எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எமி பவுச்சர் பைகட்டுரைகள்

காத்திருத்தல்

“கிறிஸ்துமஸ் வருவதற்கு இன்னும் எவ்வளவு நாட்கள் இருக்கிறது?” இக்கேள்வியை என் பிள்ளைகள் குழந்தைகளாயிருந்த போது அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் வருகையின் நாள் காட்டி ஒன்றின் மூலம் கிறிஸ்துமஸ் நாளை கணக்கிட்டுக் கொண்டிருந்தாலும், காத்திருத்தல் அவர்களுக்கு வேதனையாக இருந்தது.

ஒரு குழந்தையின் கஷ்டத்தோடு கூடிய காத்திருத்தலை நாம் சுலபமாக புரிந்து கொள்ள முடிந்தாலும், இந்த சவால் குழந்தைகளுக்குமட்டுமென குறைவாக மதிப்பிட முடியாது, அது அனைத்து தேவ ஜனங்களுக்குரியது. ஏனெனில் “இஸ்ரவேலை ஆளப்போகிறவர் பெத்லகேமிலிருந்து புறப்பட்டு வருவார் (மீகா 5:2). அவர் நின்று கொண்டு கர்த்தருடைய பலத்தோடு தம் மந்தையை மேய்ப்பார் (வச. 4). என்ற மீகா தீர்க்கனின் வாக்கினைப் பெற்ற ஜனங்கள், இதன் நிறைவேறுதலுக்கு சுமார் 700 ஆண்டுகள் காத்திருந்த பின்னர் இயேசு பெத்லகேமில் பிறந்தபோது அது நிறைவேறிற்று (மத். 2:1). ஆனால், இன்னும் சில தீர்க்க தரிசனங்கள் நிறைவேற வேண்டியுள்ளது. இயேசு திரும்ப வருவார் என்ற நம்பிக்கையோடு நாம் காத்திருக்கின்றோம். “ஆகையால் தேவ ஜனங்கள் அனைவரும் நிலைத்திருப்பார்கள். அவர் இனிப் பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார்” (மீகா 5:4). நம்முடைய நீண்ட காத்திருத்தல் முடிவடையும் போது நாமும் மிகவும் மகிழ்ந்திருப்போம்.

நம்மில் அநேகருக்கு காத்திருத்தல் எளிதானதல்ல. ஆனால், இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் (மத். 28:20) என்ற வாக்கை கனப்படுத்துவார் என்று நம்பி காத்திருப்போம். இயேசு கிறிஸ்து பெத்லேகமில் பிறந்த பொழுதே நம்மை வாழ்வின் பரிபூரணத்திற்குள்ளும் (யோவா. 10:10) குற்றம் சாட்டப்படாத வாழ்விற்குள்ளும் வழி நடத்துகின்றார். அவருடைய பிரசன்னம் நம்மோடு இருப்பதை அனுபவித்துக் கொண்டே அவருடைய வருகைக்கு நாம் ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

நமது வல்லமையுள்ள தேவன்

ஒரு நாள் கடற்கரையில் நின்றுகொண்டு, கடலில் சறுக்குப்பலகைகளில், தங்கள் கைகளில் பாராசூட் போன்ற பட்டங்களைப் பிடித்துக்கொண்டு, காற்றினால் ஒவ்வொரு அலையாகத் தாண்டித்தாண்டி விளையாடியவர்களைக் கண்டு ரசித்தேன். கரைக்கு வந்த ஒருவனிடம், பெரிய பட்டத்தைப் பிடித்துக்கொண்டு சறுக்கும் அனுபவம் கடினமாக இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அவன், “இல்லை, சறுக்குப்பலகைகளில் அலைகளைத் தாண்டுவதைவிட இது எளிதாக உள்ளது. ஏனென்றால், காற்றின் வலிமையைக் கட்டுப் படுத்துகிறேன்” என்றான்.

