Archives: ஜூன் 2022

தேவன் நமக்காக யுத்தம்செய்கிறார்

தன் குழந்தையை பாதுகாக்க ஒரு தாய் எந்த எல்லைக்கும் போவாள் என்பதை அவள் நிரூபித்தாள். அவளது ஐந்து வயது மகன் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவன் அலறும் சத்தம் கேட்டது. அவள் வெளியே விரைந்தாள். அங்கே தன்னுடைய மகனை ஒரு புலி பற்றியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள். அந்த பெரிய புலி தன் மகனின் மேல் வாயில் தலை வைத்திருந்தது. தன் உள் வலிமை அனைத்தையும் வரவழைத்து, தன் மகனை பற்றியிருந்த அந்த புலியின் தாடையிலிருந்து அவனைக் காப்பாற்ற போராடினாள். இந்த தாயின் துணிச்சலான செயல், வேதத்தில் தேவனுடைய உறுதியான அன்பையும் பாதுகாப்பையும் விளக்குவதற்கு தாயின் அன்பை உருவகமாய் பயன்படுத்தியதை நினைப்பூட்டுகிறது.

ஒரு கழுகு தன் குஞ்சுகளை கவனித்துக்கொள்வது போல தேவன் தம் மக்களை அன்புடன் கவனித்து ஆறுதல்படுத்துகிறார் (உபாகமம் 32:10-11; ஏசாயா 66:13). மேலும் தன்னுடைய பிள்ளையோடு இருக்கும் பிரியாத பிணைப்பினிமித்தம், அப்பிள்ளையை போஷிப்பதுபோல, தேவன் தன் ஜனத்தை ஒருபோதும் மறப்பதுமில்லை, அவர்கள் மீதான உருக்கமான இரக்கத்தை ஒருபோதும் எடுத்துப்போடுவதில்லை (ஏசாயா 54:7-8). இறுதியாக, ஒரு பறவை தன் சிறகுகளின் கீழ் தன் குஞ்சுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதுபோல, தேவன் தம்முடைய ஜனத்தை “தம் சிறகுகளாலே மூடுவார்.” அவர்களுக்கு “அவருடைய சத்தியம் பரிசையும் கேடகமாகும்” (சங்கீதம் 91:4).

சில நேரங்களில் நாம் தனிமையாக, மறக்கப்பட்டவர்களாய், அனைத்து வகையான ஆன்மீகவாதிகளின் பிடியில் சிக்கிக்கொண்டவர்களாய் உணர்கிறோம். தேவன் நம் மீது இரக்க உருக்கமாய் இருக்கிறார் என்பதையும், நமக்காக யுத்தம்பண்ணுவார் என்பதையும் நம்மை அறியச் செய்வாராக.

நம்பகமான அன்பு

ஏன் அதைப் பற்றி என்னால் யோசிக்காமல் இருக்கமுடியவில்லை? என் உணர்ச்சிகள் சோகம், குற்ற உணர்ச்சி, கோபம் மற்றும் குழப்பம் ஆகியவற்றால் நிறைந்திருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, எச்சரிப்பு சத்தத்திற்கு செவிகொடுக்காததினால், எனக்கு நெருக்கமான ஒருவருடனான உறவைத் துண்டிக்கும் வேதனையான முடிவை எடுத்தேன். ஆனால் இன்று நான் இருக்கும் அதே ஊரில் தான் அவளும் இருக்கிறாள் என்பதை கேள்விப்பட்டவுடன், என்னுடைய எண்ணம் கடந்த கால நிகழ்வுகளை எனக்கு நினைப்பூட்டியது.

என் மனதை அமைதிப்படுத்த நான் சிரமப்பட்டபோது, வானொலியில் ஒரு பாடல் ஒலித்தது. அந்த பாடல் துரோகத்தின் வேதனையை மட்டுமல்லாது, அந்த தீங்கு விளைவித்த நபருடன் மீண்டும் சேருவதற்கு துடிக்கும் இருதயத்தை பிரதிபலித்தது. அந்த பாடலைக் கேட்ட மாத்திரத்தில், என் இருதயத்தின் ஆழத்தில் இருந்த துக்கத்தை அறிந்து என்னையறியாமல் நான் கண்ணீர் சிந்த ஆரம்பித்தேன்.

