செழித்தோங்க வெட்டி களைதல்
ஒரு பெரிய வண்டு ஒரு பூப்பூக்கும் புதரில் மெல்ல இறங்கியதை நான் பார்த்தபோது, அந்த புதரின் பசுமையான இலைகள் வண்ணமயமாக விரிவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். அதன் கரு நீல மலர்கள் கண்களையும் வண்டுகளையும் ஒரே மாதிரி ஈர்த்தன. இலையுதிர் காலத்தின் கடைசி நாட்கள் என்பதால், அவை மீண்டும் பூக்குமா என்று நான் ஆச்சரியப்பட்டேன். என் மனைவியின் பெற்றோர் ஒரு பஞ்சு செடியை ஒரு சிறு துண்டாக குறைத்த போது அவர்கள் அதை அகற்ற முடிவு செய்தார்கள் என்று நான் கருதினேன். கொடூரமாக தோன்றிய, வெட்டி களைதலின் பிரகாசமான விளைவை நான் இப்பொழுது கண்டேன்.
இத்தகைய கடுமையான வெட்டுகளால் ஏற்படுகின்ற ஆச்சரியப்படத்தக்க அழகுதான் விசுவாசிகளிடையே கடவுளின் வேலையை விவரிக்க இயேசு வெட்டி களைதலின் உருவகத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். யோவான் 15ல் இயேசு கூறுகிறார், "நான் மெய்யான திராட்சச்செடி. என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனி கொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப் போடுகிறார். கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும் படி, அதைச் சுத்தம் பண்ணுகிறார்." (வச. 1-2).
நல்ல காலத்திலும் கெட்ட காலத்திலும் கடவுள் எப்போதும் நமது ஆவிக்குரிய புதுப்பித்தல் மற்றும் கனி கொடுத்தல் இவற்றை நோக்கியே நம்மில் செயல்படுகிறார் என்பதை இயேசுவின் வார்த்தைகள் நமக்கு நினைவூட்டுகின்றன. வெட்டி களைதலின் பருவங்களான துன்பப்படுதல் அல்லது உணர்ச்சியின் மலட்டுத்தன்மை இவற்றின் போது, நாம் எப்போதாவது மீண்டும் செழித்து வளர முடியுமோ என்று ஆச்சரியப்படுகிறோம். ஆனால் கிறிஸ்து தொடர்ந்து அவருடன் நாம் நெருக்கமாக இருக்கும்படி நம்மை ஊக்குவிக்கின்றார். "கொடியானது திராட்சைச் செடியில் நிலைத்திராவிட்டால், அது தானாய் கனி கொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்" (வச. 4). நாம் தொடர்ந்து இயேசுவிடமிருந்து ஆவிக்குரிய ஊட்டத்தை பெறுகையில் இதன் விளைவாக நம் வாழ்வில் வரும் அழகும் கனி தருதலும்,தேவனின் நன்மையை இந்த உலகிற்கு காண்பிக்கும்.
இயேசுவின் வேகத்தில் நகர்வது
சமீபத்தில் எனது நான்கு சக்கர வாகனம் பழுதாகி விட்டது. வாகனம் பழுது பார்க்கும் இடம் ஒரு மைல் தூரத்தில் இருந்தது. நடந்து செல்லலாம் என்று முடிவு எடுத்தேன். ஒன்றை கவனித்தேன். அனைவரும் என்னை விட மிகவும் வேகமாக சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் இது ஒன்றும் பெரிய ஏவுகணை அறிவியல் இல்லை நடந்து செல்பவர்களை விட ஊர்திகளில் செல்பவர்கள் வேகமாக செல்வார்கள். அப்பொழுது தான் ஒன்றை நான் உணர்ந்தேன்: நாம் எப்போதும் மிகவும் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறோம். மற்றொன்றையும் உணர்ந்தேன்: தேவனையும் என்னுடைய கால அட்டவணைக்கு ஏற்ப வேகமாக நகர வேண்டும் என்று விரும்புகிறேன்.
இயேசு இவ்வுலகத்தில் வாழ்ந்த போது அவருடைய மெதுவான வேகம் அவர் நண்பர்களை சில நேரங்களில் விரக்தி அடைய செய்தது. நாம் யோவான் 11ல் வாசிப்பது போன்று மார்த்தாள் மரியாள் தங்கள் சகோதரனாகிய லாசருவை குணப்படுத்த வல்லவராகிய இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து அவரை அழைத்து வர ஆள் அனுப்பினார்கள். ஆனால் அவரோ லாசரு மரித்து 4 நாட்களுக்கு பிறகு வந்தார் (வச. 17). மார்த்தாள் இயேசுவைப் பார்த்து “ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்க மாட்டான்” என்று கூறினாள். அதாவது இயேசு வேகமாக செயல்படவில்லை என்று அர்த்தம். ஆனால் இயேசுவோ லாசருவை உயிரோடு எழுப்பும்படி பெரிய திட்டத்தை வைத்திருந்தார் (வச. 38-44).
