எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆடம் ஆர். ஹோல்ஸ்கட்டுரைகள்

இனியும் ஓடவேண்டாம்

1983ம் வருடம், ஜுலை 18ம் தேதியன்று, அமெரிக்க விமானப்படையின் தளபதி ஒருவர் நியூ மெக்சிகோவிலுள்ள அல்புகர்க் என்கிற இடத்தில் காணாமல் போனார். அதன்பிறகு அவரைப் பற்றிய செய்தியே இல்லை. முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு, அவர் கலிஃபோர்னியாவில் இருப்பதாக அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள். “வேலையால் மனஅழுத்தம் அடைந்து” அவர் ஓடிவிட்டதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.

முப்பத்தைந்து வருடங்கள் ஓடிக்கொண்டிருந்திருக்கிறார்! ஏதாவது தீங்கு வந்துவிடுமோ என்றே பாதி வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்! அவர் எப்போதும் கவலையோடும் சித்தப்பிரமையோடும்தான் அலைந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு “ஓடுவதில்” எனக்கும் கொஞ்சம் அனுபவமுண்டு. ஆனால், என் வாழ்க்கையில் ஏதாவது கடமையைப் புறக்கணித்து, சரீர ரீதியாக நான் ஓடினது கிடையாது. மாறாக, ஏதாவது ஒன்றை நான் செய்யும்படி, ஏதாவது விஷயத்தை நான் எதிர்கொள்ளும்படி அல்லது அறிக்கையிடும்படி தேவன் என்னிடம் எதிர்பார்த்திருப்பார். அதில் நான் தவறியிருப்பேன். அதைதான் ஓடுவது என்று குறிப்பிடுகிறேன்.

யோனா தீர்க்கதரிசியும்கூட அவ்வாறு ஓடினவர்தானே! நினிவேயில் சென்று பிரசங்கிக்கும்படி தேவன் சொன்னதை அவர் கேட்கவில்லை (யோனா 1:1-3). ஆனால், தேவனை விட்டு அவர் எங்கே ஓடமுடிந்தது! அவருடைய சம்பவத்தை அறிந்திருப்பீர்கள் (வச. 4,17). புயல் வீசுகிறது, மீன் விழுங்குகிறது, மீனின் வயிற்றில் இருக்கிற சமயத்தில், தான் செய்த தவறுக்கான பலனை எண்ணிப்பார்க்கிறார்; தேவனிடம் உதவி வேண்டுகிறார் (யோனா 2:2).

யோனா குறையுள்ள ஒரு தீர்க்கதரிசி. ஆனால், அவருடைய சம்பவத்திலும்கூட நம்மை ஊக்கப்படுத்துகிற ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, யோனா பிடிவாதமாக இருந்தபோதிலும் தேவன் அவரைக் கைவிடவில்லை. வேறுவழியே இல்லாத நிலையில் தேவனிடம் அவர் உதவிகேட்டபோது, தம் சொல்லுக்கு இணங்காத ஊழியனை அவர் கிருபையோடு காப்பாற்றினார் (வச. 2).  நம்மையும் அவர் அப்படித்தான் நடத்துகிறார்.

நம்மை அறிந்திருக்கிற இரட்சகர்

“அப்பா, நேரம் என்ன?” பின்இருக்கையில் அமர்ந்திருந்த என் மகன் கேட்டான். “5:30” என்று சொன்னேன். அடுத்து அவன் என்ன சொல்லுவான் என்பது எனக்குத் தெரியும். “இல்லை, 5:28தான் ஆகிறது!” அவனுடைய முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி, அப்படியொரு சிரிப்பு. எனக்கும் சந்தோஷமாக இருந்தது.

பிள்ளைகளை கருத்தோடு கவனிக்கிற பெற்றோர்போலவே, நானும் என்னுடைய பிள்ளைகளை நன்கு அறிவேன். அவர்களை படுக்கையிலிருந்து எழுப்பும்போது என்ன சொல்லுவார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்குப் பிடித்தமான மதிய சாப்பாடு என்னவென்று தெரியும். அவர்களுடைய விருப்பங்கள், ஆசைகள், முன்னுரிமைகள் என்ன என்பதுபோன்ற பலவிஷயங்கள் அவர்களைப் பற்றித் தெரியும்.