அதன் பின், சறுக்குபவர்களைத் தள்ளுவது மட்டுமன்றி, என் முடியையும் கலைத்து முகத்தில் அறைகிற காற்றின் வலிமையை நினைத்துக்கொண்டே கடற்கரையில் நடந்தேன். தீடீரென்று நின்று நமது வல்லமையுள்ள சிருஷ்டிகரை நினைத்து அதிசயித்தேன். ஆமோஸ் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி “தேவன் பர்வதங்களை உருவாக்கினவரும் காற்றை சிருஷ்டித்தவரும் விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவருமாயிருக்கிறார்” (வச. 13)

இந்தத் தீர்க்கதரிசியின் மூலம், தேவன் தம்முடைய ஜனங்களைத் தம்மிடத்தில் திரும்பி வர அழைக்கும் பொழுது தம்முடைய வல்லமையை அவர்களுக்கு நினைவுபடுத்தினார் (வச. 13). அவர்கள் அவருக்குக் கீழ்படியாமற்போனாலும், தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன் என்று கூறுகிறார். இந்த இடத்தில் அவருடைய நியாயாத்தீர்ப்பை அறிந்தாலும் வேதத்தின் மற்ற பகுதிகளில் தம்முடைய குமாரனை பலியாக அனுப்பின அவருடைய தியாகமான அன்பைக்குறித்து வாசிக்கிறோம் (யோவா. 3:16).

தெற்கு இங்கிலாந்து கடற்கரையில் வீசிய காற்றின் வலிமை தேவனுடைய மகத்துவத்தை எனக்கு உணர்த்தியது. இன்றைக்கு அப்படியொரு காற்று வீசுமானால் நாம் இன்று வல்லமையுள்ள தேவனை  ஏன் தியானிக்கக்கூடாது?

ஒரு நல்ல முடிவு

அந்த அறை இருட்டாக்கப்பட்டது. நாங்கள் அப்பொல்லோ 13 திரைப்படத்தைப் பார்க்க ஆயத்தமானோம். என் சிநேகிதன் மெதுவாக என் காதுக்குள் “ஐயோ பாவம், எல்லாரும் மரித்துப்போனார்கள்” என்றான். 1970ல் நடந்த விண்வெளி பயணத்தைப் பற்றிய படத்தைக் கலக்கத்துடன், எப்பொழுது மரிப்பார்கள் என்ற எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டிருந்தேன். படம் முடியும் தருவாயில்தான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். நான் அந்த விண்வெளி பயணத்தின் உண்மையான முடிவை அறியாததினால் ஏமாற்றப்பட்டேன். அந்த மூன்று விண்வெளி வீரர்களும் பல கஷ்டங்களை அனுபவித்தாலும் உயிரோடு வீட்டிற்குத் திரும்பினர்.

நம் வாழ்க்கையின் முடிவை – நாம் உயிரோடு பரமவீட்டிற்குப் போவதை, கிறிஸ்துவுக்குள் அறிந்திருக்கிறோம். அதாவது வெளிப்படுத்தல் புத்தகம் சொல்வது போல, நாம் நம்முடைய பரம பிதாவோடு என்றென்றும் வாழுவோம். சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்ற தேவன் “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” சிருஷ்டிப்பார் (வெளி. 21:1,5). தேவன் தமது பிள்ளைகளை பயமும்,  இராக்காலமில்லா புதிய நகரிற்கு அழைத்து செல்வார். நமக்கு இந்தக் கதையின் முடிவு தெரிந்தபடியால் நமக்கு நம்பிக்கையுண்டு.

