எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டேவிட் ரோப்பர்கட்டுரைகள்

உருவாக்கப்பட்ட குறைபாடு

எருசலேம் நகரத்தின் கிழக்குப் பக்கத்தில், இயற்கையில் அமைந்த ஒரு நீரூற்று உள்ளது. அந்தக் காலத்தில், அப்பட்டணத்திற்குத் தண்ணீர் தரக்கூடிய ஒரே ஊற்று அதுதான். ஆனால், அது பட்டணத்தின் அலங்கத்திற்கு வெளியே அமைந்துள்ளது. எருசலேம் நகரத்தைப் பிடிப்பதற்கு உகந்த இடம் இதுதான். ஊடுருவ முடியாத இப்பட்டணத்தை, எதிரிகள் வளைந்து கொண்டு, இந்த நீரூற்றை வேறு திசைக்குத் திருப்பவோ, அல்லது அதன் நீரைத் தடுத்து நிறுத்தவோ செய்தால், அப்பட்டணத்தாருக்குச் சரணடைவதை விட வேறு வழியில்லை.

இந்த பெலவீனத்தையறிந்த எசேக்கியா ராஜா, கடினமான மலை வழியே 1750 அடி நீளமுள்ள கால்வாயை வெட்டி, அதன் வழியே தண்ணீரை பட்டணத்துக்குள் உள்ள குளத்திற்குக் கொண்டு வந்தான் (2 இரா. 20:20, 2 நாளா. 32:2-4). இவை எல்லாவற்றிலும், அதைச் செய்தவரை, அவர் நோக்காமலும், அதை ஏற்படுத்தி, தூரத்திலிருந்து வரும்படி திட்டம் பண்ணினவரைக் கவனியாமலும் போகிறீர்கள், என்று எசேக்கியாவைக் குறித்து கூறுகின்றார் (ஏசா. 22:11) எதைத் திட்டம் பண்ணினார்?

எருசலேம் பட்டணத்திற்குத் தண்ணீர் தரும் ஊற்றை, பட்டணத்திற்கு வெளியே இருக்குமாறு திட்டமிட்டவர் தேவன் தாமே. அந்தப் பட்டணத்தினுள் வாசம் பண்ணுவோர், தங்களுடைய இரட்சிப்புக்கு தேவனாகிய கர்த்தரையே சார்ந்திருக்கும்படி அவர்களுக்கு தொடர்ந்து நினைப்பூட்டவே, அந்த  நீரூற்றை பட்டணத்திற்கு வெளியே அமைத்தார். 

இது நம்முடைய குறைபாடுகளும், நம்முடைய நலனுக்காகவே கொடுக்கப்பட்டிருக்கலாம் அல்லவா? அப்போஸ்தலனாகிய பவுலும், தனக்கிருந்த குறைகளைக் குறித்துக் கூறும் போது, “ஆகையால் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்” (2 கொரி. 12:9) என்கின்றார். எனவே, நாமும் நமக்கிருக்கின்ற குறைகளை, தேவனுடைய பெலன் நம்மில் வெளிப்படும் படி, கொடுக்கப்பட்ட ஈவுகளாகக் கருதுவோமா?

இதுவரை பயணம் செய்யாத சாலை வழியே

ஐந்து வருடத் திட்டம் வைத்திருக்கின்றாயா? என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் அறியாத ஒரு பாதை வழியே ஐந்து ஆண்டுகள் செல்ல, நான் எப்படி திட்டமிடமுடியும்?

1960 ல் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில், நான் மாணவர்களின் ஜெபக்குழு தலைவனாக இருந்தேன். நான் அங்கு உடற்பயிற்சி பாடத்தைக் கற்றுக்கொண்டிருந்ததால், அநேக விளையாட்டுகள் இருந்தன. நான் விளையாட்டில் மகிழ்ந்தேன். ஆனால், ஒரு நல்ல போதகனுக்குக் தேவையானதொன்றும் எனக்குப் போதுமானதாக இல்லை. அநேக நாட்கள், அந்த வளாகத்தினுள் ஒரு குருடனைப் போல அலைந்தேன், தேவனிடம், நான் என்ன செய்ய வேண்டும் என கேட்டேன். ஒரு நாள், எதிர்பாராத விதமாக, ஒரு மாணவன் என்னிடம் வந்து, அவனுடைய நண்பர்களுக்கு ஒரு வேத பாட பயிற்சியை நடத்தித் தருமாறு என்னை அழைத்தான். அது தான் என் பணி வாழ்வின் ஆரம்பம்.