ஆனால், நம் ஆண்டவர் நம்மைப் பற்றி அறிந்திருக்கிற அளவுக்கு, என் பிள்ளைகளைப் பற்றி, உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் எல்லாமே எனக்குத் தெரிந்திருந்தது என்று சொல்லமுடியாது.

இயேசு தம்முடைய மக்களை அதிகமாக அறிந்திருந்தார் என்பதை யோவான் 1ல் அறியமுடிகிறது. இயேசுவை வந்து சந்திக்கும்படி நாத்தான்வேலை பிலிப்பு அழைத்து வருகிறார், நாத்தான்வேல் இயேசுவின் அருகே சென்றதும், “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்று இயேசு சொன்னார். வச 47. நாத்தான்வேல் திகைத்து, “நீர் என்னை எப்படி அறிவீர்?” என்று கேட்கிறார். கேள்விக்கு சம்பந்தமே இல்லாததுபோல, அத்திமரத்தின்கீழ் கண்டதாக, இயேசு பதிலளிக்கிறார் வச 48

அந்தத் தகவலை இயேசு எதற்காகச் சொன்னார் என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் நாத்தான்வேலுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்!   அதனால்தான் வியப்புநிறைந்தவராக, “ரபீ, நீர் தேவனுடைய குமாரன்” என்று சொல்லுகிறார். வச 49.

இதேபோல நம் ஒவ்வொருவரையும் நெருக்கமாக, முழுவதுமாக, பூரணமாக இயேசு அறிவார், அவ்வாறு அறிந்துகொள்ளவேண்டும் என்றுதான் நாமும் விரும்புவோம். அவர் நம்மை முற்றிலும் ஏற்றுக்கொள்கிறார் நாம் அவருடைய சீடர்களாக மட்டுமல்ல, அவருடைய அன்புள்ள சிநேகிதராகவும் இருக்கும்படி அவர் நம்மை அழைக்கிறார்.

பின் கண்ணாடியில் காணும் பொருட்கள்

“முடிந்தவரை வேகமாக போ”. டைனோசார் மூர்க்கத்தனமாக விரட்ட, இவ்வாறு சொல்லுவார் டாக்டர் இயன் மால்கம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெஃப் கோல்ட்பிளம். அவரும் வேறு இருவரும் ஒரு ஜீப்பில் இருப்பார்கள். 1993ல் வெளிவந்த ஜுராசிக் பார்க் படத்தின் பிரபலமான காட்சி இது. ஜீப்பின் ஓட்டுனர் பின்காட்டியில் பார்ப்பார், அங்கே, டைனோசாரின் கோரப்பற்கள் தெரியும். அந்தப் பிம்பத்திற்கு கீழே “கண்ணாடியில் தெரியும் பொருள் காட்டப்படுவதைவிட பக்கத்தில் உள்ளது” என்கிற வாசகம் இருக்கும்.

தீவிரத்தையும் கடுமையையும் சினிமா ரீதியில் தத்ரூபமாகப் பிரதிபலிக்கும் காட்சி அது. சிலசமயங் களில் கடந்தகால “கொடிய விஷயங்கள்” நம்மைத் துரத்திக் கொண்டே இருப்பதுபோல உணர் வோம். பின்கண்ணாடியில் பார்த்தால் நம் கடந்தகால வாழ்க்கையும் தவறுகளும்தான் அவை என்பது தெரியும். அவமானத்தாலும் குற்றவுணர்வாலும் அவை நம்மை கொன்றேவிடும்போலத் தோன்றும்.

கடந்தகாலம் நம்மை முடக்கிபோட வல்லதென பவுல் அறிந்திருந்தார். அவரும்கூட கிறிஸ்துவின் உதவியின்றி, பரிபூரணமான ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு பல வருடங்கள் முயன்றார், அதற்காக கிறிஸ்தவர்களையும் உபத்திரவப்படுத்தினார் (பிலி. 3:1-9). அப்படிப்பட்ட கடந்தகாலத்தை நினைத்து வருந்தியிருப்பாரானால் நிச்சயமாக முடங்கியிருப்பார்.

