எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆனி சிட்டாஸ்கட்டுரைகள்

தேவனுடைய வல்லமை

ரெபேக்கா மற்றும் ரஸ்ஸல் தம்பதியினருக்கு குழந்தை பிறப்பதற்கு இனி வாய்ப்பில்லை என்று அவர்களுடைய மருத்துவர் கூறிவிட்டார். ஆனால் தேவனுடைய சித்தம் வேறு. பத்து ஆண்டுகள் கழித்து ரெபேக்கா கர்ப்பந்தரித்தாள். கர்ப்பகாலம் ஆரோக்கியமாகவே இருந்தது. பிரசவவலி துவங்கியதும் மருத்துமனைக்கு விரைந்தனர். பிரசவ வலி தீவிரமாய் அதிகரித்தது. ஆனால் குழந்தைபெற்றெடுக்கும் அளவிற்கு அவளுடைய சரீரம் இன்னும் ஒத்துழைக்கவில்லை. கடைசியில், அறுவைசிகிச்சை மூலமாய் குழந்தையை வெளியில் எடுக்க மருத்துவர்கள் தீர்மானித்தனர். ரெபேக்கா தன் குழந்தையைக் குறித்தும் தன்னைக் குறித்தும் துக்கமடைந்திருந்தாள். அவளிடம் உறுதியளித்த மருத்துவர், “என்னால் இயன்றதைச் செய்கிறேன்; மற்றபடி, நாங்கள் தேவனிடத்தில் வேண்டிக்கொள்கிறோம், அவரால் இன்னும் அதிகமாய் செய்யமுடியும்” என்று கூறினார். மருத்துவர் ரெபேக்காவோடு சேர்ந்து ஜெபித்தார். பதினைந்தே நிமிடங்களில், ப்ரூஸ் என்னும் ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. 

அவள் தேவனையும் அவருடைய வல்லமையையும் சார்ந்திருப்பதை மருத்துவர் அறிந்திருந்தார். அறுவைசிகிச்சை செய்ய தேவையான அறிவும் திறமையும் மருத்துவரிடத்தில் இருந்தாலும், அவர் தேவ ஞானத்தையும், பெலத்தையும், தன் கைகளை இயக்கும் உதவியையும் தேவனிடத்தில் கேட்டார் (சங். 121:1-2).       

மிகவும் திறமையான நபர்கள் தேவனுடைய உதவியை நாடுவதை கேள்விப்படும்போது நாம் உற்சாகமடைகிறோம். ஏனெனில், நமக்கும் அது நிச்சயமாய் தேவை. நாம் அல்ல, அவரே தேவன். “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய்” (எபேசியர் 3:20) நம்மில் கிரியை செய்ய அவரால் மட்டுமே முடியும். அவரிடத்தில் கற்றுக்கொள்ள நம்முடைய இருதயத்தை தாழ்த்தி, ஜெபத்தில் நம் விசுவாசத்தை பிரதிபலிப்போம். ஏனெனில் நாமெல்லோரைக் காட்டிலும் அவரால் அதிகம் செய்யமுடியும்.

இயேசுவின் பிரபலமாகாத யோசனைகள்

பதினைந்து ஆண்டுகளாக, மைக் பர்டன் தனது சிறிய நகரத்தில் நடத்திக்கொண்டிருந்த நினைவைவிட்டு நீங்காத கடையில் வெறுப்பு நிறைந்த கூட்டங்களை நடத்தினார். ஆனால் 2012-ல் அவரது ஈடுபாட்டை அவரது மனைவி கேள்வி கேட்கத் தொடங்கியபோது, ​​அவரது இதயம் மென்மையாக்கப்பட்டது. தனது இனவெறி கருத்துக்கள் எவ்வளவு தவறானவை என்பதை அவர் உணர்ந்தார், இனி ஒருபோதும் அப்படிப்பட்ட நபராக அவர் இருக்க விரும்பவில்லை. தங்கள் உறுப்பினர்களில் ஒருவரது குடியிருப்பில் அவர்கள் வாடகைக்கு வாழ்ந்துக் கொண்டிருந்தனர் அந்த குடியிருப்பில் இருந்த்து அவர்கள்  குடும்பத்தினரை உதைத்து போராளி குழு பதிலடி கொடுத்தது.

