எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

அலிசன் கீடாகட்டுரைகள்

விசுவாசம் எனும் சாசனம்

பில்லி கிரஹாம், தன் 16ஆம் வயதில், கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே, தன் பெற்றோருக்கு இயேசுவின் மேல் உள்ள தாகம் அவருக்கு வெளிப்படையாகத் தெரிந்தது. இருவருமே, கிறிஸ்தவ குடும்பத்திற்குள் இருக்கும்போதே விசுவாசத்திற்குள் வந்துவிட்டார்கள். அவர்களின் திருமணத்திற்குப் பிறகு, பில்லியின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அந்த உறுதியான விசுவாசத்தினை அன்போடுகூட தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். திருச்சபைக்கு ஒழுங்காகச் செல்லுதல், வேதவாசிப்பு, ஜெபம் போன்றவற்றில் அவர்களைப் பழக்கினார்கள். பில்லி கிரஹாமின் பெற்றோர்கள் அமைத்த உறுதியான அஸ்திபாரத்தினடிப்படையில், தேவன் அவரை விசுவாசத்திற்குள் கொண்டுவந்து, இறுதியில் அவரை ஒரு தைரியமான சுவிசேஷகராக உருவாக்கினார்.

அப்போஸ்தலனாகிய பவுலின் இளம் சீஷனான தீமோத்தேயுவும், உறுதியான ஆவிக்குரிய அஸ்திபாரத்தினால் பயனடைந்தார். பவுல், 'உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும், உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது. அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறது" (2 தீமோ. 1:5). இந்த உறுதியான சாசனமானது, தீமோத்தேயுவின் இருதயத்தை கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்திற்கு நேராக திருப்ப உதவினது.

இப்பொழுது பவுல், தீமோத்தேயுவின் பாரம்பரிய விசுவாசத்தில் தொடரும்படியாக அவரை துரிதப்படுத்துகிறார். 'உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்" (2 தீமோ. 1:6). 'நீ வெட்கப்படாமல் தேவவல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கனுபவி" (2 தீமோ. 1:8) என்று கூறுகிறார். ஒரு உறுதியான சாசனமுள்ள ஆவிக்குரிய பின்னணி மட்டுமே நம்மை விசுவாசத்திற்குள் கொண்டுவரமுடியாது. ஆனால், மற்றவர்களின் சாட்சிகள் மற்றும் உருவாக்குதலின் மூலமே அதற்கான வழியை ஆயத்தப்படுத்த முடியும். நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்ட பிறகே, ஆவியானவர் நம்மை நம்முடைய ஊழியத்தில் நடத்தவும், அவருக்காக வாழவும், மட்டுமல்லாது, பிறரை விசுவாச வாழ்க்கையில் வளர்ப்பதற்குமான சிலாக்கியத்தை தந்தருளுவார்.

வாழ்க்கை மிகவும் குறுகியதே

மரணம் மோசமான ஒரு நிஜம். நம் வாழ்நாளோ மிகவும் குறுகியது. பாபி மரித்தபோதுதான் இந்த உண்மை எனக்கு பளிச்செனத் தெரிந்தது. அவள் என்னுடைய சிறுபிராயத் தோழி, இருபத்து நான்கு வயதுதான், பனிமூடிய சாலையில் நிகழ்ந்த ஒரு கோர விபத்தில் அவள் பலியானாள். பிரச்சனைமிக்க ஒரு குடும்பத்தில் வளர்ந்தவள். சமீபத்தில்தான் அவளுடைய வாழ்க்கை சற்றே பசுமையாகி வந்தது. இயேசுவையும் அவள் ஏற்றுக்கொண்டு சிலகாலம்தான் ஆகிறது. இவ்வளவு சீக்கிரத்தில் அவள் ஏன் மரிக்கவேண்டும்?