தேவன் ஒரு சந்தியில் நின்றுகொண்டு வழிகாட்டுபவரல்ல, அவர் வழி நடத்துபவர். அவர் நம்மோடு நடந்து வருபவர், இதுவரை நடக்காத, நினைத்துப் பார்க்காத, பாதை வழியே நம்மை நடத்திச் செல்பவர். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரோடு கூட நடப்பதே.

நாம் நடக்கும் பாதை எளிதானதாக இருக்காது. சில இடங்கள் கரடு முரடாக இருக்கும், “அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்” என்றும், “அவர்களைக் கைவிடா திருப்பேன்” எனவும் தேவன் வாக்களிக்கின்றார் (ஏசா. 42:16) அவர் எப்போதும் நம்மோடிருக்கும் தேவன்.

“நாம் வேண்டிக்கொள்கிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற தேவன்” (எபே. 3:20). என பவுல் குறிப்பிடுகின்றார். நாம் நமக்கென்று திட்டங்களையும், தரிசனங்களையும் காணலாம். ஆனால், தேவனுடைய திட்டங்கள் நாம் நினைப்பதற்கு மேலானவை. எனவே நாம் நம்முடைய திட்டங்களைப் பற்றிக் கொள்வதை விட்டுவிட்டு, தேவன் நமக்கு வைத்திருக்கும் திட்டத்தை காணும்படி அவரை நோக்குவோம்.

 

இது வழுக்கலான இடம்!

அநேக ஆண்டுகளுக்கு முன்பு நான் பனிச்சறுக்கலைக் கற்றுக் கொண்டிருந்த போது, எளிதான இறக்கங்களில் செல்லும் போது நான் என்னுடைய மகன் ஜோஷைப் பின் தொடர்ந்து செல்வேன். என்னுடைய கண்கள் அவன் மீதேயிருக்க, அவன் அந்த மலைத் தொடரில் ஒரு செங்குத்தான குன்றில் திரும்பியதைக் கவனிக்கத் தவறிவிட்டேன். அப்பொழுது நான் என்னுடைய கட்டுப்பாட்டை இழந்து, ஒரு பக்கம் சரிந்தவனாக குழியில் இறங்கிவிட்டேன்.

நாம் எத்தனை எளிதில் பாவமாகிய சரிவில் வழுக்கிச் சென்று விடுகிறோம் என்பதை சங்கீதம் 141 காட்டுகின்றது. அத்தகைய சரிவில் விழாதபடி நம்மை எச்சரிக்கவே ஜெபம் உதவுகின்றது. “என் இருதயத்தைத்துன்மார்க்கத்திற்கு இணங்க வொட்டாதேயும்” (வச. 4) என்ற விண்ணப்பம் கர்த்தருடைய ஜெபத்தைப் போன்றே அமைந்துள்ளது. “எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும்” (மத். 6:13). இந்த ஜெபத்தைக் கேட்டு பதிலளிக்க தேவன் நல்லவராயிருக்கின்றார்.

இந்த சங்கீதத்தில் மற்றுமொரு கிருபையளிக்கும் நபரைக் காண்கிறோம். அது ஓர் உண்மையான நண்பன். “நீதிமான் என்னைத் தயவாய்க் குட்டி, என்னைக் கடிந்து கொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப் போலிருக்கும்; என் தலை அதை அல்லத் தட்டுவதில்லை” (சங். 141:5).