இது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது? நமக்கு அன்பானவர்கள் மரிக்கும், அல்லது நாமே மரிக்கும் துன்பமான நேரங்களில் பரலோக நம்பிக்கை நம் துன்பத்தை மாற்றிவிடும். மரிக்கும் எண்ணம் நம்மை பின்னுக்கு தள்ளினாலும், நித்திய ஜீவனைக்குறித்த வாக்குத்தத்தத்தை நாம் பெற்று அனுபவிக்கலாம். தேவனுடைய வெளிச்சத்தில் என்றென்றைக்கும் வாழப்போகும் சாபமில்லாத நகரத்தை வாஞ்சிக்கிறோம் (22:5).

தேவனில் வேர் கொள்ளுதல்

எனது சிநேகிதர்கள் ஒரு புதிய வீட்டில் குடியேறினபொழுது, அவர்களது வேலியின் அருகில் விஸ்டிரியா என்ற செடியை நட்டு வைத்தனர். லாவண்டர் செடி ஐந்து அண்டுகளுக்குப் பின்தான் பூக்க ஆரம்பிக்கும். அதற்காக அவர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். அந்தச் செடியை சுத்தம்பண்ணி, உரம் போட்டு, நீரூற்றி நன்கு கவனித்து வந்ததால், அவர்கள் தொடர்ந்து 20 ஆண்டுகளாக அந்த செடியின் அழகான பூக்களின் அழகை ரசித்து மகிழ்ந்தார்கள். ஆனால் ஒரு முறை அவர்களது அண்டை வீட்டார் இந்தச் செடி இருந்த லேவிக்கு அருகில், அவர்களது தோட்டத்தில் களைக் கொல்லி மருந்தை பயன படுத்தினதினால், இவர்களது தோட்டத்தில் இருந்த அந்த லாவண்டர் செடி வாடிவிட்டது. அடுத்த வீட்டில் பயன்படுத்தின களைக்கொல்லியில் இருந்த விஷம் விஸ்டியா செடியின் வேர் மூலமாகச் சென்றதால், அந்தச் செடி செத்துவிட்டது என்று எனது சிநேகிதர்கள் எண்ணிவிட்டனர். ஆச்சரியப்படத்தக்கதாக, அடுத்த ஆண்டு அதே இடத்தில் இளம் விஸ்டீரியா செடியின் துளிர்கள் தோன்றின.

இவ்விதமாக தாவரங்கள் செழித்து வளர்வதையும், மடிந்து போவதையும், போல தேவனுடைய ஜனங்கள், தேவனைப் பின் பற்றும்போது செழித்தும், தேவனைபிட்டு விலகும்போது நெருக்கப்படுவதுமான நிலைமைக்கு எரேமியா தீர்க்கன் ஒப்பிடுகிறான். தேவனைப் பின் பற்றுகிறவர்களின் வேர்கள் தண்ணீரண்டைக்குச் செல்வதால் செழித்து வளர்ந்து, அதனதன் காலத்தில் கனி கொடுப்பவர்களாக இருப்பார்கள் (எரே. 17:8). ஆனால், அவர்களது சுய சித்தத்தை நம்பி, அதன் வழியில் நடப்பவர்கள். அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப் போல் இருப்பார்கள் (வச. 5-6). தேவனுடைய ஜனங்கள், ஜீவிக்கிற உண்மையான தேவனைச் சார்ந்து வாழ வேண்டும் என்றும். அவர்கள் கால்வாய் ஓரமாய் நடப்பட்ட மரங்களைப் போல இருக்க வேண்டும் என்றும் தீர்க்கதரிசி வாஞ்சித்தான் (வச. 8).

நமது பிதா திராட்சைத் தோட்டக்காரர் (யோவா. 15:1) என்பதை நாம் அறிந்திருக்கிறோம். மேலும் நாம் அவரை நம்பி அவர் மேல் நம்பிக்கையாக இருக்கலாம் (ஏரே. 17:8) என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். நமது முழு இருதயத்தோடு அவரைப் பின்பற்றி என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய கனிகளைச் கொடுப்பவர்களாக இருப்போம்.