உங்களால் மார்த்தாவின் விரக்தியை உணர முடிகிறதா? என்னால் முடிகிறது. சில சமயங்களில் நம் ஜெபங்களுக்கு சீக்கிரமாக பதிலளிக்கும்படி இயேசுவை எதிர்பார்க்கிறவர்களாக நாம் இருக்கிறோம். சிலவேளைகளில் அவர் தாமதிப்பது போல் காணப்படலாம். ஆனால் அவருடைய சர்வவல்ல திட்டம் நம் திட்டத்திற்கு எதிர்மாறானது. அவருடைய திட்டத்தில் உள்ள வேலைகளை அவர் சரியாக செய்து முடிக்க வல்லவர். இதிலிருந்து அவருடைய மகிமையும் நன்மையும் நம் திட்டங்களுக்கு அப்பாற்பட்டவை என்று அறியலாம்.
வான்கோழிகளிடம் கற்றுக்கொண்டது
கூட்டமாக சுற்றும் வான்கோழிகளை என்னவென்று அழைப்பார்கள் தெரியுமா? அவைகள் "ராஃப்ட்டர்" என்று அழைக்கப்படும்.
ஏன் வான்கோழிகளை குறித்து எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா ? கடந்த வாரம் எனது விடுமுறையை ஒரு மலை கிராமத்தில் உள்ள ஒரு சிறிய வீட்டில் களித்தேன். அந்த வீட்டின் முற்றத்தில் அனுதினமும் உலாவி கொண்டிருந்த வான்கோழிகளை கண்டுகளித்து வந்தேன்.
இதற்கு முன்பதாக வான்கோழிகளை நான் கவனித்தது இல்லை. அவைகள் அந்த முற்றத்தில் கூட்டமாக உலவிக் கொண்டிருக்கும் போது, தங்கள் கால்களால் வேகமாய் மண்ணை தோண்டி அதை கொத்தி கொண்டிருந்தது. அந்த புற்களை பார்க்கும்போது அதில் உணவு ஏதும் இருந்தது போல் தெரியவில்லை. இருப்பினும் அவைகள் மிகவும் ஆர்வமாய் கொத்திக் கொண்டிருந்தன. அந்த கோழிகளை பார்க்கும்போதும் மிகவும் ஆரோக்கியமாகவும் புஷ்டியாகவும் காணப்பட்டது.
அந்த போஷாக்கு நிறைந்த கோழிகளை பார்க்கும்போது இயேசு சொன்ன வார்த்தை ஒன்று எனது நியாபகத்திற்கு வந்தது "ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? " (மத். 6:26). தேவன் அந்த பறவைகளைக் கொண்டு அவர் நமக்கு வைத்திருக்கும் அன்பை நினைவுபடுத்துகிறார். அந்த பறவைகளின் வாழ்க்கை தமக்கு முக்கியமென்றால் நம் வாழ்க்கை அவருக்கு எவ்வளவு முக்கியமாக இருக்கும்?. அதினால் நமது அனுதின தேவைகளை குறித்து நாம் கவலைப்படாமல் அவருடைய ராஜ்யத்தையும் நீதியையும் முதலாவது தேடும்படி அழைக்கிறார் (வச. 33). இதன் மூலமாக அவர் நமக்காக வைத்திருக்கும் காரியங்களை நாம் பெற்றுக் கொள்ளலாம். அந்த சிறிய வான்கோழிகளை அவர் பார்த்துக் கொள்வார் என்றால், நம்மை நிச்சயமாக பார்த்துக்கொள்வார்.
ஒரு பாடகரின் இதயம்
சனிக்கிழமை காலை 6:33 மணிக்கு அந்த துதி பாடலின் சத்தம் மேல் மாடியில் இருந்து தவழ்ந்து வந்தது. வேறு யாரும் அந்த வேளையில் முழித்து இருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய இளைய மகளுடைய கீச்சென்ற குரல் என்னுடைய எண்ணம் தவறு என்று காட்டியது. தான் நன்றாக முழிக்கும் முன்னரே பாட்டு பாட ஆரம்பித்து விட்டாள்.