சோதனைகள் நாம் அறியாமலே நம்மை விழத்தள்ளுகின்றன. நாம் தவறாகச் செல்கின்றோம் என்றறியாமலேயே நீண்ட தூரம் சென்று விடுகிறோம். உண்மையான நண்பன் தன் நோக்கத்தில் உறுதியாயிருப்பவன். “சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்” (நீதி. 27:6). கடிந்து கொள்ளலை ஏற்றுக் கொள்வதற்குக் கடினமாயிருக்கும். ஆனால் அந்தக் கடிந்து கொள்ளலை ஓர் அன்பின் செயலாகப் பார்க்கக் கூடுமானால் அது நம்மை மீண்டும் கீழ்ப்படிதலின் பாதைக்கு வழி நடத்தும் அபிஷேகம் போலிருக்கும்.

ஓர் உண்மையான நண்பன் மூலம் நாம் உண்மைக்கு நேராக வழி நடத்தப் படுவோமாக. ஜெபத்தின் மூலம் தேவனைச் சார்ந்து கொள்.

அப்பங்களும், மீன்களும்

ஒரு சிறு பையன் ஆலயத்திலிருந்து மிகவும் உற்சாகத்தோடும், ஆரவாரத்தோடும் அன்றைய நாள் முழுதும் பிடித்தப் பாடமான அப்பங்களும் மீன்களும் ஒரு சிறுவனைக் குறித்த மகிழ்ச்சியோடு வீட்டிற்கு வந்து சொன்னான். அவன், அந்தச் சிறுவன் எவ்வாறு தன் அப்பங்களையும், மீன்களையும் இயேசுவிடம் கொடுத்தான் என்பதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தான்.

இயேசுவானவர் அன்று நாள் முழுவதும் மக்கள் கூட்டத்திற்கு போதித்துக் கொண்டிருந்தார். அவருடைய சீஷர்கள், அவர்கள், ஊருக்குள் போய் அப்பங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிட வேண்டும் என்று கூறினார்கள். இயேசு அவர்களுக்கு, 'நீங்களே அவர்களுக்குப் போஜனம் கொடுங்கள்", என்று கூறினார். (மத். 14:16) ஐயாயிரம் பேருக்கும் அதிகமானோர் அங்கு இருந்தபடியால் சீடர்கள் கலக்கமடைந்தார்கள். மீதமுள்ள கதை உங்களுக்குத்தெரியும். அந்தச் சிறுவன் தன்னுடைய மதிய உணவைக் கொடுத்தான் - ஐந்து சிறிய அப்பங்கள் மற்றும் இரண்டு மீன்கள் - இதைக் கொண்டுதான் இயேசுவானவர் மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை போஷித்தார் (வச. 13-21). ஒரு கற்பனை கதை என்னவெனில், இந்த சிறுவனின் தாராள மனப்பான்மையைக் கண்டு, மற்றவர்களும் தங்கள், மதிய உணவைக் கொடுத்தார்கள் என்பதாகும். ஆனால், மத்தேயு தெளிவாக இது ஒரு அற்புதம் என நாம் புரிந்து கொள்வதற்காக விளக்கம் அளிக்கிறார். இந்த சம்பவமானது, நான்கு சுவிசேஷங்களிலும் இடம் பெற்றிருக்கிறது.

நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? குடும்பம், அயலகத்தார், நண்பர்கள், உடன் ஊழியர்கள், மற்றும் பலர் பல்வேறு விதமான தேவைகளோடு நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். நம்மை விட அதிகம் வசதிபடைத்தவர்களிடத்திற்கு நாம் அவர்களை அனுப்பலாமா? உண்மையாகவே சிலருடைய தேவைகள் நம்முடைய சக்திக்கும் மீறினதாகவே இருக்கும். ஆனால் எல்லா நேரத்திலும் அல்ல. உங்களிடத்தில் என்ன உள்ளதோ, ஒரு கட்டிபிடித்தல், ஒரு அன்பான வார்த்தை, கவனிக்கும் காதுகள், ஒரு சுருக்கமான ஜெபம், நீங்கள் பெற்ற ஞானத்தினையும் இயேசுவண்டைக் கொடுத்து அதைக் கொண்டு அவர் என்ன செய்கிறார் எனப் பாருங்கள்.