மாறுவேடத்தில் இயேசு

எனது சிநேகிதிகளில் ஒருவர் சுகவீனத்தால் வீட்டைவிட்டு வெளியேற இயலாத, அவளது மாமியாரை வீ ட்டிலே வைத்து பராமரித்து வந்தாள். அவள், அவளது மாமியாரிடம், அவர்கள் அதிகமாக விரும்புவது என்ன என்று கேட்டாள். அவளது மாமியார் ‘’எனது கால்கள் கழுவப்பட வேண்டும்” என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். “ஒவ்வொரு முறையும் அவர்களது கால்களைக் கழுவும்படி கூறும்பொழுது அந்த வேலையை செய்ய மனமில்லாமல், அதைச் செய்வதை வெறுத்தேன். அவ்வேலையைச் செய்யும் பொழுதெல்லாம் எனக்குள்ளே இருந்த வெறுப்பு உணர்வை எனது மாமியார் அறிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று தேவனிடம் கேட்டேன் என்று அவளது உணர்வை எனது சிநேகிதி ஒத்துக் கொண்டாள்.

ஆனால், ஒரு நாள் அவளது முறுமுறுக்கும் தன்மை தீடீரென ஒரு நொடிப் பொழுதிலே மாறிவிட்டது. அவள் தண்ணீருள்ள பாத்திரத்தையும் துண்டையும் எடுத்துக் கொண்டு. அவளது மாமியாரின் பாதத்தண்டையால் அமர்ந்த பொழுது, என் மாமியாரை நோக்கிப் பார்த்தேன். உடனே நான் இயேசுவின் பாதங்களைக் கழுவுவதாக உணர்ந்தேன். இயேசுவே மாறுவேடத்தில் என் மாமியாராக இருப்பது போல் உணர்ந்தேன் என்று கூறினாள். அந்த நிகழ்ச்சிக்குப் பின், மாமியாரின் பாதங்களை கழுவுவது எனக்குத் கிடைத்த ஒரு சிலாக்கியம் என்று உணர்ந்தேன் என்று கூறினாள்.

மனதைத் தொடக்கூடிய இந்த காரியத்தைக் குறித்து நான் கேள்விப்பட்ட பொழுது, இயேசு கிறிஸ்து அவரது உலக வாழ்க்கையின் இறுதி நாட்களில் ஒலிவ மலைச் சரிவில் போதித்தது நினைவிற்கு வந்தது.

அவருடைய பிள்ளைகள் பசியாயிருப்பவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, வியாதியாயிருப்பவர்களை விசாரிக்கும்பொழுது “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று ராஜா தன்னுடைய குமாரர்களையும், குமாரத்திகளையும், அவரது இராஜியத்திற்குள் வரும்படி அழைப்பார். காவலில் இருக்கும் மக்களைப் போய்ப் பார்த்து வரும்பொழுது, வஸ்திரம் இல்லாதவர்களுக்கு வஸ்திரம் அளிக்கும் பொழுதும், நாம் இயேசுவிற்கு ஊழியம் செய்கிறோம்.

எனது சிநேகிதி புதியதாக யாரையாவது, சந்திக்கும்பொழுது, “நீங்கள் மாறுவேடத்தில் வந்துள்ள இயேசுவா? என்று தனக்குள்ளாக கேட்டுக் கொள்வது போலவே நீங்களும் அவளது எண்ணத்தை
எதிரொலிக்கலாம்.

