கடைசி வார்த்தை
ஒரு நாள் பல்கலைகழகத்தில் தத்துவ வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, அந்த பேராசிரியரின் கருத்துக்கு மாறாக, ஒரு மாணவன் கோபமூட்டக் கூடிய ஒரு கருத்தினை தெரிவித்தான். மற்ற மாணவர்கள் ஆச்சரியப்படும்படியாக அந்த ஆசிரியர் அம்மாணவனுக்கு நன்றி கூறியதோடு, மற்றொரு கருத்தினை விளக்க முற்பட்டார். பின்னர் அவரிடம் அம்மாணவனின் கருத்துக்கு ஏன் பதிலளிக்கவில்லை எனக் கேட்டபோது, “நான் கடைசி வார்த்தையைக் சொல்பவனாக இருக்கக் கூடாது என்கிற கொள்கையைக் செயல்படுத்தி வருகிறேன் என்றார்.
இந்த ஆசிரியர் தேவனை நேசிப்பவராகவும், கனம் பண்ணுபவராகவும் இருப்பதோடு, தாழ்மையின் ஆவியை அணிந்து கொண்டவராய் தேவ அன்பை வெளிப்படுத்தினார். இவருடைய வார்த்தைகள் எனக்கு வேறொரு ஆசிரியரை நினைவுபடுத்துகிறது. இந்த ஆசிரியர் வெகு காலங்களுக்கு முன்பு பிரசங்கி புத்தகத்தை எழுதினார். ஒரு கோபமுள்ள மனிதனை எவ்வாறு கையாள வேண்டுமென்று சொல்லாவிட்டாலும், அவர் கூறியது நாம் தேவனண்டை செல்லும் போது நம்முடைய நடையைக் காத்துக்கொள்ள வேண்டும், துணிகரமாய் வாயினால் பேசாமலும், மனம் பதறி ஒரு வார்த்தையும் சொல்லாமலும் “செவி கொடுக்கச் சேர்” என்கிறார். இவ்வாறு செய்யும் போது, நாம் அவர் தேவாதி தேவன் எனவும், நாம் அவரால் படைக்கப்பட்டவர்கள் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம் (பிர. 5:1-2).
நீ தேவனண்டை எவ்வாறு செல்கிறாய்? உன் உணர்வுகள், உன் அணுகுமுறையை சற்று சரிசெய்துகொள் என்று உணர்த்தும் போது, மேன்மை பொருந்திய மகா தேவனைக் கனப்படுத்த, ஏன் அதற்கு சில மணித்துளிகள் செலவிடக் கூடாது? அவருடைய எல்லையில்லா ஞானத்தையும் வல்லமையையும், பிரசன்னத்தையும் நினைக்கும் போது, நாம் அவருடைய நிரம்பி வழியும் அன்பை நினைத்து வியந்து நிற்போம். இந்த தாழ்மையின் கோலத்தோடு இருக்கும் போது, நாமும் கடைசி வார்த்தையை சொல்பவர்களாக இருக்க மாட்டோம்.
ஜெபத்தின் வல்லமை
ஒரு நாள், எனக்கு நெருங்கிய நபர் ஒருவரின் நலனைக்குறித்து ஆழ்ந்த கரிசனையோடிருந்த போது, பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள, இஸ்ரவேலரின் ஞானமுள்ள தலைவன் சாமுவேலின் சரித்திரம் எனக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்தது. தேவனுடைய ஜனங்கள் துன்பங்களைச் சந்தித்தபோது, சாமுவேல் அவர்களுக்காக எவ்விதம் தேவனிடம் பரிந்து பேசுகிறார் என்பதை வாசிக்கும் போது நானும், நான் நேசிக்கின்ற ஒருவருக்காக ஜெபிக்க வேண்டும் என்ற மனநிலையை இன்னும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.