சந்தோஷமாக விளையாடுங்கள்

எங்களுடைய மகன்களில் ஒருவரான பிரையன் ஓர் உயர்நிலை பள்ளியில் கூடைப்பந்து பயிற்சியாளராக இருக்கிறான். ஓர் ஆண்டு நடைபெற்ற வாஷிங்டன் மாகாண கூடைப்பந்து போட்டியில் அவனுடைய பள்ளி அணி தொடர் வெற்றியைக் குவித்தது. எனவே அங்கிருந்த நல்லெண்ணம் கொண்ட சிலர் வந்து, “இந்த வருட கோப்பையை வென்றுவிடுவீர்களா?” என்று கேட்டார்கள்.  அது விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களில் அழுத்தத்தை உண்டாக்கியது. அப்போது பிரையன் கையாண்ட ஒரு குறிக்கோள்:”சந்தோஷமாக விளையாடுங்கள்!”

எபேசுவின் மூப்பர்களுக்கு பவுல் எழுதின கடைசி வார்த்தைகளை எண்ணிப்பார்க்கிறேன்: “என் ஓட்டத்தை சந்தோஷமாக முடிக்க...  விரும்புகிறேன்” (அப் 20:24.) இயேசு தன்னிடம் ஒப்படைத்திருந்த பணிகளை முடிப்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. நானும் என்னுடைய குறிக்கோளாகவும் ஜெபமாகவும் வைத்திருக்கிற வார்த்தைகள் என்னவென்றால், “என் ஓட்டத்தை சந்தோஷமாக முடிக்க... விரும்புகிறேன்” அல்லது பிரையன் சொல்வதுபோல, “நான் சந்தோஷமாக விளையாடவேண்டும்” பிரையனின் அணியானது அந்த வருடத்தில், வெற்றிபெற்று அந்தக் கோப்பையைக் கைப்பற்றினார்கள்.

உலகு தரும் செய்திகள், அனுதின அழுத்தங்கள், உடல்நலப் பிரச்சனைகள் போன்ற பல விஷயங்கள் நம்முடைய நிம்மதியைப் பறிக்கலாம். ஆனாலும் நாம் தேவனிடம் கேட்டால், இவற்றையும் கடந்த மேலான ஒரு சந்தோஷத்தை அவர் தருவார். “என்னுடைய சந்தோஷம்” (யோவான் 15:11) என்று தேவன் சொல்லுகிறார் அல்லவா, அந்தச் சந்தோஷத்தைப் பெறலாம்.

இயேசுவினுடைய ஆவியின் கனிதான் சந்தோஷம். (கலா 5:22). எனவே ஒவ்வொரு நாள் காலையிலும், “நான் சந்தோஷமாக விளையாடவேண்டும், அதற்கு உதவும்” என்று அவரிடம் கேட்க மறக்கக் கூடாது. ஆசிரியரான ரிச்சர்ட் ஃபாஸ்டர் பின்வருமாறு சொல்கிறார்: “ஜெபிப்பது நம்மை மாற்றுகிறது. இது மிகப்பெரிய ஒரு கிருபை. நம்முடைய வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிப்பதற்கான ஒரு பாதையை தேவன் தருகிறாரென்றால், அவர் எவ்வளவு நல்லவரென்பது தெரிகிறது.”

வந்து பெற்றுக் கொள்ளுங்கள்

வந்து பெற்றுக் கொள்ளுங்கள்

நேற்றைய தினத்தைப் போன்றல்ல

என்னுடைய பேரன் ஜேய் சிறுவனாயிருந்தபோது, அவனுடைய பெற்றோர் அவனுடைய பிறந்தநாளின்போது அவனுக்கு ஒரு புதிய டீ-சட்டையை வாங்கிக் கொடுத்தனர். அவன் அதனை உடனடியாக அணிந்து கொண்டு, பெருமையாக அந்த நாள் ழுழுவதும் இருந்தான்.

மறுநாள் காலை அவன் அந்த டீ-சட்டையோடு காட்சியளித்தபோது அவனுடைய தந்தை அவனிடம், “ஜேய், இந்த டீ-சட்டை உனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகின்றதா?” எனக் கேட்டார்.

“நேற்றைய தினத்தைப் போன்றில்லை” என்று பதிலளித்தான்.

