காலை ஒரு தட சந்திப்புபோல் தொடங்கியது. நான் படுக்கையில் இருந்து எழுந்த மாத்திரத்தில், அன்றைய காலக்கெடுவினை செய்யத் துவங்கினேன். குழந்தைகளை பள்ளிக்கு ஆயத்தம் செய்தல். பரிசோதி. வேலை செய். பரிசோதி. அன்று நான் செய்யவேண்டிய காரியங்களை எழுதி வைத்திருந்த தாளில் ஒன்றன்பின் ஒன்றாய் வேலைகளை செய்துமுடித்தேன். 

“ . . . 13. கட்டுரையைத் திருத்துதல் 14. அலுவலகத்தை சுத்தம்செய்தல் 15. மூலோபாய குழு திட்டமிடல் 16. தொழில்நுட்ப வலைப்பதிவை எழுதுதல் 17. அடித்தளத்தை சுத்தம்செய்தல் 18. ஜெபித்தல்“.

நான் பதினெட்டாம் இடத்திற்கு வந்தபோது, எனக்கு தேவனின் உதவி தேவை என்பதை நினைவில் வைத்தேன். ஆனால் இதற்கு முன்பே என் சொந்த வேகத்தை உருவாக்க முயற்சிக்கிறேன் என்று எனக்குத் தோன்றுவதற்கு முன்பே நான் அதை உணர்ந்தேன். 

இயேசு அது தெரியும். நம் நாட்கள் ஒன்றோடு ஒன்று மோதி, இடைவிடாத அவசரக் கடலாக மாறும் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே அவர் “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” (மத்தேயு 6:33) என்று அறிவுறுத்துகிறார். 

இயேசுவின் வார்த்தைகளை ஒரு கட்டளையாக கேட்பது இயற்கையானது. அவைகள் கட்டளைகளே. மத்தேயு 6இல், நாளுக்கு நாள் அதிகரிக்கும் இவ்வுலகின் அதிகமான கவலையை (வச. 25-32) பரிமாறிக்கொள்ள இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். தேவன் அவருடைய மாபெரும் கிருபையால், நம் எல்லா நாட்களிலும் நமக்கு உதவிசெய்கிறார். அவருடைய பார்வையில் வாழ்க்கையை நாம் பார்க்க அணுகுவதற்கு முன்பாக, பதினெட்டாம் இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே அவர் நமக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.