இஸ்ரவேலர் பெலிஸ்தரின் அச்சுறுத்தலை எதிர் நோக்கினர். இதற்கு முன்னர் பெலிஸ்தர் இஸ்ரவேலரைத் தோற்கடித்தனர், ஏனெனில் இஸ்ரவேலர் தேவனை நம்பவில்லை (1 சாமு. 4). அவர்கள் தங்கள் பாவத்திற்காக மனம்வருந்திய போது, பெலிஸ்தியர் தங்களைத் தாக்க வருகிறார்கள் என கேள்விப்படுகின்றனர். இம்முறை அவர்கள் சாமுவேலிடம் அவர்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கும்படி கேட்கின்றனர் (7:8) தேவன் தெளிவாக பதிலளித்து, எதிரிகளிடையே குழப்பத்தை உருவாக்கினார் (வச. 10). பெலிஸ்தியர் இஸ்ரவேலரைக் காட்டிலும் வல்லவர்களாயிருந்தும், தேவன் அவர்களெல்லாரையும் விட பெலனுள்ளவராக இருந்தார்.
நாம் நேசிக்கின்றவர்கள் நிமித்தம் சவால்களைச் சந்தித்து வேதனையில் இருக்கும் போது, அந்த சூழ்நிலை மாறப்போவதில்லை என்ற பயம் நம்மை ஆட்கொண்டு தேவன் செயல்படமாட்டார் என்று அவநம்பிக்கைக் கொள்ள நாம் தள்ளப்படலாம். ஆனால், ஜெபத்தின் வல்லமையை ஒருபோதும் குறைவாக மதிப்பிட வேண்டாம். நம்மீது அன்புள்ள தேவன் நம்முடைய வேண்டுதல்களைக் கேட்கிறார். நம்முடைய மன்றாட்டுகளைக் கேட்கிற அவர் எவ்விதம் செயல்படுவார் என்பதை நாம் அறிவோம். ஆனால், நமக்குத் தெரியும், நம்முடைய பரமதந்தை, நாம் அவருடைய அன்பை ஏற்றுத் தழுவி, அவர் உண்மையுள்ளவர் என்பதில் நாம் நம்பிக்கையாயிருக்கும்படி அவர் ஏங்குகின்றார்.
இன்றைக்கு நீ ஜெபிக்க வேண்டியவர்கள் யாராவது உண்டா?
தேவன் நம்மோடு
“கிறிஸ்து என்னோடும், கிறிஸ்து என்னுள்ளும், கிறிஸ்து முன்னும், கிறிஸ்து பின்னும் கிறிஸ்து என்கீழும், கிறிஸ்து என்மேலும், கிறிஸ்து என்வலமும், கிறிஸ்து என் இடமும்…”
மத்தேயு கிறிஸ்துவின் பிறப்பைக்குறித்து எழுதியதை வாசிக்கும்பொழுது, 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த செல்ட்டிக் கிறிஸ்தவறான பரி. பேட்ரிக் என்பவர் எழுதிய இப்பாடலின் வார்த்தைகள் எனக்குள் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும். அவை என்னை அனலுறத்தழுவி, ஒருபோதும் நீ தனியனில்லையென்று சொல்வது போல இருக்கும்.
தேவன் தம் ஜனங்களோடு வாசம்பண்ணுவதே கிறிஸ்துமஸின் மையக் கருத்து என்று மத்தேயு சுவிசேஷம் சொல்லுகிறது.
ஒரு குழந்தை, “தேவன் நம்மோடு” எனும் அர்த்தமுள்ள இம்மானுவேல் எனும் பேரால் அழைக்கப்படும் (ஏசா. 7:14) என்று ஏசாயாவின் தீர்க்கதரிசனம் பரிசுத்தாவியினால் பிறந்த இயேசுவின் பிறப்பில் முழுமையாய் நிறைவேறினதையே மத்தேயு இங்கே சொல்லியிருக்கிறார். இதுவே சுவிசேஷத்தின் மையமாயிருப்பதால், இதை வைத்தே தன் சுவிசேஷத்தை மத்தேயு ஆரம்பித்தும் முடித்தும் இருக்கிறார். தன் சீஷர்களிடம் இயேசு, “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்றார் (மத். 28:20).
