ஒரு இளம் தந்தை தனது ஆண் குழந்தையை கைகளில் பிடித்து, அவனிடம் பாடி, இனிமையான தாளத்தில் ஆட்டினார். குழந்தைக்கு காது கேட்கும் திறன் இல்லாதிருந்தது, எனவே அந்த பாடலின் மெட்டையோ அல்லது சொற்களையோ அதனால் கேட்க முடியவில்லை. ஆயினும் தந்தை அழகான, கனிவான அன்பில் தனது மகனை நோக்கி தொடர்ந்து பாடினார். அவரது முயற்சிகளுக்கு பலனாக அவரது பிள்ளையிடமிருந்து ஒரு மகிழ்ச்சியான புன்னகை பதிலாகக் கிடைத்தது. 

தந்தை-மகன் பரிமாற்றத்தின் பிம்பங்களுக்கும் செப்பனியாவின் வார்த்தைகளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. பழைய ஏற்பாட்டின் இந்த தீர்க்கதரிசி, தேவன் உன்பேரில் கெம்பீரமாய் களிகூருவார் என்று கூறுகிறார் (செப்பனியா 3:17). தேவன் தம்முடைய அன்புக்குரிய மக்களுக்கு அவர்களின் ஆக்கினைகளை அகற்றி, சத்துருக்களை விலக்குவது போன்ற நல்ல காரியங்களைச் செய்வதில் மகிழ்ச்சியடைகிறார் (வச.15). இனி அவர்கள் பயப்பட தேவையில்லை, அதற்கு பதிலாக மகிழ்ந்து களிகூரலாம் என்று செப்பனியா கூறுகிறார்.

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தினால் மீட்கப்பட்ட தேவ பிள்ளைகளாகிய நாம் சில சமயங்களில் தேவன் நமக்காய் பாடும் தெய்வீக அன்பிற்கு செவிகொடுக்க விரும்புவதும் முயற்சிப்பதும் இல்லை. அவர் நம்மீது அதிக அன்பு கொண்டிருப்பது அந்த இளம் தந்தையைப் போன்றது. அவருடைய மகனால் கேட்க முடியாத போதிலும் அவனிடம் அன்பாகப் பாடினார். அவர் நமது தண்டனையை சுமந்து கொண்டார். நாம் மகிழ்ச்சியடைய மேலும் காரணத்தைத் தருகிறார். அவருடைய குரலில் சந்தோஷம் சத்தமாக ஒலிப்பதைக் கேட்க நாம் இன்னும் அருகில் நெருக்கமாக சென்று கேட்க முயற்சி செய்யலாம். பிதாவே, உங்கள் அன்பான மெட்டுக்களை கேட்க மற்றும் உங்கள் கைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதை அனுபவிக்க எங்களுக்கு உதவும்.