எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆர்தர் ஜாக்சன்கட்டுரைகள்

வெறுப்பை விட வலிமையானது

அவரது தாயார் ஷரோண்டா (Sharonda) வின் சோகமான மரணத்தின் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் கிறிஸ் (Chris) கிருபை நிறைந்த, வல்லமை வாய்ந்த  இந்த வார்த்தைகளை சொல்ல முடிந்தது: “அன்பு வெறுப்பை விட வலிமையானது”. இன்னும் எட்டு பேரோடு கூட அவனுடைய தாயார் அமெரிக்காவில் தெற்கு கரொலைனா மாகாணத்தில் சார்ல்ஸ்டன் நகரில் புதன் தோறும் நடைபெறும் வேத பாடத்தில் பங்கு பெற்றுக்கொண்டிருக்கும்போது  கொல்லப்பட்டார். இந்த தருணத்தில் இவ்வித  அருமையான வார்த்தைகள் அவனுடைய இருதயத்திலிருந்தும் வாயிலிருந்தும் வெளிவரும்படி அந்த இளைஞனுடைய வாழ்க்கையை யார் வடிவமைத்தது? கிறிஸ், இயேசுவை விசுவாசிப்பவர், அவருடைய தாயார் அனைவரையும் முழு மனதுடன்” நேசித்தவர். 

லூக்கா 23: 26-49  நிரபராதி இயேசுவும், கூட 2 குற்றவாளிகளும் சிலுவையில் அறையப்படும் காட்சிக்கு நம்மை கொண்டு போகிறது (வ 32,33). அங்கே கேட்கும் பெருமூச்சு, திணறல்களின் சத்தத்திற்கு  மத்தியில் இயேசுவின் குரல் கேட்கிறது:” பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (வ 34) அன்பையே எதிரொலித்த ஒருவரையே அந்த மதபோதகர்கள் தங்களுடைய வெறுப்பினால் சிலுவையில் அறைந்தார்கள். அந்த வேதனைகள் மத்தியிலும் இயேசுவின்  அன்பு வெற்றி சிறந்தது.

நீயோ அல்லது உனக்கு அருமையானவர்களோ இவ்விதமாக வெறுப்பு, கசப்பு, தீங்கிற்கு இலக்காகி இருக்கிறார்களா? உங்களுடைய துயரங்கள் ஜெபிக்க உங்களை ஊக்குவிப்பதாக; இயேசுவை பின்பற்றின கிறிஸ்-ன் உதாரணத்தை போலவே ஆவியின் வல்லமையினாலே அன்பின் மூலமாக வெறுப்பை மேற்கொள்ளுங்கள்.

வாக்கு மாறாதவர்

லீனாவுக்கு அவர் அளித்த வக்குறுதிகளால் ஈர்க்கப்பட்ட ஜான், தனது திருமண உறுதிமொழிகளை மீண்டும் மீண்டும் கூறும்போது தடுமாறினார். அவைகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் இந்த வாக்குறுதிகளை எப்படி கொடுக்கமுடியும் என்று நினைத்தார். விழாவின் மூலம் அதைச் செய்தார் ஆனால் அவருடைய கடமைகள் கனத்திருந்தது. வரவேற்புக்கு பிறகு, ஜான் தன் மனைவியை தேவாலயத்திற்கு அழைத்துச்சென்று - இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக – லீனாவை நேசிப்பதற்கும், பராமரிப்பதற்கும் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவன் உதவி செய்யவேண்டும் என்று ஜெபித்தார்.

ஜானின் திருமணநாளின் அச்சங்கள் அவரது மனித பலவீனங்களை அங்கீகரிப்பதின் அடிப்படையில் அமைந்தது. ஆனால், தேசங்களை ஆபிரகாமின் சந்ததியின் (கலா. 3:16) மூலம் ஆசீர்வதிப்பதாக வாக்குறுதி அளித்த தேவனுக்கு அத்தகைய வரம்புகள் இல்லை. 