தேவனுடைய ஆவி நமக்குள் வாசம் பண்ணுவதால் கிறிஸ்து எப்பொழுதும் விசுவாசிகளோடு இருக்கிறார் என்பதை, பரி. பேட்ரிக்கின் பாடல் எனக்கு நினைவுறுத்துகிறது. நான் தளர்ச்சியடைந்திருக்கிற போதும், பயப்படும்போதும் “நான் உன்னைவிட்டு விலகுவதில்லை” என்கிற அவருடைய வாக்குத்தத்தத்தை பற்றிக் கொண்டு தைரியமடையலாம். நான் தூங்கமுடியாமல் கஷ்டப்படும்பொழுது, உம்முடைய சமாதானத்தை எனக்குத் தாரும் என்று கேட்கலாம். நான் சந்தோஷத்தால் நிறைந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் பொழுது. அவர் என் வாழ்வில் கிருபையாய் செய்த காரியங்களை நினைத்து நன்றி சொல்லலாம்.
காத்திருத்தல்
“கிறிஸ்துமஸ் வருவதற்கு இன்னும் எவ்வளவு நாட்கள் இருக்கிறது?” இக்கேள்வியை என் பிள்ளைகள் குழந்தைகளாயிருந்த போது அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் வருகையின் நாள் காட்டி ஒன்றின் மூலம் கிறிஸ்துமஸ் நாளை கணக்கிட்டுக் கொண்டிருந்தாலும், காத்திருத்தல் அவர்களுக்கு வேதனையாக இருந்தது.
ஒரு குழந்தையின் கஷ்டத்தோடு கூடிய காத்திருத்தலை நாம் சுலபமாக புரிந்து கொள்ள முடிந்தாலும், இந்த சவால் குழந்தைகளுக்குமட்டுமென குறைவாக மதிப்பிட முடியாது, அது அனைத்து தேவ ஜனங்களுக்குரியது. ஏனெனில் “இஸ்ரவேலை ஆளப்போகிறவர் பெத்லகேமிலிருந்து புறப்பட்டு வருவார் (மீகா 5:2). அவர் நின்று கொண்டு கர்த்தருடைய பலத்தோடு தம் மந்தையை மேய்ப்பார் (வச. 4). என்ற மீகா தீர்க்கனின் வாக்கினைப் பெற்ற ஜனங்கள், இதன் நிறைவேறுதலுக்கு சுமார் 700 ஆண்டுகள் காத்திருந்த பின்னர் இயேசு பெத்லகேமில் பிறந்தபோது அது நிறைவேறிற்று (மத். 2:1). ஆனால், இன்னும் சில தீர்க்க தரிசனங்கள் நிறைவேற வேண்டியுள்ளது. இயேசு திரும்ப வருவார் என்ற நம்பிக்கையோடு நாம் காத்திருக்கின்றோம். “ஆகையால் தேவ ஜனங்கள் அனைவரும் நிலைத்திருப்பார்கள். அவர் இனிப் பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார்” (மீகா 5:4). நம்முடைய நீண்ட காத்திருத்தல் முடிவடையும் போது நாமும் மிகவும் மகிழ்ந்திருப்போம்.
நம்மில் அநேகருக்கு காத்திருத்தல் எளிதானதல்ல. ஆனால், இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் (மத். 28:20) என்ற வாக்கை கனப்படுத்துவார் என்று நம்பி காத்திருப்போம். இயேசு கிறிஸ்து பெத்லேகமில் பிறந்த பொழுதே நம்மை வாழ்வின் பரிபூரணத்திற்குள்ளும் (யோவா. 10:10) குற்றம் சாட்டப்படாத வாழ்விற்குள்ளும் வழி நடத்துகின்றார். அவருடைய பிரசன்னம் நம்மோடு இருப்பதை அனுபவித்துக் கொண்டே அவருடைய வருகைக்கு நாம் ஆவலுடன் காத்திருக்கின்றோம்.