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக” என்று பவுல் ரோமர் 12:9இல் அன்பைக் கடந்துசெல்லும் அனைத்தும் உண்மையானவை அல்ல என்பதை வலியுறுத்துகிறார். ஆயினும்கூட, உண்மையான அன்பை அறிந்து கொள்வதே நம் இதயத்தின் ஆழமான ஏக்கமாகும் - அது சுயத்தையோ சூழ்ச்சியையோ கொண்டுள்ள அன்பு அல்ல; இரக்கமும் தியாகமும் கொண்டுள்ள அன்பு. அன்பு என்பது பயத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு தேவையல்ல; மாறாக, இருவரின் நலனையும் பொருட்படுத்தும் ஓர் அன்பான அர்ப்பணிப்பு (வச. 10-13).

அதுவே நற்செய்தியாகிய சுவிசேஷம். கடைசியாக, நாம் நம்பக்கூடிய, நமக்கு எப்போதும் சேதம் விளைவிக்காத அன்பை நாம் கிறிஸ்துவின் மூலம் அடையாளம் கண்டுகொண்டோம் (13:10). சுதந்திரமாய் வாழும் வாழ்க்கையே அவருடைய அன்பில் வாழ்வதாகும்.

திக்கற்ற நிலை இனி இல்லை

குடும்பம் குழந்தைகள் இல்லாத தனியாளாக இருந்த கை பிரையன்ட், நியூயார்க் நகரத்தின் குழந்தைகள் நலத் துறையில் பணியாற்றினார். ஒவ்வொரு நாளும் வளர்ப்பு பெற்றோர்களுக்கான தேவை அதிகம் என்பதை உணர்ந்த அவர் ஓர் தீர்மானத்தை எடுத்தார். கடந்த பத்து ஆண்டுகளில், பிரையன்ட் ஏறத்தாழ ஐம்பதிற்கும் அதிகமான குழந்தைகளை பராமரித்திருக்கிறார். ஒரே தருணத்தில் ஒன்பது குழந்தைகளை பராமரிக்கவும் நேரிட்டது. “ஒவ்வொரு முறை நான் பின்னால் திரும்பிப்பார்க்கும்போது ஒரு குழந்தை தங்குவதற்கு இடமில்லாமல் இருப்பதை நான் காண்கிறேன்” என்று பிரையன்ட் கூறுகிறார். “உங்கள் இருதயத்திலும் வீட்டிலும் இடமிருந்தால், நீங்களும் அதைச் செய்யுங்கள். நீங்கள் அதை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை.” பிரையன்ட்டால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள், வளர்ந்து தங்களுக்கான வாழ்க்கையை தேடிக்கொண்ட போதிலும், அவர்களிடத்தில் பிரையன்ட் வசிக்கும் வீட்டின் ஒரு சாவி இருக்கும். அவர்கள் ஞாயிற்றுக் கிழமை தோறும் அவர்களுடைய தகப்பனை நேரில் சந்தித்து, உணவருந்தி செல்வது வழக்கம். ஒரு தகப்பனுடைய அன்பை பிரையன்ட் பலருக்குக் காண்பித்திருக்கிறார்.

