மென்னோசை வார்த்தைகள்
ஒரு மனிதன் தன்னுடைய விமானத்தின் இருக்கையில் உட்கார்ந்திருக்கும் போது, அமைதியற்ற நிலையில் கால்களை ஆட்டிக் கொண்டேயிருந்தான். அவனுடைய கண்கள் விமானத்தின் ஜன்னலைப் பார்ப்பதும் திரும்புவதுமாக இருந்தன. பின்னர் அவன் தன் கண்களை மூடி, தன்னை அமைதிப்படுத்தும்படி பெருமூச்செடுத்தான். ஆனால், இவையொன்றும் அவனை அமைதிப்படுத்த முடியவில்லை. விமானம் மேலேறி பறந்தபோது, அவன் மெதுவாக முன்னும் பின்னுமாக அசைந்து கொண்டிருந்தான். அவனருகில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி, தன் கரத்தை அவன் புயத்தின் மீது வைத்து, அவனுடைய மன அழுத்தத்திலிருந்து அவனைத் திருப்பும்படியாக, மெதுவாக அவனோடு உரையாட ஆரம்பித்தாள். ‘‘உன்னுடைய பெயரென்ன?” ‘‘நீ எங்கேயிருந்து வருகிறாய்?” “நமக்கு எல்லாம் சரியாகிவிடுவோம்”, “நீ நன்றாக இருக்கின்றாய்” என்பன அவளுடைய மென்மையான வார்த்தைகள். அவனுடைய நடத்தையால் அவள் எரிச்சலடைந்திருக்கலாம் அல்லது அவனை அவள் உதாசினப்படுத்தியிருக்கலாம். ஆனால், அவள் அவனைத் தொட்டு அவனோடு சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டாள். இது ஒரு சிறிய காரியம்தான். ஆனால் மூன்று மணி நேரம் கழித்து அவர்கள் இறங்கிய போது, எனக்கு உதவியதற்கு மிக்க நன்றி” என்று கூறினான்.
இத்தகைய இளகிய மனதுடைய செயல்களைப் பார்ப்பது அரிது. அநேகருக்கு இரக்கம் என்பது தானாக வருவதில்லை. நம்முடைய முதல் கவனம் எப்பொழுதும் நம்மைப் பற்றியேயிருக்கும். ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் ‘‘ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயுமிருங்கள்” என்கிறார். (எபே. 4:32) இக்குணம் ஒவ்வொருவரையும் சார்ந்தது. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் போது தாம் பெற்றுக் கொண்ட புது வாழ்வில் ஆவியானவர் மாற்றங்களைக் கொண்டு வருகிறார். ஆவியானவர் நம்முடைய எண்ணங்களையும் நடத்தையையும் புதிப்பிக்கும் போது நாம் இரக்க குணத்தைப் பெற்றுக் கொள்கிறோம் (வச. 23).
இரக்கத்தின் தேவன் நம் இருதயங்களில் கிரியை செய்து, நம்முடைய மென்மையான, ஊக்குவிக்கும் வார்த்தைகளால் பிறர் வாழ்வைத் தொடும்படி நம்மில் செயல்படுகிறார்.