நமது வல்லமையுள்ள தேவன்
ஒரு நாள் கடற்கரையில் நின்றுகொண்டு, கடலில் சறுக்குப்பலகைகளில், தங்கள் கைகளில் பாராசூட் போன்ற பட்டங்களைப் பிடித்துக்கொண்டு, காற்றினால் ஒவ்வொரு அலையாகத் தாண்டித்தாண்டி விளையாடியவர்களைக் கண்டு ரசித்தேன். கரைக்கு வந்த ஒருவனிடம், பெரிய பட்டத்தைப் பிடித்துக்கொண்டு சறுக்கும் அனுபவம் கடினமாக இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அவன், “இல்லை, சறுக்குப்பலகைகளில் அலைகளைத் தாண்டுவதைவிட இது எளிதாக உள்ளது. ஏனென்றால், காற்றின் வலிமையைக் கட்டுப் படுத்துகிறேன்” என்றான்.
அதன் பின், சறுக்குபவர்களைத் தள்ளுவது மட்டுமன்றி, என் முடியையும் கலைத்து முகத்தில் அறைகிற காற்றின் வலிமையை நினைத்துக்கொண்டே கடற்கரையில் நடந்தேன். தீடீரென்று நின்று நமது வல்லமையுள்ள சிருஷ்டிகரை நினைத்து அதிசயித்தேன். ஆமோஸ் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி “தேவன் பர்வதங்களை உருவாக்கினவரும் காற்றை சிருஷ்டித்தவரும் விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவருமாயிருக்கிறார்” (வச. 13)
இந்தத் தீர்க்கதரிசியின் மூலம், தேவன் தம்முடைய ஜனங்களைத் தம்மிடத்தில் திரும்பி வர அழைக்கும் பொழுது தம்முடைய வல்லமையை அவர்களுக்கு நினைவுபடுத்தினார் (வச. 13). அவர்கள் அவருக்குக் கீழ்படியாமற்போனாலும், தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன் என்று கூறுகிறார். இந்த இடத்தில் அவருடைய நியாயாத்தீர்ப்பை அறிந்தாலும் வேதத்தின் மற்ற பகுதிகளில் தம்முடைய குமாரனை பலியாக அனுப்பின அவருடைய தியாகமான அன்பைக்குறித்து வாசிக்கிறோம் (யோவா. 3:16).
தெற்கு இங்கிலாந்து கடற்கரையில் வீசிய காற்றின் வலிமை தேவனுடைய மகத்துவத்தை எனக்கு உணர்த்தியது. இன்றைக்கு அப்படியொரு காற்று வீசுமானால் நாம் இன்று வல்லமையுள்ள தேவனை ஏன் தியானிக்கக்கூடாது?
ஒரு நல்ல முடிவு
அந்த அறை இருட்டாக்கப்பட்டது. நாங்கள் அப்பொல்லோ 13 திரைப்படத்தைப் பார்க்க ஆயத்தமானோம். என் சிநேகிதன் மெதுவாக என் காதுக்குள் “ஐயோ பாவம், எல்லாரும் மரித்துப்போனார்கள்” என்றான். 1970ல் நடந்த விண்வெளி பயணத்தைப் பற்றிய படத்தைக் கலக்கத்துடன், எப்பொழுது மரிப்பார்கள் என்ற எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டிருந்தேன். படம் முடியும் தருவாயில்தான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். நான் அந்த விண்வெளி பயணத்தின் உண்மையான முடிவை அறியாததினால் ஏமாற்றப்பட்டேன். அந்த மூன்று விண்வெளி வீரர்களும் பல கஷ்டங்களை அனுபவித்தாலும் உயிரோடு வீட்டிற்குத் திரும்பினர்.