யூத கிறிஸ்தவர்கள் விடாமுயற்சசியோடும், பொறுமையோடும் இயேசுவின் மேல் தாங்கள் வைத்திருக்கிற விசுவாசத்தைத் தொடர வேண்டுமென்றும் கூறி,  ஆபிரகாமுக்கு தேவன் அளித்த வாக்குறுதியையும் (எபி. 6:13-15), அவர்  பொறுமையாய் காத்திருந்து வாக்குதத்தம்பண்ணப்பட்டதை பெற்றுக்கொண்டதையும் நினைவுகூர்ந்தார். ஆபிரகாம் மற்றும் சாராள் மூத்த குடிமக்கள் என்ற நிலையில் இருந்தாலும்   தேவன் வாக்குபண்ணின “பெருகவே பெருகப்பண்ணுவேன்” (வ14) என்பதை நிறைவேற்ற ஒரு தடையாய் இருந்ததில்லை.

நீங்கள் சோர்ந்துபோய், பலவீனமான மனிதனாய் இருக்கும்போது தேவன் மேல் நம்பிக்கை வைக்க அழைக்கப்படுகிறீர்களா? உங்கள் கடமைகளை கடைபிடிக்க, உறுதிமொழிகளையும் சபதங்களையும் நிறைவேற்ற போராடிக்கொண்டிருக்கிறீர்களா? 2 கொரிந்தியர் 12:9ல் “என் கிருபை உனக்கு போதும். பலவீனத்தில் என் பலம்  பூரணமாய் விளங்கும்” என்று தேவன் நமக்கு உதவி செய்ய வாக்களித்திருக்கிறார். முப்பத்தாறு வருடங்களுக்கு மேலாக ஜான் லீனா தம்பதியருக்கு தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவன் உதவி செய்திருக்கிறார். உங்களுக்கும் உதவி செய்வார் என்று ஏன் நம்பக்கூடாது?

பேசுங்கள்

“அதோ அந்த மனிதர்! அதோ அந்த மனிதர்!” பானு, உணவகத்தில் வெலை செய்யும் சக ஊழியர்களிடம் கூச்சலிட்டார். வெவ்வேறு சூழ்நிலைகளில் அவளை சந்தித்த மெல்வின் என்பவரைப் பற்றி குறிப்பிட்டாள். அவர் தன்னுடைய தேவாலயத்தின் புல்வெளியை பராமரித்துக்கொண்டிருக்கும்போது, விபச்சாரி போல் காணப்பட்ட ஒரு பெண்ணிடம் உரையாடலை துடங்கும்படியாக பரிசுத்த ஆவியானவர் ஏவினார். அவர் அந்தப் பெண்ணை ஆலயத்திற்கு வர அழைத்தப்போது அவளிடமிருந்து வந்த பதில் “நான் என்ன செய்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரியுமா ?. நான் அங்கு வருவதை அவர்கள் விரும்பமாட்டார்கள்.” என்பதே.  மேல்வின் இயேசுவின் அன்பைப் பற்றியும் அவளுடைய வாழ்க்கையை தேவன் மாற்ற வல்லமையுள்ளவர் என்றும் கூறியபோது அவள் கண்களில் இருந்து கண்ணீர் முகத்தில் வடிந்தது. இப்போது, அநேக வாரங்களுக்குப் பிறகு, பானு ஒரு புதிய சூழலில், இயேசு வாழ்க்கையையே மாற்ற வல்லவர் என்ற உயிருள்ள ஆதாரமாக வேலைப்பார்த்துக்கொணடிருக்கிறாள்.

விசுவாசிகளை ஜெபம் செய்ய ஊக்குவிக்கும்படி பரிசுத்த பவுல் இருமடங்கு வேண்டுகோள் வடுத்திருக்கிறார்

“கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக் குறித்துப் பேச வேண்டியபிரகாரமாய்ப் பேசி, இதை வெளிப்படுத்துவதற்கு,  திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்”. (கொலோசெயர் 4:3,4).

இயேசுவுக்காக தைரியமாகவும், தெளிவாகவும் பேசுவதற்கான வாய்ப்புகளுக்காக நீங்கள் ஜெபித்திருக்கிறீர்களா ? என்ன ஒரு பொருத்தமான பிரார்த்தனை. ! இப்படிப்பட்ட ஜெபம் மெல்வினைப் போன்ற அவரது சீஷர்களை எதிர்பாராத இடங்களில் மற்றும் எதிர்பாராத நபர்களிடம் பேச வழிவகுக்கும். இயேசுவுக்காக பேசுவது சங்கடமாக இருக்கும் ஆனால் அதன் வெகுமதிகள் - மாற்றப்பட்ட வாழ்க்கை – நம் வாழ்க்கை நலக்குறைவுகளை ஈடுசெய்ய ஒரு வழியாகிறது.