நல்ல மேய்ப்பர்

நானும் என் கணவரும் மருத்துவமனையில் மிகுந்த மனக் கவலையுடன் அமர்ந்திருந்தோம். எனது சிறிய மகனின் கண்களில் ஏற்பட்ட குறையை சரிசெய்யும் அறுவை சிகிச்சை நடை பெற்றுக்கொண்டிருந்தது எனது மனக்கவலையினாலும், வருத்தத்தினாலும் என்வயிறு குழம்பினது. தேவன், அவரது சமாதானத்தை எனக்கு தரும்படி ஜெபிக்க முயன்றேன். எனது வேதாகமத்தை புரட்டினபொழுது ஏசாயா 40ம் அதிகாரத்தைக் குறித்து சிந்திக்க ஆரம்பித்தேன். நான் நன்றாக அறிந்திருந்த அந்த பகுதியில் புதிய சத்தியங்கள் எனக்கு கிடைக்குமாவென்று எண்ணி அப்பகுதிக்கு வேதாகமத்தை திருப்பினேன்.

நான் அப்பகுதியை வாசித்தபொழுது பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அப்பகுதி, தேவன், “மேய்ப்பனைப் போல தமது மந்தையை மேய்ப்பார். ஆட்டுக் குட்டிகளை தமது புயத்தினால் சேர்த்து, தமதுமடியிலே சுமந்து கரவலாடுகளை மெதுவாய் நடத்துவார்” (வச. 40:11) என்று எனக்கு ஞாபகம் மூட்டியது. அந்த நிமிடத்தில் தானே என் கவலை என்னை விட்டு நீங்கியது. ஏனெனில் தேவன் நம்மை அரவணைத்துள்ளார், வழி நடத்துகிறார். நம்மைக் குறித்து கரிசனை கொள்ளுகிறார் என்று உணர்ந்தேன். தேவன் அமைதியாக என்னில் செயல்பட்டார். அந்த நேரத்தில் அதுதான் எனக்கு மிகவும் தேவையாக இருந்தது. எனது மகனின் அறுவை சிகிச்சையின்பொழுதும், அறுவை சிகிச்சை முடிந்த பின்பும் தேவ சமாதானத்தால் நிரப்பப்பட்டேன். (தேவனுடைய கிருபையால் எனது மகனின் அறுவை சிகிச்சை நல்லமுறையில் நடந்தது.

தேவன் அவரது தீர்க்கத் தரிசியாகிய ஏசாயாவின் மூலம் தானே, அவர்களது மேய்பனாக இருந்து அவர்களது அன்றாட வாழ்க்கையில் அவர்களை செம்மையாக நடத்தி, அவர்களுக்கு ஆறுதல் அளிப்பவராக இருக்கிறாரென்று அவர்களது ஜனங்களுக்கு வாக்குப் பண்ணியுள்ளார். நாமும் கூட நம்மைப் பாரப்படுத்தும், கவலை தரும் எண்ணங்களை அவரிடம் கூறி அவருடைய அன்பையும், சமாதானத்தையும் தேடும் பொழுது, அவர் நம்மை அன்புடன் மெதுவாக அரவணைத்து நடத்துவதை அறிந்துக்கொள்வோம். அவரே நமது நல்ல மேய்ப்பராக இருந்து நம்மை அவரது மார் போடு அணைத்து, அவரது நித்திய கரங்களில் நம்மை தாங்கி வருகிறார் என்பதை அறிந்திருக்கிறோம்.

நம்மீது அசைவாடுதல்

பெட்டியின் மகள் அவளது கடற்;பயணத்தை முடித்துவிட்டு உடல் நலமில்லாமல் வீடு திரும்பினாள். தூங்க முடியாத அளவிற்கு அவளது வலி அதிகரித்தபொழது பெட்டியும் அவளது கணவரும் அவளை அவசர மருத்துவ அறைக்கு கூட்டிச்சென்றார்கள். மருத்துவர்களும், செவிலியர்களும் உடனே அவளுக்கு சிகிச்சை மேற்கொண்டனர். சில மணிநேரம் கழித்து ஒரு தாதி பெட்டியிடம் வந்து “உங்கள் மகள் சுகமடையப் போகிறாள். அவள் சுகமாவதற்காக நாங்கள் அதிக கவனம் செலுத்தப் போகிறோம்” என்றாள். அந்த நிமிடத்தில் பெட்டியின் உள்ளம் சமாதானம் அடைந்து அன்பினால் நிரப்பப்பட்டாள். அவள் அவளது மகளைக் குறித்து கரிசனையோடு கவனித்துக் கொண்டிருக்கும் பொழுது, தேவன்தாமே அவரது பிள்ளைகளை பேணிப்பாதுகாக்கும் தலை சிறந்த பெற்றோராக இருந்து, துக்கமான நேரங்களில் நமக்கு ஆறுதல் தருகிறார்.