நம் வாழ்க்கையின் முடிவை – நாம் உயிரோடு பரமவீட்டிற்குப் போவதை, கிறிஸ்துவுக்குள் அறிந்திருக்கிறோம். அதாவது வெளிப்படுத்தல் புத்தகம் சொல்வது போல, நாம் நம்முடைய பரம பிதாவோடு என்றென்றும் வாழுவோம். சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்ற தேவன் “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” சிருஷ்டிப்பார் (வெளி. 21:1,5). தேவன் தமது பிள்ளைகளை பயமும், இராக்காலமில்லா புதிய நகரிற்கு அழைத்து செல்வார். நமக்கு இந்தக் கதையின் முடிவு தெரிந்தபடியால் நமக்கு நம்பிக்கையுண்டு.
இது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது? நமக்கு அன்பானவர்கள் மரிக்கும், அல்லது நாமே மரிக்கும் துன்பமான நேரங்களில் பரலோக நம்பிக்கை நம் துன்பத்தை மாற்றிவிடும். மரிக்கும் எண்ணம் நம்மை பின்னுக்கு தள்ளினாலும், நித்திய ஜீவனைக்குறித்த வாக்குத்தத்தத்தை நாம் பெற்று அனுபவிக்கலாம். தேவனுடைய வெளிச்சத்தில் என்றென்றைக்கும் வாழப்போகும் சாபமில்லாத நகரத்தை வாஞ்சிக்கிறோம் (22:5).
தேவனில் வேர் கொள்ளுதல்
எனது சிநேகிதர்கள் ஒரு புதிய வீட்டில் குடியேறினபொழுது, அவர்களது வேலியின் அருகில் விஸ்டிரியா என்ற செடியை நட்டு வைத்தனர். லாவண்டர் செடி ஐந்து அண்டுகளுக்குப் பின்தான் பூக்க ஆரம்பிக்கும். அதற்காக அவர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். அந்தச் செடியை சுத்தம்பண்ணி, உரம் போட்டு, நீரூற்றி நன்கு கவனித்து வந்ததால், அவர்கள் தொடர்ந்து 20 ஆண்டுகளாக அந்த செடியின் அழகான பூக்களின் அழகை ரசித்து மகிழ்ந்தார்கள். ஆனால் ஒரு முறை அவர்களது அண்டை வீட்டார் இந்தச் செடி இருந்த லேவிக்கு அருகில், அவர்களது தோட்டத்தில் களைக் கொல்லி மருந்தை பயன படுத்தினதினால், இவர்களது தோட்டத்தில் இருந்த அந்த லாவண்டர் செடி வாடிவிட்டது. அடுத்த வீட்டில் பயன்படுத்தின களைக்கொல்லியில் இருந்த விஷம் விஸ்டியா செடியின் வேர் மூலமாகச் சென்றதால், அந்தச் செடி செத்துவிட்டது என்று எனது சிநேகிதர்கள் எண்ணிவிட்டனர். ஆச்சரியப்படத்தக்கதாக, அடுத்த ஆண்டு அதே இடத்தில் இளம் விஸ்டீரியா செடியின் துளிர்கள் தோன்றின.
இவ்விதமாக தாவரங்கள் செழித்து வளர்வதையும், மடிந்து போவதையும், போல தேவனுடைய ஜனங்கள், தேவனைப் பின் பற்றும்போது செழித்தும், தேவனைபிட்டு விலகும்போது நெருக்கப்படுவதுமான நிலைமைக்கு எரேமியா தீர்க்கன் ஒப்பிடுகிறான். தேவனைப் பின் பற்றுகிறவர்களின் வேர்கள் தண்ணீரண்டைக்குச் செல்வதால் செழித்து வளர்ந்து, அதனதன் காலத்தில் கனி கொடுப்பவர்களாக இருப்பார்கள் (எரே. 17:8). ஆனால், அவர்களது சுய சித்தத்தை நம்பி, அதன் வழியில் நடப்பவர்கள். அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப் போல் இருப்பார்கள் (வச. 5-6). தேவனுடைய ஜனங்கள், ஜீவிக்கிற உண்மையான தேவனைச் சார்ந்து வாழ வேண்டும் என்றும். அவர்கள் கால்வாய் ஓரமாய் நடப்பட்ட மரங்களைப் போல இருக்க வேண்டும் என்றும் தீர்க்கதரிசி வாஞ்சித்தான் (வச. 8).