என்னுடைய இளைய மகள் ஒரு பாடகி. அவளாலே பாடாமல் இருக்கவே முடியாது. முழிக்கும்போது பாடுவாள். பள்ளி செல்லும்போது பாடுவாள். படுக்கப் போகும்போது பாடுவாள். தன்னுடைய இதயத்தில் ஒரு பாடலோடு பிறந்தவள் அவள். அவளுடைய பாடல்கள் அநேகமாக எல்லாமே இயேசுவைப் பற்றியதாய் இருக்கும். தேவனை அவள் எந்நேரமும், எங்குமே துடித்துக் கொண்டிருப்பாள்.
என் மகளுடைய எளிமை, பக்தி, ஆர்வமான குரல் எனக்கு மிகவும் பிரியம். அவள் தானாக பாடும் மகிழ்ச்சி பாடல்கள், வேதத்தில் தேவனைத் துதிக்க நம்மை ஏவும் வேதவாக்யங்களை பிரதிபலிக்கும். “கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்” என்று சங்கீதம் 95ல் வாசிக்கிறோம். இன்னும் பார்க்கும்போது இந்த துதி அவர் யார், நாம் யாருடையவர்கள் என்ற உணர்விலிருந்து உதிப்பதாக அறிகிறோம்: “கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார் (வச. 3), அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே (வச. 7).
என் மகளுக்கு இந்த உண்மைகளே காலையில் தோன்றும் முதல் சிந்தனைகள். தேவகிருபையால், இந்த குட்டி ஆராதனைவீராங்கனை, தேவனை துதிப்பதில் காணும் மகிழ்ச்சியை நமக்கு ஆழமாக நினைப்பூட்டுகிறாள்.
சிக்கலுடன் சமாதானம் செய்தல்
நாங்கள் அதை கவனித்தப்போது கிட்டத்தட்ட வீட்டில் இருந்தோம் - எங்கள் காரின் வெப்பநிலை அளவின் ஊசி உயர்ந்துக்கொண்டிருந்தது. நாங்கள் உள்ளே வந்த பிறகு என்ஜினை நிறுத்திவிட்டு வெளியே குதித்தேன். முன்பக்கத்திலிருந்து புகை எழும்பிக்கொண்டிருந்தது. ஒரு பொரித்த முட்டையைப்போல என்ஜின் வெப்பத்தினால் ‘ஸ்’ என்ற ஒலி உண்டாக்கிக்கொண்டிருந்தது. நான் காரை சில அடிகள் உயர்த்தி பார்த்த போது அடியில் குட்டை (சகதி) இருந்ததைக் கண்டேன். உடனடியாக என்ன நடந்தது என்பதை அறிந்துக் கொண்டேன். அங்கிருந்த கேஸ்கெட் தூக்கி வீசப்பட்டிருந்தது.
நான் புலம்பினேன். நாங்கள் மற்ற விலையுயர்ந்த பழுதுபார்ப்புகளுக்கு பணத்தை செலவு செய்துள்ளோம்.
ஏன் காரியங்கள் சரியாக வேலை செய்வதில்லை? நான் மிகவும் கசப்புடன் முணுமுணுத்தேன். பொருட்கள் உடைவது ஏன் நிறுத்தப்படவில்லை?
நீங்கள் தொடர்புபடுத்த முடியுமா? சில நேரங்களில் நாம் ஒரு நெருக்கடியைத் தவிர்க்கிறோம், ஒரு பிரச்சனையைத் தீர்க்கிறோம், ஒரு பெரிய ரசீதுக்காக பணம் செலுத்துகிறோம் - ஆனால் இன்னொரு பிரச்சனையை சந்திக்கிறோம். சில நேரங்களில் சிக்கல்கள் இயந்திரத்தை அழிப்பதை விட மிகப் பெரியவை : எதிர்பாராத நோயறிதல், அகால மரணம், ஒரு பயங்கரமான இழப்பு.
அப்படிப்பட்;ட தருணங்களில், நாம் குறைவாய் உடைக்கப்பட்ட மற்றும் குறைந்த சிக்கலான உலகத்திற்காக ஏங்குகிறோம். இயேசு வாக்குப்பண்ணின உலகம் வருகிறது. ஆனால் இன்னும் இல்லை : “உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு” யோவான் 16ம் அதிகாரத்திலே இயேசு தம்முடைய சீ ஷர்களுக்கு ஞாபகப்படுத்தினார். “ஆனாலும் திடன் கொள்ளுங்கள்! நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) விசுவாசத்திற்காக துன்புறுத்தப்படுதல் போன்ற கடுமையான பிரச்சனைகளைக் குறித்து இந்த அதிகாரத்தில் இயேசு பேசியிருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட பிரச்சனை அவரை நம்புகிறவர்களுக்கு ஒருபோதும் கடைசியானதாயிருக்காது என்று அவர் கற்பித்தார்.