அது அணுகுமுறையில் உள்ளது
ரெஜினா தன் வேலையிலிருந்து வீட்டிற்கு ஊக்கமும், ஆற்றலும் இழந்து சோர்வுடன் திரும்பிக் கொண்டிருந்தாள். அந்த நாள் அவருடைய நண்பரொருவரிடமிருந்து வந்த ஒரு துயரச் செய்தியோடு ஆரம்பமானது. அவள் தன் சக பணியாளர்களோடு பங்கு பெற்ற கூட்டத்திலும் அச்செய்தி அவளை வட்டமிட்டுக் கொண்டேயிருக்க, அவளுடன் பணி புரிபவர்கள் அவளுடைய கருத்துக்களோடு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். ரெஜினா தேவனோடு பேச ஆரம்பித்தபோது, அவள் அந்நாளின் மன அழுத்தத்தையெல்லாம் தள்ளிவிட்டு சில மலர்களோடு, காப்பகத்தில் இருக்கும் தன் நண்பர் ஒருவரை எதிர்பாராத விதமாக பார்க்கச் சென்றாள். தேவன் எவ்வளவு நல்லவராக இருக்கிறார் என்று மரியா அவளோடு பகிர்ந்து கொண்டபோது ரெஜினாவின் ஆவியும் உற்சாகமடைந்தது மரியா “எனக்கு என்னுடைய சொந்த படுக்கை, நாற்காலி, ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு, செவிலியரின் உதவி எல்லாம் இருக்கிறது. தேவன் அவ்வப்போது என் அறைக்கு சில முக்கியஸ்தர்களைக் கொண்டு வருகிறார், ஏனெனில் நான் அவர்களை நேசிக்கிறேன், அவர் என்னை நேசிக்கிறார்.” என்று கூறினார்.
அணுகுமுறை, கண்ணோட்டம் என்று சொல்லும் போது, வாழ்க்கையில் 10 சதவீதம் தான் நமக்கு நடப்பவை, மீதி 90 சதவீதம் நாம் அதில் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதேயாகும” துன்ப காலங்களில் சிதறடிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்களுடைய துன்பங்களை அவர்கள் எப்படிப் பார்க்க வேண்டுமென யாக்கோபு எழுதுகிறார்,
“நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும் போது… அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (யாக். 1:2-3).
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில், கடினமான சூழல்களில் தேவனை நம்பும்படி கற்றுக் கொள்கிறோம். நாம் நம்முடைய போராட்டங்களை, தேவன் நாம் விசுவாசத்தில் வளர்வதற்கான சந்தர்ப்பங்களாக்குகின்றார் என பார்க்கக் கற்றுக் கொள்ளும்போது, யாக்கோபு கூறிய மகிழ்ச்சி நிரம்பிய கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்வோம்.
புழுக்கள் முதல் யுத்தம் வரை
பத்து வயதாக இருந்த கிளியோவிற்கு மீன் பிடித்தலில் அன்று முதல் அனுபவமாக இருந்தது. ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த புழு இரையை அவன் பார்த்தபொழுது, மீன் பிடித்தலை ஆரம்பிக்க அவன் தயங்கினான். இறுதியில் அவன் எனது கணவனிடம் “எனக்கு உதவி செய்யுங்கள் என்று கூறினான். அந்த வார்த்தைகளுக்கு அர்த்தத்தை எனது கணவன் அவனிடம் கேட்ட பொழுது “புழுக்களைக் கண்டால் எனக்கு பயமாக உள்ளது.” அவனது பயம் அவனை செயல்பட விடாமல் தடுத்துவிட்டது.
வயது முதிர்ந்தவர்களையும் பயம் செயல்பட இயலாமல் தடுத்துவிடும். கிதியோன் அவனது எதிராளிகளாகிய மீதியானியருக்குப் பயந்து ஆலைக்கு சமீபமாக கோதுமையை போரடித்துக் கொண்டிருந்த பொழுது, கர்த்தருடைய தூதனானவர் அவனுக்கு தரிசனமான பொழுது அவனும் பயந்திருப்பான் (நியா. 6:11). அவனது ஜனங்களை யுத்தத்தில் தலைமை தாங்கி நடத்த அவனை தேவன் தெரிந்தெடுத்துள்ளார் என்று கர்த்தருடைய தூதன் அவனிடம் கூறினான் (வச. 12-14).