வாழ்க்கை மிகவும் குறுகியதாகவும், முற்றிலும் வருத்தம் நிறைந்ததாகவும் சிலசமயங்களில் மாறிவிடுகிறது. சங்கீதம் 39 இல் தன்னுடைய பாடுகளை நினைத்து புலம்புகிறார் தாவீது; “கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாதது போலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம்” என்று சொல்கிறார். (வச. 4-5). வாழ்க்கை குறுகியது. நாம் நூறு வருடங்கள் வாழ்ந்தாலும் என்ன, ஒட்டுமொத்த காலங்களோடும் ஒப்பிடும்போது பூமியில் நம் வாழ்க்கை ஒரு துளியளவுகூட வராதே!

தாவீதோடு சேர்ந்து நாமும் “நீரே (கர்த்தரே) என் நம்பிக்கை” என்று சொல்லலாம். வசனம் 7. நாம் வாழ்வதில் அர்த்தமிருக்கிறது என்று நம்பலாம். நம்முடைய மாமிசம் அழுகி, ஒன்றுமில்லாமல் போனாலும், “உள்ளான மனுஷன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறான்” என்றும், ஒருநாளில் அவரோடு நாம் நித்தியமாக வாழப்போகிறோம் என்றும் உறுதியாக விசுவாசிக்கலாம். 2கொரிந்தியர் 4:16-5:1.  இவ்வாறு நிச்சயம் நடக்குமென்று “ஆவியென்னும் அச்சாரத்தை” தேவன் நமக்குத் தந்திருக்கிறார். 2கொரிந்தியர் 5:5.

புண்படுத்துகிற வார்த்தைகள்

“ஒட்டடைக்குச்சி” என்று ஒரு சிறுவன் கேலிசெய்தான். “ஒல்லிக்குச்சி” என்று ஒருவன் நக்கலடித்தான். நானும் பதிலுக்கு “குச்சிகளும் கற்களும் வேண்டுமானல் என் எலும்புகளை உடைக்கலாம், ஆனால் வார்த்தைகளால் என்னைப் புண்படுத்தவே முடியாது” என்று சொல்கிற பாடலை (skinny bones) பாடியிருக்கலாம். ஆனால் அப்போது நான் சிறுமியாக இருந்தபோதிலும், அந்தப் பாடல் சொல்லும் கருத்து பொய்யல்ல என்பது தெரியும். அன்பற்ற, சிந்தனையற்ற வார்த்தைகள் புண்படுத்துபவை. சிலசமயங்களில், உள்ளத்தின் ஆழத்திற்குச் சென்று, மோசமாகக் காயப் படுத்துபவை; கல்லால் அல்லது கம்பால் உண்டாகிற வடுவைவிட நெடுநாட்கள் நீடிக்கக்கூடியவை.

சிந்தனையற்ற வார்த்தைகள் எவ்வளவு வலிக்குமென்பது அன்னாளுக்குத் தெரியும். அவளுடைய கணவனான எல்க்கானாவுக்கு அவளைப் பிடிக்கும், ஆனால் அன்னாளுக்கு பிள்ளையில்லை. எல்க்கானாவின் இரண்டாவது மனைவியாகிய பெனின்னாளுக்கு அநேக பிள்ளைகள் இருந்தார்கள். பிள்ளைகள் பெற்றால்தான் பெண்ணுக்கு மதிப்பு என்கிற ஒரு கலாச்சாரத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள். அன்னாளுக்கு பிள்ளையில்லை என்று சொல்லி பெனின்னாள் அவளை நித்தம் நித்தம் “மனமடிவுண்டாக்கினாள்.” அன்னாள் சாப்பிடக்கூட முடியாமல் உட்கார்ந்து அழுமளவிற்கு நிலைமை சென்றது. 1சாமுவேல் 1:6-7.

எனவே எல்க்கானா, “அன்னாளே, ஏன் அழுகிறாய்? ... பத்துக் குமாரரைப்பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா?” என்று கேட்கிறார். வசனம் 8. நல்ல எண்ணத்தோடுதான் கேட்டிருப்பார், ஆனால், யோசித்துக் கேட்டாரா என்று தெரியவில்லை. ஏனென்றால், அவர் அப்படிக் கேட்டது அன்னாளுக்கு மேலும் அதிக வேதனையாக இருந்திருக்கும்.

