எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆர்தர் ஜாக்சன்கட்டுரைகள்

“இருப்பினும்”

2017 ம் ஆண்டு, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மிகப்பெரிய சூறாவளியின் பின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்ததால் ஒரு குழுவாக ஹியூஸ்டன் நகருக்குப் பயணித்தோம். எங்களுடைய இலக்கு, புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை உற்சாகப்படுத்துவது தான். அவர்களின் உடைந்துபோன ஆலயம் மற்றும் சிதைந்து போன வீடுகளின் மத்தியில் அவர்களைக் காணும்போது எங்களது விசுவாசமே ஆட்டம் கண்டது.

இந்த விதமான கடினமான சூழ்நிலையில் ஹார்வே நகர மக்கள் வெளிப்படுத்தின பிரகாசமான விசுவாசமானது, கி.மு. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் ஆபகூக் வெளிப்படுத்தின விசுவாசத்தினை நமக்குக் காட்டுகிறது. தீர்க்கதரிசியானவர் கடினமான காலங்கள் வரப் போகிறது என்பதை முன்னறிவித்தார் (1:5-2:1). காரியங்கள் நலமாவதற்கு முன்னே, அவைகள் மிகவும் மோசமடையப் போகின்றன. அந்தத் தீர்க்கதரிசனத்தின் இறுதியில், அவர் பூலோக இழப்புகளைச் சுற்றி தன் சிந்தனைகளை செலுத்திய, பிறகு 'இருப்பினும்" என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். மூன்று வகையான தோற்றத்தை உருவாக்குகிறது. 'அத்திமரம் துளிர் விடாமற்போனாலும்... ஒலிவமரம் பலனற்றுப் போனாலும்... தொழுவத்திலே மாடுகள் இல்லாமற்போனாலும்... மந்தையில் முதலற்றுப் போனாலும்" (3:17).

இயற்கைப் பேரழிவு அல்லது பிரியமானவர்களின் மரணம், சுகத்தை அல்லது வேலை இழத்தல் போன்ற கற்பனைக்கெட்டாத இழப்புகளை நாம் சந்திக்கும் பொழுது நாம் எந்த நிலையில் நின்று அவைகளை மேற்கொள்ளுகிறோம்? ஆபகூக்கின் 'கடினமான காலங்களின் கீதங்கள்" நம்மை தேவன்மேல் உறுதியான விசுவாசத்தையும், நம்பிக்கையையும் வைக்க அழைக்கிறது. அவரே நம்மை மீட்கக்கூடிய காரணர் (வச. 18) பெலன், உறுதிப்படுத்துகிறவர் (வச. 19). நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். இறுதியாக, அவரை நம்புகிறவர்கள் ஏமாற்றம் அடையமாட்டார்கள்.

புதுப்பிக்க ஆயத்தமாக இருக்கிறார்

நான் ஜெர்மனி நாட்டில் இராணுவத்தில் பணிபுரிந்தபோது, புத்தம்புதிய 1969 வோக்ஸ்வேகன் பீட்ல் கார் ஒன்றை வாங்கினேன். அருமையான கார்! அதன் வெளிப்புற அடர் பச்சை நிறத்தையும், உட்புற லெதர் அலங்காரத்தையும் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கும். வருடங்கள் உருண்டோடின, வண்டியும் பழசாகியது. அதுபோதாதென்று ஒரு விபத்து வேறு. அதனால் காரின் பக்கவாட்டில் இருக்கும் கால்மிதி பகுதி சேதமடைந்தது. காரின் கதவுகளில் ஒன்று உடைந்துபோனது. “மீண்டும் புதுப்பிப்பதற்கு இந்தக் கார் முற்றிலும் தகுதியானதுதான்” என்று என் கற்பனையில் உதித்திருக்கலாம். அதிக பண செலவில் அதைப் புதுப்பித்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் நான் செய்யவில்லை.