அதற்கு கிதியோனின் மறுமொழி என்ன? “ஆ என் ஆண்டவரே நான் இஸ்ரவேலை எதினாலே இரட்சிப்பேன். இதோ மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது. என் தகப்பன் வீட்டில் நான் எல்லோரிலும் சிறியவன்” (வச. 15) என்று கூறினான். கர்த்தர் அவனோடு இருப்பதாக வாக்குத்தத்தம் பண்ணின பின்பும் கிதியோன் பயந்து இஸ்ரவேல் மக்களை மீட்க தேவன் அவனை பயன்படுத்துவதாக இருந்தால் ஓர் அடையாளத்தை அவனுக்கு காண்பிக்க வேண்டுமென்று கேட்டான் (வச. 36-40). தேவன் அவனது விண்ணப்பத்திற்கு செவிகொடுத்தார். இஸ்ரவேல் மக்கள் யுத்தத்தில் வெற்றி அடைந்தார்கள். நாற்பது ஆண்டுகள் கிதியோன் சமாதானமாக ஆட்சிசெய்தான்.
நம் அனைவருக்கும் பல்வேறு வகையான பயங்கள் உண்டு. புழு முதல் யுத்தம் வரைக்கும் பயம் உண்டு. எதாவது ஒரு காரியத்தை செயல்பட வேண்டுமென்று தேவன் நம்மிடத்தில் கேட்டால், நிச்சயமாக அக்காரியத்தை செய்வதற்கான பெலத்தையும் வல்லமையும் கொடுப்பாரென்று கிதியோனின் சரித்திரம் நமக்கு ஒரு நிச்சயத்தை கொடுக்கிறது.
தேவன் புதுமையானதொன்றை செய்து கொண்டிருக்கிறார்
“தேவன் உங்கள் வாழ்வில் ஏதேனும் புதியதை செய்துகொண்டிருக்கிறாரா?” என்ற கேள்வியை நான் சமீபத்தில் பங்கேற்ற ஒரு குழுவின் தலைவர் கேட்டார். கடினமான நிலைமைகளைக் கையாண்டு கொண்டிருக்கிற என் சிநேகிதி மின்டி இதற்குப் பதிலளித்தாள். வயதான பெற்றோர்களை கவனிப்பதில் பொறுமைமையும், கணவனின் உடல் நலக்குறைவில் சகிப்புத்தன்மையையும், இன்னமும் இயேசுவை பின்பற்ற தேர்ந்துகொள்ளாத பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் புரிந்துகொள்ளவும் பொறுமை தேவையாயிருக்கிறது. மேலும் அவள் நாம் சாதாரணமாக நினைப்பதற்கு சற்று மாறாக உள்ளான ஒரு கருத்தினையும் கூறினாள். “நான் அன்புகூரும்படியாக என்னுடைய திறமையையும் சந்தர்ப்பங்களையும் தேவன் விரிவாக்கித் தருவதன் மூலம் புதிய காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார் என நான் நம்புகிறேன்” என்றாள்.
அப்போஸ்தலனாகிய பவுல் தெசலோனிகேயர் சபையின் புதிய விசுவாசிகளுக்காக செய்யும் ஜெபமும் இதனோடு நன்கு ஒத்திருக்கிறது. “நீங்கள் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்வாராக” (1 தெச. 3:12). பவுல் அவர்களுக்கு இயேசுவைக் குறித்துக் கற்றுக் கொடுத்தார். ஆனால், அங்கு கலவரம் ஏற்பட்டபடியால் திடிரென அவர்களை விட்டுப் பிரிய நேர்ந்தது (அப். 17:1-9). பவுல் கடிதத்தின் மூலம் அவர்கள் தொடர்ந்து தங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்கப்படுத்துகின்றார் (1 தெச. 3:7-8). மேலும் அவர்கள் மற்றெல்லா மனுஷரிடத்திலும் வைத்திருக்கிற அன்பில் தேவன் அவர்களைப் பெருகப் பண்ணவேண்டுமென ஜெபிக்கிறார்.