உதவிக்காக அவர் எங்கே போனார்? ஆச்சரியப்படும் விதமாக, எற்கெனவே சண்டையிட்ட ஒரு உள்ளூர் கருப்பின போதகரிடம் சென்றார். போதகரும் அவரது சபை மக்களும் மைக்கின் குடும்பத்திற்கு சில காலம் தங்கும் வசதி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர். அவர் ஏன் உதவ ஒப்புக்கொண்டார் என்று கேட்டபோது, ​​பாஸ்டர் கென்னடி விளக்கினார், “இயேசு கிறிஸ்து மிகவும் பிரபலமற்ற சில காரியங்களைச் செய்தார். உதவி செய்ய வேண்டிய நேரம் வரும்போது, ​​நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறாரோ அதைச் செய்யுங்கள். ” பின்னர் மைக் ஒரு முறை கென்னடியின் தேவாலயத்தில் பேசினார் அப்போது தான் வெறுப்பை பரப்பினதர்காக கறுப்பின சமூகத்திடம் மன்னிப்பு கோரினார்.

மலைப்பிரசங்கத்தில் செல்வாக்கற்ற சில யோசனைகளை இயேசு கற்பித்தார்: “உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு . . . . உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைத் துன்பபடுத்துகிரவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்” (மத்தேயு 5:42, 44). தேவனின்  அழைப்பைப் பின்பற்றுவதற்கான தலைகீழ் வழி அது. இது பலவீனம் போல் தோன்றினாலும், அது உண்மையில் தேவனின்  பலத்தை கொண்டு செயல்படுவது.

நமக்கு கற்பித்தவரே அவர் எதிர்பார்க்கும் விதத்தில் இந்த தலைகீழான வாழ்க்கையை வாழ்வதற்கான பெலனை கொடுப்பவர்.

உங்களுக்கு இயேசுவின் வாக்குறுதி

ரோஹித்தின் பெற்றோர்கள் அவனை ஷீலாவிடம் ஒப்படைத்தபோது அழுதான். இது அவனது அம்மாவும் அப்பாவும் அவனை அங்கே விட்டுவிட்டு ஆராதனைக்கு சென்றதால் குழந்தை பருவத்திலிருக்கும் அவனுக்கு முதல் ஞாயிறு பள்ளி – அவன் அங்கு மகிழ்ச்சியாக இல்லை. அவன் நன்றாக இருப்பான் என்று ஷீலா அவர்களுக்கு உறுதியளித்தார். அவள் அவனை பொம்மைகளாலும் புத்தகங்களாலும் ஆறுதல்படுத்த முயன்றாள், ஒரு நாற்காலியில் ஆடிக்கொண்டிருந்தாள், சுற்றி நடந்தாள், அசையாமல் நின்றாள், அவனுக்கு என்ன வேடிக்கையாக இருக்குமோ அதை பேசினாள். ஆனால் எல்லா முயற்சியும் அதிக கண்ணீரையும் மற்றும் சத்தமான அழுகையையும் ஏற்படுதியது. பின்னர் அவள் அவன் காதில் ஐந்து எளிய சொற்களைக் கிசுகிசுத்தாள்: “நான் உன்னுடன் இருப்பேன்.” அமைதியும் ஆறுதலும் விரைவாக வந்தது.

சிலுவையில் அறையப்பட்ட அந்த வாரத்தில் இயேசு தம் நண்பர்களுக்கு இதேபோன்ற ஆறுதலான வார்த்தைகளை வழங்கினார்: “பிதா. . . உங்களுக்கு உதவவும், என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்”(யோவான் 14: 16-17). அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவர் இந்த வாக்குத்தத்தை  அவர்களுக்குக் கொடுத்தார்: “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.” (மத்தேயு 28:20). இயேசு விரைவில் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தார், ஆனால் அவர் ஆவியானவரை தம் மக்களுக்குள் "தங்கி” மற்றும் வாழ அனுப்புவார்.

நமக்கு கண்ணீர் வழியும் போது ஆவியியானவரின் ஆறுதலையும் சமாதானத்தையும் அனுபவிக்கிறோம். நாம் என்ன செய்வது என்று யோசிக்கும்போது அவருடைய வழிகாட்டுதலைப் பெறுகிறோம் (யோவான் 14:26). தேவனைப் பற்றி மேலும் புரிந்துகொள்ளும்படிக்கு அவர் நமக்கு பிரகாசமுள்ள மனக்கண்களைத் திறக்கிறார் (எபேசியர் 1: 17-20), நம்முடைய பலவீனத்தில் அவர் நமக்கு உதவுகிறார், நமக்காக வேண்டுதல்செய்கிறார் (ரோமர் 8: 26-27).