உபாகமம் புத்தகத்தில் தேவன் அவருடைய ஜனங்கள் வனாந்திரத்தில் சுற்றி அலைந்த பொழுது, தன் குஞ்சுகள் மேல் அசைவாடி காக்கும் கழுகைப்போல அவர் காத்து வந்ததை அவருடைய மக்களுக்கு நினைப்பூட்டினார். அவர் அவர்களை விட்டு ஒருக்காலும் விலகவே இல்லை. “கழுகு தன் குஞ்சுகளின் மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின் மேல் சுமந்துகொண்டு போகும் கழுகைப் போல” உபாகமம் 32:11 தேவன் அவர்களை விட்டு ஒருக்காலும் விலகவே இல்லை. வனாந்தரத்தில் அவர்கள் கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவித்து வந்தாலும், தேவன் அவர்களை கைவிடவில்லை என்பதை அவர்கள் நினைவு கூரும்படி தேவன் விரும்பினார்.

நாமும் நமது வாழ்க்கையில் பலவிதமான சவால்களை சந்திக்கலாம். ஆனால், தேவன் நம்மை விட்டு ஒருக்காலும் விலகவில்லை என்பதை நினைவு கூர்ந்து தைரியமும், ஆறுதலும் அடையலாம். நாம் கீழேவிழுவதாக நினைக்கும்பொழுது தேவன்> ஒரு கழுகு அதன் செட்டைகளை விரித்து அதன் குஞ்சுகளைக் காப்பாற்றுவது போல, (வச. 11) நம்மைக் காப்பாற்றி சமாதானம் தருகிறார்.

கூடாரங்களில் வசிப்பது

மின்னிசோட்டா மிக அழகான அநேகம் ஏரிகள் நிறைந்த ஒரு இடம். அங்கு திறந்த வெளியில் முகாமிடுவது எனக்கு அதிகப் பிரியம். அங்கிருந்து தேவனுடைய ஆச்சரியமான படைப்புகளைக் கண்டு வியப்பேன். ஆனால், முகாமில் கூடாரங்களில் தங்குவது பிடிக்காது. ஏனென்றால் மழைபெய்யும்பொழுது கூடாரம் ஒழுகி படுக்கை நனைந்துவிடும்.

நம்முடைய விசுவாச வீரர்களில் ஒருவரான ஆபிரகாம் நூறாண்டுகள் கூடாரங்களில் வாழ்ந்தார் என்பதை நினைத்து ஆச்சரியப்படுவேன். அவன் எழுபத்தைந்து வயதாயிருக்கையில் தேவன் அவனைப் பெரிய ஜாதியாக்குவதற்காக (ஆதி. 12:1-2) அழைத்த அழைப்பைக் கேட்டு தன் ஊரை விட்டுப்புறப்பட்டான். ஆபிரகாம் தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார் என்று நம்பி கீழ்ப்படிந்தான். அவன் 175 வயதில் மரிக்கும் வரை வாழ்நாள் முழுவதும் தன் வீட்டை விட்டு கூடாரங்களிலேயே வசித்தான் (25:7).