ஆனால் தேவனுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். அவர் மிகச்சரியாகப் பார்க்கக்கூடியவர், அளவில்லா வளங்களைப் பெற்றிருப்பவர். வாழ்க்கையில் அடிபட்டு, உடைந்துபோனவர்களை அவர் கைவிடுவதில்லை. மீண்டும் புதுப்பிக்கப்படத் தகுதியானவர்கள் யார் என்பதுபற்றியும் புதுப்பிக்க வல்லவரான தேவனைப்  பற்றியும் சங்கீதம் 85 சொல்லுகிறது. தேவனுக்கு எதிராக கலகம் செய்ததின் விளைவாக இஸ்ரவேலர் நாடு கடத்தப்பட்டார்கள், பிறகு எழுபது வருடங்கள் கழித்து அந்தச் சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்தார்கள், அதை மனதில் வைத்தே இந்தச் சங்கீதம் எழுதப்பட்டிருக்கவேண்டும். தேவன் தங்கள் பாவங்களை மன்னித்து, தங்கள்மேல் தயவுகாட்டியதை எண்ணிப்பார்த்தார்கள் (வச. 1-3). உடனே தேவனிடம் உதவி கேட்கவும் (வச. 4-7), அவரிடமிருந்து நன்மைகளை எதிர்பார்க்கவும் (8-13) ஊக்கம் பெற்றார்கள். 

அடிபட்டு, நொந்து, உடைந்துபோகிற அனுபவம் யாருக்குத்தான் உண்டாவதில்லை? இவ்வாறு நேரிடுவதற்கு சிலசமயங்களில் நாமேகூட காரணமாக இருக்கலாம். ஆனால், நம்முடைய தேவன் புதுப்பித்தலின் தேவன், பாவமன்னிப்பின் தேவன். தாழ்மையோடு அவரிடம் செல்கிற எவருக்கும் நம்பிக்கை உண்டு. தம்மிடம் வருகிறவர்களை இருகரம் நீட்டி அவர் வரவேற்கிறார்; அவ்வாறு வருகிறவர்கள் அவர்களுடைய கரங்களில் தஞ்சம் புகலாம்.

வழிகளை மாற்றும் தேவன்

மற்றவர்களுக்கு ஊழியம்செய்ய தேவன் நமக்கு ஒரு வாசலைத் திறந்திக்கிறார் என்று உணர்ந்தாலும், அந்தச் சமயத்தில் 'வேண்டாம்," அல்லது 'இப்போது வேண்டாம்" என்று சொன்னால் எப்படி இருக்கும்? என்னுடைய ஊழியக்காலத்தின் ஆரம்பத்தில் இரண்டு வாய்ப்புகள் எனக்கு வந்தன் இரண்டுமே என்னுடைய திறமைகள், வரங்கள் மூலம் சபையின் தேவைகளைச் சந்திப்பதற்கேற்ற வாய்ப்புகள்தாம். ஆனால், கடைசியில் இரண்டு வாசல்களுமே அடைபட்டன. இந்த ஏமாற்றமான

அனுபவங்களுக்கு பிறகு, இன்னொரு பொறுப்பு தேடி வந்தது; அதற்கு நான் தேர்வுசெய்யப்பட்டேன். அந்த ஊழிய அழைப்புமூலம் வாழ்க்கையை மாற்றத்தக்க ஊழியங்களை பதின்மூன்று வருடங்கள் செய்ய முடிந்தது.

அப்போஸ்தலர் 16ல், பவுலையும் அவரோடு இருந்தவர்களையும் இரண்டுமுறை தேவன் தடைசெய்து, வேறுபக்கம் அனுப்புகிறார். முதலாவது அவர்கள், 'ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டார்கள்" (வச. 6). பிறகு அவர்கள், 'மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்" (வச. 7). தம்முடைய ஊழியத்திற்கும், ஊழியக்

காரர்களுக்கும் எது சரியாக இருக்கும் என்பது தேவனுக்குத் தெரியும், அது அவர்களுக்குத் தெரியாது. முந்தின திட்டங்களை தேவன் தடைசெய்ததால்தான், அடுத்து என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் கேட்கமுடிந்தது, தேவனுடைய உறுதியான வழிநடத்துதலைப் பெறமுடிந்தது (வச. 9-10).