பொருட்களைச் சேகரிப்பதும் இத்தகைய விளைவையே தரும். வாழ்வின் நல்ல பொருட்கள் கூட நாம் தேடுகின்ற ஆழ்ந்த, நிரந்தர மகிழ்ச்சியைத் தருவதில்லை. நம்மிடம் அநேகப் பொருட்களிருந்தாலும் நாம் இன்னும் திருப்தியோடும் மகிழ்ச்சியோடும் இருப்பதில்லை.

புதிய ஆடைகள், புதிய வாகனம், நவீன அலைபேசி, கைக்கடிகாரம். என பொருட்களைக் சேகரிப்பதால் உலகத்தில் மகிழ்ச்சியைப் பெறலாம். ஆனால், எந்தப் பொருளாலும் அது நேற்று தந்த மகிழ்ச்சியை இன்று தர இயலாது. ஏனெனில், நாம் தேவனுக்கென்று படைக்கப்பட்டவர்கள். எனவே எந்த உலகப் பொருளும் நம்மை நிரந்தர மகிழ்ச்சியைக் தராது. ஒரு நாள் இயேசுவும் தன்னுடைய உபவாசத்தை முடித்துக் கொண்டபோது பசியோடிருந்தார். சாத்தான் அவரிடம் வந்து அப்பங்களை உருவாக்கி தன்னுடைய பசியை ஆற்றிக்கொள்ளுமாறு சோதிக்கின்றான். இயேசு அவனிடம் உபாகமம் 8:3ல் சொல்லப்பட்டுள்ள, “மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்ற வார்த்தையினால் பதிலளித்தார் (மத். 4:4).

அப்பத்தினால் மட்டும் உயிர்வாழ முடியாது. ஏனெனில் நாம் ஆவிக்குரிய மக்கள் என்ற உண்மையை இயேசு வெளிப்படுத்துகின்றார். எனவே உலகப் பொருட்களால் மட்டும் நாம் உயிர் வாழ முடியாது.

தூசியோ அல்லது வேறெதுவோ

மிகவும் புத்திசாலியான வின்னி, அடிக்கடி சொல்வது, 'நீ பேசிக் கொண்டிருக்கும் நபர், உன் பேச்சைக் கவனிக்கவில்லையெனில், பொறுமையாயிரு. ஒருவேளை, ஏதோவொரு தூசு அல்லது துகள் அவனுடைய காதை அடைத்துக் கொண்டிருக்கலாம்."

பல ஆண்டுகளில் வின்னியிடமிருந்து நான் ஒன்றைத் தெரிந்துகொண்டேன். நீ கூறுவது அவர்களுக்கு பயனுள்ளதாகயிருந்தாலும் அதை அவர்கள் கவனித்துக் கேட்க வில்லையெனில் ஏதோ ஒன்று அவர்களைக் கேட்கவிடாமல் தடுக்கின்றது. ஒரு சிறிய துகள் அவர்கள் காதுகளை அடைக்கின்றது அல்லது வேறொரு காரணமும் இருக்கலாம். சிலருக்கு கவனிப்பதென்பது இயலாததாகிவிடுகின்றது. ஏனெனில், அவர்கள்; தங்கள் பிரச்சனைகளால் உடைந்து, வலுவிழந்து காணப்படுகின்றனர்.

இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே பேசுகின்றார். ஆனால், அவர்கள் கவனிக்கவில்லை. ஏனெனில், அவர்களின் ஆவி சோர்வடைந்து காணப்படுகின்றது. அவர்களின் வாழ்வு கடினமாயிருக்கிறது (யாத். 6:9). இஸ்ரவேலர் எகிப்தில் தங்கள் ஜீவன் கசந்து போகுமட்டும் அடிமைத்தனத்தில் கஷ்டங்களைச் சகித்தனர். இந்த கஷ்டங்களின் பலனால் சோர்வடைந்தனர். அதனாலேயே இஸ்ரவேலர் மோசேயின் அறிவுரைக்குச் செவிகொடுக்கவில்லை. மோசேயின் கரிசனையையும் புரிந்துகொள்ளலையும் அவர்களால் கவனிக்க முடியவில்லை. அதனால் இஸ்ரவேலர் மோசேயின் அறிவுரையை நிராகரித்தனர் என்றும் சொல்ல முடியாது.