வீட்டைவிட்டு நாடோடியாய் வாழும்படி ஆபிரகாமுக்கு வந்த அழைப்பைப் போன்றதொரு அழைப்பு நமக்கில்லாமலிருக்கலாம். நாமும் இந்த பூமியில் வசிப்பதற்கு ஏற்ற ஒரு நல்ல வீட்டை வாஞ்சிக்கலாம். பலமான காற்றடித்துக் கூடாரத்தின் திரைகள் தூக்கப்பட்டு மழை கூடாரத்தினுள் அடிக்கும்பொழுது ஆபிரகாம் தேவன்தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு காத்திருந்திருப்பான் (எபி. 11:10). நாமும் ஆபிரகாமைப்போல தேவன் உருவாக்கிக்கொண்டிருக்கும் பரம தேசம் போன்ற நல்ல தேசத்தைத் தருவார் (வச. 16) என்ற நம்பிகையோடு இருக்கலாம்.

கடிதங்கள் எழுதல்

என்னுடைய தாயாரும் அவருடைய சகோதரிகளும், இப்பொழுது அதிகமாக அழிந்து போன கலையாகிய கடிதம் எழுதுவதில் முனைந்திருந்தனர். இவர்களுடைய கடிதங்களைக் கொண்டு வரும் தபால்காரர் கொடுப்பதற்கு கடிதமில்லையெனில் வருத்தப்படக் கூடிய அளவிற்கு, ஒவ்வொரு வாரமும் தங்கள் சொந்த காரியங்களை எழுத்தின் மூலம் தெரிவிப்பதை தவறாமல் செய்து வந்தனர். இவர்களுடைய கடிதங்களில் வாழ்க்கையின் காரியங்கள், மகிழ்ச்சி, இருதய வேதனைகள், நண்பர்கள், உறவினரின் அன்றாட நிகழ்வுகளால் நிரம்பி வழியும்.

எங்கள் குடும்பத்திலுள்ள இந்தப் பெண்களின் வாரா, வார பயிற்சியினைக் குறித்து தியானிக்க விரும்புகிறேன். இயேசுவைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் “கிறிஸ்துவின் நிருபமாய் இருக்கிறீர்கள்” அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலே எழுதப்பட்டிருக்கிறது” (2 கொரி. 3:3) என்று பவுல் எழுதியுள்ளான். தவறான போதனைகளால் பவுலை இழிவுபடுத்த நினைப்பவர்களுக்கும் (2 கொரி. 11) கொரிந்து சபையினரை ஊக்குவிப்பதற்கும் நான் உங்களுக்கு முன்பு கற்றுக் கொடுத்தது போல, உண்மையும், உயிரோடு இருக்கிறவருமான இயேசு கிறிஸ்துவை பின் தொடருங்கள் என எழுதுகிறார். அப்படிக் செய்யும் போது அங்குள்ள விசுவாசிகளை அவர்களுடைய மாற்றப்பட்ட வாழ்வோடும் ஆவியானவருக்கு மிக வல்லமையான சாட்சிகளாகவும் பவுலின் ஊழியத்தினால் உண்டான கிறிஸ்துவின் நிரூபமுமாயிருக்கிறீர்கள் என்று பவுல் உற்சாகப்படுத்தினான்.

நமக்குள்ளேயிருக்கும் ஆவியானவர் அவருடைய கிருபை, மீட்பு பற்றிய ஒரு கதையை எழுதுகிறார். இது எத்தனை ஆச்சரியம். எழுதப்பட்ட வார்த்தைகள் எத்தனை அர்த்தமுள்ளவையோ அதைப் போன்று நம் வாழ்வும் சுவிசேஷத்தின் உண்மைக்கு ஒரு முக்கிய சாட்சியாகும். நம் இரக்கம், மனதுருக்கம் சேவை, நன்றியுணர்வு மகிழ்ச்சியின் மூலம் அவை பேசுகின்றன. நம்முடைய வார்த்தை, செயலினால் தேவன் அவருடைய வாழ்வையே தந்த அன்பினை பறைசாற்றுகின்றார். இன்று நீ என்ன செய்தியை அனுப்ப போகின்றாய்?