நம்மில் அநேகர் இதேபோல் புண்பட்டு, அவதிப்படுகிறோம். வேறுசிலர், புண்படுத்துகிறவர்களை பதிலுக்கு வசைபாடி, வார்த்தைகளைக் கொட்டி புண்படுத்துகிறோம். ஆனால், நாம் எல்லாருமே ஒன்று செய்யலாம், அன்பும் மனதுருக்கமும் நிறைந்த தேவனிடம் ஓடிச்சென்று பெலனையும் சுகத்தையும் பெறலாம். சங்கீதம் 27:5,12-14. அன்பும் கிருபையும் நிறைந்த வார்த்தைகளால் நம்மை மகிழ்ச்சியாக்குகிறார்.

கல்லெறிதல்

உபவாசத்தின் உட்கருத்து

மலரைப் போன்ற மலர்ச்சி

என்னுடைய கடைசி பேரன் பிறந்து இரண்டு மாதமேயாகிறது. ஓவ்வொருமுறை நான் அவனைப் பார்க்கும் போதும் சிற்சில மாற்றங்களைக் காண்கின்றேன். சமீபத்தில் நான் அவனிடம் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்த போது, அவன் என்னைப் பார்த்து சிரித்தான். உடனே எனக்கு அழுகை வந்து விட்டது. அது ஆனந்தம் கலந்த கண்ணீர். ஏனெனில் நான் என்னுடைய குழந்தைகளின் முதல் சிரிப்பை நினைத்துப் பார்த்தேன். அவை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்தவை! ஆனாலும் அவற்றை நேற்று நடந்தது போல உணர முடிகிறது. இது போன்ற தருணங்கள் நம்மால் விவரிக்க முடியாத நினைவுகளைத் தருகின்றன.

சங்கீதம் 103ல் தாவீது எழுதிய தேவனைப் போற்றும் ஒரு சங்கீதம் போற்றியும் நம்முடைய வாழ்வின் சந்தோஷமான கணங்கள் எத்தனை சீக்கிரமாய் நம்மைவிட்டு கடந்து சென்று விடுகின்றன உணர்த்துகிறது. “மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது, வெளியின் புஷ்பத்தைப் போல் பூக்கிறான். காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று. அது இருந்த இடமும் இனி அதை அறியாது” (வச. 15-16).

நம்முடைய வாழ்நாள் குறுகியதாய், இருப்பினும் அது ஒரு மலரைப் போன்று மலர்கின்றது, செழிக்கின்றது என தாவீது விளக்குகின்றார். ஒவ்வொரு தனிமலரும் மொட்டிலிருந்து மலராக விரிந்து, மணத்தையும், அழகிய வண்ணங்களையும் கொடுத்து அதிக மகிழ்ச்சியைத் தருகின்றது. ஆனாலும் ஒவ்வொரு தனிமலரையும் நாம் நினைவில் வைப்பதில்லை. “அது இருந்த இடமும் இனி அதை அறியாது” (வச. 16) ஆனால், இதற்கு மாறாக, “கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள் மேல், அநாதியாய் என்றென்றைக்குமுள்ளது (வச. 17) என்ற உறுதியைத் தருகின்றார்.

மலர்களைப் போன்றுள்ள நாம் இக்கணத்தில் மகிழ்ந்து களிகூறுவோம். நம்முடைய வாழ்வின் இத்தகைய தருணங்கள் உண்மையில் ஒருபோதும் மறக்கப்படுவதில்லை. இந்த உண்மையை நாம் கொண்டாடுவோம். நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் தேவனுடைய கரத்திலுள்ளது. அவருடைய மாறாத அன்பு அவருடைய பிள்ளைகளோடு என்றென்றைக்கும் உள்ளது.