கடினமான சூழல்கள், நாம் அது ஏன்? அல்லது இது ஏன் எனக்கு ஏற்பட வேண்டும்? என முறையிடுபவர்களாக இருக்கின்றோம். அத்தகைய கடின சூழல்களைக் கையாள மற்றொரு வழி என்னவென்றால், அந்த சந்தர்பங்களில் நாம் பிறர் மீது அன்பு செலுத்த உதவும்படி தேவன் நம் உள்ளங்களில் அவருடைய அன்பினை இன்னும் பெருக்கும்படி கேட்பதுவே!
இனிமையான தோழமை
முதியோருக்கான ஒரு சிறிய மருத்துவமனையிலிருந்த வயது சென்ற அந்தப் பெண், யாருடனும் பேசுவதுமில்லை, தனக்குக் தேவையான எதையும் கேட்டதுமில்லை. ‘கிரீச்’ என்று ஒலி எழுப்பக்கூடிய அவளது பழமையான அசைந்தாடும் நாற்காலியில் அமர்ந்து ஆடிக் கொண்டே தன் நேரத்தை கழிப்பாள். அவளைப் பார்க்க அதிக பார்வையாளர்களும் வர மாட்டார்கள். ஆகவே ஒரு இளம் தாதிப் பெண், அவளுக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்திலெல்லாம் அந்தப் பெண்ணின் அறைக்குச் செல்வாள். அந்த வயது சென்ற பெண்ணிடம் கேள்விகள் கேட்டு அவளை பேச வைக்கவேண்டும் என்று முயற்சிக்காமல், அவளும் ஒரு அசைந்தாடும் நாற்காலியை அவள் அருகில் இழுத்துப்போட்டு, அந்தப் பெண்ணோடு இணைந்து ஆடுவாள். அநேக மாதங்களுக்குப் பின் அந்த வயதானப் பெண் “என்னோடுகூட சேர்ந்து நீ அசைந்தாடுவதற்கு நன்றி” என்று கூறினாள். அந்த இளம் தாதிப் பெண் அவளோடு கூட அமைதியாக நேரத்தைச் செலவிட்டு நட்புறவை பகிர்ந்து கொண்டதற்கு அவள் நன்றியோடிருந்தாள்.
இயேசு பரலோகத்திற்கு போகும்முன்பு அவருடைய சீஷர்களோடு என்றென்றும் இருக்கத்தக்கதாக ஒரு தேற்றரவாளனை அவர்களுக்கு அனுப்புவதாக அவர் வாக்குப்பண்ணினார். அவர் அவர்களை திக்கற்றோர்களாக விடப் போவதில்லை என்றும் அவர்களுக்குள்ளே என்றென்றும் வாசம் பண்ணத்தக்கதாக பரிசுத்த ஆவியை அனுப்பப்போவதாக வாக்குப் பண்ணினார் (யோவா. 14:17). இயேசுவை விசுவாசிக்கும் இன்றைய விசுவாசிகளுக்கும் அந்த வாக்குத்தத்தம் உண்மையாகவே உள்ளது. திரியேக தேவனாகிய அவர் நம்மில் வாசம் பண்ணுவதாக இயேசு கூறினார் (வச. 23).
நமது வாழ்நாள் முழுவதும் நமக்கு நெருக்கமான, உண்மையான, தோழராக கர்த்தர் இருக்கிறார். நமது போராட்டங்களில் அவர் நம்மை வழி நடத்தி நமது பாவங்களை மன்னித்து, நமது அமைதியான ஜெபங்களைக் கேட்டு நம்மால் சுமக்க இயலாத பாரங்களை அவரது தோள்களில் சுமப்பார்.
இன்று நாம் அவரது இனிய தோழமையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கலாம்.
ஐவிரல் ஜெபங்கள்!