நமது பிதா திராட்சைத் தோட்டக்காரர் (யோவா. 15:1) என்பதை நாம் அறிந்திருக்கிறோம். மேலும் நாம் அவரை நம்பி அவர் மேல் நம்பிக்கையாக இருக்கலாம் (ஏரே. 17:8) என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். நமது முழு இருதயத்தோடு அவரைப் பின்பற்றி என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய கனிகளைச் கொடுப்பவர்களாக இருப்போம்.
மாறுவேடத்தில் இயேசு
எனது சிநேகிதிகளில் ஒருவர் சுகவீனத்தால் வீட்டைவிட்டு வெளியேற இயலாத, அவளது மாமியாரை வீ ட்டிலே வைத்து பராமரித்து வந்தாள். அவள், அவளது மாமியாரிடம், அவர்கள் அதிகமாக விரும்புவது என்ன என்று கேட்டாள். அவளது மாமியார் ‘’எனது கால்கள் கழுவப்பட வேண்டும்” என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். “ஒவ்வொரு முறையும் அவர்களது கால்களைக் கழுவும்படி கூறும்பொழுது அந்த வேலையை செய்ய மனமில்லாமல், அதைச் செய்வதை வெறுத்தேன். அவ்வேலையைச் செய்யும் பொழுதெல்லாம் எனக்குள்ளே இருந்த வெறுப்பு உணர்வை எனது மாமியார் அறிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று தேவனிடம் கேட்டேன் என்று அவளது உணர்வை எனது சிநேகிதி ஒத்துக் கொண்டாள்.
ஆனால், ஒரு நாள் அவளது முறுமுறுக்கும் தன்மை தீடீரென ஒரு நொடிப் பொழுதிலே மாறிவிட்டது. அவள் தண்ணீருள்ள பாத்திரத்தையும் துண்டையும் எடுத்துக் கொண்டு. அவளது மாமியாரின் பாதத்தண்டையால் அமர்ந்த பொழுது, என் மாமியாரை நோக்கிப் பார்த்தேன். உடனே நான் இயேசுவின் பாதங்களைக் கழுவுவதாக உணர்ந்தேன். இயேசுவே மாறுவேடத்தில் என் மாமியாராக இருப்பது போல் உணர்ந்தேன் என்று கூறினாள். அந்த நிகழ்ச்சிக்குப் பின், மாமியாரின் பாதங்களை கழுவுவது எனக்குத் கிடைத்த ஒரு சிலாக்கியம் என்று உணர்ந்தேன் என்று கூறினாள்.
மனதைத் தொடக்கூடிய இந்த காரியத்தைக் குறித்து நான் கேள்விப்பட்ட பொழுது, இயேசு கிறிஸ்து அவரது உலக வாழ்க்கையின் இறுதி நாட்களில் ஒலிவ மலைச் சரிவில் போதித்தது நினைவிற்கு வந்தது.
அவருடைய பிள்ளைகள் பசியாயிருப்பவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, வியாதியாயிருப்பவர்களை விசாரிக்கும்பொழுது “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று ராஜா தன்னுடைய குமாரர்களையும், குமாரத்திகளையும், அவரது இராஜியத்திற்குள் வரும்படி அழைப்பார். காவலில் இருக்கும் மக்களைப் போய்ப் பார்த்து வரும்பொழுது, வஸ்திரம் இல்லாதவர்களுக்கு வஸ்திரம் அளிக்கும் பொழுதும், நாம் இயேசுவிற்கு ஊழியம் செய்கிறோம்.