நம்பிக்கை மட்டுமே

300 குழந்தைகள் உடைமாற்றிக் கொண்டு, காலை உணவிற்காக அமர்ந்தனர். உணவிற்காக நன்றி ஜெபமும் ஏறெடுக்கப்பட்டது. ஆனால் அங்கு உணவு இல்லை! இத்தகைய சூழல், அந்த அனாதை குழந்தைகள் இல்லத்தின் இயக்குனரும் ஊழியருமான ஜார்ஜ் முல்லருக்கு (1805-1898) புதிதல்ல.  தேவன் அவர்களை எப்படி போஷிப்பார் என்பதைக் காண இது மற்றொரு வாய்ப்பு. மில்லரின் ஜெபம் முடிவடைந்த சில நிமிடங்களில், முந்திய இரவு தூங்கமுடியாமல், 3 முறை ரொட்டி செய்த ஒரு ரொட்டிக் கடைக்காரர், இந்த அனாதையில்லத்தில், அவருடைய ரொட்டிகளைப் பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்து வாசலில் வந்து நின்றார். இது நடந்த சற்று நேரத்தில், அந்தப் பட்டணத்திற்குப் பால்           விநியோகிக்கும் ஒருவர் வந்தார். அவருடைய வாகனம் இந்த அனாதை இல்லத்தின் அருகில் பழுதடைந்து நின்று விட்டது. அதிலிருந்த பால் வீணாவதை விரும்பாத அவர் அதனை முல்லருக்குக் கொடுத்தார்.

நம்முடைய நலவாழ்வுக்குத் தேவையான அடிப்படைகளாகிய ஆகாரம், தங்கும் இடம், சுகம், பொருளாதாரம், நட்பு ஆகியவை கிடைக்காதபோது, நாமும் கவலை, பதட்டம், சுய பரிதாபம் ஆகியவற்றிற்குள் தள்ளப்படலாம். தேவையிலிருக்கும் ஒரு விதவையின் மூலம் தேவன் தரும் உதவி வந்ததைப் பற்றி முதல் இராஜாக்கள் 17:8-16 நமக்கு நினைவு படுத்துகின்றது. “பானையில் ஒரு பிடி மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லை” (வ.12) என்று அவள் கூறுகின்றாள். இதற்கு முன்பு காகங்கள் எலியாவை போஷித்ததைப் பற்றி காண்கின்றோம் (வ.4-6). நம்முடைய தேவைகளைச் சந்திக்கும் படி நாம் பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரியலாம். நம்முடைய தேவைகளையெல்லாம் தருவதாக வாக்களித்துள்ள தேவன் நமக்குத் தருவார் என்ற தெளிவான சிந்தனையை நாம் பெற்றுக் கொள்ளும் போது, பிரச்சனையிலிருந்து விடுதலையைப் பெற்றுக் கொள்வோம். நாம் தீர்வுகளைத் தேடிக் கொள்ளும் முன்பு, முதலாவது தேவனைத் தேட கவனமாய் இருப்போம். அப்படிச் செய்யும் போது, நேரத்தை வீணாக்குவதையும், ஆற்றலைச்செலவிடுவதையும் தோல்வியையும் தவிர்த்துகொள்ளலாம்.

அன்போடு திருத்துதல்

ஆரம்ப கோடைகால வெப்ப நிலை, புத்துணர்ச்சி தருவதாக      இருந்தது. பிரயாணத்தில் என்னோடு துணையாக வந்த என்னுடைய மனைவிக்கு இதைவிட நல்ல சூழ் நிலை இருக்க முடியாது. அந்த இனிய கணங்கள் சீக்கிரத்தில், சோகமாக மாறியிருக்கும், ஆனால் அதற்குள், நான் தவறான திசையில் செல்கிறேன் என்று எச்சரிக்கும் ஒரு சிவப்பு வெள்ளை எச்சரிப்புப் பலகையைப் பார்த்து விட்டேன். நான் சரியாக அனைத்துப்பக்கமும் திரும்பி பார்க்காததால், ஒரு கணம் என் முன்னே தோன்றிய “ நுழையாதே” என்ற அடையாளம், என்னுடைய முகத்திற்கு முன்பாக வந்து நின்றது. நான் உடனடியாக என்னுடைய தவறை சரிசெய்து கொண்டேன். நான் சரியான பாதையில் செல்லவில்லை என்ற எச்சரிக்கையை கவனிக்காமல் இருந்திருந்தால், நான் என்னுடைய மனைவிக்கும், எனக்கும் மற்றும் என்னோடு சேர்ந்தவர்களுக்கும் ஆபத்தை வருவித்திருப்பேன் என்பதை நினைத்து நடுங்கினேன்.