ஆனால், கிறிஸ்துவோடு உறவு வைப்பதில் ஓர் அற்புதமும் வல்லமையும் இருந்தது. தன் கடந்தகால வாழ்க்கையைத் தூக்கியெறிந்தார் (வச. 8-9). விசுவாசத்தோடு வாழ்வதற்கான விடுதலையை அது தந்தது. பின்னோக்கிப் பார்த்து பயத்திலும் அல்லது மனவருத்தத்திலும் இருக்கவில்லை. “பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.” (வச. 13-14).

கிறிஸ்து நம்மை மீட்டெடுத்தார். எனவே அவருக்குள் விடுதலையுள்ளவர்களாக வாழலாம். “நம் கண்ணாடியில் தெரிகிற பொருட்கள்” நம் வழியைத் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.

கோணலான கோபுரத்தின் உச்சப்பகுதி

கோணலான கோபுரத்தின் உச்சப்பகுதி

புது இருதயம் தேவையா?

என்னுடைய தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. எனவே அவருடைய மருத்துவர், அவருடைய இருதயத்தை நன்கறிய ஒரு சோதனை செய்தார். விளைவு? மூன்று இரத்த நாளங்களிலே அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

பிப்ரவரி 14 ஆம் நாள் மூன்று இடங்களில் துணைப்பாதை அமைக்கும் அறுவை சிகிச்சை செய்ய நிர்ணயிக்கப்பட்டது. என்னுடைய தந்தை அந்த நாளை ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும் நாளாக எதிர்பார்த்தார். “வாலன்டைன்ஸ் தினத்தன்று நான் ஒரு புதிய இருதயத்தைப் பெற்றுக் கொள்வேன்” என்றார். அதுவும் நடைபெற்றது. அந்த அறுவை சிகிச்சை நன்றாகச் செய்யப்பட்டது. போராடிக் கொண்டிருந்த அவருடைய இருதயத்திற்கு நல்ல இரத்த ஓட்டம் நடைபெறும்படி புதுப்பிக்கப்பட்ட புது இருதயத்தைப் பெற்றுக் கொண்டார்.

என்னுடைய தந்தையின் அறுவை சிகிச்சை, தேவன் நமக்குக் கொடுக்கின்ற புதிய வாழ்வை நினைவுபடுத்தியது. ஆவிக்குரிய குழாய்களை பாவம் அடைத்துக் கொள்வதால் நாம் தேவனோடு உறவுகொள்ள தடுமாறுகின்றோம். இந்த அடைப்பை அகற்றுவதற்கு ஆவிக்குரிய அறுவை சிகிச்சை தேவை.

எசேக்கியேல் 36:26ல், தேவன் இதனையே தமது ஜனத்திற்கு வாக்களித்துள்ளார். இஸ்ரவேல் ஜனங்களிடம், “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து… கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்” மேலும், “நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும்… நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன்” (வச. 25), “உங்கள் உள்ளத்தில் என் ஆவியை  வைத்து… (வச. 27). நம்பிக்கையிழந்த ஒரு ஜனத்திற்கு ஒர் புதிய துவக்கத்தைத் தருகின்றார். வாழ்வைப் புதிதாக்குகின்றார்.

இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக இந்த வாக்கு முழுமையாக நிறைவேற்றப்பட்டது. நாம் அவரை விசுவாசிக்கும் போது புதிய ஆவியுள்ள இருதயத்தைப் பெற்றுக் கொள்வோம். அந்த ஆவியானவர் நம்முடைய பாவங்களையும், மீறுதல்களையும் நீக்கி, நம்மைச் சுத்தமாக்கி புதிய இருதயத்தைத் தருகின்றார். தேவனுடைய ஆவியால் நிரப்பப்பட்ட நம்முடைய புதிய இருதயம், வாழ்வுதரும் கிறிஸ்துவின் புதிய இரத்தத்தினால் இயங்குகின்றது. நாமும் புதிய ஜீவனுள்ளவர்களாய் வாழ்வோம் (ரோம. 6:4)

தாமதத்தை எதிர் பார்

நான் ஏற்கனவே தாமதமாகவே வந்திருக்கின்றேன், என்னிடம் விளையாட்டு காட்டுகின்றாயா? என எனக்குள்ளே பேசிக் கொண்டேன். எனக்கெதிரேயிருந்த சாலை குறியீட்டு விளக்கு என்னுடைய எதிர்ப்பை சற்று மாற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்துகின்றது. 'தாமதத்தை எதிர்பார்" என்பதே அந்த அறிவுறுத்தல். அனைத்து வாகனங்களும் மெதுவாகச் செல்கின்றன.