அவர் என்றென்றும் நம்முடன் இருக்கிறார்.

தேவனின் கதைப்புத்தகம்

அழகான நாளை அனுபவிக்க விரும்பிய நான், நடந்துவிட்டு வரலாம் என வெளியே புறப்பட்டேன் விரைவில் ஒரு புதிய அண்டை வீட்டாரை சந்தித்தேன். அவர் என்னை இடைநிறுத்தி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்: “என் பெயர் ஆதியாகமம் எனக்கு ஆறரை வயது” என்றான்.

“ஆதியாகமம் ஒரு உயரிய பெயர்! இது வேதாகமத்தில் உள்ள ஒரு புத்தகம்” என்று நான் பதிலளித்தேன்.

“வேதாகமம் என்றால் என்ன?” என்று அவன் கேட்டான்.

"அவர் எப்படி உலகத்தையும் மக்களையும் எவ்வாறு சிருஷ்டித்தார் மற்றும் அவர் நம்மை எப்படி நேசிக்கிறார் என்பவற்றைப் பற்றிய தேவனின் கதைப்புத்தகம் இது."

அவனது வினோதமான மறு மொழி என்னைப் புன்னகைக்க செய்தது: “அவர் ஏன் உலகத்தையும் மக்களையும் கார்களையும் வீடுகளையும் உருவாக்கினார்? என் படம் அவருடைய புத்தகத்தில் உள்ளதா?”

என் புதிய நண்பர் ஆதியாகமம் அல்லது நம் அனைவரின் உண்மையான நிழற்படம் வேதாகமத்தில் இல்லையென்றாலும் தேவனுடைய கதைப்புத்தகத்தில் நாம் பெரும்பங்காவோம். ஆதியாகமம் 1-ல், “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார். அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்” (வ. 27) என்பதை கண்டோம். தேவன் அவர்களுடன் தோட்டத்தில் உலாவினார், பின்னர் தாங்களே தங்கள் சொந்த தேவனாக இருக்க வேண்டும் என்ற சோதனைக்குட்படுவதை குறித்து எச்சரித்தார் (அதி. 3). அவருடைய குமாரனாகிய இயேசு, அன்புள்ளவராய், எப்படி மீண்டும் நம்முடன் உலாவ வந்தார் மற்றும் நம்முடைய பாவமன்னிப்பிற்கான மற்றும் அவருடைய படைப்பின் மீட்பிற்கான திட்டத்தை எவ்வாறு கொண்டு வந்து செயல்படுத்தினார் என்பதைப் பற்றி தேவன் பின்னர் அவருடைய புத்தகத்தில் கூறியுள்ளார்.

நாம் வேதத்தைப் பார்க்கும்போது, ​​நாம் அவரை அறிந்து கொள்ளவும், அவருடன் பேசவும், நம்முடைய கேள்விகளை அவரிடம் கேட்கவும் நம்முடைய சிருஷ்டிகர் விரும்புகிறார் என்பதை அறிகிறோம். நாம் நினைப்பதை விடவும் அவர் நம்மீது அதீத அக்கறை கொண்டுள்ளார்.

ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்டம்

எனது நண்பர் டேவின் வாலிப மகள் மெலிசா இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு எனது நண்பர் ஷரோன் காலமானார். அவர்கள் இருவரும் கார் விபத்துக்களில் கோரமாக கொல்லப்பட்டனர். ஒரு இரவு ஷரோன் மற்றும் மெலிசா இருவரும் என் கனவில் வந்தார்கள். ஒரு பெரிய விருந்து மண்டபத்தில் அவர்கள் அலங்காரங்களை தொங்கவிட்டு கொண்டிருந்தபோது சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அந்த அறைக்குள் நுழைந்த போது என்னைப் புறக்கணித்தார்கள். ஒரு நீண்ட மேஜை வெள்ளைத்துணிகளாலும் தங்கத் தட்டுகளும் கோப்பைகளுடனும் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தது. நானும் அலங்காரத்தில் உதவட்டுமா என்று நான் கேட்டதை அவர்கள் கேட்காதது போல வேலை செய்து கொண்டிருந்தனர். ஆனால் பின்னர் ஷரோன், “இந்த விருந்து மெலிசாவின் திருமண வரவேற்பு” என்றார்.