சிக்கல்கள் சிறிதாயிருந்தாலும், பெரிதாயிருந்தாலும் நம்மை சோர்வில் கொண்டு செல்லும். ஆனால், அவருடன் இருக்கும்போது ஓர நல்ல நாளையை நமக்கு கொடுக்கும் இயேசுவின் வாக்கால், நம்முடைய சிக்கல்கள் நம்மை ஒருபோதும் கீழே தள்ளிவிடாது என்று ஊக்குவிக்கப்படுகிறோம்.
ஆவிக்குரிய ஓட்டுனர்
நாங்கள் வாகனம் ஓட்டுவதற்கு கற்றுக் கொண்ட போது, எங்களது ஓட்டுனர் பள்ளியின் அறிவுரையாளர், நாங்கள் சாலை முழுவதையும் பார்க்க வேண்டும், இடர்பாடுகளைக் கண்டறிய வேண்டும், அவை எப்படிப்பட்ட இடையூறை ஏற்படுத்தும் என்பதை முன்னறிய வேண்டும், அதனை நாம் எப்படி எதிர் நோக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும், தேவைபட்டால், நாம் அதனை செயல் படுத்த வேண்டும் என்று கற்பித்தார். இது, நம் மனம் அறிய நடக்கவிருக்கும் ஒரு விபத்தைத் தவிர்க்க, நாம் கையாள வேண்டிய தந்திரம் என்றார்.
இந்த கருத்து, எப்படி நம்முடைய ஆவிக்குரிய வாழ்விற்கும் பொருத்தமானது என்பதை நான் நினைத்துப் பார்த்தேன். பவுல் எபேசு சபை விசுவாசிகளுக்கு, “நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப் போலக் கவனமாய் நடங்கள்” (வ.15) என்கின்றார். அவர்களின் பழைய வாழ்க்கை முறையில், இயேசுவுக்குள் பெற்ற புதிய வாழ்வு, அவர்களுக்கு சில இடர்பாடுகளை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வைத் தடம் புரளச் செய்யும் என்பதை அவர் அறிந்திருந்தார் (வ.8,10-11). எனவே அந்த வளரும் சபையினர் கவனமாயிருக்கும்படி அறிவுறுத்துகின்றார்.
மொழிபெயர்க்கப் பட்ட வார்த்தைகளான, “கவனமாய் இருங்கள், எப்படி வாழ்கின்றாய்” என்பன “நீ எவ்வாறு நடக்கின்றாய் என்பதைப் பார்” என்பதாக அர்த்தம் கொள்ளும். இன்னும் சரியாகக் கூறுவோமாயின், சுற்றிலும் பார், இடர்பாடுகளை கவனி, குழியில் விழுவதற்கு ஏதுவான மதுபான வெறி, துன்மார்க்க ஜீவியம் ஆகியவற்றை தவிர்த்து விடு (வ.18) என்று அர்த்தம். நம்முடைய வாழ்விற்கு தேவன் வைத்திருக்கும் சித்தம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் (வ.17) என்கின்றார். சக விசுவாசிகளோடு சேர்ந்து பாடி, தேவனுக்கு நன்றி செலுத்துமாறு கூறுகின்றார் (வ.19-20).
நாம் எத்தகைய இடர்களைச் சந்தித்தாலும் சரி, நாம் தடுமாறினாலும் சரி, அவருடைய அளவற்ற வல்லமையையும் கிருபையையும் சார்ந்து கொள்ளும் போது, கிறிஸ்துவுக்குள் நம்முடைய புதிய வாழ்வை அனுபவிப்போம்.
ஒரு செழிப்பான மரம்
எதையாகிலும் சேகரிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுடைய இருதயத்தினுள் எப்பொழுதும் இருக்கும். நான் குழந்தையாக இருந்த போது, தபால் தலைகள், நாணயங்கள், காமிக் புத்தகங்கள் போன்றவற்றைச் சேகரித்தேன். இப்பொழுது, ஒரு தகப்பனான போது, அதே ஆசைகளை என்னுடைய குழந்தைகளிடம் காண்கின்றேன். சில வேளைகளில், உனக்கு இன்னும் ஒரு டெடி கரடி பொம்மை வேண்டுமா? என்று கூட நான் ஆச்சரியத்தோடு நினைப்பதுண்டு.