என்னுடைய தந்தையை நினைக்கின்றேன்

நான் என் தந்தையைக் குறித்து நினைத்துப் பார்க்கும்போது, அவர் ஒரு சிறந்த வெளிவேலையைச் செய்பவராக, எப்போதும்; சுத்தியலைக் கொண்டும், தோட்ட வேலையிலும், மிகச்சிறந்த கருவிகளும், சிறிய இயந்திரங்களையும் கொண்ட அறையிலிருந்து வேலை செய்வதும் தான் என் நினைவில் வருகிறது. அவருடைய கரங்கள் எப்பொழுதும் ஏதோ ஒரு வேலையையோ, திட்டத்தையோ செய்துகொண்டேயிருக்கும். சில வேளைகளில் ஒர் கார் நிறுத்தும் அறையை செய்துகொண்டிருப்பார். அல்லது ஒரு சிறிய மேசையைச் செய்வார், அல்லது பறவைக்கான ஒரு வீட்டை தயாரிப்பார். சில வேளைகளில் பூட்டுகளைச் சரி செய்வார், சிறிய ஆபரணங்களை வடிவமைப்பார், கண்ணாடியில் சித்திரவேலை செய்வார்.

என்னுடைய தந்தையைக் குறித்து நினைக்கும்போது, அது என்னை என்னுடைய பரலோகத் தந்தையும், படைப்பாளருமானவரை நினைக்கச் செய்கின்றது. அவரும் தன்னுடைய வேலையில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பவர். ஆரம்பத்தில் 'தேவன் பூமியை அஸ்திபாரப்படுத்தினார்... அதற்கு அளவு குறித்தார்... அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே" (யோபு 38:4-7) அவருடைய படைப்புகளெல்லாம் ஒரு கலைநயமிக்க வேலை, மிகக் சிறந்த வேலை. நம்மை பிரமிக்கச் செய்யும் அழகிய உலகினை அவர் படைத்தார். 'அது மிகவும் நன்றாயிருந்தது" (ஆதி. 1:31) என்று சொன்னார்.

அவருடைய அழகிய கலைப் படைப்புகளில் நீயும் நானும் உண்டு. தேவன் நம்மை மிக நுணுக்கமாகவும், தெளிவாகவும் படைத்தார் (சங். 139:13-16). அவர் நமக்குப் பொறுப்புகளைக் கொடுத்துள்ளார். அவருடைய சாயலை நமக்குத் தந்து, நமக்குள்ளே இலக்கினையும், அதனை நிறைவேற்றும்படி வேலைசெய்யும் ஆர்வத்தையும் கொடுத்துள்ளார். அதில் இப்புவியையும் அதிலுள்ள படைப்புகளையும் ஆள்வதும் பாதுகாப்பதும் அடங்கும் (ஆதி. 1:26-28,2:15). நாம் எத்தகைய வேலை செய்தாலும் நம்முடைய வேலையிலோ, அல்லது ஓய்வுவேளையிலோ அவருக்காக முழு மனதோடு வேலைசெய்ய நமக்குத் திறமையையும் ஆற்றலையும் தருகின்றார்.

நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் தேவனைப் பிரியப்படுத்தும்படி செய்வோமாக.

தேவன் கேட்கின்றார்

தம் வாழ்வில் சவால்களையும், சுகவீனத்தையும் சந்திக்கின்ற குடும்ப நபர்கள், நண்பர்களுக்காக ஜெபிக்கும்படி அந்தக் குழுவிலுள்ள மற்ற அனைவரும் ஜெப விண்ணப்பங்களைக் கொடுக்க, தயான் மட்டும் கவனித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய குடும்ப நபர் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பல வருடங்களாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார். ஆனால். தயான் தன்னுடைய வேண்டுதலை வெளிப்படுத்தவில்லை. அவள் இதனைக் குறித்துச் சொன்னால், பிறரின் முகபாவனையையும், அவர்களின் கேள்விகளையும் ஆலோசனைகளையும் அவளால் சகித்துக் கொள்ள முடியாதென நினைத்தாள். எனவே அவள் இந்த வேண்டுதலை வெளியில் சொல்லாமலிருப்பதே மேல் என எண்ணினாள். தான் நேசிக்கும் இந்த நபர் இயேசுவின் விசுவாசியாயிருந்தும் ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருப்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வதில்லை என்றெண்ணினாள்.

தயான் இந்த ஜெப வேண்டுதலை இந்தக் குழுவிலுள்ள மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளாவிடினும், அவள் நம்பும் சில சிநேகிதிகளிடம் தன்னோடு ஜெபிக்கும்படி கேட்டுக் கொள்வாள். அவர்களோடு சேர்ந்து, தான் நேசிக்கும் இந்த நபரை குடிப்பழக்கத்திலிருந்து விடுவிக்குமாறும், அவரும் கிறிஸ்து தரும் விடுதலையை அநுபவிக்க உதவுமாறும், தயானுக்குத் தேவையான பொறுமையையும் சமாதானத்தையம் தருமாறும் ஜெபிப்பாள். அவ்வாறு ஜெபிக்கும்போது அவள் ஆறுதலையும், தேவன் தரும் பெலனையும் பெற்றுக் கொண்டாள்.

நம்மில் அநேகர் உண்மையாகவும், தொடர்ந்தும் ஜெபித்துக் கொண்டிருக்கும் சில விண்ணப்பங்களுக்கு பதிலளிக்கப்படாமலிருக்கலாம். ஆனால், தேவன் நம்மீது கரிசனையுள்ளவர், அவர் நம்முடைய வேண்டுதல்களைக் கேட்கிறார் என்பதை உறுதியாக நம்புவோம். அவர் நம்மை இன்னும் அவரோடு நெருங்கி நடக்க விரும்புகின்றார். நாமும், நம்பிக்கையிலே சந்தோஷமாயும், உபத்திரவத்திலே பொறுமையாயும், ஜெபத்திலே உறுதியாயும் தரித்திருந்து (ரோம. 12:12) அவரையே சார்ந்து வாழ்வோம்.

என் செயலுக்காக வருந்துகிறேன்

காலின்ஸ் என்பவர் 2005ல் ஒரு அறிக்கையை வேண்டுமென்றே தவறாக திரித்து எழுதியதால், மெக்கீ என்பவர் நான்கு ஆண்டுகள் சிறைக்கு செல்லவேண்டியதாயிற்று. சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் காலின்ஸை “துன்புறுத்த வேண்டும்” என்று மெக்கீ சபதம் எடுத்தார். மெக்கீ மேல் எந்தத் தவறும் இல்லை என்று தீர்ப்பாகி சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் அனைத்தையும் இழந்துவிட்டார். இதற்கிடையில் காலின்ஸ் இதுபோல் தவறாகத் தயார் செய்த அறிக்கைகள் பற்றித் தெரிய வந்ததால், அவர் வேலை பறிக்கப்பட்டு, அவரும் சிறையில் தள்ளப்பட்டார். ஆனால் இருவருமே சிறையில் இருக்கும்போது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர்.

இரண்டு பேருமே நம்பிக்கை சார்ந்த ஒரே நிறுவனத்தில் வேலை செய்வது 2015ல் தெரியவந்தது. “நான் செய்த காரியத்துக்காக வருத்தப்படுகிறேன் என்று சொல்வதைத் தவிர என்னால் எந்தவிதமான விளக்கமும் அளிக்கமுடியாது,” என்று மெக்கீயிடம் சொன்னதாக காலின்ஸ் பின்னர் கூறினார். “அதைத்தான் நான் எதிர்பார்த்தேன்” என்று கூறிய மெக்கீ, காலின்ஸை மன்னித்தார். இருவருமே ஆண்டவரின் விலைமதிக்க முடியாத அன்பையும், “கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (கொலோசேயர் 3:13)என்று கற்றுத்தரும் தேவனின் மன்னிப்பையும் அனுபவித்ததால், சமரசம் செய்துகொள்ள முடிந்தது.  