“மணவாளன் யார்?” நான் கேட்டேன். இருவரும் பதிலளிக்கவில்லை, ஆனால் புன்னகைத்து ஒருவருக்கொருவர் அர்த்தத்தோடு பார்த்தார்கள். இறுதியாக, அது எனக்கு வெளிப்பட்டது - அது இயேசு!

 “இயேசு மணவாளன்” என்று நான் எழுந்தவுடன் மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

இயேசு திரும்பி வரும் போது விசுவாசிகள் அவரோடு சந்தோஷமாக கொண்டாடும் மகிழ்ச்சியான கொண்டாட்டத்தை கனவு என் மனதில் கொண்டு வருகிறது. இது "ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்து" (19:9) என்று அழைக்கப்படும் ஒரு பகட்டான விருந்தாக வெளிப்படுத்துதலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் முதல் வருகைக்கு மக்களை தயார்படுத்திய யோவான் ஸ்நானகன், அவரை “ உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று அழைத்தார் (யோவா. 1:29). அவர் இயேசுவை “மணவாளன்” என்றும், தன்னை "மணவாளனுடைய தோழன்" (சிறந்த மனிதனைப் போல) என்றும் காத்திருந்தார் (3:29).

அந்த விருந்து நாளிலும், நித்திய காலத்திலும், இயேசு, நம்முடைய மணவாளன், ஷரோன், மெலிசா மற்றும் கடவுளின் மக்கள் அனைவருடனும் இடைவிடாத ஐக்கியத்தை அனுபவிப்போம்.

வேரோடு பிடுங்கு

ரெபேக்கா தனது சகோதரனின் குடும்பத்தை குறித்து மிகவும் கவலை கொண்டு இருந்தால் . கணவன் மனைவி இடையிலான பிரச்சனை முடிவடைய வேண்டும் என்று தேவனிடம் உருக்கமாய் ஜெபித்து வந்தால். ஆனால் சில நாட்களில் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள் அவரது மனைவி குழந்தைகளை வேறொரு ஊருக்கு அழைத்துச் சென்று விட்டார்கள் .

ரெபேக்கா மிகவும் அன்போடு நேசித்த அந்த குழந்தைகளை மறுபடி பார்க்க முடியவில்லை. சில வருடங்கள் பிறகு அவர்கள் கூறியது என்னவென்றால் இந்த கவலையை எனக்குள்ளாக அதிக நேரம் வைத்ததினால் எனக்குள்ள ஒரு கசப்பான வேறொன்று வளர்ந்து என்னை சுற்றி இருக்கும் நண்பர்களையும் குடும்பத்தார்களின் பாதித்தது அனைவருக்கும் பரவ ஆரம்பித்தது
இதேபோல் வேதாகமத்தில் ரூத் என்னும் புத்தகத்தில் நகோமி என்னும் பெண்ணின் இருதயமும் துக்கத்தினால் பரவக்கூடிய கசப்பாக மாறியது என்று பார்க்கிறோம். தூர தேசத்தில் தன் கணவனை இழந்து 10 வருடம் பிறகு தன் இரு மகன்களையும் இழந்தவளாக தன் இரு மருமகளாகிய ரூத் மற்றும் ஓர்பாள்ளுடன் ஆதரவற்றவளாய் கைவிடப்பட்டால் (1 :3-5). நகோமி தன் மருமகளுடன் தனது தேசத்திற்கு திரும்ப செல்லும் போது தன் தேச மக்கள் அனைவரும் மிகவும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் அவளோ அவர்கள் அனைவரிடம் “நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல் மாராள் என்று சொல்லுங்கள்;
சர்வ வல்லவர் எனக்கு மிகுந்த கசப்பை கட்டளையிட்டார்” (20) என்று துக்கத்தோடு சொன்னாள் .
உலகத்தில் அனைவருக்கும் துக்கங்களும் ஏமாற்றங்களும் உண்டு. அது நிமித்தம் நாம் கசப்புள்ளவர்களாய் மாறும்படி தூண்டப்படுகிறோம் சில வேளைகளில் நம் இருதயம் புண்படும்படி யாரேனும் ஏதாவது பேசினால் கூட அப்படி ஆகலாம் அல்லது நம் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படாமல் போனால் அது ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நம் இருதயத்தின் கசப்பான வேர்களை பிடுங்கிப் போடும் நம் தேவனிடம் நாம் இவைகளை ஒப்புக் கொள்ளும் போது அவர் அதை ஆனந்த இருதயமுள்ள ஆவியாக மாற்றிவிடுவார்.