இது உண்மையிலேயே பெரிய இழப்புதான் என்கிற எண்ணம் முதலில் வந்ததுமே யாருக்குத்தான் வருத்தமாக இருக்காது? எதிர்பார்த்த வேலை கிடைக்காமல் போகும்போதும், செய்த வேலைக்கு போதுமான வருமானம் கிடைக்காதபோதும், வேறிடத்திற்கு மாறவேண்டும் என்கிற எண்ணம் தடைபடும்போதும் பெரிய வேதனையாக இருக்கும். இத்தகைய விஷயங்கள் அந்த நேரத்தில் நமக்கு அதிக மனப்பாரத்தைக் கொடுக்கலாம்;. ஆனால், அவை உண்மையிலேயே தேவன் மாற்றிவிட்ட பாதைகள் என்பதும், தாம் விரும்புகிற இடத்தில் நம்மை வைப்பதற்கு தேவன் கிருபையாகக் கையாண்ட வழிகள் என்பதும் பிறகுதான் தெரியவரும்; அப்போது நாம் தேவனுக்கு நன்றி கூறுவோம்.

புயலிலும் அவர் பிரசன்னம்

எங்களுடைய சபையைச் சேர்ந்த ஒருவருடைய வீடு தீ விபத்தில் சிக்கியது.  அந்தக் குடும்பத்தில் மொத்தம் ஆறு பேர்.  கணவனும் மகனும் பிழைத்துக் கொண்டார்கள்; மனைவியும் அம்மாவும் இரண்டு சிறிய குழந்தைகளும் அந்த விபத்தில் மரித்துப் போனார்கள்.  மனதைப் பிளக்கிற இத்தகைய சம்பவங்களை ஓயாமல் கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்ட சம்பவங்கள் நேரிடும் போதெல்லாம் எழும்புகிற கேள்வி, “நல்லவர்களுக்கு ஏன் மோசமான சம்பவங்கள் நேரிடுகின்றன?” என்பதுதான்.  எல்லாக் காலத்திலும் இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்காமல்தான் இருந்திருக்கிறது.

சங்கீதம் 46ல் சங்கீதக்காரன் வலியுறுத்துகிற சத்தியமும்கூட எல்லாக் காலங்களிலும் பேசப்படுகிறது, வாக்குத்தத்தமாகப் பார்க்கப்படுகிறது, மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.  “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.” வசனம் 1. பூமியும் மலைகளும் அதிர்வது, சமுத்திரம் கொந்தளிப்பது என்று பேரழிவுகள் பற்றி 2,3ம் வசனங்கள் பேசுகின்றன. இதுபோன்ற பேரழிவில் சிக்குவதை நினைத்தாலே நமக்கு நடுக்கம் ஏற்பட்டு விடும். சிலசமயங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் உண்மையிலேயே சிக்கிக்கொள்கிறோம். மரணத்தைக் கொண்டுவரும் நோய்கள், கொடிய பணப்பிரச்சனை, நமக்கு பிரியமானவர்களின் மரணம் போன்றவை பேரழிவுகளாக அமைகின்றன.

இப்படிப்பட்ட பிரச்சனைகள் நேரிடும்போது, தேவன் உண்மையில் இருக்கிறாரா என்று யோசிக்கத் தூண்டப்படுகிறோம். அப்படி யோசிக்க அவசியமில்லையென வேதாகமம் கூறுகிறது. “சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்.” வசனங்கள் 7,11. நம்மால் தாங்கமுடியாத சூழ்நிலைகளின் மத்தியிலும் அவருடைய பிரசன்னம் நம்மோடுகூட இருக்கும்.  அவர் நல்லவராகவும், அன்புள்ளவராகவும், நம்பிக்கைக்கு பாத்திரராகவும் இருப்பதால் நாம் ஆறுதலடையலாம்.

தேவனுடைய அற்புதமான கரங்கள்

எல்லாவற்றையும் இழந்துபோனபோது

பெலத்தை இழந்தபின் மறுபடியும் பெலப்படுத்தும் வல்லமை

நான் எனது ஐம்பத்திநான்காம் வயதில் மில்வாக்கீ மாரத்;தான் ஓட்டத்தில் இரண்டு இலக்குகளோடு பங்கெடுத்தேன். ஒன்று அந்த ஓட்டத்தை முடிக்க வேண்டும் இரண்டாவது, அதனை ஐந்து மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும். ஒருவேளை நான் முதல் 13.1 மைல்கள் தூரத்தைக் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் போலவே இரண்டாம் பகுதியும் அமையுமாயின், நான் எடுத்துக்கொள்ளும் நேரம் மிகவும் வியப்பூட்டுவதாக இருக்கும். ஆனால், இந்த ஓட்டம் மிகவும் சோர்வடையச் செய்யும் ஒன்று இரண்டாம் பகுதியின் போது தேவையான பெலனைப் பெற்றுக் கொள்ளவே முடியவில்லை. நான் எல்லைக் கோட்டினை எட்டும் போது, என்னுடைய நிலையான ஓட்டம் தளர்ந்து, வேதனை மிகுந்த நடையாக மாறிவிடும்.