நான் சிரித்துக் கொண்டேன். நான் எந்த காரியத்தையும் சரியான நேரத்தில் செய்யவேண்டுமென எதிர்பார்ப்பவன். நான் இப்பகுதியில் சாலைபோடும் பணி நடைபெறுமென எதிர்பார்க்கவில்லை.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்விலும் நம்மில் சிலருடைய எதிர்காலத் திட்டங்கள் மெதுவாகச் செயல்படுகின்றன அல்லது வேறுபாதையில் நம் வாழ்வை செலுத்தும்படி திருப்பப்படுகின்றன. நான் இதனைக் குறித்து நினைக்கும் போது, என்னுடைய வாழ்விலும் அநேக நேரங்களில் சிறிய மற்றும் பெரிய காரியங்களில் திசை திருப்பப்படுவதையும், தாமதம் ஏற்படுவதையும் நினைவுகூர முடிகின்றது.

சாலொமோன் தன் வாழ்வில் 'தாமதத்தை எதிர்பார்" என்ற ஒரு செய்தியைச் சந்தித்ததேயில்லை. ஆனாலும் நீதிமொழிகள் 16ல் அவர் நம்முடைய திட்டங்களுக்கு எதிராக தேவனுடைய வழிநடத்துதல் அமைகிறது என்பதைத் தெரிவிக்கின்றார். வசனம் 1 கூறுகின்ற, 'மனதின் யோசனைகள் மனுஷனுடையது. நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்" என்ற கருத்து இந்த மொத்த செய்தியையும் உள்ளடக்குகின்றது. இதனையே வசனம் 9, 'மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும். அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்" என்று கூறுகின்றது. இதனை இன்னும் தெளிவாகக் கூறுவோமாயின், நடக்கவேண்டிய காரியங்களைக் குறித்து திட்டங்களை நாம் போடலாம். ஆனால் தேவன் வேறொரு பாதையின் வழியே நம்மை நடத்திச் செல்லலாம்.

இந்த ஆவிக்குரிய உண்மை வழியை நாம் எவ்வாறு தவறவிடுகின்றோம்? நான் என்னுடைய திட்டங்களைப் போடுகின்றேன். தேவனுடைய திட்டம் என்னவென்பதை கேட்கத் தவறிவிடுகின்றேன். என்னுடைய திட்டத்தில் தடைகள் வரும்போது நான் விரக்தியடைகின்றேன்.

நாம் கவலைப்படுவதற்குப் பதிலாக, சாலொமோன் கற்றுத் தருவதைப் போன்று அவரை நம்பி வாழக் கற்றுக்கொள்வோம். நாம் ஜெபத்தில் அவரைத் தேடும் போதும் அவருடைய வழிநடத்துதலுக்காகக் காத்திருக்கும் போதும், தேவன் படிப்படியாக நம்மை வழிநடத்தி, தொடர்ந்து அவருடைய பாதையில் நடத்திச் செல்வார்.

எதை நோக்கிச் செல்கின்றாய்?

நம்முடைய வாழ்வின் திசையை எது தீர்மானிக்கின்றது? இந்தக் கேள்விக்கான விடையை நான் ஒரு எதிர்பாராத இடத்தில் பெற்றேன். அது ஒரு மோட்டார் வாகன பயிற்சிமையத்தில். நானும் என்னுடைய சில நண்பர்களும் மோட்டார் வாகனத்தை ஓட்ட விரும்பினோம். எனவே நாங்கள் அதனைக் கற்றுக்கொள்ள ஒரு வகுப்பில் சேர்ந்தோம். எங்களுடைய பயிற்சியின் ஒருபகுதி, இலக்கினை நிர்ணயித்தலைப் பற்றியிருந்தது.