நீங்கள் யார்

அவரது பெயர் யான். அவர் தன்னை உலகத்தின் மாணவன் என்று கருதுகிறார். அவர் கடந்து வந்த எல்லா நகரங்களைக் குறித்து 'இது ஒரு பெரிய பள்ளி' என்று கூறுகிறார். மக்களை சந்தித்து அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள அவர் 2016ம் ஆண்டு தனது சைக்கிளில் நான்கு வருட பயணத்தை துவங்கினார். மொழி ஒரு தடையாக இருக்கும்போது, சில நேரங்களில் மக்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பதிலேயே புரிந்துக்கொள்ளுகிறார்கள் என்று கண்டார். அவர் மக்களிடம் தொடர்பு கொள்ள தன் தொலைபேசியில் உள்ள மொழிபெயர்ப்பு பயன்பாட்டை சார்ந்திருக்கிறார். அவர் தான் பயணித்த மைல் கணக்கிலோ அல்லது அவர் பார்த்த காட்ச்சிகளையோ வைத்து அவர் தனது பயணத்தை அளவிடவில்லை. அதற்கு பதிலாக தன்னுடைய இதயத்தில் முத்திரை பதித்த மக்களைக் கொண்டு அளவிடுகிறார்: 'உங்கள் மொழி எனக்குத் தெரியாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் யார் என்பதைக் கண்டுக்கொள்ள விரும்புகிறேன்".

இது மிகப் பெரிய உலகம். இருந்தாலும் அதைப்பற்றின எல்லாவற்றையும், அதன் மக்களைப்பற்றியும் தேவன் முழுமையாக அறிந்திருக்கிறார். சங்கீதக்காரனாகிய தாவீது தேவனின் விரல்களின் கிரியையாகிய வானங்களையும், அவர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும், பார்க்கும்போது மிகவும் ஆச்சரியப்பட்டார் (சங். 8:3). 'மனுஷனை நினைக்கிறதற்கும், அவனை விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்" என்று வியந்தார் (வச. 4).

தேவன் மற்ற யாரை விடவும் உங்களை நன்கு அறிந்திருக்கிறார் மற்றும் அவர் உங்கள் மேல் கவனமாயிருக்கிறார். 'எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது" (வச. 1,9) என்று நாமும் துதிக்கலாம்.

கிறிஸ்மஸ் கால விற்பனை

ஒரு தாயார் தான் கிறிஸ்மஸ் பரிசுகளுக்காக அதிகமான பணம் செலவு செய்வதை உணர்ந்தார்கள். அதனால் ஒரு வருடம் எதாவது வித்தியாசமாக முயற்சி செய்ய நினைத்தார்கள். கிறிஸ்மஸ் விடுமுறைக்கு சில மாதங்களுக்கு முன்பு, முற்றத்தில் விற்பனையாகும் மலிவான மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களை எடுத்துக்

கொண்டார்கள், அவர்கள் வழக்கத்தைவிட அதிகமான பொருட்களை வாங்கினார்கள் ஆனால் குறைந்த விலையில். கிறிஸ்மஸ்க்கு முந்தய நாளில், அவருடைய பிள்ளைகள் தங்கள் தங்கள் பரிசுகளை ஒன்றின்பின ஒன்றாக பிரித்தனர். அடுத்த நாள் இன்னும் அனேக பரிசுகள் காத்திருந்தன. புதிய பரிசுகளை வாங்காதது அந்த தாயாருக்கு ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தியதால், கிறிஸ்மஸ் அன்றைக்கும் காலையில் கூடுதலாக பரிசுகளை வாங்கி வைத்தார் அம்மா. பிள்ளைகள் பரிசுகளை பிரித்து கொண்டு விரைவாக 'இனி பரிசுகளை திறக்க நாங்கள் சோர்வடைந்துவிட்டோம். எங்களுக்கு மிக அதிகமாக கொடுத்தீர்கள்" என்று குறை கூறினார்கள். இது பிள்ளைகளிடமிருந்து கிறிஸ்மஸ் அன்றைக்கு பொதுவாக வரும் பதில் இல்லை.