ஆனால், அது தேவையைக் குறிப்பதல்ல. ஏதாகிலும் புதியனவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அல்லது மிகப் பழமை வாய்ந்த அல்லது அரிய வகையான பொருட்களை அடைய வேண்டும் என்ற ஆவல். நம்முடைய மனதை கவர்வது எதுவாக இருந்தாலும் நாம் அதை அடைந்தால் தான், நம்முடைய வாழ்வு நன்றாக இருக்கும் என்று நம்மை நினைக்கச் செய்யும். அப்போது தான் நாம் மகிழ்ச்சியாகவும் நிறைவோடும் வாழ முடியும் என்பதாகவும் நினைப்போம்.
உலகப் பொருட்கள் நிரந்தரமான மன நிறைவைக் கொடுப்பதல்ல, ஏனெனில், நம்முடைய உள்ளம் தேவனால் நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, தேவன் நம்மைப் படைத்தார். நம்மைச் சுற்றியுள்ள உலகப் பொருட்களால், ஏக்கம் நிறைந்த நம்முடைய இருதயத்தை திருப்தி படுத்த முடியாது.
இத்தகைய மனஅழுத்தம் புதுமையானது அல்ல. இரண்டு வகை எதிர் மாறான வாழ்வுகளை நீதிமொழிகள் நமக்குக் காட்டுகின்றது. ஒன்று ஐசுவரியத்தைச் சம்பாதிப்பதற்காக வாழ்வைச் செலவிடுவது, மற்றொன்று, தேவன் மீதுள்ள அன்பில் வாழ்வை அமைத்துக் கொண்டு, தாராளமாகக் கொடுப்பது. “தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப் போலே தழைப்பார்கள்” என்பதாக நீதி. 11:28 கூறுகின்றது.
எத்தனை அருமையான காட்சி! இரண்டு வகையான வாழ்வு, ஒன்று செழிப்பும் கனிகள் நிறைந்ததுமான வாழ்வு, மற்றொன்று, வெறுமையும் கனியற்றதுமான வாழ்வு. உலகப் பொருட்களை மிகுதியாகச் சேகரிப்பதே “நல்ல வாழ்வு” என்று உலகம் வலியுறுத்துகின்றது. மாறாக, நாம் அவரில் வேர்கொண்டு வளர்ந்து, அவர் தரும் நன்மையை அநுபவித்து, செழித்து வளர்ந்து கனிதரும்படி தேவன் அழைக்கின்றார். நாம் தேவனோடு கொண்டுள்ள உறவில் பக்குவப்படும் போது, தேவன் நம் இருதயத்தையும் அதின் ஆசைகளையும் திருத்தி, நம்மை உள்ளிருந்து வெளி நோக்கி, மாற்றம் பெறச் செய்கின்றார்.
வாழ்வின் கொந்தளிப்புகளைக் கடந்து செல்லல்
“இடது புறம் அமர்ந்திருப்பவர்களெல்லாரும், என்னோடு சேர்ந்து மூன்று முன்னோக்கிய தள்ளு விசையைக் கொடுக்கவும்!” என்று எங்களுடைய படகு வழிகாட்டி கத்தினான். இடது பக்கம் இருப்பவர்கள் உள்ளே மூழ்கி, நமது படகை சுழல் நீரோட்டத்திலிருந்து வெளியே இழுக்கவும். பல மணி நேரம், நாங்கள் எங்கள் வழிகாட்டியின் அறிவுரைக்குச் செவிசாய்க்க கற்றுக் கொண்டோம். கொந்தளிக்கும் ஆற்றினைப் பாதுகாப்பாக கடந்து செல்ல, எங்களுக்கிருந்த கொஞ்ச அநுபவத்தோடு, ஆறு பேரும் சேர்ந்து எப்படி தண்டு வலிக்க வேண்டுமென, அவனுடைய தளராத குரல் எங்களுக்கு உதவியது.