மறக்கப்பட்ட அல்லது ஒதுக்கிவைக்கப்பட்ட அனைவரையும் தேவன் நேசிக்கிறார் என்று வேதம் கூறுகிறது. தங்களை ஆதரவற்றவர்களாகவும் பெலவீனமுள்ளவர்களாகவும் காணும் விசுவாசிகளோடும் தேவன் இருப்பதாக வாக்குப்பண்ணுகிறார். திக்கற்ற பிள்ளைகளுக்கு தேவன் தகப்பனாயிருக்கிறார்” (சங்கீதம் 68:5). நாம் ஒதுக்கப்பட்டவர்களாய் சோர்ந்துபோய் தனிமையாய் உணர்வோமாகில், நம்மை அணுகி, நம்மை அவரிடம் சேர்த்துக்கொண்டு, நம்பிக்கையை அருளும் தேவன் நம்மோடிருக்கிறார். “தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல்” (வச. 6) ஏற்படுத்துகிறவராய் தன்னை அடையாளப்படுத்துகிறார். மற்ற விசுவாசிகளும் நம்முடைய கிறிஸ்துவின் குடும்பத்தில் அங்கத்தினராயிருக்கிறார்கள்.

தனிமை, புறக்கணிப்பு, உறவு விரிசல்கள் என்று நம்முடைய குடும்பப் பிரச்சனை எதுவாயினும், நாம் நேசிக்கிப்படுகிறவர்கள் என்பதை நாம் அறியலாம். கிறிஸ்துவில் நாம் தகப்பனில்லாத திக்கற்ற பிள்ளைகள் அல்ல.

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

சார்லா இறந்து கொண்டிருந்தாள், அவளுக்கு அது தெரியும். அவள் மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்தபோது, அறுவை சிகிச்சை நிபுணரும் இளம் பயிற்சியாளர்களும் அறைக்குள் நுழைந்தனர். அடுத்த சில நிமிடங்களுக்கு, மருத்துவர் சார்லாவை கவனிப்பதை நிறுத்திவிட்டு, அங்கு இருந்த இளம் பயிற்சியாளர்களுக்கு அவளது முடிவு நிலையைப் பற்றி விவரித்துக்கொண்டிருந்தார். இறுதியாக, அவர் அவளை நோக்கி, “எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார். சார்லா பலவீனமாகச் சிரித்து, இயேசுவின் மீதான நம்பிக்கையையும் அமைதியையும் பற்றி அந்த குழுவினரிடம் அன்புடன் பகிர்ந்துகொண்டார்.

ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவின் காயப்பட்ட, நிர்வாண சரீரமானது வழிப்போக்கர்களின் பார்வைக்கு முன்பாக தொங்கிக்கொண்டிருந்தது. அவரைத் துன்புறுத்துபவர்களை அவர் கடிந்துகொள்வாரா? இல்லை. மாறாக, 'பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" என்றார் (லூக்கா 23:34). பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்டாலும், அவர் தமது சத்துருக்களுக்காக ஜெபித்தார். மேலும் அவரோடு கூட அவமானப்படுத்தப்பட்ட இன்னொரு கள்ளனிடம், அவனுடைய விசுவாசத்தினிமித்தம், “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்” (வச. 43) என்று வாக்களிக்கிறார். அவருடைய அவமானத்திலும் வேதனையிலும் கூட, மற்றவர்கள் மீதான அன்பினிமித்தம் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் வார்த்தைகளை இயேசு பேசினார்.

சார்லா அங்கேயிருந்த இளம் பயிற்சியாளர்களுக்கு ஆண்டவரைக் குறித்து சொல்லி முடித்தவுடன், டாக்டரின் கண்ணீர் ததும்பும் கண்களை பார்த்து, “நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?” என்று மென்மையாக விசாரித்தாள். கிறிஸ்துவின் கிருபையினாலும் பெலத்தினாலும் ஜீவனுக்கேதுவான வார்த்தைகளை பகிர்ந்துகொண்டு, அவர்கள் மீதான தன்னுடைய அன்பை பிரதிபலித்தாள். இப்போதோ அல்லது வரவிருக்கிற நாட்களிலோ நாம் எதிர்கொள்ளும் எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும், ஜீவ வார்த்தைகளை அன்புடன் பேசுவதற்கு தேவன் நமக்கு தைரியத்தை கொடுப்பார் என்று நம்புவோம்.