நாம் தேவனோடு உரையாடுவதே ஜெபம். அது ஒரு சூத்திரம் அல்ல. ஆனாலும், சில சமயம் நமது ஜெபவேளைகளை புத்துணர்வூட்டும் பொருட்டு, ஒரு ‘முறைமையை’ கடைப் பிடிப்பது நன்று. அதாவது, தாவீதின் சங்கீதங்களைக் கொண்டும் ஜெபிக்கலாம் அல்லது வேறு வேதபகுதிகளைக் (பரமண்டல ஜெபம்) கொண்டும் ஜெபிக்கலாம். இல்லையெனில், ‘ஆராதனை, அறிக்கை, நன்றிசெலுத்துதல், விண்ணப்பித்தல்’ என்கிற வரிசை முறைமையிலும் கூட ஜெபிக்கலாம். சமீபத்தில், பிறருக்காக ஜெபிக்க உதவும் ‘ஐவிரல் ஜெபங்கள்’ என்கிற முறையைக் குறித்து அறிந்தேன்.
· நீங்கள் கைகளைக் கூப்பும்பொழுது, உங்கள் பெருவிரல்தான் உங்களுக்கு மிக அருகில் உள்ளது. ஆகவே, முதலாவது உங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக, அதாவது உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக ஜெபியுங்கள் (பிலிப். 1:3–5).
· இரண்டாவது, ஆள்காட்டி விரல். இது சுட்டிக்காட்ட பயன்படும். இப்பொழுது போதிப்பவர் களுக்காக ஜெபியுங்கள். அதாவது வேதாகம ஆசிரியர்கள், போதகர்கள் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு போதிப்பவர்கள். (1 தெச. 5:25)
· அடுத்த விரல் மற்ற விரல்களை விட பெரியது. அதிகாரத்தில் இருக்கிற தேசத் தலைவர்களுக்காகவும், உங்கள் வேலை ஸ்தலத்தில் இருக்கும் அதிகாரிகளுக்காகவும் ஜெபிக்க இவ்விரல் நினைவூட்டும் (1 தீமோ. 2:1-2)
· நான்காம் விரல், பொதுவாக மற்ற விரல்களை விட பெலவீனமானது. ஆகவே, இப்பொழுது துயரத்தில் இருப்பவர்களுக்காகவும் துன்பப்படுகிறவர்களுக்காகவும் வேண்டுதல் செய்யவும். (யாக்:5:13-16)
· கடைசியாக உங்கள் சுண்டுவிரல். தேவனுடைய மகத்துவத்தோடு நம்மை ஒப்பிட்டால் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை இவ்விரல் நமக்கு நினைவூட்டும். ஆகவே இப்பொழுது நம்முடைய தேவைகள் சந்திக்கப்பட ஜெபிக்கவும் (பிலி. 4:6,19)
நீங்கள் எந்த முறைமையை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம், ஆனால், பிதாவோடு நீங்கள் உரையாடுங்கள். உங்கள் இருதயத்தில் உள்ளதை அவர் கேட்க விரும்புகிறார்.
ஐந்து நிமிட விதி
தன் பிள்ளைகளிடத்தில் ஐந்து-நிமிட விதியை உபயோகித்து வந்த ஓர் தாயைப் பற்றி நான் புத்தகத்தில் படித்தேன். தன் பிள்ளைகள் தினமும் பள்ளிக்குச் செல்ல தயாரானவுடன் செல்வதற்கு முன், அனைவரும் ஐந்து நிமிடங்கள் ஒன்று கூட வேண்டும் என்பதே அந்த விதி.
அவர்கள் தங்கள் தாயைச் சுற்றி நின்றுகொள்வர். அப்போது அவர் ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லி, தேவனுடைய ஆசீர்வாதம் அவர்கள் மேல் அன்று நிலைத்து இருக்கும்படியாக ஜெபிப்பார். பின்னர், முத்தமிட்டு, அவர்களை வழியனுப்பி வைப்பார். சுற்றுப்புறத்திலிருக்கும் பிள்ளைகள் அந்நேரம் அங்கு வந்தால் அவர்களும் ஜெபத்திலே கலந்து கொள்வார்கள். அப்பிள்ளைகளில் ஒருவர், அந்த அனுபவம் ஜெபத்தின் முக்கியத்துவத்தை தனக்கு கற்றுத் தந்ததாக பல வருடங்களுக்குப் பின்னர் பகிர்ந்துகொண்டார்.