நாம் கூறுவதை பிறர் கவனிக்காவிடில் நாம் என்ன செய்ய வேண்டும்? அறிவாளியான வின்னியின் வார்த்தைகள் பதிக்கப்பட வேண்டிய வார்த்தைகள். 'பொறுமையாயிரு" தேவன் சொல்வதென்னவெனில், 'அன்பு, நீடிய சாந்தமும் பொறுமையுள்ளது" (1 கொரி. 13:4). அது பொறுமையாய் காத்திருக்கும். தேவன் தன்னுடைய வேலையை அத்தோடு முடித்துவிடவில்லை. அவர்களுடைய துயரத்தில் நம்முடைய அன்பினாலும், ஜெபத்தினாலும் கிரியை செய்கின்றார். அவருடைய வேளை வரும்போது அவர்கள் கேட்கும்படி தேவன் அவர்களின் செவிகளைத் திறப்பார். அதுவரை பொறுமையாயிரு.

பெரிய விழித்தெழல்

என்னுடைய மகன்கள் சிறியவர்களாக இருந்தபோது, எங்கள் குடும்ப நண்பர்களோடு நாங்கள் களித்த நாட்களைப் பற்றிய நினைவுகளை ஒரு பொக்கிஷமாக என் நினைவில் வைத்துள்ளேன். பெரியவர்கள் இரவு வெகுநேரம் வரை பேசிக் கொண்டிருப்போம். எங்களுடைய குழந்தைகள் விளையாடி சோர்ந்து ஒரு சோபாவில் அல்லது ஒரு நாற்காலியில் படுத்து உறங்கிவிடுவர்.

நாங்கள் திரும்ப வேண்டிய நேரம் வரும்போது, நான் என்னுடைய மகன்களை என் கரத்தில் அணைத்து சுமந்து காருக்குக் கொண்டு சென்று பின் இருக்கையில் படுக்கச் செய்து, எங்கள் வீட்டிற்குத் திரும்புவோம். வீடு வந்ததும் அவர்களை அப்படியேத் தூக்கி அவர்களுடைய படுக்கையில் கிடத்தி, வாழ்த்தி முத்தமிட்டு விளக்குகளை அணைத்துவிட்டு வருவேன். மறுநாள் காலையில் அவர்கள் தங்கள் வீட்டில் எழுந்திருப்பார்கள்.

இந்த நிகழ்வு, நாம் இயேசுவுக்குள் நித்திரையடையும் (1 தெச. 4:14) இரவினைக் குறித்து என்னைச் சிந்திக்க வைத்தது. நாம் நித்திரையடைந்து… நம்முடைய நித்திய வீட்டில் விழிப்போம். நம்முடைய வாழ்நாட்களில் நாம் அநுபவித்த அத்தனை சோர்வையும் நித்திய வீடு மாற்றிவிடும்.

பழைய ஏற்பாட்டில் உபாகமத்தில் வரும் ஒரு பகுதி என்னை வியப்படையச் செய்தது. “அப்படியே… மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின் படியே மரித்தான்” (34:5). எபிரெய வழக்கப்படி “மோசே தேவனுடைய வாயைத் தொட்டபடியே மரித்தான்” என வரும் சொற்டொடரை பழங்கால போதகர்கள் “ தேவனுடைய முத்தத்தோடு” என மொழி பெயர்த்தனர்.

இப்புவியில் நம்முடைய கடைசி மூச்சின் போது தேவன் குனிந்து நம்மை முத்தமிட்டு வாழ்த்துவார் என்பதைக் கற்பனை செய்துபார்த்தால் அது சற்று மிகைப்பட்டதாகத் தோன்றுகின்றது. ஜான் டோன் இதனையே நமக்கு ஏற்றாற்போல் “ஒரு சிறிய தூக்கம் முடிந்து, நாம் நித்தியத்திற்குள் விழிப்போம்” எனக் கூறியுள்ளார்.