யாக்கோபின் முடிவு வார்த்தைகள், திருத்துவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.   நாம் சென்று கொண்டிருக்கும் பாதை அல்லது செயல், தீர்மானம் அல்லது முடிவு தீமையை விளைவிக்கலாம் என்பதை, நம்மீது அக்கரை கொண்டவர்கள் அறிந்து, “மீண்டும் நல்வழி”க்கு கொண்டுவர நம்மில் யாருக்கு தேவையில்லாதிருக்கின்றது? யாரோ ஒருவர் சரியான நேரத்தில், தைரியமாக நம் காரியங்களில் குறுக்கிடவில்லை யெனின், நமக்கும் மற்றவருக்கும் என்னென்ன தீமை நடந்திருக்கும் என்பதை யார் அறிந்திருக்கக் கூடும்?

அன்போடு கூடிய திருத்துதலை யாக்கோபு வலியுறுத்துகின்றார், “தப்பிப் போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன், ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்” (5:20) என்கின்ற வார்த்தைகளால் விளக்குகின்றார். திருத்துதல் என்பது தேவனுடைய கிருபையின் வெளிப்பாடு. நாம் மற்றவர்கள் நலனின் மீது கொண்டுள்ள அன்பும் கரிசனையும், அவர்களோடு பேசவும், அவர்களின் பாதையில் குறுக்கிடவும் நம்மைத் தூண்டுவதன் மூலம், “அவர்களை மீண்டும் திருப்பி கொண்டு வருவதற்கு” தேவன் நம்மைப் பயன் படுத்துவாராக (வ.19).

தேவனுடைய தழும்புகள்

நான் கெளரவ் என்பவரோடு உறவாடிய பின்னர், அவர் வாழ்த்து தெரிவிக்க, ஏன் கைகளைக் குலுக்கிக் கொள்வதைவிட “மூடிய விரல்களை மோதிக்கொள்வதை” தெரிந்துகொண்டார் என்பதை நினைத்துப் பார்த்தேன். அவன் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டதால், உள்ளங்கையில் ஏற்பட்ட காயத்தைக் காட்ட விரும்பாததால், அவன் கைகளைக் குலுக்குவதில்லை. மற்றவர்களால் அல்லது தானே தனக்குள்ளாக ஏற்படுத்திக் கொண்ட உட்காயங்கள் அல்லது வெளிக்காயங்களை, யாருமே காட்டிக் கொள்ள விரும்புவதில்லை என்பது உண்மைதான்.

கெளரவோடு பேசிக் கொண்டபின்பு, இயேசு கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள காயங்களை- அவருடைய கரங்களிலும், கால்களிலும்  ஆணிகள் துளைத்ததால் ஏற்பட்ட காயங்களும், விலாவில் ஈட்டி பாய்ந்ததால் ஏற்பட்ட காயத்தையும் குறித்து நினைத்துப் பார்த்தேன். தன்னுடைய காயங்களை மறைப்பதை அல்ல, அதனை கவனிக்கும்படி கிறிஸ்து விரும்புகின்றார்.

இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார் என்பதைச் சந்தேகித்த தோமாவிடம் அவர், “நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு” (யோவா.20:27) என்றார். தோமா அந்தக் காயங்களைப் பார்த்தபோது, அவன் கிறிஸ்துவின் அற்புதமான வார்த்தைகளைக் கேட்கின்றான், அவர் இயேசு என்பதை உறுதிபண்ணிக் கொண்டான். அவனுக்குள் நம்பிக்கை வந்தபோது, “என் ஆண்டவரே! என் தேவனே!” (வ. 28) என்றான். அப்பொழுது இயேசு, அவரைக் காணாதிருந்தும் அல்லது அவருடைய சரீரத்தின் காயங்களைக் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்களுக்கு ஒரு சிறப்பான ஆசிர்வாதத்தைக் கூறுகின்றார். “காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்’ (வ.29) என்கின்றார்.

இதில் மிகச் சிறப்பான செய்தி என்னவெனில், நம்முடைய பாவங்களின் நிமித்தம், அவர் காயப்பட்டார், நமக்கு விரோதமாகவும், பிறருக்கு விரோதமாகவும் செய்த பாவங்களுக்காக அவர் காயங்களை ஏற்றுக் கொண்டார். இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம், நம்முடைய பாவங்களும், அவரை விசுவாசித்து, தோமாவைப் போன்று இயேசுவை, “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று அறிக்கை செய்கின்றவர்களின் பாவங்களும் மன்னிக்கப் பட்டது.

கடனை நீக்குபவர்

அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைகழகத்தில், பட்டமளிப்பு விழா  நடைபெற்ற போது, அங்கிருந்த மொத்த கூட்டமும் தெரிவித்த பதிலை அதிர்ந்தது என்ற ஒரே வார்த்தையால் வெளிப்படுத்தலாம். அந்த பட்டமளிப்பு விழாவின் துவக்க பேச்சாளர், பட்டம் பெறும் அந்த வகுப்பிலுள்ள அனைத்து மாணவரின் கடன்களை, லட்சக்கணக்கான டாலர்களைத் தள்ளுபடி செய்ய, தானும் தன்னுடைய குடும்பத்தினரும் சேர்ந்து, அதனை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார். மகிழ்ச்சியில் மூழ்கி, கண்ணீரோடும், ஆரவாரத்தோடும் தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்த கூட்டத்தில், ஒரு லட்சம் டாலர்கள் (72 லட்சம் ரூபாய்) கடன் வைத்திருந்த ஒரு மாணவனும் இருந்தான்.

 “உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து  முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாக” இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்தின பின்பு, யோவான், அவர்  நிறைவேற்றின கடன் தள்ளுபடி வேலையைப் பற்றி எழுதுகின்றார். “நம்மிடத்தில் அன்பு கூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவினவரை” ஆராதிக்கின்றார் (வெளி. 1:6). இந்த வார்த்தைகள் மிக எளிமையாக இருந்தாலும், அதன் அர்த்தம் மிக ஆழமானது.    மோர்ஹவுஸ்ஸில் பட்டம் பெற்ற மாணவர்கள் கேட்ட நற்செய்தியைக் காட்டிலும் சிறந்த செய்தி, இயேசு கிறிஸ்துவின் மரணத்தினால் (சிலுவையில் சிந்தின இரத்தத்தினால்), நம்முடைய பாவச் செயல்களுக்கும், பாவ ஆசைகளுக்கும், பாவ உணர்வுகளுக்கும் உள்ள தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டு நம்மை அவர் விடுவித்தார். நம்மீது இருந்த கடன் தீர்ந்த்தால், யாரெல்லாம் இயேசுவை விசுவாசிக்கின்றார்களோ அவர்களின் பாவமெல்லாம் மன்னிக்கப் பட்டு, தேவனுடைய இராஜியத்தின் குடும்பத்தில் நாம் இணைகின்றோம். இந்த நற்செய்தி தான், எல்லா நற்செய்திகளிலும் மிகச் சிறந்தது!

நாம் இணைந்து வெற்றிபெறுவோம்

நடு இரவில், போதகர் சாமுவேல் என்பவருக்கு, அவருடைய சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு வருமாறு அழைப்பு வந்தது. அவர் அங்குச் சென்ற போது அவருடைய வீடு  முழுவதும் பற்றி எரிவதைக் கண்டார். அந்த தந்தையின் மீது நெருப்பு பற்றிக் கொண்டபோதிலும், அதோடு தன்னுடைய குழந்தையைக் காப்பாற்றும்படி உள்ளே சென்று, மயங்கிய நிலையில் இருந்த தன் மகளை வெளியே கொண்டு வந்தார். அந்த கிராமப் பகுதியில், 10 கிலோமீட்டருக்கு அப்பால் தான் மருத்துவமனை இருந்தது. அவர்களுக்கு எந்த வாகன வசதியும் இல்லாதபடியால், அந்த போதகரும், தந்தையும் அக்குழந்தையோடு ஓடத்துவங்கினர், ஒருவர் அக்குழந்தையைச் சுமந்து களைத்துப் போனால், மற்றவர் அவளை சுமந்து கொண்டு ஓடுவார். இருவரும் சேர்ந்து அந்த பயணத்தைச் செய்தனர். தந்தையும் மகளும் சிகிச்சை பெற்று முழுவதும் குணமாயினர்.

யாத்திராகமம் 17:8-13ல், தேவன் யோசுவாவின் முயற்சியோடு, ஒரு திட்டமிட்ட வெற்றியை தருகின்றார். இங்கு யோசுவா யுத்தம் செய்யும் மனிதர்களை போர்களத்தில் வழி நடத்துகின்றான். மோசே தேவனுடைய கோலை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கின்றான். அவனுடைய கரங்கள் தளர்ந்த போது, ஆரோனும், ஊரும் அவனுடைய கரங்களை, சூரியன் மறையும் வரையும் தாங்கிப்  பிடிக்கின்றனர், எதிரிகளைத் தோற்கடிக்கின்றனர்.

ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதின் மதிப்பை நாம் குறைவாக நினைக்கக் கூடாது. இரக்கமுள்ள தேவன், ஒருவருக்கொருவர் நன்மை செய்யும்படி, அவருடைய ஜனங்களைத் தன் சார்பாகத்     தந்துள்ளார். நமக்கு செவிகொடுக்கும் காதுகளையும், உதவிசெய்யும் கரங்களையும், ஞானம், ஆறுதல் மற்றும் திருத்தும் வார்த்தைகளைத் தரக்கூடிய நபர்களை நம்மிடம் வரவும் நம்மூலமாக பிறருக்குக் கிடைக்கவும் செய்கின்றார். நாம் இணைந்து ஜெயிப்போம், தேவனுடைய நாமம் மகிமைப் படுவதாக.

குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ளல்

கென்யா தேசத்திலுள்ள நைரோபியின் சேரிப் பகுதிக்கு நானும் எனது நண்பனும், எங்களது வாகனத்தில் சென்றிருந்த போது, அங்குள்ளவர்களின் வறுமையைப் பார்த்த, எங்களது இருதயம் வெகுவாக தாழ்த்தப்பட்டது. அதே நேரத்தில், அங்குள்ள சிறு பிள்ளைகள் சத்தமாக, “போதகர், போதகர்!” என்று கூப்பிட்டுக் கொண்டு ஓடி வருவதைப் பார்த்தபோது, வேறுவகையான உணர்வுகள், தூய்மையான நீரைப் போன்று எங்களின் இருதயத்திலிருந்து பொங்கி எழுந்தது. அவர்களுடைய ஆவிக்குரிய வழிகாட்டியை எங்களது வாகனத்தில் பார்த்த அவர்களின் மகிழ்ச்சி ததும்பிய வரவேற்பு இவ்வாறு இருந்தது. தங்களின் மென்மையான சத்தத்தோடு, சிறுவர்கள் தங்கள் மீது கரிசனை கொண்டு பாதுகாத்து வரும் ஒருவரை வரவேற்றனர்.

இயேசு கழுதையின் மீது ஏறி எருசலேமுக்கு வந்த போது, அவரை வரவேற்ற கூட்டத்தினரோடு, அநேக குழந்தைகள் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டனர். “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” (மத்.21:9, 15) என்று ஆர்ப்பரித்தனர், அவர்கள் இயேசுவை ஸ்தோத்திரித்து ஆர்ப்பரித்த சத்தம் மட்டுமல்ல, இயேசு, அவ்விடத்திலிருந்து துரத்தி விட்ட வியாபாரிகள் மற்றும் விலங்குகள் நடந்து செல்லும் சத்தமும் அவ்விடத்தை நிரப்பியது (வச. 12-13). மேலும் அவருடைய இரக்கத்தின் கிரியைகளை நேரில் கண்ட மதத் தலைவர்கள் “கோபமடைந்தனர்” (வச. 14-15). குழந்தைகள் இயேசுவைப் போற்றி பாடுவதைக் கேட்ட அவர்கள் எரிச்சல் அடைந்து, கத்துகின்றனர், (வச. 16), ஜீவன் இல்லாத தங்களுடைய இருதயத்தின் ஏழ்மை நிலையை வெளிக்காட்டினர்.

இயேசுவை இவ்வுலகின் இரட்சகராக அறி  ந்து கொண்ட எல்லா இடத்திலும் உள்ள குழந்தைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இயேசு ஒருவரே        நம்முடைய துதியையும் அழுகையையும் கேட்பவர், அவரே நம்மைப் பாதுகாப்பவர், ஒரு குழந்தையைப் போன்று, நம்பிக்கையோடு நாம் அவரிடம் வரும் போது, அவர் நம்மை மீட்டுக் கொள்வார்.