எங்களுடைய பயிற்சியாளர், “கடைசியாக, நீங்கள் எதிர்பாராத ஒரு தடையை சந்திக்கப் போகின்றீர்கள்.” நீங்கள் தடையையே நினைத்து கவனித்தால், உங்களுடைய இலக்கு அதுவாகிவிட்டால், நீங்கள் அதற்கு நேராக ஓட்டிச் செல்வீர்கள், ஆனால், நீங்கள் முன்னோக்கிப் பார்த்துக் கொண்டு, அதனை வேகமாகக் கடந்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை நோக்கிப்பார்த்தால் தடையில் மோதுவதை தவிர்த்து விடலாம். அத்தோடு, “நீங்கள் எங்கு பார்க்கின்றீர்களோ, அங்குதான் நீங்கள் போய் சேர்வீர்கள்" என்று கூறினார்.

இந்த எளிமையான, ஆனால், ஆழமான தத்துவம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்விற்கும் பொருத்தமானது. நாம் நம்முடைய கவனத்தை ஒரு காரியத்தில் நிலைப்படுத்தும்போது - நம்முடைய பிரச்சனைகளிலோ, போராட்டங்களிலோ முழு கவனத்தையும் செலுத்தும் போது நம்முடைய வாழ்வும் தானாகவே அதனைச் சுற்றியேயிருக்கும்.

ஆனால், நம்முடைய பிரச்சனைகளையும் தாண்டி, நம்முடைய பிரச்சனைகளில் உதவக் கூடிய ஒருவரையே நாம் நோக்கிப் பார்க்கும் படி வேதாகமம் நம்மை ஊக்கப்படுத்துகின்றது. சங்கீதம் 121ல், “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்" எனக்குப் பதில் எங்கிருந்து வரும் என்பதையும் அதே சங்கீதத்தில் காண்கின்றோம். “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்... கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இது முதற்கொண்டு என்றைக்குங் காப்பார்" (வச. 1-2,8).

சில வேளைகளில் நமக்கு ஏற்படுகின்ற தடைகள் மேற்கொள்ள முடியாதவைகளாகத் தோன்றலாம். அவை நம்முடைய பார்வை கோணத்தை முற்றிலும் மறைத்து விடாதபடி, நம்முடைய பிரச்சனைகளுக்கப்பால் தேவனை நோக்கிப் பார்க்கும்படி தேவன் நம்மையழைக்கின்றார்.

நம்பிக்கையே வெற்றியின் இரகசியம்

நான் இதனை எழுதிக் கொண்டிருக்கும்போது என்னுடைய விருப்பமான கால்பந்த குழு எட்டு முறை தொடர்ந்து தோல்வியைத் தழுவியது. ஓவ்வொரு முறை தோற்கும் போதும், இவர்கள் மீண்டும் இதே காலத்தில் வெற்றியைப் பெற மடியும் என நம்புவதற்கு கடினமாயிருந்தது. ஒவ்வொரு வாரமும் பயிற்சியாளர் சில மாற்றங்களைக் கொடுத்தார். ஆனால், அவையொன்றும் வெற்றியைத் தரவில்லை. என்னுடன் பணிபுரிபவர்களோடு நான் உரையாடிக் கொண்டிருந்தபோது வேடிக்கையாக, “வெறும் நம்பிக்கை மட்டும் வெற்றியைக் கொண்டு வந்து விடாது, நம்பிக்கை ஒரு போர்கலையல்ல” என நகைச்சுவையாகக் கூறினேன்.

ஒருவேளை இது கால்பந்து விளையாட்டிற்கு உண்மையாயிருக்கலாம். ஆனால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் இது நேர்மாறானது. தேவன் மீது நம்பிக்கையை உருவாக்கிக் கொள்வதோடு மட்டுமல்ல, அவரைப் பற்றிக் கொள்வதும், விசுவாசமாயிருப்பதுமே வெற்றியின் இரகசியம். இந்த உலகம் நம்மை ஏமாற்றமடையச் செய்கின்றது. ஆனால், நம்பிக்கை நம்மை தேவனுடைய உண்மையின் மீது உறுதியாயிருக்கச் செய்து, கொந்தளிக்கும் நேரங்களில் நம்மை இயங்கச் செய்கின்றது.