தேவன் நம்மை எவ்வளவு அதிகமாக ஆசீர்வதித்திருக்கிறார், ஆனால் நாம் இன்னும் அதிகமாய் எதிர்பார்க்கிறோம். ஒரு பெரிய வீடு, ஒரு நல்ல கார், மிக பெரிய வங்கி கணக்கு, அல்லது வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ளுங்கள்ஸ. பவுல், தீமோத்தேயு தன் சபை மக்களுக்கு 'இந்த உலகத்திற்கு நாம் ஒன்றும் கொண்டுவந்ததில்லை, இதிலிருந்து ஒன்றும் கொண்டுபோவதுமில்லை. உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்று இருக்கக்கடவோம்" என்று நினைப்பூட்ட உற்சாகப்படுத்தினார் (1 தீமோ. 6:7-8).

தேவன், நம்முடைய தேவைகளை கொடுப்பது மட்டுமில்லாமல், நமக்கு சுவாசத்தையும் ஜீவனையும் கொடுத்திருக்கிறார். அவர் கொடுக்கும் ஆசீர்வாதங்களை புத்துணர்ச்சியோடு அனுபவித்து 'நீர் எங்களுக்கு எவ்வளவு அதிகமாய் கொடுத்திருக்கிறீர். இன்னும் எங்களுக்கு தேவையில்லை" என்று சொல்லி திருப்தியாயிருக்க வேண்டும். போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் (வச. 6).

நம்மால் முடியுமா?

ரெஜியின் வீட்டு தோட்டத்தில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அது அவர்களுக்கு வெயில் காலத்தில் நிழலாகவும் தங்கள் வீட்டுக்கு அடைக்களமாகவும் இருந்ததால் குடும்பத்தார் அனைவருக்கும்  மிகவும் பிடித்த மரம் அது. ஒரு முறை அங்கு வந்த பெரும் புயலால் அங்கும் இங்கும் அசைந்து வேரோடே விழும் நிலையில் இருந்தது. புயலையும் பாராமல் ரெஜியும் தன் மகனும் மரத்தை காப்பாற்றும்படி விரைந்து சென்று, நாற்பது கிலோ எடை  கொண்ட ஒரு இரும்பை வைத்து அதை தாங்கி பிடிக்க செய்தார்கள் அது மட்டும் அல்லாமல் தங்கள் பெலன் கொண்டும் அதை விழாதபடி தாங்கி பிடித்தார்கள். ஆனால் அந்த புயல் அவர்களை விட மிகவும் பலமாய் இருந்தது.

தாவீதுக்கு இதே போன்ற  ஒரு புயல் வந்த போது  தேவனே அவருடைய பெலனாயிருந்தார்  (வ. 2). தாவீது இந்த சங்கீதத்தை தன் வாழ்க்கை உடைந்து போகும் நிலையில் எழுதினார் என்று நம்பப்படுகிறது. தன்னுடைய சொந்த மகனே சிங்காசனத்திற்காக அவரை  எதிர்த்து நின்ற பொது அந்த மரத்தை போல அவரும் மிகவும் பெலவீன நிலையில் காணப்பட்டார் (2 சாமுவேல் 15). தேவன் அமைதியாய் இருந்ததால் மரித்து விடுவோமோ என்ற பயம் அவருக்குள் இருந்தது (சங். 28:1). "என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும் (வச. 2)". தன் மகனோடு தாவீது ஒப்புரவாகவில்லை, ஆனாலும் தேவன் தாவீதின் பெலனாய் இருந்தார்.

நமக்கு மோசமான சம்பவங்கள் நடந்து விட கூடாதென்று நாம் எவ்வளவு பிரயாசப்பட்டாலும், ஒரு கட்டத்தில் நாம் தவறிவிடுகிறோம். நம் கன்மலையான கர்த்தரை நாம் எப்போதும் நோக்கி கூப்பிடலாம் என்று வசனம் நம்மை ஊக்குவிக்கிறது. நாம் பெலவீனர்களாய் இருக்கு பொது அவர் நம் மேய்ப்பராயிருந்து நம்மை உயர்த்துவார் (வச. 8-9).