நாம் தினமும் படித்து, இயேசு அளிக்கும் நம்பிக்கையை தேவைப்படும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோமாக.

அன்பின் ஆழங்கள்

சமீபத்தில் நீச்சல் கற்றுக்கொண்ட 3 வயது டில்லன் தன் தாத்தாவின் வீட்டின் பின் உள்ள ஒரு 40 அடி ஆழமுள்ள தண்ணீர் நிறைந்த குழியில் விழுந்து விட்டான். தன்னால் முயன்ற மட்டும் மேலே மிதந்து கொண்டிருந்தான். தீயணைப்பு வீரர்கள் தங்கள் சாதனங்களை எடுத்து கொண்டு விரைந்து வந்தார்கள்ஆனால் அந்த சிறுவனின் தந்தை யார் வருவது காத்திருக்காமல் அந்தக் கிணற்றில் இறங்க தொடங்கிவிட்டார்.
ஓ! பெற்றவரின் அன்பு! நம் பிள்ளைகளுக்காக நாம் போகும் ஆழங்களும் அகலங்களும் !
“நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்கு பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” என்று அப்போஸ்தலனாகிய யோவான் ஆதித் திருச்சபையின் விசுவாசிகள் கள்ள போதகங்களினால் அலைக்கழிக்கப்பட்டு தங்கள் விசுவாசத்தின் வேர்களை தேடிக்கொண்டு இருக்கும்போது உயிர் காப்பானாக இதை எழுதுகிறார். கிறிஸ்துவை விசுவாசிக்கிற அவர்கள் தேவனுடைய ‘பிள்ளைகள்’ என்று அழைக்கப்படுவதால் அவரை நம்பும் யாவருக்கும் அது ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்தியது.
ஓ, தம் பிள்ளைகளுக்காக தேவன் போகும் ஆழங்களும் அகலங்களும் !
அந்த கிணற்றுக்குள் இறங்கி தன் குழந்தையை காப்பாற்றும்படி சென்ற அந்த தந்தையைப் போன்று பெற்றோராய் தம் குழந்தைகளுக்காக மாத்திரம் எடுக்கும் சில முயற்சிகள் உண்டு. அதே போன்று தான் தம்முடைய சொந்த குமாரனை அனுப்பி நம்மை அவர் இருதயதிற்கு சேர்த்து நமக்கு ஜீவனை திரும்ப கொடுக்கவும் பிதாவானவர் செய்த உச்சகட்ட செயலும் (வச 5-6)

பசுமையைத் தேடுங்கள்

கடுமையாக குரல் கொடுக்கும் கேப்டன் மற்றொரு தாமதத்தை அறிவித்தார். ஏற்கனவே இரண்டு மணி நேரம் அசையாமல் அமர்ந்திருந்த விமானத்தில், நெரிசலான என் ஜன்னல் இருக்கையில் விரக்தியுடன் துடித்தேன். நீண்ட வேலை வாரத்திற்குப் பிறகு வீட்டில் கிடைக்கும் ஆறுதலுக்கும் ஓய்வுக்கும் நான் ஏங்கினேன். இன்னும் எவ்வளவு காலம்? மழைத்துளி மூடிய ஜன்னலுக்கு வெளியே நான் பார்த்தப்போது, ஓடுபாதைகள் சந்தித்த சிமென்ட் இடைவெளியில் பச்சைப் புல் ஒரு தனிமையான முக்கோணமாக வளர்வதை நான் கவனித்தேன். அத்தனை கான்கிரீட்டுக்கும் நடுவில் ஒரு விசித்திரமான காட்சி.

அனுபவம் மிக்க மேய்ப்பரான தாவீது தன் ஆடுகளுக்கு பசுமையான மேய்ச்சலை கட்டும் தேவையை நன்கு அறிந்திருந்தார். சங்கீதம் 23ல், தான் இஸ்ரவேலின் ராஜாவாக இருக்கும்போது சோர்வுற்ற நேரங்களில் அவரை முன்னோக்கிக் கொண்டுச் செல்லும் ஒரு முக்கியமான பாடத்தை அவர் எழுதினார். 'கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து ... நீதியின் பாதைகளில் நடத்துகிறார்" (வச. 1-3).

ஒரு விமான நிலையத்தின் தார்ச் சாலையின் கான்கிரீட் காட்டில், எனது இலக்கிலிருந்து தாமதமாகி, ஆறுதலும் ஓய்வும் இல்லததை உணர்ந்தப்போது, என்னுடைய நல்ல மேய்ப்யரான தேவன், ஒரு பச்சையான ஒட்டுக்கு நேராய் என் கண்களைத் திருப்பினார். அவருடனான உறவில், அவர் கொடுக்கும் ஓய்வை, நான் எங்கிருந்தாலும், அதை கவனித்து நுழைந்தால் அதைப் கண்டுக்கொள்ள முடியும்.

பசுமையானதைத் தேடுங்கள் - பாடம் பல ஆண்டுகளாக நிடித்தது. அது அங்கு இருக்கிறது. தேவன் நம் வாழ்க்கையில் இருக்கும்போது நாம் குறைவுபடுவதில்லை. அவர் நம்மைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து நம்முடைய ஆத்துமாவைத் தேற்றுகிறார்.

ஊடுருபவரை நீக்கு

விடிவதற்கு முன்னே என்னுடைய கணவர் படுக்கையில் இருந்து எழுந்து சமையலறைக்குச் சென்று அங்கே விளக்கை போட்டு அணைத்துக் கொண்டிருந்தார். நான் அவர் என்ன செய்கிறார் என்று யோசித்தேன். அப்பொழுதுதான் முந்தின நாள், நான் அங்கே ஒரு சிலந்தி பூச்சியை கண்டு அலறின கதை ஞாபகம் வந்தது. என் கணவர் என்னுடைய பயத்தை அறிந்து உடனே வந்து அதை எடுத்துவிட்டார். இன்றைக்கு அவர் அதிகாலமே எழுந்திருந்ததின் காரணம் சமையலறையில் நான் பயப்படாமல் உள்ளே போகதக்கத்தாக ஒரு பூச்சியும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவே. அவர் அப்படித்தான்!

 என்னை பற்றிய நினைவாக அவ்விதமாக எழுந்து, என்னுடைய தேவையை அவருடைய தேவைக்கு முன் என் கணவன் வைத்தது, பவுல் சொல்லுகிற அன்பை காட்டுகிறது. எபேசியருக்கு அவர் எழுதின காரியம்: “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” (எபேசியர் 5:25,27) இன்னுமாக பவுல் சொல்லுவது: “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்”. (எபேசியர் 5:28). கிறிஸ்துவுடைய அன்பு மற்றவர்களின் தேவையை முன் வைத்ததை தழுவி தான் கணவனின் அன்பையும் சித்தரிக்கிறார் பவுல்.

என்னுடைய பயம் என்  கணவருக்கு தெரியும். அதனால் அவர் என்னுடைய தேவையை முன் வைத்தார். இந்த மாதிரியே நாமும் தியாகமாக முன் வந்து,  பயம், மன அழுத்தம், கவலை  வெட்கம் போன்றவைகளை மற்றவர் வாழ்வினின்று அகற்றி, அவர்களுக்கு உதவலாமே..