மீகா இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்டார். இஸ்ரவேலர் தேவனைவிட்டு அந்நிய தெய்வங்களிடம் திரும்பிய போது, அவர் மனமுடைந்து போனார். “ஐயோ… தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப் போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை” (7:1-2) எனப் புலம்புகின்றார். பின்னர் அவர் தன் உண்மையான நம்பிக்கையின் மீது கவனத்தைக் கொண்டு வந்து, “நானோவென்றால் கர்த்தரை நோக்கிக் கொண்டு என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்” (வச. 7) என்கின்றார்.

கடினமான வேளைகளில் நம்பிக்கையை விடாதிருக்க என்ன செய்யலாம்? மீகா நமக்கு வழிகாட்டுகின்றார் கவனி, காத்திரு, ஜெபி, தேவன் செய்த நன்மைகளை நினைவுகூர். நம்முடைய சூழ்நிலைகள் நம்மை மேற்கொண்டாலும் தேவன் நம் கதறலைக் கேட்கின்றார். இத்தகைய நேரங்களில் தேவனைப் பற்றிக் கொண்டு, நாம் தேவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையோடு செயல்படுவதே நமது வெற்றி. நம் வாழ்கையில் புயலை மேற்கொள்ள இந்த ஒரே போர்க் கலைதான் நமக்கு உதவமுடியும்.

பல் மருத்துவமனையில் வெளிப்பாடு

பிதாவின் இருதயத்தைக் குறித்த தீர்க்கமான ஒரு போதனையை பல் மருத்துவமனையில் நான் எதிர்பார்க்கவில்லை, ஆனாலும் கிடைத்தது. என் பத்து வயது மகனை அங்கு அழைத்துச் சென்றிருந்தேன். அவனுடைய பால் பல் ஒன்று விழுவதற்கு முன்பே, அதனடியில் புது பல் முளைக்க ஆரம்பித்திருந்த்து. பால் பல்லை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.

“அப்பா, இதற்கு வேறு வழியே இல்லையா? கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்க முடியாதா? இந்தப் பல்லை பிடுங்க வேண்டாம்பா,” என்று என் மகன் கண்ணீரோடு என்னிடம் கெஞ்சினான். எனக்கு அதிகக் கஷ்டமாக இருந்தாலும், “இல்லை, மகனே, அதை எடுத்தே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை” என்று கூறினேன். பல் மருத்துவர் மிகவும் கஷ்டப்பட்டு அந்தப் பல்லைப் பிடுங்கும்போது, அவன் வேதனையில் துடித்ததால், நானும் கண்ணீரோடு அவன் கைகளைப் பிடித்துக்கொண்டிருந்தேன். அவன் வலியை நீக்க என்னால் முடியாது. அவன் அருகில் இருப்பது மட்டுமே என்னால் முடிந்த காரியம்.

அந்தத் தருணத்தில் கெத்சமனே தோட்டத்தில் இயேசு பிதாவிடம் மன்றாடியது என் நினைவுக்கு வந்தது. தனக்குப் பிரியமான தன் குமாரன் துக்கத்தில் இருப்பது பிதாவை எவ்வளவு மனம் உடையச் செய்திருக்கும். ஆனாலும் அவருடைய ஜனங்களை மீட்க வேறு வழி இல்லை.

நம் வாழ்க்கையில், என் மகன் எதிர்கொண்டதுபோல, நாமும் சில வேளைகளில் தவிர்க்க முடியாத, வேதனையான தருணங்களை எதிர்கொள்கிறோம். ஆனால் பரிசுத்த ஆவியின் மூலமாக இயேசு நமக்காக இடைபடுவதால், எப்போதும், நம்முடைய இருண்ட வேளைகளிலும்கூட, நமது அன்பின் பரமபிதா நம்மோடு இருக்கிறார் (மத். 28:20).