ஓடும் ஓட்டத்தில் மட்டும்தான் இரண்டாம் பகுதிக்கு பெலப்படுத்தும் ஆற்றல் தேவையா? இல்லை. அது வாழ்க்கையின் ஓட்டத்திற்கும் தான். சோர்வினால் தளர்ந்த மக்கள் தேவையான சகிப்புத் தன்மையைப் பெற்றுக்கொள்ளவும் பெலனற்று சோர்ந்த மக்களுக்கு ஆறுதலையும், ஊக்கத்தையும் கொடுக்கவும் தேவனுடைய உதவி தேவை. ஏசாயா 40:27-31ல் காணப்படுகின்ற அழகிய தீர்க்கதரிசன வார்த்தைகள் எக்காலத்திற்கும் பொருத்தமான வார்த்தைகள். அது வெறுப்படைந்து, வலுவிழந்த மக்களிடம் தேவன் அவர்களை விட்டு விடவுமில்லை, அவர்கள் மீது கரிசனையோடிருக்கிறாரெனக் கூறுகின்றது (வச. 27) நம்முடைய ஏக்கங்கள் தேவனுடைய பார்வையைவிட்டு தவறிவிடவில்லை. சோர்ந்து போகிறவர்களுக்கு அவர் பெலன் கொடுக்கின்றார், ஆறுதல் அளிக்கின்றார். தேவனுடைய எல்லையில்லாத வல்லமையும், ஆழ்ந்த அறிவும் நம்மைத் தேற்ற உறுதியளிக்கின்றன (வச. 28).

இரண்டாம் நிலைக்குத் தேவையான ஆற்றலைக் குறிக்கும் வசனங்கள் 29-31. இந்த வார்த்தைகள் நமக்குத் தரப்பட்டவை. நாம் நம் குடும்பத்தினரை கவனிக்கும் பொறுப்பிலுள்ளோமா? பொருளாதாரத் தேவையாலும், உடல்ரீதியானத் தேவையாலும் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கின்றோமா? உறவினர்களால் ஏற்பட்ட மன அழுத்தமா? ஆவிக்குரிய போராட்டங்களா? வேதவசனங்களை தியானம் செய்து, ஜெபத்தில் அவருடைய பதிலுக்காக காத்திருக்கின்றவர்களுக்கு அவருடைய பெலன் கொடுக்கப்படும்படி காத்திருக்கின்றது.

பிரகாசமான விளக்குகள்

2015 ஆம் ஆண்டு கோடைகாலத்தில், கென்யாவிலுள்ள நைரோபி என்ற இடத்திலுள்ள மாதரே என்ற பின்தங்கிய பகுதிக்குச் சென்ற எங்கள் ஆலயத்தின் குழுவினர், அங்கு கண்ட காட்சியால் அதிர்ந்து போயினர். அங்கு நாங்கள் அழுக்கடைந்த

பள்ளிக்கூடத்தையும், துருபிடித்த உலோகச் சுவர்களையும் நலிவடைந்த மரச்சாமான்களையும் கண்டோம். மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ள அம்மக்களினிடையே ஒரே ஒரு நபர் மட்டும் மாறுபட்டு காணப்பட்டாள்.

அவளுடைய பெயர் பிரிலியன்ட். அந்த பெயர் அவளுக்குச் சற்றும் பொருத்தமாயில்லை. அவள் அங்குள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியை. அவளுக்குள் மகிழ்ச்சியும் தன்னுடைய சேவையைக் குறித்த ஒரு தீர்மானமும் இருந்தது. அவள் வண்ணமிகு உடையணிந்திருந்தாள். அவளுடைய தோற்றமும், அவள் மகிழ்ச்சியோடு அக்குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்த விதமும் எங்களை வியப்படையச் செய்தது.

