Mark | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread - Part 3

எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

Markகட்டுரைகள்

கடவுள் ஏன் எனக்குப் பதிலளிப்பதில்லை?

நீங்கள் எதையாவது கடவுளிடம் கேட்டு, அவர் பதிலளிக்காமலிருந்தால், அவர் உங்களைக் குறித்து அவ்வளவு கரிசனைகொண்டிராதவர்; என்று நீங்கள் நினைக்கலாம். வேதாகமத்தில், ஆசாப் என்ற மனிதனைப்போல, இதே விடயமாகப் போராடிய வேறும் பலர் இருக்கிறார்கள் என்ற விடயம் உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும். ஆசாப்பின் மனப்பூர்வமான ஜெபங்களுள் ஒன்றான 77ம் சங்கீதத்தைப் படிப்பதனால், ஜெபத்தின் உண்மையான நோக்கம், சிறப்புரிமை, வல்லமை ஆகியவற்றை நீங்களே கண்டுகொள்வீர்கள்.

இன்னும் ஒருதடவை ….அதன்பின்னர் விட்டுவிடுவேன் ….

பழக்கத்திற்கு அடிமையாவதற்கான காரணங்கள் எவை, அதிலிருந்து விடுபட்டு வெளியேறுவதற்கு என்ன தேவை, அகப்பட்டுவிட்டோமே என்று உணருகிறவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது என்பவற்றை, கடவுளுடைய வார்த்தைகளிலிருந்து இச் சிறு படிப்பு ஆராய்கிறது.

இயேசு என்பவர் யார்?

இயேசு கிறிஸ்து கடவுள் என்ற நம்பிக்கை கிறிஸ்தவத்தின் மையத்தில் இருக்கிறது. ஆனால் இந்த உரிமைகோரல் அநேகருக்குச் சிரிப்புக்கிடமானதாகவே இருக்கிறது. ஆகவே, நமக்குத் தெரியும் என்று நாம் நினைப்பவற்றையும், நமது நண்பர்களால் அல்லது பெற்றோரால் நமக்குக் கூறப்பட்டவற்றையும் தவிர, உண்மையான இயேசு யார்?

உண்மையிலேயே வேதாகமத்தை நாங்கள் நம்பலாமா?

இன்றைய நவீன உலகிலே, வேதாகமம் ஒரு அறிவற்ற பழைய புத்தகமே தவிர வேறொன்றுமில்லை என்றும், அது காலத்துக்குக் காலம் திரும்பத் திரும்ப எழுதப்பட்ட, தேவதைகள் பற்றிய கதைகள், சிறுவர் கதைகள் ஆகியவை சேர்ந்த ஒரு கட்டுக் கதையின் கலவை என்றும் பலர் நம்புகிறார்கள். வேதாகமம் மிகச் சரியானதும், நம்பக்கூடியதுமான புத்தகம் என்பதை நிரூபிப்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன?