அலாஸ்காவின் ஒரு மலைப்பிரதேசத்தில் குடியேறியவரின் குடிசையில் தீப்பிடித்தபோது, ​​அமெரிக்காவின் குளிரான மாநிலத்தில் சில வசதிகளே இருந்தன. ஒரு விறைப்பான குளிர் காலத்தின் நடுவில், குடியேறியவருக்கு போதுமான தங்குமிடம் இல்லாமல் இருந்தது.. மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஒரு விமானம் பறந்து, பனியில் அவரால் முத்திரை குத்தப்பட்ட மற்றும் புகைக்கறியால் கருமையாக்க பட்ட பெரிய நெருக்கடி நிலை குறிகையை அவர்கள் உளவு பார்த்தபோது, ​​அந்த நபர் இறுதியாக மீட்கப்பட்டார்.

 சங்கீதக்காரர் தாவீது நிச்சயமாக மிகுந்த நெருக்கடியில் இருந்தார். பொறாமை கொண்ட சவுல் அவரைக் கொல்ல முயன்றார். எனவே அவர் காத் நகரத்திற்கு ஓடினார், அங்கு அவர் தனது உயிரைக் காப்பாற்றுவதற்காக பைத்தியக்காரனாக நடித்தார் (1 சாமு. 21ஐப் பார்க்கவும்). அந்த நிகழ்வுகளில் 34 சங்கீதம் வெளிவந்தது, அங்கு தாவீது தேவனிடம் ஜெபத்தில் கூப்பிட்டு சமாதானத்தைக் கண்டார் (வச. 4, 6). கர்த்தர் அவருடைய வேண்டுகோளைக் கேட்டு அவரை விடுவித்தார்.

நீங்கள் ஒரு அவநம்பிக்கையான சூழ்நிலையில் இருக்கிறீர்களா, உதவிக்காக அழுகிறீர்களா? இன்றும் நம்முடைய அவநம்பிக்கையான ஜெபங்களுக்கு தேவன் செவிசாய்த்து பதிலளிப்பார் என்பதில் உறுதியாக இருங்கள். தாவீதுக்கு செய்தது போலவே, அவர் நம்முடைய துயர அழைப்புகளை கவனித்து, நம்முடைய அச்சங்களை நீக்குகிறார் (வச. 4) – மேலும் சில சமயங்களில் “இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சிப்பார். (வச. 6). “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்.” (சங். 55:22) என்று வேதாகமம் நம்மை அழைக்கிறது. நம்முடைய கடினமான சூழ்நிலைகளை நாம் தேவனிடம் ஒப்படைக்கும்போது, ​​அவர் நமக்குத் தேவையான உதவியை வழங்குவார் என்று நம்பலாம். அவருடைய திறமையான கைகளில் நாம் பாதுகாப்பாக இருப்போம்.