வாழ்க்கையிலும் இத்தகைய போராட்டங்கள் உண்டு அல்லவா? சில வேலைகளில் நமது படகு அமைதலாகப் போய் கொண்டிருக்கும். நொடிப்பொழுதில், வரும் ஆபத்தைத் தவிர்க்க, மிக வேகமாக துடுப்பு வலிக்க ஆரம்பித்து விடுவோம். அத்தகைய பிரச்சனை நேரங்களில், நமக்கு ஒரு திறமையான வழிகாட்டி வேண்டும் என உணருவோம், ஒரு நம்பிக்கைக்குரிய குரல், நம்மை சுழல் ஓட்டங்களில் இருந்து வெளியே கொண்டு வர உதவ வேண்டுமென நாம் விரும்புவோம்.
சங்கீதம் 32 ல் தேவன் அத்தகைய குரலாக இருப்பதாக வாக்களிக்கின்றார். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்” (வ.8) என்கின்றார். இதற்கு சற்று முன்பு, பாவத்தை உமக்கு அறிவித்தேன் (வ.5) என்றும், உம்மை நோக்கி விண்ணப்பம் செய்வான் (வ.6) என்றும் காண்கின்றோம், அப்படியானால், அவர் கூறுவதைக் கேட்கின்ற பங்கினையும் செய்ய வேண்டும். “உன் மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (வ.8) என்று அவருடைய அன்பினால் வெளிப்படும் வழி நடத்துதலை நமக்கு நினைப்பூட்டுகின்றார். கடைசியாக சங்கீதக்காரன், “கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்” (வ.10) என்கின்றார். நாமும் தேவனை நம்பி, நம்முடைய வாழ்வின் கடினமான பாதையில் நமக்கு வழிகாட்ட அவருடைய வாக்கின் மேல் பற்றுதலோடு, அவர் மீது அமைந்திருப்போம்.
கட்டுமானத்தில் உள்ளது
வாகனங்கள் மெதுவாகச் செல்ல ஆரம்பித்ததால், அந்த சாலையின் மேற்பரப்பை நிரப்புகிறார்கள் என நான் நினைத்தேன், மீண்டும் வேகமாக வேலையை செய்கின்றார்கள். இந்தச் சாலையை முழுமையாக போடும் வேலை ஏன் இன்னமும் செய்யப்படவில்லை? நான் இந்த சாலையில், “சாலை போடும் கம்பெனி, வேலையை முடித்து விட்டார்கள், இந்த நேர்த்தியான சாலையை அநுபவிக்கவும்” என்பதாகக் கூறும் ஓர் அறிவிப்பை நான் இதுவரையில் பார்த்ததேயில்லை.
இது போன்ற காரியம், என்னுடைய ஆவிக்குரிய வாழ்விலும் உண்மையானது. என்னுடைய விசுவாசத்தின் ஆரம்ப நாட்களில், நான் முதிர்ச்சி நிலையை எட்டி விட்டதாக நினைத்தேன், ஆனால் நான், “மேற்பரப்பில் சமமாக்கப் பட்டிருந்தேன்”. முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், “நான் இன்னமும் கட்டுமானத்தில் உள்ளேன்” என அறிக்கையிட்டேன். குழிகள் நிறைந்த அந்த சாலையைப் போல, என்னுடைய விசுவாச வாழ்வும் ஒரு போதும் முடிக்கப்பட்ட நிலையை எட்டவில்லை. சில வேளைகளில் அது என்னை எரிச்சல் அடையச் செய்தது.
எபிரெயர் 10ஆம் அதிகாரத்தில், நம்மை ஆச்சரியப் படுத்தும் வாக்குத்தத்தம் உள்ளது. வசனம் 14ல், “ஏனெனில், பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப் படுத்தியிருக்கிறார்” என்பதாகக் காண்கின்றோம். இயேசு சிலுவையில் நிறைவேற்றிய வேலை நம்மை இரட்சித்தது, முழுமையாக, நேர்த்தியாக நிறைவேற்றியது. தேவனுடைய பார்வையில் நாம் முழுமையாக கட்டப்பட்டு விட்டோம், ஆனால் நாம் புவியில் இருக்கும் வரை இந்த கட்டுமான வேலை முழுமையடையாது, நாம் அவரை போன்று மாறும்படி உருவாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம், ”நாம் இன்னும் பரிசுத்தமாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்”.
ஒரு நாள், நாம் அவரை நேருக்கு நேர் சந்திப்போம், நாமும் அவரை போல இருப்போம் (1 யோவா. 3:2). அதுவரையிலும் நாம் “கட்டுமானத்தில் உள்ளோம்” நம்மில் நடைபெறும் வேலை உண்மையாக நிறைவடையும் போது, நாமும் அந்த மகிமையின் நாளை ஆவலோடு எதிர்பார்ப்பவர்களாவோம்.