ஏழு வயது நிரம்பிய தாமஸ் எடிசன் பள்ளியில் சரியாய் படிக்கவில்லை. அவனை “மக்கு” என்று அவனுடைய ஆசிரியர் திட்டியிருக்கிறார். பள்ளி நிர்வாகம் அவனை வீட்டிற்கு அனுப்பியது. அவனுடைய ஆசிரியரிடம் பேசிய அவனுடைய தாயார், அடுத்த நாளிலிருந்து அவனை பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டிலேயே வைத்து பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். தாயாரின் கனிவுள்ள அன்பினாலும், உற்சாகத்தினாலும், பெரிய விஞ்ஞானியாய் அவரால் பிற்காலத்தில் மாற முடிந்தது. அவர் சொல்லும்போது, “என்னை வனைந்தவர் என்னுடைய அம்மா தான். அவர் உண்மையானவர்; நான் அவர்களுக்காக வாழ விரும்புகிறேன்; அவரை ஒருபோதும் காயப்படுத்தவே கூடாது என்று விரும்புகிறேன்” என்று தன்னுடைய தாயைக் குறித்து பெருமிதம்கொள்ளுகிறார்.

அப்போஸ்தலர் 15 இல், தங்களோடு மாற்கு என்னும் யோவானை ஊழியத்திற்கு கூட்டிக்கொண்டு போவதில் கருத்து வேறுபாடு ஏற்படும் வரை பவுலும் பர்னபாவும் இணைந்து ஊழியம் செய்தனர். அவன் பம்பிலியா நாட்டில் ஊழியத்திலிருந்து விட்டு பிரிந்துபோனதினால், பவுல் அவனை சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை (வச. 36-38). அதின் விளைவாய் பவுலும் பர்னபாவும் பிரிய நேரிட்டது. பவுல் சீலாவோடும், பர்னபா யோவானோடும் சேர்ந்து ஊழியம் செய்தனர். மாற்கு எனப்பட்ட யோவான் மிஷனரியாய் செயல்படுவதற்கு, பர்னபா இரண்டாவது வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அவரே பிற்காலத்தில் மாற்கு சுவிசேஷத்தை எழுதினார். சிறைச்சாலையில் பவுலுக்கு ஆதரவாய் இருந்தார் (2 தீமோத்தேயு 4:11).

நம்முடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, நம் வாழ்க்கையில் நம்மை உற்சாகப்படுத்தியவர்களை எண்ணிப்பார்க்கலாம். மற்றவர்களுடைய வாழ்க்கையில் நாமும் அதேபோல செயல்பட தேவன் நம்மை அழைக்கிறார். யாரை நீங்கள் உற்சாகப்படுத்தப்போகிறீர்கள்?