எனது சிநேகிதி புதியதாக யாரையாவது, சந்திக்கும்பொழுது, “நீங்கள் மாறுவேடத்தில் வந்துள்ள இயேசுவா? என்று தனக்குள்ளாக கேட்டுக் கொள்வது போலவே நீங்களும் அவளது எண்ணத்தை
எதிரொலிக்கலாம்.
நல்ல மேய்ப்பர்
நானும் என் கணவரும் மருத்துவமனையில் மிகுந்த மனக் கவலையுடன் அமர்ந்திருந்தோம். எனது சிறிய மகனின் கண்களில் ஏற்பட்ட குறையை சரிசெய்யும் அறுவை சிகிச்சை நடை பெற்றுக்கொண்டிருந்தது எனது மனக்கவலையினாலும், வருத்தத்தினாலும் என்வயிறு குழம்பினது. தேவன், அவரது சமாதானத்தை எனக்கு தரும்படி ஜெபிக்க முயன்றேன். எனது வேதாகமத்தை புரட்டினபொழுது ஏசாயா 40ம் அதிகாரத்தைக் குறித்து சிந்திக்க ஆரம்பித்தேன். நான் நன்றாக அறிந்திருந்த அந்த பகுதியில் புதிய சத்தியங்கள் எனக்கு கிடைக்குமாவென்று எண்ணி அப்பகுதிக்கு வேதாகமத்தை திருப்பினேன்.
நான் அப்பகுதியை வாசித்தபொழுது பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அப்பகுதி, தேவன், “மேய்ப்பனைப் போல தமது மந்தையை மேய்ப்பார். ஆட்டுக் குட்டிகளை தமது புயத்தினால் சேர்த்து, தமதுமடியிலே சுமந்து கரவலாடுகளை மெதுவாய் நடத்துவார்” (வச. 40:11) என்று எனக்கு ஞாபகம் மூட்டியது. அந்த நிமிடத்தில் தானே என் கவலை என்னை விட்டு நீங்கியது. ஏனெனில் தேவன் நம்மை அரவணைத்துள்ளார், வழி நடத்துகிறார். நம்மைக் குறித்து கரிசனை கொள்ளுகிறார் என்று உணர்ந்தேன். தேவன் அமைதியாக என்னில் செயல்பட்டார். அந்த நேரத்தில் அதுதான் எனக்கு மிகவும் தேவையாக இருந்தது. எனது மகனின் அறுவை சிகிச்சையின்பொழுதும், அறுவை சிகிச்சை முடிந்த பின்பும் தேவ சமாதானத்தால் நிரப்பப்பட்டேன். (தேவனுடைய கிருபையால் எனது மகனின் அறுவை சிகிச்சை நல்லமுறையில் நடந்தது.
தேவன் அவரது தீர்க்கத் தரிசியாகிய ஏசாயாவின் மூலம் தானே, அவர்களது மேய்பனாக இருந்து அவர்களது அன்றாட வாழ்க்கையில் அவர்களை செம்மையாக நடத்தி, அவர்களுக்கு ஆறுதல் அளிப்பவராக இருக்கிறாரென்று அவர்களது ஜனங்களுக்கு வாக்குப் பண்ணியுள்ளார். நாமும் கூட நம்மைப் பாரப்படுத்தும், கவலை தரும் எண்ணங்களை அவரிடம் கூறி அவருடைய அன்பையும், சமாதானத்தையும் தேடும் பொழுது, அவர் நம்மை அன்புடன் மெதுவாக அரவணைத்து நடத்துவதை அறிந்துக்கொள்வோம். அவரே நமது நல்ல மேய்ப்பராக இருந்து நம்மை அவரது மார் போடு அணைத்து, அவரது நித்திய கரங்களில் நம்மை தாங்கி வருகிறார் என்பதை அறிந்திருக்கிறோம்.