முதலாம் நூற்றாண்டில் பிலிப்பி பட்டணத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களிடம் இவ்வுலகில் அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென பவுல் அவர்களுக்கு எழுதியதைப் போன்று பிரிலியன்ட் -ம் தன்னைச் சுற்றி வாழ்ந்தவர்களுக்கு ஒரு பிரகாசமான ஒளியைக் கொடுத்தாள். ஆவியில் பரிசுத்தம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த உலகில், இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகள் வானத்தின் சுடர்களைப் போலப் பிரகாசிக்க வேண்டுமென பவுல் கூறுகின்றார் (பிலி. 2:15). நாம் செய்யவேண்டிய செயல் திட்டம் ஒன்றும் மாறிவிடவில்லை. பிரகாசமான விளக்குகள் எங்கும் தேவையாயிருக்கின்றது. 'தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் (வச. 13) என்பதைக் கேட்கும் போது எத்தனை ஆர்வமாயிருக்கிறது. இயேசு தன்னைப் பின்பற்றுபவர்கள், எப்படியிருக்கவேண்டுமென விரும்புகின்றாரோ அப்படியே அவருடைய விசுவாசிகள் பிரகாசிக்க வேண்டும். இன்னும் அவர் நமக்குச் சொல்வது, 'நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்... மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது" (மத். 5:14-16) என்பதே.

மம்மா என்று அறியப்பட்டவர்

அவளுடைய பெயரும் நீண்டது அவளுடைய வாழ்நாட்களும் நீண்டவை. மேட்லின் ஹரியட் வோர்ஜாக்ஸன் வில்லியம்ஸ் 101 ஆண்டுகள் வரை வாழ்ந்தாள். அவள் இரண்டு கணவன்களோடு வாழ்ந்தாள். இருவருமே போதகர்கள். மேட்லின் என்னுடைய பாட்டி. நாங்கள் அவர்களை மம்மா என்றே அழைப்போம். என் உடன் பிறந்தோரும், நானும் அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். அவர்களுடைய இரண்டாவது கணவன் அவரை விரட்டிவிடும்வரை நாங்கள் அவர்களுடைய வீட்டில் தான் வளர்ந்தோம். அதற்குப் பின்னரும் எங்கள் அருகில் சுமார் ஐம்பது மைல்களுக்கப்பால்தான் வாழ்ந்து வந்தார்கள். எங்களுடைய பாட்டி பாமாலைகளை நன்கு பாடுபவர், வேத வசனங்களைச் சொல்லுபவர், பியானோ வாசிப்பவர், தேவனுக்கு பயந்து நடக்கும் ஒரு பெண். நானும், என்

உடன்பிறந்தோரும் அவருடைய விசுவாசத்தால் கவரப்பட்டவர்கள்.

2 தீமோத்தேயு 1:3-7ல் காண்கின்ற படி தீமோத்தேயுவின் பாட்டியாகிய லோவிசாளும், அவனுடைய தாயாகிய ஐனிக்கேயாளும் தீமோத்தேயுவின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். அவர்களுடைய வாழ்வும் போதனைகளும், வேதாகமத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தன (வச. 5, 2 தீமோ. 3:14-16). அவர்களுடைய விசுவாசம் தீமோத்தேயுவின் இருதயத்திலும் மலர்ந்தது. வேதாகமத்தின் அடிப்படையில் அவர் வளர்க்கப்பட்டார். அதுவே அவன் தேவனோடு உள்ள உறவில் வளர அடித்தளமாக அமைந்தது. அது அவனை தேவனுக்கு ஊழியம் செய்யும்படி உருவாக்கியது (1:6-7).

இன்றைக்கும், தீமோத்தேயுவின் காலத்திலும் தேவன் உண்மையுள்ள ஆண்களையும், பெண்களையும் எதிர்கால சந்ததியினரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த பயன்படுத்துகின்றார். நம்முடைய ஜெபமும், வார்த்தைகளும், செயலும், சேவையும் நாம் வாழும்போதும் அதற்குப் பின்னரும் தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்படும். அதனால் தான், நானும் என் உடன்பிறப்புகளும் எங்களுடைய மம்மாவினால் கற்றுக்கொடுக்கப்பட்ட செயல்களை நடப்பித்துக் கொண்டிருக்கிறோம். என்னுடைய  ஜெபமெல்லாம், என்னுடைய மம்மாவின் பாரம்பரியம் எங்களோடு நின்று விடக்கூடாது என்பதே.