இப்போது அவர்கள் இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள். “ஒருவரிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால், உங்கள் இறுமாப்பைப் புறந்தள்ளிவிட்டு மன்னிப்பு கேளுங்கள் என்று உலகத்தாருக்குச் சொல்வதே எங்கள் இருவரின் கூட்டுக் குறிக்கோளாக இருக்கிறது” என்று காலின்ஸ் கூறினார். “யார் மீதாவது உங்களுக்கு வருத்தம், கோபம் இருந்தால், அந்த கசப்பான உணர்ச்சிகளை விட்டுத் தள்ளுங்கள்; ஏனென்றால் அது அவர்களைக் காயப்படுத்துவதாக நினைத்து நீங்கள் விஷம் குடிப்பது போன்றதாகும்.”

தேவன் தம்மை விசுவாசிப்பவர்களை அமைதியிலும், ஒருமைப்பாட்டிலும் வாழும்படி சொல்கிறார். நமக்கு “யார் மீதாவது மனஸ்தாபம்” இருக்குமென்றால், அதை நாம் தேவனிடம் சொல்லிவிடலாம். அவர் சமரசம் செய்வார் (வச. 13-15; பிலிப். 4:6-7)

விலங்குகளைக் கேளுங்கள்

காப்பாற்றப்பட்ட ஒரு மொட்டைத் தலைக் கழுகை மிக அருகில் பார்த்தபோது, எங்கள் பேரப்பிள்ளைகள் அதிகக் குதூகலமடைந்தார்கள். அதை தொட்டுப்பார்க்கவும் அவர்களுக்கு அனுமதி கிடைத்தது. மிருகக் காட்சி சாலையின் தன்னார்வலர் கரத்தில் அமர்ந்திருந்த வலிமையான அந்தக் கழுகின் இறக்கை ஆறரை அடி நீளம் கொண்டது என்று தெரிந்தபோது அதிக ஆச்சரியம் அடைந்தேன். ஆனாலும் அதன் எலும்புகள் திண்ணமாக இல்லாத காரணத்தால் அதன் எடை வெறும் மூன்றரை கிலோ மட்டுமே.

கீழ் நோக்கிப் பாய்ந்து தன் கூர்நகங்களில் இரையைப் பிடிக்க ஏதுவாக ஒரு ஏரியின் மேல் பறந்து கொண்டிருந்த ஒரு கழுகை முன்பு பார்த்ததை இந்தக் கழுகு எனக்கு நினைவுபடுத்தியது. முன்பு ஒரு முறை ஒரு குளத்தின் கரையில் அசையாமல் நின்று கொண்டிருந்த நீல நாரையைப் பார்த்ததை மனக் கண் முன் கொண்டுவந்தேன். அது தன்னுடைய நீண்ட அலகை தண்ணீருக்குள் அமிழ்த்தி இரையைப் பிடிக்கத் தயாராக நின்றது. நமது எண்ணங்களை நம்மை சிருஷ்டித்தவரை நோக்கித் திருப்ப இந்த இரண்டு பறவைகளைப் போல ஏறத்தாழ 10,000 வகைப் பறவைகள் உள்ளன.

யோபின் புத்தகத்தில், அவரது கஷ்டங்களுக்கான காரணங்களைப் பற்றி அவர் நண்பர்கள் விவாதிக்கும்போது, “சர்வ வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?” (11:5-9) என்று கேட்கின்றனர். அதற்கு யோபு, “இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள். அவைகள் உனக்கு அறிவிக்கும்” (யோபு 12:7) என்று பதில் கூறுகிறார். கடவுள் தம் சிருஷ்டிப்புகளை உருவாக்கி, பராமரித்து, ஆளுகை செய்வதை விலங்குகள் பறைசாற்றுகின்றன: “சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது” (வச. 10).

நமது சூழ்நிலைகள் புரியாதபோதும். கடவுள் பறவைகளைப் பராமரிப்பதால், உங்களையும், என்னையும் நேசிக்கிறார், பராமரிக்கிறார் என்று உறுதிகொள்ளலாம். உங்களைச் சுற்றிப்பார்த்து, அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.