1478ஆம் ஆண்டு இத்தாலி தேசத்தின் ப்ளோரன்ஸ் மாகாணத்தை ஆட்சிசெய்த லோரென்ஸோ டி மெடிசி, எதிரிகளின் தாக்குதலிலிருந்து உயிர் பிழைத்தார். அவர் மீது நடத்தப்பட்ட அந்த தாக்குதலினிமித்தம் கோபம் கொண்ட அவருடைய தேசத்து மக்கள் எதிர் தாக்குதல் நிகழ்த்தினர். நிலைமை மோசமாக, கொடூர மன்னனான முதலாம் ஃபெரான்டே, லோரென்ஸோவின் எதிரியானான். ஆனால் லோரென்ஸோவின் துணிச்சலான செயல் சூழ்நிலையை தலைகீழாக மாற்றியது. அவன் அந்த கொடூர மன்னனை எந்த யுத்த ஆயுதமுமில்லாமல் நேரில் போய் சந்தித்தார். இவரின் இந்த வீரமும், துணிச்சலுமான செயல் அந்த கொடூர மன்னனின் மனதை மாற்றி, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. 

தானியேலும் ராஜாவின் மனதை மாற்றக்கூடிய காரியத்தை செய்தான். ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்திற்கு விளக்கமளிக்கக்கூடிய நபர் பாபிலோனில் யாருமில்லை. அது ராஜாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால், பாபிலோனில் இருந்த ஞானிகளையும், தானியேல் மற்றும் அவன் நண்பர்களையும் கொல்லக் கட்டளையிட்டான். தானியேலைக் கொல்ல கட்டளையிட்ட ராஜாவின் சமுகத்திற்கு, தானியேல் துணிச்சலாய் வருகிறான் (தானியேல் 2:24).

நேபுகாத்நேச்சாருக்கு முன், அந்த சொப்பனத்தை வெளிப்படுத்திய தேவனுக்கு மகிமை செலுத்துகிறான் (வச. 28). தானியேல் அந்த சொப்பனத்திற்கு விளக்கமளித்தபோது, நேபுகாத்நேச்சார், தேவர்களுக்குத் தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவருமாகிய தேவனுக்கு மகிமையை செலுத்துகிறான் (வச. 47). தேவன் மீதான விசுவாசத்தில் ஊன்றப்பட்ட தானியேலின் இந்த அசாத்தியமான துணிச்சல், அவனையும் அவனுடைய சிநேகிதர்களையும், மற்ற பாபிலோனிய ஞானிகளையும் அன்றைய தினம் உயிரோடே காத்தது. 

நம் வாழ்விலும் சில முக்கியமான செய்திகளை சொல்ல துணிச்சலும், தைரியமும் நமக்கு அவசியம். தேவன் நமக்கு ஞானத்தை அருளி, என்ன சொல்ல வேண்டும் என்பதையும், அதை நேர்த்தியாய் சொல்லக்கூடிய தைரியத்தையும் அருளி நம்மை வழிநடத்துவாராக.