ஜப்பானின் பாரம்பரிய தற்காப்புக் கலையான அகிடோவின் முதல் படி நமக்கு வியப்பூட்டும். நம்மை யாராவது தாக்க வந்தால், முதலாவது நாம் ஓட வேண்டும் என்று அதின் ஆசிரியர் (சென்ஸெய்) எங்களுக்கு சொன்னார். “உங்களால் ஓட முடியவில்லை என்றால் மட்டும் சண்டை போடுங்கள்” என்று கண்டிப்பாய் சொன்னார். 

ஓட வேண்டுமா? நான் சற்றுத் தடுமாறினேன். இந்த அளவிற்கு திறமையான தற்காப்பு பயிற்சியாளர் நம்மை ஏன் ஓடச்சொல்லுகிறார்? இது சற்று முரணாக தென்பட்டது. ஆனால், சண்டையை தவிர்ப்பதே நம்மை தற்காக்கும் முதற்படி என்று அவர் விளக்கமளித்தார். ஆம் அது உண்மைதான்!

இயேசுவை கைது செய்ய பலர் வந்தபோது, பேதுரு நம்மை போலவே தன் பட்டயத்தை உருவி அதில் ஒருவனை தாக்குகிறான் (மத்தேயு 26:51; யோவான் 18:10). அதை கீழே போடச் சொன்ன இயேசு, “அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும்” (மத்தேயு 26:54) என்று கேட்கிறார்.

நியாயம் என்பது முக்கியம் என்றாலும், அதேபோல தேவனுடைய இராஜ்யத்தையும், நோக்கதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அது நம்முடைய சத்துருக்களை நேசிக்கும்படியாகவும், தீமைக்கு நன்மை செய்யும்படியாகவும்(5:44) நம்மை அழைக்கும் தலைகீழான இராஜ்யம். இது உலகத்தின் சுபாவத்திற்கு நேர்மறையானது. ஆனால் அதைத்தான் தேவன் நமக்குள் உருவாக்க விரும்புகிறார். 

பேதுரு காயப்படுத்திய மனிதனின் காதை இயேசு மீண்டும் குணமாக்கினார் என்று லூக்கா 22:51 கூறுகிறது. இதுபோன்ற கடினமான தருணங்களை இயேசு கையாண்டதைப்போல, நாமும் எப்போதும் சமாதானத்தையும், புதிதாக்குதலையும் நாடுகையில், நமக்கு தேவையானதை தேவன் அருளுவார்.