102ஆம் சங்கீதத்தை எழுதியவருக்கு ஜெபத்தின் முக்கியத்துவம் நன்கு தெரிந்திருந்தது. “பலவீனம் அடைந்து பாதிக்கப்பட்ட நிலையிலிருக்கும் ஒரு நபர், தேவனிடம் தன் புலம்பல்களை கொட்டும் சங்கீதம்” என்று அதன் தலைப்பு இருகின்றது. “கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும்.. நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும்” (வச. 1-2) என்று அவர் அழுகின்ற பொழுது, தேவன் “தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்நோக்கமாக” இருக்கிறார் (வச.19).
தேவன் உங்கள் மீது அக்கறையுடன் இருக்கிறார், உங்களுடைய குரலைக் கேட்க விரும்புகிறார். நீங்கள் ஐந்து-நிமிட விதியைப் பின்பற்றி ஆசீர்வாதங்களை பெற விரும்பினாலும் சரி அல்லது கொடுந்துயரத்தினால் பல மணிநேரம் தேவனுடைய பாதத்தில் அழுது புலம்பினாலும் சரி, எப்படியோ ஒவ்வொரு நாளும் தேவனிடம் பேசுங்கள். உங்களது செயல், உங்கள் குடும்பத்தினர் மீது அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்கள் மீது பெரிய தாக்கத்தை நிச்சயமாக ஏற்படுத்தும்.
சிறிய காரியங்கள்
எனது தோழி க்ளோரியா (Gloria) உற்சாகத்துடன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். மருத்துவரை சந்திக்க மட்டுமே அவர் தனது வீட்டை விட்டு வெளியே வந்துகொண்டிருந்த காலமது, “என்னுடைய மகன் எனது கணிப்பொறியில் புதிய ஒலிபெருக்கிகளை பொருத்தியுள்ளான், ஆகவே இப்பொழுது என்னால் சபைக்கு செல்லமுடியும்!” என்று சொன்னவரின் குதூகலத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவரது சபையில் நடைபெறும் ஆராதனையில் அவரும் அதே நேரத்தில் இனிமேல் பங்கு பெறலாம். “இதை விட நல்ல பரிசை எனது மகனால் தந்திருக்க முடியாது” என்று தேவனுடைய நன்மையை குறித்தும் தனது மகனின் செய்கையை பற்றியும் ஆவலுடன் பேசிவந்தார்.
நன்றியுள்ள இருதயத்தின் அவசியத்தை க்ளோரியா எனக்கு கற்றுத் தந்தார். பலவிதமான வரம்புகளுக்குள் வாழ்ந்தபோதிலும், வாழ்வின் சிறிய காரியங்களுக்கும் அவர் நன்றியுள்ளவராய் இருக்கின்றார். சூரிய அஸ்தமனத்திற்க்கும், அன்புடன் உதவி செய்யும் உற்றார் மற்றும் உறவினர்க்கும், தேவனுடன் செலவிடும் அமைதியான தருணங்களுக்கும் தன் வீட்டில் தனியாக சமாளிக்கக்கூடிய பெலத்திற்காகவும் அவர் நன்றியுடன் இருகின்றார். வாழ்நாள் முழுவதும் தேவனின் இரக்கத்தை பார்த்து வந்தவர் அவர். ஆகவே, தொலைபேசியில் அழைப்போரிடமும் அவரை சந்திக்க வருவோரிடமும் தேவனின் ஈவை பற்றி சொல்லிக்கொண்டே இருப்பார்.
சங்கீதம் 116ஐ எழுதியவர் என்ன பிரச்சனைகளைச் சந்தித்துவந்தார் என்பதை நாமறியோம். “மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது” (வச-3) என்பதை கருத்தில் கொண்டு, வியாதியினால் அவதிபட்டுகொண்டிருந்தார் என்று சில வேதாகம விளக்கவுரையாளர்கள் சொல்வ துண்டு. “தாம் தாழ்வுற்ற” நிலையிலும், தேவனுடைய இரக்கத்திற்காகவும் கிருபைக்காகவும் நன்றி தெரிவித்து வந்தார். (வச. 5–6)
தாழ்ந்த நிலையில் இருக்கும்போது, கண்களை ஏறெடுத்து மேலே பார்ப்பது கடினம்தான். ஆனால், அவ்வாறு செய்யும்போது, சிறிதோ பெரிதோ, சகலவிதமான நன்மையான ஈவு களையும் தேவன்தான் நமக்கு தந்து வருகிறார் என்பதை நாம் அறிந்துகொண்டால் நன்றி பலிகளை ஏறெடுக்க தொடங்குவோம்.
இயேசு என்ன செய்துள்ளாரெனப் பாருங்கள்!
எட்டு வயதான சிறுவன், தன் பெற்றோரின் நண்பரான வால்லியைப் (Wally) பார்த்து “நான் இயேசுவை நேசிக்கிறேன், ஒரு நாள் அவருக்காக பிற நாடுகளில் ஊழியம் செய்ய விரும்புகிறேன்,” என்றான். அடுத்த பத்து ஆண்டுகள் வால்லி அவன் வளர்வதை பார்த்துக்கொண்டே அவனுக்காக ஜெபித்து வந்தான். பின்பு மாலி (Mali) தேசத்திற்கு அவன் போக விரும்பி ஒரு மிஷனரி ஸ்தாபனத்திற்கு விண்ணப்பித்த பொழுது, வால்லி அவனைப் பார்த்து, “நான் இந்த செய்திக்காகத் தான் காத்துக்கொண்டிருந்தேன். சிறுவனாக உன் விருப்பத்தை நீ கூறிய பொழுது, நான் உனக்காக கொஞ்சம் பணத்தை முதலீடு செய்து சேமித்து வைத்தேன். இப்பொழுது அதற்கு நேரம் வந்து விட்டது!” எனக் கூறினான். வால்லியின் இருதயம் தேவனுடைய நற்செய்தியை மக்களுக்கு எடுத்துச்செல்ல ஆர்வமாயிருந்தது.
இயேசுவும், அவருடைய சீஷரும் அவருடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தை கிராமம் கிராமமாய் சுற்றித் திரிந்து அறிவிக்கும் பொழுது, அவர்களுக்குப் பொருளாதார உதவி தேவைப்பட்டது (லூக். 8:1-3). அசுத்த ஆவிகளினின்றும், நோய்களிலிருந்தும் விடுதலையாக்கப்பட்ட சில பெண்கள் “தங்கள் ஆஸ்திகளால்” (வச. 3) அவர்களுக்கு உதவி செய்தனர். அதில் ஒருவர் ஏழு பிசாசுகளின் பிடியிலிருந்து விடுதலையாக்கப்பட்ட மகதலேனாள் மரியாள். மற்றொருவர் ஏரோதின் அரசில் அதிகாரியாக இருந்த ஒருவனுடைய மனைவியாகிய யோவன்னாள். சூசன்னா மற்றும் ‘அநேக ஸ்திரீகளை’ குறித்து வேறு விபரம் ஏதும் குறிப்பிடப்படவில்லை (வச. 3). ஆனால் இயேசு அவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்ததினால் அவர்களுடைய ஆஸ்தியைக் கொண்டு இயேசுவுக்கும், அவருடைய சீஷர்களுக்கும் அவர்கள் உதவி செய்து கொண்டிருந்தார்கள்.
நமக்காக இயேசு செய்து முடித்ததை நாம் எண்ணிப் பார்க்கும் பொழுது, பிறருக்காக துடிக்கும் அவரது இதயம் நமதாகிவிடும். தேவன் நம்மை எப்படிப் பயன்படுத்த விரும்புகிறார் என்று நாம் அவரிடம் கேட்போமாக.